முகமூடி

1
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 25, 2012
பார்வையிட்டோர்: 7,599 
 

யானை எப்படா வரும் என பரபரப்பாக காத்திருந்தேன். அது எப்பத் தான் நேரத்துக்கு வந்துச்சு என அலுத்தபடி வேகமாக கையை காலை ஆட்டிக் கொண்டே கடையின் உள்ளே திரும்பிப் பார்த்தேன். தூரத்தில் யானை கையை ஆட்டியபடி வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு வழியா வந்துடுச்சுப்பா என பெருமூச்சு விட்டபடி நானும் பதிலுக்கு கையை ஆட்டினேன். அது வந்து சேருவதற்குள்ளேயே கடைக்கு பின்புறம் உள்ள காலியிடத்தை நோக்கி நகர்ந்து அங்கிருந்த திண்ணையில் “அப்பாடா” என அமர்ந்தேன்.

மணிக்கணக்கில் நின்று ஆடிக் கொண்டிருந்ததால் உட்கார்ந்த இடத்தை சொர்க்கமாக உணர்ந்தது இடுப்பு. “உஸ்ஸ்..” என பெருமூச்சு விட்டுக் கொண்டே தலையில் மாட்டி இருந்த கரடி முகமூடியை கழட்டினேன். சித்திரை அனல் காற்றும் கூட இதமாய் முகத்தை வருடியது. கண்களை மூடி அண்ணார்ந்து பார்த்தபடி கொஞ்ச நேரம் முகத்தை காய வைத்தேன். வியர்த்து வியர்த்து முகம் வெந்து விட்டது போலிருந்தது. முகத்தில் ஊறியது போக நெற்றியில் மீதமிருந்த வியர்வையை அழுந்த துடைத்துக் கொண்டே கையிலிருந்த கரடி தலையை பார்த்தேன்.

அட சாமீ.. இதை தலையில மாட்டிக்கிறத விடவும் பெரிய தண்டனை உலகத்தில இருக்கா என்ன? புதுசா தலைல போடும் போது மெதுமெதுன்னு நல்லா இருக்கும்.. ஆனா ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷத்துலயே வேர்க்க ஆரம்பிச்சுடும். அதுக்கப்புறம் நரக வேதனை தான்ஸ ஹூம்ஸ ஆனாலும் இந்த தலையப் பார்த்து சந்தோசப் படரவங்களும் இருக்கத்தான் செய்றாங்கஸ இந்த வேசத்துல இருந்தா பொடுசுக வந்து கை கொடுக்குதுக கூட சேர்ந்து போட்டோ கூட எடுத்துக்குதுக. சில சுட்டி பசங்க வாலைப் புடிச்சு இழுத்து வெளையாடுதுக. அட.. பொடுசுக கூட வர்ற பெரியவங்களும் கூட சில சமயம் பொடுசுகளோடு பொடுசாகிடறாங்க. என்னமோ போங்க.. நாம படற கஷ்டம் அவங்களுக்கு எப்படி தெரியப் போகுது..அவங்களப் பொருத்தமட்டும் நான் எப்பவும் சிரிச்சுட்டே விளையாடிட்டிருக்கற புஸு புஸு கரடிக் குட்டி. இந்த கொழுகொழு பொம்மைக்குள்ள ஈர்க்குச்சி மாதிரி இருக்கற என்னை எத்தனை பேருக்குத் தான் தெரியும்?

ஆனா ஒண்ணுங்க.. என்னால நெஜ முகத்த வெச்சு செய்ய முடியாத ஒண்ணை இந்த கரடித்தலைல பண்ண முடியுது. தினமும் எத்தன பேரத்தான் சந்தோசப் படுத்துது இந்த பொம்மத் தலை. சின்னவங்க பெரியவங்க யாரா இருந்தாலும் பார்த்த உடனே டக்குனு சிரிக்க வெச்சுடுது. எத்தன பேரால இது முடியும். நான் பசில இருக்கறனோ எரிச்சல்ல இருக்கறனோ அத எல்லாம் வெளிய காட்டாம எல்லாருக்கும் பிடிச்சமாதிரில்ல இருக்க முடியுது.. என் நெஜ முகத்த பாக்குறவங்க என்ன சிடுமூஞ்சி தொட்டாசிணுங்கின்னுள்ள சொல்றாங்க. இப்பிடி முகமூடி போட்டாவது மத்தவங்கள சந்தோசப்படுத்த முடியுதே. இத நா சேவையா ஒண்ணும் செய்யறதில்ல..எல்லாம் வயித்துப் பொழப்புக்குத்தான்.

இருந்தாலும் இந்த வேலையில ஒரு திருப்தி இருக்குங்க. ஏன்னா..எனக்காவது முகமூடி போடுறதுதான் வேலையே.. ஆன எத்தனை பேர் அவங்க செய்யற வேலைய காப்பாத்திக்கவே முகமூடி போடுறாங்க. இப்பிடி முகமூடி போடுரத தப்புன்னு சொல்லல.. அதப்பத்தி ஆராய்ச்சி செய்யற எண்ணமும் இல்ல..ஏன்னா இதுக்கு ரொம்ப நியாயமான காரணம் கூட இருக்கலாம். சந்தோசப்படற மாதிரியோ களப்பா இருக்கற மாதிரியோ யாரோ சொல்ரத கவனிச்சு கேக்கற மாதிரீயோன்னு யாரோ திருப்திக்காக எவ்ளோ முகமூடிகள போட வேண்டிருக்கு.. இந்த முகமூடியை நியாயப்படுத்த நாகரீகம், கௌரவம், சம்பிரதாயம் ன்னு எவ்வளவோ விசயங்களும் இருக்கு. ஆனாலும் இது எவ்ளோ கஷ்டம்ன்னு தெரியுங்களா..இந்த துணியால நெஜ முகத்த மறைக்கும்போது கூட எரிச்சலோ, சந்தோசமோ துணி முகத்துக்குள்ளயாவது காட்டிக்க முடியுது. ஆன துணியில்லாம முகமூடி போட முயற்சி செய்யும்போது அந்த வசதி கூட கிடையாதுங்களே. துணி முகமூடியால வேர்க்க மட்டும் தான் செய்யுது ஆனா அதில்லாம நடிக்கும் போது மனசே வெறுத்து போகுதே..

எத்தன தடவ சிரிக்கற மாதிரி வருத்தமா இருக்கற மாதிரி யாரையோ பார்க்காத மாதிரி எற்கனவே தெரிஞ்ச விசயத்துக்கு ஆச்சர்யப்படற மாதிரின்னு விதம் விதமா நடிச்சிருப்பேன். அதெல்லாம் என்ன முகமூடி தானே ! எவ்வளோ நேரம் மாட்டீட்ருக்க வேண்டீருக்கு..ஒரே ஒரு கரடி மூஞ்சியத்தான் நாள் முழுக்க போட்டிட்ருக்கறது எவ்வளவோ மேல். ஆனா நெஜ முகத்த மணிக்கு மணி, நிமிசத்துக்கு நிமிசம் மாத்த வேண்டி இருக்கே..என்ன பண்ணறது.. சொந்தபந்தத்துல இருந்து குடும்பம் குழந்த குட்டி ன்னு எல்லார்கிட்டயும் ஒரு நேரம் இல்லன்னாலும் ஒரு நேரம் முகமூடி போட வேண்டி இருக்கே..ஆபீஸ் வேல நேரத்துல கேக்ககவே வேணாம், கரடி பொம்ம சிரிப்போடத் தான் மேனேஜர பார்க்க வேண்டிருக்கு..கண்டபடி திட்டலாம்னு தோணும் போது கூட ஈன்னு இளிச்சுட்டு அசடு வழிஞ்சுட்டுள்ளங்க வரவேண்டிருக்கு.

முடியலைங்க.. பொழப்புக்காக முகமூடி மாட்டிக்கிறதோட கஷ்டநஷ்டம் கூட பெருசாத் தெரியலை..அப்பப்ப கழட்டி காத்து வாங்குனா பழகி போயிடுது. ஆனா இந்த நெஜ முகத்த படாதபாடுத்தறது தான் என்னால முடியல. அதனால இந்த முகமூடிய கழட்டி வெச்சு பழகிட்டேங்க. நான் இப்பிடித்தான்னு நெஜ முகத்தை காட்ட முயற்சி செய்யறேங்க. நாலு பேருக்கு புடிக்கல. சிடுமூஞ்சின்னு கொரங்குன்னு திட்றாங்க. சில பேரு பழகிட்டாங்க. அவங்க கூட பழகறது எனக்கு நெஜ சந்தோசமா இருக்கு. ரோட்டோரம் விக்குற அந்த முகமூடிய வாங்கீட்டு போயி வருத்தமா இருக்கற நேரத்துல போட்டுக்கிட்டு சந்தோசமா காமிச்சு சுத்தி இருக்கற பொடுசுகள சந்தோசப்படுத்தறதுண்டு. அதுக நெஜ முகத்துல கலகலன்னு சிரிக்கறத பார்த்தா நமக்கும் சந்தோசமாகிடுதுங்க. இப்பிடியே ஒடுதுங்க வாழ்க்கை. சரி எனக்கு நேரமாச்சு , யானைய அனுப்பணும். நான் கெளம்பறேன்.

சிறிது நேரம் கழித்து, வாசலில் ஆடியபடி நான் கரடித்தலைக்குள் நெஜ முகத்தில சிரிச்சுட்டே முகமூடி மனிதர்களை வரவேற்றுக் கொண்டிருந்தேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “முகமூடி

  1. நன்றாக இருந்தது. இன்னும் ஓட்டம் கொடுத்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *