கல்யாணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 7,318 
 

ராம் காஞ்சனாவின் கையைப்பிடித்துக்கொண்டு கண்களில் அன்பு மிளிர “காஞ்சனா” நீ ஏன் என்னை புரிந்துகொள்ள மறுக்கிறாய்? அவளின் குனிந்த தலையை நிமிர்த்தி அவள் கண்களை கூர்ந்து பார்த்து என்ன சொல்ல நினைக்கின்றன உன் கண்கள் தயவு செய்து சொல்லிவிடு மயக்கத்துடன் சொன்னான், நிமிர்த்திய காஞ்சனாவின் கண்கள் கலங்கியிருந்தன “ப்ளீஸ்” நான் திருமணம் செய்யகூடிய
நிலையில் இப்பொழுது இல்லை நான்….நான்.. கேவினாள்..

“கட்” டைரக்டர் சங்கர் கத்தினான் என்னம்மா நீ இந்த வசனத்த எமோசனலா சொல்லனும், இதோட ஏழு டேக் எடுத்திட்ட என்னாச்சு உனக்கு. ராம் இயல்பு நிலைக்கு வந்திருந்தான் என்ன பிரச்னை உனக்கு காஞ்சனா ஏன் நெர்வசா இருக்கே, எனிதிங்க் ராங்., ஏதாவது உடம்பு சரியில்லயா? அக்கறையுடன் கேட்டான். ஐ யாம் சாரி ராம் என்னால இன்னைக்கு ஒரு நிலையில இருக்க முடியல..சந்தோசமா துக்கமா அப்படீன்னு புரியல்ல.. விளக்கினாள், அதற்குள் டைரக்டர் சங்கர் அருகில் வந்தான் ராம் ஏதாவது பிரச்னையா காஞ்சனாவுக்கு, இன்னைக்கு ரொமான்ஸ் சீன்ல இத்தனை டேக் வாங்கறா? அதுதான் தெரியலடா ! எதுக்கும் இவளுக்கு ஒரு பத்து நிமிசம் ரெஸ்ட் கொடேன், அவளுக்காக கேட்டுக்கொண்டான்.

ஓகே ! பேக்கப் ஒரு அரை மணி நேரம் கழிச்சு மத்ததை வச்சுக்கலாம், என்றவன் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து ராமின் கையில் ஒன்றை கொடுத்தான், ராம் காஞ்சனாவைப் பார்த்து இன்னைக்கு ரொமான்ஸ் சீன் மட்டும் இல்லையின்னா இந்நேரம் இரண்டு சிகரெட் பிடிச்சிருப்பேன் என்றவன் குடிக்காமல் சங்கா¢ன் கையில் திணித்தான்.

சரி இப்ப என்னாச்சு உனக்கு சிகரெட்டை கையில் வைத்தவாறு காஞ்சனாவிடம் கேட்டான் சங்கர்.. தொ¢யல சங்கர் ஆனா.. நான் உங்க இரண்டு பேர்கிட்ட ஒரு உதவி கேட்பேன் நீங்க தப்பா நினைச்சுக்க கூடாது பீடிகையுடன் கேட்டாள், தாராளமா செய்யறேன் என்னன்னு சொல்லு, இங்க வேண்டாமே என்னுடைய கேரவானுக்குள்ள போயிடலாம் என்று தன்னுடைய ஓய்வு அறைக்கு அழைத்து சென்றாள்.

ராம், சங்கர்,காஞ்சனா மூவரும் ஒரே கால கட்டத்தில் வேறு வேறு துறைகளில் சினிமா உலகத்துக்குள் புகுந்து போராடி ஓரளவுக்கு பெயர் சொல்லக்கூடிய நாயகன், நாயகி,டைரக்டர், என்ற அந்தஸ்துக்கு வந்துள்ளனர்.மூவரும் ஏறக்குறைய ஒரே வயதுடையவர்களாய் இருப்பதால் நல்ல நண்பர்களாகவும் இருக்க முடிகிறது.

“நாளை நான் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன்” சங்கர் வாட்? என்ன சொல்ற நீ பாட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா அப்புறம் ஷூட்டிங் என்னாகிறது? அதுதான் எனக்கு டென்சனா இருக்குது “ப்ளீஸ்” ஒரு இரண்டு நாள் லீவ் கொடு இந்த கல்யாணம் யாருக்கும் தெரியாம பண்ற கல்யாணம், இரண்டு நாள்ல பிரச்னை எல்லாம் முடிச்சுட்டு வந்திடுறேன்..

கெஞ்சினாள் காஞ்சனா.. சங்கர் ராமின் முகத்தைப்பார்த்தான் நீ என்ன சொல்றே என்பது போல பார்த்தான். ராம் காஞ்சனாவைப் பார்த்து நம்ம மாதிரி தொழில்ல இருக்கறவங்களுக்கு இந்த மாதிரி கல்யாணம் சா¢ப்பட்டு வருமா என யோசிச்சு செய் ! மத்தபடி வேற் ஏதாவது உதவி வேணும்னா தயங்காம எங்ககிட்ட கேளு செய்யறோம், சங்கரும், சரி காஞ்சனா உனக்கு இரண்டு நாள் லீவ் தர்றேன் நான் மத்த பார்ட் எல்லாம் எடுத்துடறேன், நீ சீக்கிரமா வர பார்.

ராம் உடனே மதியானமே அவளை அனுப்பி வைப்பா நாளைக்கு கல்யாணத்துக்கு வேணுங்கற ஏற்பாட்டை அவள் செய்வாள் இல்ல! ஒ கே! நீ கிளம்பு, எங்களோட வாழ்த்துக்கள் உனக்கு, கல்யாணம் முடிஞ்சு வா உனக்கு பார்ட்டி வச்சுடலாம்.

இப்ப சிகரெட்டை கொடு என்று ராம் சம்பத்திடம் வாங்கி ஆனந்தமாய் புகை விட்டவாறு சங்கருடன் காஞ்சனாவின் கேரவானை விட்டு வெளியே வந்தனர்.

மறு நாள் காஞ்சனாவின் கேரக்டரை தவிர்த்து மற்ற காட்சிகள் எடுக்கப்பட்டன, ராமும் நடித்துக்கொடுத்துக்கொண்டிருந்தான், மதியம் மூன்று மணிக்கு மேல் சங்கருக்கு போன் வந்தது ஹலோ..காஞ்சனாவின் குரல் கேட்டது, என்ன காஞ்சனா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா, வாழ்த்துக்கள் என வார்த்தைகள் சங்கரிடமிருந்து வந்த வண்ணம் இருந்தன. எதிர் முனையில் ஒரு நிமிட மெளனம்.. சங்கர் எனக்கு கல்யாணம் நடக்கல நாளைக்கு நான் ஷூட்டிங் வர்றேன் ராம்கிட்ட சொல்லிடு மிச்சத்த நாளைக்கு அங்க வந்து சொல்றேன் போன் வைக்கப்பட்டுவிட்டது.

அடுத்த நாள் சங்கர் எதிர்பார்ப்புக்கு மேல் காஞ்சனா நடித்துக்கொடுத்தாள். உணவு இடைவேளை தாண்டியும் ஷூட்டிங் நடந்தது, மூன்று மணிக்கு பேக்கப் சொல்லி அனைவரும் சாப்பிட கிளம்பிய பின்பு ராம் காஞ்சனாவையும் சங்கரையும் தன்னுடன் சாப்பிட அழைத்தான் முவருக்கும் சாப்பாடு வீட்டிலிருந்தே வந்திருந்தது, மூவரும் மெளனமாய் சாப்பிட்டு முடித்தவுடன் காஞ்சனா மெல்ல கண்களை துடைத்துக்கொண்டு நம்மள மாதிரி தொழில் செய்யறவங்களுக்கு கல்யாணம் பண்ண அவசரப்படக்கூடாது அப்படீன்னு புரிஞ்சுகிட்டேன், நம்ம தொழிலை புரிஞ்சவங்கனால கூட மட்டும்தான் நாம வாழமுடியும்.. ராமும், சங்கரும் சிகரெட்டை புகைத்தவாறு மெளனமாய் அவளை பார்த்தனர்.

காலையில ஒன்பது மணிக்கு கோயில்ல கல்யாணம் அப்படீன்னு முடிவு பண்ணி வச்சுருந்தோம், இவன் என்னோட பால்ய கால சினேகிதன் வேற அதனால எனன புரிஞ்சுகிட்டவன் அப்படீன்னு நம்பினேன். இவன் மணி பத்து ஆகியும் வரவேயில்லை என்னாச்சு அப்படீன்னு போன் பண்ணுனா இன்னைக்கு பேப்பரை பாரு அப்படீங்கறான் சரி பேப்பரை பார்த்தா “கேரவானுக்குள் “கா” என ஆரம்பிக்கும் நடிகை கும்மாளம்” உடன் அந்த படத்தில் நடிக்கும் கதானாயகனும், டைரக்டரும் இருந்தனர், அதன் பின் டைரக்டர் அந்த நடிகையை மதியம் மேல் ஓய்வெடுக்க அனுப்பி விட்டார், என போட்டிருந்தது, இதை பார்த்தவுடன் இந்த மடையன் என்மேல் சந்தேகப்பட்டுக்கொண்டு நாளைக்கு கல்யாணம் அதற்குள் இவளுக்கு அடுத்தவங்களோட கும்மாளமா என கேட்டான்.

எனக்கு கோபம் தலைக்கு மேல் வந்துவிட்டது, போடா நீயும் உன் கல்யாண்மும் அப்படீன்னு போனை வச்சுட்டேன், அதுக்கு பின்னால என்னோட டென்சன் எல்லாம் காணாமப்போச்சு உனக்கு போனைப்போட்டு நாளைக்கு வர்றேன்னு சொல்லிட்டு நிம்மதியா தூங்கினேன்.

சாரிப்பா உங்க இரண்டு பேருக்கும் நான் தொந்தரவு கொடுத்துட்டேன்

உடனே ராமும், சங்கரும் .. ஏய் என்ன நீ இதுக்கெல்லாம் எமோஷன் ஆகற டேக் இட் ஈஸி மா நம்மை மாதிரி ஆளுங்க நல்லாயிருக்கும்போதே சம்பாரிச்சுக்கனும், அதை ஞாபகம் வச்சு தொழில்ல கவனத்தை பண்ணு. உனக்கு நல்லது நடக்கனும்னா கண்டிப்பா அது பாட்டுக்கு நடக்கும் என்றவாறு ஆளுக்கு ஒரு சிகரெட்டை பற்ற வைத்தவாறு வெளியே வர எழுந்தனர்.

சங்கர் ப்ளீஸ் எனக்கு ஒரு சிகரெட் கொடேன் கையை நீட்டினாள் காஞ்சனா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *