அவளைப் பார்த்தான் அவன்.
சூரிய ஒளி தாக்கிய பனி நீரைப் போல அவனுள் இருந்த எல்லாமே காணாமல் போய், அந்த வெற்றிடத் தில் அவள் புகுந்து சக்கென்று அமர்ந்து கொண்டாள். அப்படியே அவளைச் சுமந்து வந்தான், கிடைக்காத புதைய லாய்!
தலையணையில் அவன் சாயும் போதெல்லாம், அவள் தலையும் பக்கத்தில்!
மனம்விட்டுப் பேசினான்; முகம் வைத்துக் கொஞ்சி முயங்கினான்.
ரொம்ப நெருக்கமாகிவிட்டார் கள்.
அவன் தனிமையில் இருக்கும்போது வா என்றால் வந்துவிடுவாள்.
முட்டையின் மேல் படிந்து அடை காப்பது போல் காத்தான். அடை மழை போல் பிரியத்தைப் பொழிந் தான். ஆனந்த உலகில் சஞ்சரித் தான்.
நீடித்துக்கொண்டிருந்தது இப்படி.
சில நாட்கள் கழித்து….
முதன்முதலில் அவளைக் கண் டானே, அதே இடத்தில் இன்றும் கண்டான் அவளை.
நிறை மனசுடன் புன்னகைத்துக் கொண்டே அவளை நெருங்கினால்… வேற்று ஆளைப் பார்ப்பது போல மருண்டு திகைக்கிறாள்; விலகுகிறாள்!
‘ஓஹோ, அப்படியா! சரீ, போ!
எனக்குள் ஒரு நீ இருக்கிறாய்;
காலமெல்லாம் அவளோடு சுகித்திருப்பேன்’ எனச் சொல்லிக் கொண்டு திரும்பினான்!
- 24th ஜனவரி 2007
தொடர்புடைய சிறுகதைகள்
சவரத்தை முடித்துவிட்டு சுப்பு போய்விட்டான். அவனோடு அந்த வாடையும் போய்விட்டது. வாடை என்றால் வேற என்னவோ என்று நினைக்க வேண்டும். நல்...ல ஒரு மனுச வாடைதான். பருவ வயசில் உடம்பிலிருந்து ஆணிலும் பெண்ணிலும் அப்படி ஒரு வாடை இருக்கும்.ஆயி தன்னுடைய தோள்களை ...
மேலும் கதையை படிக்க...
(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அடுப்பங்கூடத்தின் வடமேற்கு முக்கில் குரிய வெளிச்சம் படாத ரப்பரப்பில் அமைத்திருந்தது அங்கணம்; சாப்பிட முன்றும் சாப்பிட்ட பின்னாலும் கைகழுவுகிறது, முகம் கைகால் கழுவுகிறது. கொப்பளித்துத் துப்புகிறது, ஏனங்கள் கமுவுகிறது, ...
மேலும் கதையை படிக்க...
அவன் பஸ்ஸிலிருந்து இறங்கி வெதுவெதுப்பான தரையில் கால் வைத்ததும், சத்தமில்லாமல் பஸ் வழுக்கிக்கொண்டுபோய் மறைந்து விட்டது.
இரண்டு பர்லாங் தூரம் இருக்கும் ஊர். ஒரு சுடுகுஞ்சியைக்கூட காணோம்!
போதை நிறைந்து வழியும் குடிகாரனதுபோல அவனுடைய பிரக்ஞையின் வட்டம் சுருங்கி இருந்தது. நிலவின் பிரகாசம் தெளிவாக ...
மேலும் கதையை படிக்க...
உழவர் சந்தை நிறுத்தத்தில் நகரப் பேருந்து வந்து சல் என்று நின்றது. பேகொண்ட கூட்டம். தாத்தா முண்டியடித்து படிக்கட்டில் கால் வைத்ததுதான் தெரியும்... அப்படியே அத்தாசமாக உள்ளே தள்ளி, சருகைக் காற்று கொண்டுபோவதைப் போல நடூ இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவைத்துவிட்டது. சுவர் ...
மேலும் கதையை படிக்க...
கிராமத்திலுள்ள குமரிப்பெண்டுகளுக்கு அங்குப்பிள்ளையைக் கண்டுவிட்டாலே ஒருவித குஷி வந்துவிடும்.
ஜாடை செய்து - ஒவ்வொரு வார்த்தைக்குமே ஜாடை செய்து - 'னைக்கு (அங்குப்பிள்ளையைக் காட்டி) கலியாணம் (தாலி கட்டுவதைப்போல கழுத்துப்பக்கம் கைகளைக் கொண்டுபோய்) எப்போ? (விரல்களை முஷ்டி மடக்கிக் குலுக்கவேண்டும்.)
இந்த 'அபிநய முத்திரை'களோடு ...
மேலும் கதையை படிக்க...
(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
துரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும் விரசமற்ற அழகு பார்த்துக் கொண்டே இருக்கலாம் அந்த அழகை; சுருதி சுத்தமான இசையை கேட்பதைப்போல
இப்போது என்ன நோக்காடு வந்தது அவளுக்கு என்றுதான் தெரியலை, ...
மேலும் கதையை படிக்க...
புதுவை நகரில் ஒரு பங்களாத் தெரு. ஒரு பங்களாவின் முன்வீடு அது பங்களா எப்பவும் பூட்டியே இருக்கும். அதன் சொந்தக்காரர் "தெகோல்" லில் இருக்கிறார். ரெண்டு வருசத்துக்கு ஒருக்க, நினைத்தால் வந்து கொஞ்சநாள் தங்கிவிட்டுப் போய்விடுவார்.
முன்வீடு வீதிக்குப் பக்கத்தில் அந்த பங்களாவை ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: கி.ரா.
குற்றாலத்தில்ஒரு நாள், ரசிகமணி டி.கே.சி. அவர்களைப் பார்க்க ஒருத்தர் வந்தார்.
வந்தவர் செந்தமிழில் எங்களிடம் "அய்யா அவர்களைப் பார்க்க வந்திருப்பதாகச்" சென்னார்.
அவர் பேசுகிற விதமே அப்படி என்று தெரிந்தது.ரசிகமணி அவர்கள் இதை ரெம்ப அனுபவிப்பார்கள் என்று எங்களுக்குக் குஷி!
அவரை அழைத்துக் ...
மேலும் கதையை படிக்க...
தலைமாட்டுலே யாரோ வந்து நிக்கதுபோலத் தெரிஞ்சது. சிரமத்தோட தலையைத் திருப்பிப் பார்த்தப்பொ அம்மா காணீர் வடிய நின்றுக்கிட்டிருந்தா, பார்த்ததும் பலமா சத்தம் வராம அமுதா, எலும்பாக மெலுஞ்ச உடம்பு தடுமாடுனது.
கையினாலே சைகைகாட்டி உட்காரச் சொன்னான். வெள்ளைச் சீலையிலே கண்ணைத் தொடைச்சி மூக்கைச் ...
மேலும் கதையை படிக்க...
காலையில் எழுந்ததும், பால் பாக்கெட் வாங்க நான் போகும் போதெல்லாம் முதலில் தட்டுப்படுவது இவன்தான். தெரு திரும்பியதும் முனிசிபல் குப்பைத் தொட்டியில் துழாவிக்கொண்டு இருப்பான்.
அவனுக்கு வேண்டியது கழிவுத் தாள்கள், காலியான பால்பாக்கெட் டுகள், அட்டைப்பெட்டிகள் இப்படி. எவ்வளவுக்குக் கிடைக்கிறதோ அன் றைக்கு ...
மேலும் கதையை படிக்க...
பொம்மைகளும் கிளர்ந்தெழும்!