மு.தங்கராசன்

மு.தங்கராசன்2
 

மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார்.

1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

1955ல் தமிழ்முரசில் பிரசுரமான ‘வஞ்சகிதானா?’ என்ற சிறுகதையே இவரை எழுத்துலகில் அடையாளப்படுத்தியது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகமென இதுவரை 39 நூல்களை எழுதியுள்ளார். தமிழவேள் நாடக மன்றத்தின் சார்பில் பதினைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியதுடன் நடித்தும் உள்ளார்.

ஜப்பானியர், வெள்ளையர் காலனித்துவம், ஒன்றுபட்ட மலாயா என்று மூன்று ஆட்சிக் காலக்கட்டங்களைப் பார்த்தவர். அவற்றை இவர் தமது இலக்கியப் படைப்புகளில் பதிவும் செய்திருக்கிறார்.

இவரது சீரிய முயற்சியில் சிங்கைப்பாவலர்கள் முப்பது பேர் ஒருங்கிணைந்து பாடிய “கவிக்குலம் போற்றும் தமிழவேள்” தமிழவேள் நாடக மன்றத்தின் தகைமையில் வெளியீடு கண்டது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்காகக் கட்டுரை, கதை எனப் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

எழுத்துலகம் என்ற இலக்கிய மலர்த்தோட்டத்தில் தம் நூல்களும் மணக்க வேண்டுமென்று இவர் தமது பெரும்பாலான நூல்களுக்கு மலர்களின் பெயரைச் சூடியுள்ளார்.

ஜனவரி 15ஆம் தேதி 2021 காலமானார். அவருக்கு வயது 86. மனைவி ரெ செல்லம்மாள், நான்கு மகன்கள், இரண்டு மகள்கள், 14 பேரப்பிள்ளைகளை அவர் விட்டுச்சென்றார்.

எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்:   

  • ஆளவந்தான் (தொலைக்காட்சியில் முதல் தமிழ் நாடகம்) – 1963
  • கவிக்குலம் போற்றும் தமிழவேள் 1982
  • மணங்கமழும் பூக்கள் – 1997
  • பூச்செண்டு (சிறுகதைத் தொகுப்பு) – 1985
  • அணிகலன் (கவிதைத் தொகுப்பு) – 1985
  • உதயம் (கவிதைத் தொகுப்பு) – 1988
  • மலர்க்கொத்து (சிறுகதைத் தொகுப்பு) – 1988
  • சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு) – 1988
  • மகரந்தம் (கவிதைத் தொகுப்பு) – 1988
  • மாதுளங்கனி (கவிதைத் தொகுப்பு) – 1989
  • மலர்க்கூடை (சிறுகதைத் தொகுப்பு) – 1992
  • கற்பனை மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) – 1995
  • நித்திலப் பூக்கள் (கவிதைத் தொகுப்பு) – 2001
  • மணக்கும் மல்லிகை (சிறுகதைத் தொகுப்பு) – 2001
  • வாகைப் பூக்கள் –  2003
  • இன்பத் தமிழ் (மாணவர்களுக்கான கட்டுரைகள்) – 2004
  • தமிழ் எங்கள் உயிர் – 2004
  • மணமகன் யார்? (நகைச்சுவை நாடகம்) –  2007
  • தியாகச் சுடர் (நகைச்சுவை நாடகம்) –  2007
  • எதிரொலி (நகைச்சுவை நாடகம்) – –  2007
  • வானவில் (நகைச்சுவை நாடகம்) –  2007
  • அமுதத் தமிழ் (மாணவர்களுக்கான கட்டுரைகள்) – 2007
  • அத்தை மகன் (நகைச்சுவை நாடகம்) – 2007
  • ஏணி/னிப்படி (நகைச்சுவை நாடகம்) – 2007
  • விண்வெளிப் பூக்கள் – 2007
  • தாழம்பூ – 2008
  • இன்பத் திருநாடு – 2010:
  • சூரியகாந்தி2013
  • தேசிய மலர்கள் – 2015
  • சாமந்திப் பூக்கள் (நாடக) – 2015

அமைப்புகளில் வகித்த / வகிக்கும் பொறுப்புகள்:

  • கலைமகள் தமிழ்ப் பள்ளியில் தமிழாசிரியர் – 1959
  • செம்பவாங் தமிழர் சங்க பள்ளியில் தலைமையாசிரியர் – 1961- 1972
  • சிங்கப்பூர் கல்வியமைச்சின் தமிழ்ப் பாடநூலாக்க குழுவில் 1991 – 1997
  • செம்பவாங் தமிழர் சங்கம் – செயலாளர் – 12 ஆண்டுகள்
  • செம்பவாங் தமிழர் சங்கம் கெளரவ பொதுச்  செயலாளர் 1961 – 1975
  • தமிழவேள் நாடக மன்றம் – நிறுவனர், முன்னாள் தலைவர்

பெற்ற பரிசுகள் / விருதுகள்:

  • நெருஞ்சி முள் நாடகம் – வானொலி – இரண்டாம் பரிசு
  •  ‘கணையாழி விருது’ – கவிமாலை – 2008
  • நல்லாசிரியர் விருது’ –  தமிழ்முரசு 2012

அணிந்துரை – சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு)

சிங்கப்பூர் மு. தங்கராசனின் முத்துமுத்தான பத்துச் சிறுகதைகளை இத்தொகுதியிலே காண்கிறோம். இர சித்து மகிழத்தக்க சுவையான எழுத்து. ஆற்றொழுக்குப் போன்ற தெளிவான தமிழ்நடை வீச்சு நிறைந்த கதைப் போக்கு. மிகவும் பொருத்தமுற இதற்குச் “சிந்தனைப் பூக்கள்’ எனப் பெயரிட்டுள்ளார் தங்கராசன். வாழ்க அவர் தம் முயற்சி! வளர்க அவர் தம் இலக்கியப் பணி!

சிறு கதைகள் ஆயிரம் படிக்கக் கிடைக்கலாம். சிந்தனை மலர்ச்சியோடு கூடிய சிறுகதைகள் படிக்கக் கிடைப்பதுதான் அருமையினும் அருமை.

“எண்ணிப் பார்” சிறுகதையில் வரும் “மகேந்திர னார்” நம்மை எண்ணிப் பார்க்கச் செய்கின்றார். சிறப் பான பாத்திரப் படைப்பைக் காண்கிறோம்.

“முத்தப்பா” கதையில் முனியம்மாள் தெருவில் கதறிக்கொண்டு ஒடும்போது நாம் அருகிலிருந்து காண்பது போன்ற துயரத்தை உணர்கிறோம். பதைக் கிறோம். பரிதவிக்கிறோம்.

காதலுக்கு மூலிகை கிடைக்காது. தேடினாலும் பயனில்லை என்பதுதான் நிதரிசனம் ஆனால் “காதல் மூலிகையில்*’ வரும் அப்பாவி அந்த மூலிகையைத் தேடுவதுபோல் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது தான்.

“கசந்த வாழ்க்கையில்? வரும் தெய்வானையின் நெஞ்சுக்குள் ஆழப் புதைந்துவிட்ட அந்த இரகசியம் எப்போதும் வெளிப்படாமல் இருந்துவிட வேண்டியது தான் நியாயம்.

“கோழிக் கூத்து” கதையில் கதையில் சிங்கப்பூர்ச் சூழல் நிரம்பியுள்ளது. குறுநாவலோ என எண்ணுமளவு நீள்கிற கதை இது.

“உலகம் ஒரு ஏமாற்றுக் காரச் சந்தைங்க சார்” என்று கோபாலன் கூறுவது மெய்தானோ என்று நமக்கே தோன்றுகிறது. (உலர்ந்த உதடுகள்) ஆனால், கதை முடிவில்தான் வேறு மாதிரித் தோன்றுகிறது.

“பிள்ளையோ பிள்ளையில்” கண்ணம்மாள் செய்த காரியம் நம்மை அதிர வைக்கிறது. குரூர உணர்வு எழு கிறது. ஆயினும் சிந்திக்கச் செய்யும் கதைதான்.

“விளக்கும் விட்டில் பூச்சியும்” பற்றிய பல தத்து வங்களையும், உவமைகளையும் நிறையக் கேள்விப்பட் டிருக்கின்றோம். அழகிரியின் கதைக்கு அந்தத் தத்து வமோ, உவமையோ வந்திருக்க வேண்டாமே என்று நம்மை எண்ணச் செய்துவிடும் திறமை கதாசிரியர் தங்கராசனுடையது.

ஏதோ ஓர் உணவு விடுதியில் நாமே அமர்ந்திருப்பது போலவும், அருவருப்பான முகமுடைய ஒருவன் நமக் காகவும் சேர்த்து ஒரு காபிக்கு ஆர்டர் செய்து தந்து தன் கதையையும் கூறிவிடுவது போன்ற சூழலையும் ‘இதயத் துடிப்புப்” படிக்கும் போது நமக்கு ஏற்படுத்தி விடுகிறார். இது கதாசிரியருக்கு வெற்றியே ஆகும்.

இதய தாகம் கதை நன்றாக வந்திருக்கிறது. “கல்லாக் குற்றமா? கனியாத் தன்மையா?”- எழுதி யுள்ள இடத்தில் நடை மெருகேறியுள்ளது. கதை உருக்கமாய் வளர்ந்து உணர்வுடன் நிறைவு பெறுகிறது. தொகுதியின் முடிவான கதை இது. முடிமணியாகவும் வாய்க்கிறது.

வெண் சுருட்டு (சிகிரெட்) பணிமனை (ஆபீஸ்) ஏட்டறிவு, ஊர்க்காவல் படை போன்ற நல்ல தமிழ்த் தொடர்கள் பல ஆசிரியரின் நடையில் பயன்பட் டுள்ளன.

ஆசிரியரின் தமிழறிவு, இலக்கிய அறிவு; கம்பர், பாரதியார், பாரதிதாசன் கவிதைகளிலுள்ள ஈடுபாடு சிறு கதைகளின் நடுவே அங்கங்கே பளிச்சிட்டுத் தெரிகிறது.

அவை பொன்னில் பதிந்த மணிகளாய்ப் பளிச்சிடு கின்றன. வாழ்வின் யதார்த்தமான மனிதர்களே தங்க ராசனின் கற்பனையில் மெருகேறி நயமும் நலமும் பெற்று நம்முன் கதாபாத்திரங்களாக அறிமுகப்படுத்தப் பெறுகின்றனர். கதைகளைப் படிக்கும்போது ஒவ் வொரு வாசகரும் இதை நன்றாக உணர முடியும். சிங்கப்பூர்ச் சூழல், வாழ்க்கை நிலைகள்,சிங்கைத்தமிழர் போக்கு; இவை கதைகளில் ஓரளவு பெற்றிருந்தாலும் தங்கராசன் இத்துறைகளில் இன்னும் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.

புதுமைப்பித்தன் நெல்லைப் பகுதிக் கதைமாந்தரை யும், தி.ஜானகிராமன் தஞ்சைப் பகுதிக் கதை மாந்தரையும், நான் மதுரை, இராமநாதபுரம் பகுதிக் கதை மாந்தரையும் தேர்ந்தெடுத்து எழுதியிருப்பதைப் போலத் தங்கராசன் சிங்கைத் தமிழரைக் கதாபாத் திரங்களாகக் கொண்டு நிறைய எழுத முடியும். அதற் கான அநுபவமும், திறனும் அவரிடம் இருப்பதை உணர்ந்தே இதனை இங்கே கூறியுள்ளேன். சிங்கைத் தமிழர் வாழ்வு, தொழில், கலாசாரம், பிரச்சினைகள் முதலியவைகளை மையமாகக் கொண்டு பல கதைகளும் நெடுங்கதைகளும் வந்தால் உலகின் ஒரு பகுதித் தமிழர் சித்திரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்தப் பணியைச் சிங்கைக்கு வெளியே உள்ள ஓர் எழுத்தாளர் ஆதார பூர்வமாகச் செய்ய முடியாது. வாய்ப்பும் குறைவு. தங்கராசன் சிங்கையைக் காண்கிறார். அங்குள்ன் மக்களைக் கற்கிறார். அதனுள் வாழ்கிறார். எழுதவும் ஆற்றல் பெற்றிருக்கிறார் கம்போங் கிளாப்பா, ஜொகூர்பாரு, சீலாட் தோட்டம், புக்கிட் தீமா ரோடு எல்லாம் தெரிந்த தங்கராசன் அங்கு நடமாடும் கதாபாத்திரங்களையும் தாராளமாகக் கவனிக்கலாமே! முழு அளவில் சிங்கப்பூர் வாழ்க்கையைத் தத்ரூபமாகச் சித்திரிக்கும் ஒரு நாவலைத் தங்கராசன் தமிழுக்குத் தரவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

சிறு கதைகளையும் அத்தகைய சூழலில் கற்பனை செய்து எழுத முன்வர வேண்டும். இத்தொகுதியிலேயே ஓரளவு அவர் அதனை நிறைவேற்றியுள்ளார் என்றா லும் முழு அளவில் சிங்கப்பூர் மண் மணம் கமழும் கதை களை இன்னும் அதிகமாய் அவர் எழுத வேண்டியது அவசியம் அதில் இரண்டொரு சீனர்களும் கதாபாத்திரங் களாக வரலாம். சிங்கப்பூர்த் தமிழன் தனித் தீவாக வாழ்ந்துவிட முடியாது. அவன் வாழ்வில் கலப்பவர் கலப்பன கதையிலும் வரலாம்; வரவேண்டும். அப்போது தான் யதார்த்தமாயிருக்க முடியும்.

கதாசிரியர் தங்கராசனுக்கு என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்ந்து அவர் நிறைய எழுதி மேலும் மேலும் வளர்ச்சியும், பக்குவமும் பெற எதிர் பார்த்து ஆசிகளுடன் இந்த அணிந்துறையை நிறைவு செய்கிறேன்.

– தீபம் நா.பார்த்தசாரதி

– சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: 1988, விஜயா சபரி பதிப்பகம், சென்னை.


இதழ்கள் விரியும் முன்.. ! – சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு)

இதயமலர்ச் சோனையிலே இனிது மலர்ந்த சிந்தனைப் பூக்கள்…? இவை ஒவ்வொன்றும் இனி தார்ந்த ஒவ்வொரு காலக்கட்டத்தில் மலர்ந்து ஒளிர்ந் தவை…! கனிந்த மலர்ந்த காலக்கட்டத்தையும், குழலி யலையும் கருத்தில் கொண்டு நுகர்ந்தால்தான் சிந்தனை பூக்களின் செறிமனம் கமழ்ந்து தோன்றும்.

இந்தச் சிந்தனைப் பூக்களை “ஏழும் மூன்றும்” இனம் பிரித்துக் கொள்ள முடியும். கோட்டுப் பூ கொடிப் பூ, நீர்ப் பூ, நிலப் பூ எனப் பூக்களை நான்கு வகைகளாகப் பகுத்துணர்ந்தனர் நமது முன்னோர். சமுதாயச் சாலையோரங்களில் சராசரியாகப் பூத்துக் கொண்டிருக்கும் இயல்பொளிரும் பூக்களுடன், அவ்வப் போது மலரும் புதுவகைப் பூக்களையும் மறந்துவிடக் கூடாதல்லவா…? எனவே புதுமைப் பூக்களாக, மூன்று மலர்கள் பொலித்துவரக் காணலாம். இனங் காண முடிந் தால் அது எனக்குக் கிடைத்த வெற்றியாகக் கொள்ள லாம்…!

இந்தப் பத்துப் பூக்கள்…! எழிலார்ந்த சமுதாயப் பூங்காவில் என்றென்றுமல்ல; அவ்வப்போது தோன்றும் அரும்பனிப் பூக்கள்…! “இப்படியும் பூக்குமா?” என் றொரு கேள்வி எழக்கூடும், “இப்படித்தான் பூத்துக் கொண்டிருக்கும் இன்ப துன்பக் காட்சி மாட்சி? இவ் வையகத்தில் என்றும் உண்டென்பதற்குச் சிந்தனைப் பூக்கள் ஒரு கட்டியங் கூறும்…!

இந்தச் சிந்தனைப் பூக்களில் ஒரு சில, “மரபு வழி” மலர்ந்திடாதவை என்று, மனம் நுகர்வோர் கருதக் கூடும். உலகப் பூத்தோட்டமாம் சமுதாய உவ வனத்தில் சூரியகாந்தி-குறிஞ்சி – அனிச்சம் ஆகியன அவ்வப்போது மலர்த்துகொண்டுதான் இருக்கின்றன. இவற்றை மறந்து விடவோ, மரபுவழி மகத்துவத்தால் மறைந்து விடவோ முடியாது; கூடாது…! அத்தகையதாகச் கருதும் சிந்தனைப் பூக்களை; நுட்பமாக மனம் நுகர்வோர் அடி யொற்றி ஆழ்ந்து சுவாசித்து அனுபவிக்க வேண்டு கின்றேன்,

இனி, சிந்தனைப் பூக்களை அணிபெறச் செய்ததை நூலகத்தாருக்கும், இழை பிரித்து நுகர்ந்து இனிய அணிந் துரை நல்கிய என்னுள்ளம் கவர்ந்த இலக்கியப் படைப் பாளர் நற்றமிழ் வல்லுநர் நா. பார்த்தசாரதியார் அவர் களுக்கும், மலர் முகப்பு ஓவியத்தை மனங்கொண்டு அருளிய ஓவியர் அவர்களுக்கும் சிந்தனைப் பூபுகள் சிலிர்த்துவரும் தென்றலினால் செறிந்துவந்து மனம் பரப்பச் செய்துவந்த “சிற்பிகள்” ஒவ்வொருவருக்கும் சிரம் தாழ்த்திக் கரம் குவித்தேன். சென்னையில் டாக்டர் A.சுவாமிநாதன் (வரவாற்றுப் பேராசிரியர்) அவச்களின் வரலாற்று நூல்களை வெளியிட்டு, புகழ் பரப்பும் தீபா பதிப்பகத்தாருக்கும் இதய நன்றி என் றென்றும் உரித்து…!

அன்புடன்,
மு.தங்கராசன்
சிங்கப்பூர்.

– சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: 1988, விஜயா சபரி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *