சி.வைத்தியலிங்கம்

 

வைத்தியலிங்கம், சி. (1911 – 1991.05.25) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ரவீந்திரன் என்னும் புனைபெயரால் அறியப்பட்டார். 1930களிலிருந்து சிறுகதைகளை எழுதத் தொடங்கிய இவர், 25 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் பராசக்தி, நெடுவழி, மூன்றாம் பிறை, பாற்கஞ்சி, ஏன் சிரித்தார், என் காதல், பைத்தியக்காரி, பார்வதி, பிச்சைக்காரர், உள்ளப்பெருக்கு, டிங்கிரி மெனிக்கா உட்படப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும் இவரது சிறுகதைகள் தொகுப்பு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. 1990 இல் வெளிவந்த கங்காகீதம் ஒரு சிறுகதை தொகுப்பு நூலாகும்.

இவர் ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் வல்லவர். இவரது சிறுகதைகளில் தமிழக எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலின் சாயல்கள் காணப்படுகின்றது. தூய தமிழ்நடையைச் சிறுகதைகளில் பயன்படுத்தியுள்ளார். ரஷ்ய இலக்கிய மேதை இவான் துர்க்கனிவ்வின் On the Eve என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்தார். இ சிறுகதை எழுத்தாளர் இலங்கையர்கோனின் உறவினராவார்.

சி.வைத்தியலிங்கம் இலங்கையின் வடபகுதியில் உள்ள ஏழாலை என்ற சிறு கிராமத்தில் பிறந்த இவர், தன் இளமைக்காலம் தொட்டே எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டிருந்தார். தனது 17வது வயதிலிருந்து சிறுகதைகள் எழுதத் துவங்கிய திரு. வைத்தியலிங்கம், புதுமைப்பித்தன், கு.ப.ரா., ஆகியோரின் எழுத்துக்களுடனும் ஆழ்ந்த பரிச்சயம் கொண்டிருந்தார். ஆங்கிலத்திலும், வடமொழியிலும் சிறப்பான புலமை பெற்றிருந்த இவர், காளிதாசரின் சகுந்தலம், குமாரசம்பவம், மேகதூதம் ஆகியவற்றை மொழி பெயர்த்துள்ளார். ஈழத்து கு.ப.ரா. என்று அழைக்கப்பட்ட திரு வைத்தியலிங்கம் ஈழத்து சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவராக மதிக்கப்படுபவர்.

கொழும்பு மாநகர சபையில் 40 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், சில காலம் ஏழாலையில் வசித்தார். அதன் பின் 1986 இல் லண்டனுக்குக் குடிபெயர்ந்து தன் மகள் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் – ஒரு மகன், இரண்டு மகள்கள். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி உடல் நிலை நலிவுற்று தன் 80 வது வயதில் காலமானார்.

கங்கா கீதம் – சிறுகதை தொகுப்பு
முதற் பதிப்பு : Nov 1990
இரண்டாம் பதிப்பு : Dec 1997

1) பாற்கஞ்சி – (ஆனந்த விகடன் – 1940)
2) ஏன் சிரித்தார்? – (கலைமகள் – 1939)
3) மின்னல் – (ஈழகேசரி – 1939)
4) கழனி கங்கைக்கரையில் – (கலைமகள் – 1939)
5) பார்வதி – (கலைமகள் – 1939)
6) தியாகம் – (கலைமகள் – 1940)
7) நந்தகுமாரன் – (கலைமகள் – 1940)
8) ஏமாளிகள் – (கலைமகள் – 1941)
9) பூதத்தம்பிக் கோட்டை – (கலைமகள் – 1941)
10) விதவையின் இதயம் – (ஈழகேசரி – 1941)
11) மரணத்தின் நிழல் – (ஈழகேசரி – 1941)
12) அழியாப் பொருள் – (கலைமகள் – 1941)
13) மூன்றாம் பிறை – (கதைக்கோவை – 1942)
14) நெடுவழி – (ஈழகேசரி – 1942)
15) பைத்தியக்காரி – ( கலைமகள் – 1942)
16) கங்கா கீதம் – ( கிராம ஊழியன் – 1944)
17) சிருஷ்டி ரகசியம் – (ஈழகேசரி – 1948)
18) உள்ளப் பெருக்கு – (ஈழகேசரி – 1956)

1962-இல் கொழும்பில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் நிகழ்த்திய தலைமைப் பேருரை

தமிழ் இலக்கியம் இப்பொழுதெல்லாம் தமிழ் பார்க்கும் போது நான் சிறுவயதில் இராமேஸ்வர தேவாலயத்தின் பிரகாரங்களைச் சுற்றி வந்த பொழுது ஏற்பட்ட ஓர் அனுபவம் என் நினைவுக்கு வருகிறது. அந்த கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வந்த பொழுது, அதன் நீளமும், உயரமும், கம்பீரமும், பிரமாண்ட அமைப்பும் என் மனதிலே ‘நான் ஒரு தூசிக்குச் சமானமானவன், எவ்வளவு சிறியவன்’ என்ற உணர்ச்சியைக் கொண்டு வந்தது. இன்று இந்த மகாசபையின் முன் நிற்கும் போதும், உண்மையில் நான் எத்துனை சிறியவன் என்ற உணர்ச்சிதான் எனக்கு ஏற்படுகிறது. இங்கே இச்சபையிலே பேராசிரியர்களும், வித்துவான்களும், பிரபலமடைந்த எழுத்தாளர்களும், இன்னும் பல துறைகளிலும் முன் இடம் வகிக்கும் பெரியார் பலரும் இருக்கிறார்கள். இன்று தலைமை தாங்குவதற்கு ஒரு சாதாரண தொழிலாளியாகிய என்னைத் தலைமை வகிக்கும்படி ஏன் கேட்டிருக்கிரார்கலென்று என் மனம் சிந்திக்கிறது. நான் எழுதியதோ மிகவும் சொற்பம். அதிலும் வெற்றியடைந்தது மிக மிகக்குறைவு. ஒருவேளை எழுத்துத்துறையில், அதாவது சிருஷ்டி இலக்கியத் துறையில் தொடர்பு கொண்ட தொழிலாளிகளில் நான் பழையவர்களில் ஒருவன் என்ற காரணமாயிருக்கலாமோ என்று எண்ணுகிறேன். அப்படியானால் எனக்குக் கொடுத்த மதிப்பாகவே நான் கருதுகிறேன்.

இலங்கைத் தமிழ் மக்களின் சரித்திரத்திலே இன்றைய தினம் ஒரு முக்கியமான நாள். இதற்கு முன்னரெல்லாம் இப்படியான மாநாடு, எழுத்தைப்பற்றி ஆராய்வதற்கும், எழுத்தாளரை சிறப்பிப்பதற்கும் கூடவில்லை. இச்சபையிலே இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து எழுத்தாளர்களும், ரசிகர்களும், இலக்கியத்திலே ஈடுபாடுடையவர்களும் இன்று கூடியிருக்கிறோம். இலக்கியம் எதற்காக? எழுத்தாளன் ஏன் எழுதுகிறான்? கவிஞன் ஏன் பாடுகிறான்? சிருஷ்டி இலக்கியத்தில் உருவமா அல்லது கருத்தா முக்கியம்? இப்படியான பல பிரச்சனைகளைப் பற்றியும் நாம் கருத்தரங்கத்திலே கவனிக்கப் போகிறோம். இவைகளெல்லாம் ஓர் எழுத்தாளனுக்கு நிரந்தர பிரச்சனைகளாயிருக்கின்றன.

இவைகளைப் பற்றி நீண்ட காலமாக உலகத்தின் பல பாகங்களிலும் ஆராய்ந்து கொண்டே வந்திருக்கிறார்கள். இவைகளுக்கு இதுதான் சரியான விடை என்று எவராலும் திட்டவட்டமாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது.

எங்களில் பலர் யுகம் யுகாந்தரமாய் வந்து கொண்டேயிருக்கும், சம்பிரதாயங்களிலும், பழக்க வழக்கங்களிலும் ஊறிப்போய், பரம்பரை பரம்பரையாக வந்துகொண்டிருக்கும் சில இலட்சியங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்களாயிருக்கிறோம். வேறு சிலர் புதுமையான ஒரு சமுதாயத்தையும், சிருஷ்டியையும் படைப்பதற்கு ஆவேச வெறியுடன் உழைத்து வருகின்றார்கள். இன்னொரு சாரார் எழுத்தெல்லாம் ஒரு பிரயோசனத்தைக் கொடுக்க வேண்டும்; அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும், மனிதனைப் பயன்படுத்தி உயர்ச்சிபெற உதவ வேண்டுமென்று கருதுகிறார்கள். வேறு சிலர் போதனையில் இறங்குவது ஒரு எழுத்தாளனின் வேலை அல்ல, எழுத வேண்டும் என்ற ஒரு வேகத்தினால் எழுதிக்கொண்டே போகிறான் என்று கருதுகிறார்கள். இதமான எழுத்திலேதான் கலை பூரணமாய் விசாலிக்கிறதென்று வாதாடுகிறார்கள். இந்த நிலையை எங்கள் மத்தியில் மட்டுமன்றி உலகத்தின் எப்பாகத்திலும் காண்கிறோம்.

இலங்கையில் இப்பொழுது சிருஷ்டி இலக்கியத்துறையில் முன்னொரு பொழுதும் கண்டிராத உத்வேகமும், ஊக்கமும் காணப்படுகிறது. இளைஞர்கள் பலர் எழுத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்கள், முக்கியமாய் சிறுகதைத் துறையில் ஓரளவு வளர்ந்திருக்கிறோமென்று மதிப்பிட்டுச் சொல்லலாம். ஆனால் சிறுகதை மாத்திரம் இலக்கியமாகி விடுமா? இலக்கியத்தின் ஏனைய அங்கங்களாகிய நாவலும், நாடகமும், கவிதையும், சரித்திர விஞ்ஞான சம்பந்தமான நூல்களும், தரிசன நூல்களும் இப்படி எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்படுத்தும் போதுதானே இலக்கியம் பூரணமான வளர்ச்சி பெற்று வருவதாக நாம் கூற முடியும். இலக்கியம் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வரும் போதுதான் அது சமுதாயத்தில் ஆணிவேராகி வலுவையும், ஜீவசக்தியையும் கொடுத்து அதை வளம் பெறச் செய்கிறது. ஆகவே எழுத்தாளர்கள் முக்கியமாய் இளம் எழுத்தாளர்கள் இந்த அம்சத்தைத் தங்கள் கவனத்தில் இருத்தி, இந்தக் குறையை நிவர்த்தி செய்வார்களென்று நான் எதிர்பார்கிறேன்.

ஓர் எழுத்தாளன் பாசையைச் சரளமாய் எழுதப்பழகுவதற்கும், கதைகளையோ ஏனைய சிருஷ்டிகளைச் செய்வதற்கும் பத்திரிகைகள் ஒரு நடை வண்டி போல் உதவி செய்கின்றன. இந் நாட்களில், பத்திரிகைகளும் புற்றீசல் போல் வெளிவந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அவை வெளிவரும் வேகத்தைப் பார்க்கும் போது ஏதோ வஞ்சம் தீர்ப்பதற்காக வருகிறது போல் சொல்லத் தோன்றுகிறது. அற்ப விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எழுத்தாளர் பிரிந்து புதுப் பத்திரிகைகளைத் தொடங்குகிறார்கள். இதனால் ஒருவருக்கும் பயன் ஏற்படுவதில்லை. இலக்கியத்தின் தன்மையில் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அது இருக்கவும்தான் வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி ஏற்படும். அனால், துவேசதினாலோ, பொறாமையினாலோ பிரிந்து போவதால் ஒரு பத்திரிகையும் உருப்படாமல் போய்விடுகிறது. இப்படியான ஒரு போக்கு சமீப காலத்தில், எழுத்தாளரிடமும் அவர்கள் எழுத்துக்களிலும் காணப்படுவதால்தான் இதை நான் வருத்தத்துடன் சொல்ல வேண்டி வந்தது.

இலக்கிய விமர்சனமும் இச் சூழ்நிலையின் அடிப்படையிலே இயங்கி வருவதை நாம் பார்க்கிறோம். நிதானமிழந்து, வரம்புமீறிப் பரஸ்பரம் சொற்பிரயோகத்தில் இறங்கிவிடுவது இலக்கிய தர்மமாகாது. ஒரு கவிஞன் மேகத்திலே சஞ்சாரம் செய்கிறான் என்று சொல்வார்கள். மேகத்திலேதான் இடியும் மின்னலும் உண்டாகின்றன. ஓர் சொல்லுக்கு மின்னலின் வேகமும் இடியின் சக்தியும் இருக்கின்றன என்பதுதான் இதன் பொருள். நம் முன்னோர்களும் சொல்லின் பவிந்திரத்தன்மையை உணர்ந்துதான் மந்திரம் என்று அதைப் போற்றினார்கள். ஆகவே அதைப் பாவிக்கும் போது அளந்து நிதானத்துடன் பாவிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அதன் புனிதத் தன்மையை உணர்ந்து விமர்சனம் இயங்க வேண்டும். நாங்கள் செய்யும் சர்சைகள் எல்லாம் இலக்கிய ஆக்கத்துக்கு வழி செய்துவிட வேண்டுமேயொழிய அரும்பி வரும் முனையை முளையிலே கருக்கிவிடக்கூடாது. இப்படியான மார்க்கத்தில் விமர்சனம் இயங்கி வரும்போதுதான் உண்மையில் இலக்கிய வளர்ச்சி பெறக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிக் கொண்டுவரும்.

சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன் இருந்த எழுத்தாளனுக்கும் மேலாக இன்றைய எழுத்தாளனுக்கும் மேலாக இன்றைய எழுத்தாளருக்குப் பல வசதிகளும் சௌகரியங்களும் ஆதரவும் இருக்கின்றன. அவன் சமூகத்துக்குச் செய்ய வேண்டிய சேவைகளும் கூடிக் கொண்டே வருகின்றன. அவன் பொதுமக்களை நல்வழிப்படுத்துவதற்காக எழுதினாலென்ன தூண்டி ஆவேசம் மூட்ட எழுதினாலென்ன அல்லது தனது ஆத்ம திருப்திக்காகத்தான் எழுதினாலென்ன அவன் தன்னைப் பரி பூரணமாகச் சமுகத்துக்கு அர்ப்பணம் செய்து, தன்னை அவர்களுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அவனாலே ஆக்கக்கூடும், விஷ்தரிக்கக்கூடும். வளர்ச்சி பெறச் செய்யவும் கூடும். அன்றேல் ஒன்றைப் பாழ்படுத்தவோ அல்லது அழிக்கவோ கூடும். அதனால்தான் அவன் பொறுப்பு அதிகமாகிறது.

இப்பொழுதெல்லாம் நம் நாட்டுச் சரித்திரத்தின் திருப்பு முனையில் நாம் இருக்கிறோம். பெரிய பெரிய மாற்றங்கள் நம் மத்தியிலே நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன. சமுக வாழ்வில் எத்தனையோ புரட்சிகள் ஏற்படலாம். நாம் போற்றிவரும் இலட்சியங்களின் மதிப்புக் குறைந்து போகலாம். ஆனால் யுகம் யுகாந்தரமாய் சில நிரந்தரமான இலட்சியங்கள் மனிதனை, மனுஷத்தன்மையில் இருந்து தவறிவிடாமல், மனிதனாக வாழ வழிசெய்து கொண்டு வந்திருக்கின்றன. மாசில்லாத பெருவாழ்வுக்கும் பண்புடைய சீரிய மனோநிலைக்கும், சில உன்னதமான கொள்கைகள் அவசியமென்பதை மனிதன் பல காலமாக உணர்ந்து வந்திருக்கிறான். சத்தியமும் அழகும் என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்ற தாகம் அவனுக்கு இருந்து வந்திருக்கிறது. இந்த உன்னதமான இலட்சியங்களையும் எண்ணங்களையும் திரும்பத் திரும்ப மனிதனுக்கு எடுத்து ஓதுவதில் உங்கள் பேனா தூங்காமல் விழிப்புடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன் .

(நன்றி – மல்லிகை – மே 1987)


ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள் – செம்பியன் செல்வன் – ஜூலை 1973

இலக்கிய அலை 

“1930-ம் வருடத்திற்குப் பின் உப்புச் சத்தியாக்கிரகத்தின் இலக்கிய அலையாக ஒருபுது வேகம் இலக்கியத்தில் ஏற்பட்டது. அதே போன்று ஈழத்திலும் டொனமூர் அரசியற்றிட்டத்தையொட்டி ஒரு இலக்கிய அலை தோன்றாவிடினும், படித்த மத்தியதர வர்க் கத்தினரிடையே ஒரு இலக்கிய விழிப்பு ஏற்பட்டது. அரசியற் றிட்ட அமைப்பிலே மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசியல் நோக்கத்திற்காக, பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் ஆரம்பிக்கப்பட்டன. ஆயினும் குடியேற்ற நாட்டாட்சி இலங்கையின் அரசியல், பொருளியல் வாழ்க்கையை நன்கு பீடித்திருந்தமையால் ஆங்கில மொழி மூலம் மேனாட்டு நாகரிகம் பரவிக் கொண்டே வந்தது. யாழ்ப்பாணத்தில் இமாற்றம் மற்றத் தமிழ்ப் பகுதியாம் மட்டக்களப்பிலும் பார்க்க வேக மாகப் பரவிற்று. இந்த ஆங்கிலக் கல்வியுடன் புனைகதையும் ஈழத்தில் பரவலாயிற்று. 

“1930-ம் ஆண்டு தொடக்கம் சிறுகதை ஈழத்தில் உருவப் பிரக்ஞையுடன் எழுதப்படலாயிற்று. இந்த உருவப் பிரக்ஞை யானது ஆங்கிலக் கல்வியினாலும், தென்னிந்திய இலக்கியச் செல்வாக்குகளினாலும் அமையலாயின.’ இதற்குச் சாதகமாக இந்தியத் தமிழிலக்கியத்தில் 1930-ல் ஏற்பட்ட மணிக்கொடி எழுத்தாளர்கள் விளங்கினர். 

ஆகவே, கடலால் பிரிக்கப்பட்டுள்ள போதிலும் தேசிய உணர்விலும், இலக்கிய அபிமானத்திலும் ஈழமும் இந்தியாவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தன. இதனால் ஒரு நாட்டில் எழும் எண்ண எழுச்சிகளும், அரசியற் பிரச்சனைகளும் மற்ற நாட்டைப் பெரிதும் பாதிக்கலாயின. அத்தகைய பாதிப்பு இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இலங்கையில் ஆழமாக ஏற்படலாயிற்று. 

1930-ல் தமிழிலக்கியத்தில் பெரும் விளைவை ஏற்படுத்திய மணிக்கொடிப் பிரிவினரால் சிறுகதைத் துறை இலக்கிய அந் தஸ்துப் பெற்றது. மணிக்கொடிப் பிரிவினர் மேல்நாட்டு மொழி களில் உன்னத நிலைபெற்று விளங்கிய சிறுகதைத் துறையை தமி ழில் கொணர்ந்து இலக்கிய அந்தஸ்து ஏற்ற எடுத்துக் கொண்ட முயற்சியும், அதன் பலாபலன்களும் ஈழத்துத் தமிழ் எழுத் தாளர்களைப் பெரிதும் கவரலாயின. 

எனவே, ஈழத்து எழுத்தாளர்களும் சிறுகதையின் பண்பை யும், பயனையும் பற்றிப் பெரிதும் அறிய முற்பட்டதுடன், தாமும் இத்துறையிலாழ்ந்து ஈடுபடலாயினர். இதற்குச் சாதகமாக அர சியல் நோக்குக்காக தாபிக்கப்பட்ட ஈழத்துப் பத்திரிகைகள் விளங்கினாலும், தென்னிந்தியப் பத்திரிகைகளே இவர்களுக்கு அதிகம் கைகொடுத்தது. இதனால்- ஈழத்திலும். இந்தியா விலும் ஏற்பட்ட இலக்கிய அலை ஒத்த காலத்தில் தோன்றியது எனலாம். இத்தகைய ஒத்த தன்மை காணப்பட, சந்தர்ப்பம் மட்டுமல்லாமல் இந்நாட்டு எழுத்தாளர்களின் இலக்கிய மன வுணர்வுகளில் காணப்பட்ட நெருங்கிய ஒற்றுமையே முக்கிய காரணம் எனலாம். 

பிதாமகர் 

ஈழத்தின் நவீன இலக்கியப் பிதாமகர்களில் ஒருவராக இன்று கணிக்கப்படும்: திரு சி வைத்தியலிங்கம் சிறுககைத் துறையில் காலடி பதித்தது. இக்காலத்தில் தான் எனலாம். இவர் ஆங்கில மொழிப் பயிற்சிமிக்கவராதலால், சிறுகதை பற்றியும், அதன் தன்மைபற்றியும் நன்குதெரிந்திருந்ததுடன், தன்னளவிலும், சிறு கதைபற்றிச் சில கொள் கைகளைக் கொண்டிருந்தார் என்பது அவர் கூற்றாலேயே புலனாகின்றது. 

‘சிறுகதை மேல்நாட்டு இலக்கியத் தினுசுகளில் ஒன்று கதைப் போக்கும் சுருக்கமாக இருக்கும். பாத்திரங்களும் இரண்டு அல்லது மூன்று.ஓர் ஓவியன் சித்திரக் கோல் கொண்டு எழு தும் ஒரு வளைவினால் அல்லது கோட்டால் படத்தில் கொண்டு வரும் பாவமும் உருவமும்… அவ்வளவு சக்தி சிறுகதை ஆசிரிய னுக்கு இருக்க வேண்டும்’ 

இதிலிருந்து சிறுகதைபற்றி இவரின் அபிப்பிராயம் தெள் ளத் தெளிவாகப் புலனாகின்றது. ஆயினும் இவர் சிறுகதையில் மட்டுமல்லாமல் பிற இலக்கிய வடிவங்களிலும் பெரு விருப்புக் கொண்டிருந்தார். அத்தகைய பிற துறை, பிற மொழி விருப் புகளினடியிலேயே இவரது எழுத்துக்கள் பிறந்ததாகையால், இவரது இலக்கிய உணர்வு, இரசனை பற்றித் தெரிந்திருந்தால் தான் அவரை நன்கு அறியமுடியும். 

இலக்கிய அரும்பு 

இவரின் இலக்கியத் தாகம் இளவயதிலேயே தோன்றிவிட் டது எனலாம். இத்தகைய இலக்கிய ஊட டல் அவர் சிறுவ னாக இருக்கும் போதே – ஏழாலை என்னும் சின்னஞ் சிறு கிராமத் திலே நடமாடித்திரிந்தபோதே-இலக்கிய ஆர்வம் அவர் நெஞ் சில் எழ ஆரம்பித்துவிட்டது. இதனைப் பற்றி அவரே ஓரிடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார். 

“யாழ்ப்பாணப் பகுதிகளில் ஐப்பசி, கார்த்திகை மாதங் களிலே மழை. அடை மழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கும். கிராமவாசிகளுக்கு பொழுது போகாமல் இரவு நேரங்கள் நீண்டு கொண்டே போகும் இப்படியான இரவு நேரங்களில் எங்கள் வீட்டு விறாந்தையிலே சில கமக்காரர் கூடிவிடுவார்கள். என் தந்தை ஒரு சாய்மான நாற்காலியில் இருந்துகொண்டு ஏதோ ஒரு நாவலை உரக்க வாசிப்பார். நானும் மற்றவர்களுடன் சேர்ந்து கேட்டுக்கொண்டே வருவேன்” 

இக்கூற்று ஒரு காலகட்டத்தின் இலக்கிய நிலையையும் காட்டி நிற்பதுடன், சி. வைத்தியலிங்கத்தின் இலக்கிய உணர் வின் முளை எப்போது அரும்பியது என்பதனை நன்கு காட்டுகின்றது 

பாரதி பரம்பரை 

இவரின் இளமைப் பருவத்து இலக்கியதாகத்திற்கு கிடைத்த இலக்கிய உணவு இவ்வாறாகவே அமைய, இவர்க்கு 1930-ம் ஆண்டளவில் கொழும்பு நகரின் அழைப்புக் கிட்டியது. இதன் பின்தான் இவரின் இலக்கியச் சிந்தனைகளும், செயல்களும் ஒரு திடமான பாதையில் செல்லத் தொடங்கின எனலாம். கொழும் பில் இருக்கும் விவேகானந்த சபையின் வாசிகசாலை இவருக்குத் தென்னிந்திய எழுத்தாளர்களை சிறந்த முறையில் அறிமுகம் செய்து வைத்தது. அங்கு கிடைக்கப்பெற்ற திரிவேணி, கலை மகள், கலா நிலையம், செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவிகடன் மணிக் கொடி பத்திரிகைகள் இவரிடையே இலக்கிய விழிப்பை ஏற் படுத்தின. 

இந்தியாவில் தம்மை பாரதி பரம்பரை எனக கொண்ட கு. ப. ரா, புதுமைப் பித்தன், ந. பிச்சமூர்த்தி, த நா. குமாரஸ் வாமி. க.நா.சுப்பிரமணியம்,சிதம்பரசுப்பிரமணியம் முதலியோர் இவர் கவனத்தை மிகவும் கவர்ந்தனர். சிறப்பாக கு.ப. ராஜ கோபாலனிடம் இவருக்கு ஒரு ஆத்மீக உறவே ஏற்பட்டுவிட்டது. இவர்கள் அனைவரும் ஆங்கிலம் அறிந்த தமிழ் எழுத்தாளர்கள். இவர்கள் பண்பும் பணியும் இவரின் இதயத்து உணர்ச்சிகளைக் கிளறிவிடலாயின. 

எந்தையும் தாயும் 

இதே வேளையில் இவருக்கு இன்னொரு இலக்கியத் தாக்கமும் ஏற்பட்டது. சுவாமி வேதாசலம் (மறை மலை அடிகள்) அவர் களின் தமிழ்ச் சாகுந்தலை மொழிபெயர்ப்பைப் படித்த போது, அதனை அதன் மூல மொழியிலேயே மூல மொழியிலேயே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு எழுந்தது. இந்த ஆர்வம் நாளடைவில் பிரேமையாகிவிட்டது. இதனால் இவரே வட மொழியான சமஸ்கிருத பாஷையை வலிந்து கற்கலானார். அதனைக் கற்கக் கற்க அதன் நயங்களில் ஆழ்ந்தும் போனார். தமிழ் மொழி வளம் பெற வேண்டுமானால் வட மொழிக் கலப்பு அவசியம் என்ற எண்ணமும் அவருக்கு எழுந்தது. 

காளிதாசனின் சாகுந்தலமும், குமார சம்பவமும், மேக சந்தேசமும் என்னைக் கவர்ந்தது போல் வேறொரு நூலும் இன்று வரை என்னைக் கவரவில்லை. 

எனக்கோ சமஸ்கிருத பாஷையை நினைக்கும் போதெல்லாம் ஹிமாசல பர்வதத்தின் பனிதோய்ந்த கொடு முடிகளின் தூய் மையும்,காம்பீரியமும், தான் நினைவுக்கு வருகிறது. அதன் பரப்பையும், ஆழத்தையும் ஒப்பரிய சௌந்தரியத்தையும் கண்டு தலைவணங்கச் செய்கிறது. தமிழ் என் தாய் என்றால் சமஸ்கிருதம் என் தந்தை எனக் கருதுபவன் நான். 

தமிழில் சிறுகதைகள், நாவல்கள் எழுதவோ, கவிதைகள், கீர்த்தனங்கள் புனையவோ விரும்புபவர்கள் சமஸ்கிருத பாஷை யிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பது நல்லது. அதன் உறவினால் சொல்வளம் பெருகி. வளர்கிறது. உயர்ந்த கற்பனைகள் உதய மாகின்றன புதிய உவமைகளைச் சிருஷ்டிப்பதற்கும் உதவி செய்கின்றது. 

ஆகவே, இவரது இலக்கிய வளர்ச்சிக்குப் பசளையாக ஆங்கில மொழியுடன் சமஸ்கிருத மொழியும் உதவின என்றே கூறல் வேண்டும். 

இலக்கிய வட்டம் 

இவரின் இலக்கிய ஆர்வத்தையும், இலக்கிய அறிவையும் சிறந்த பாதையில் செம்மையாக நடாத்திச் செல்ல 1930 -ம் ஆண்டளவில் கொழும்பில் எழுத்தாள நண்பர்கள் கூடி இயங்கிய இலக்கிய வட்டம் பெருமளவில் உதவியது எனலாம். இந்த இலக்கிய வட்டத்தில் திரு.வ.கந்தையா, சோ சிவபாதசுந்தரம், சோ.நடராசன் திருநீலகண்டன், இலங்கையர்கோன் குல சபா நாதன். ஆ குருசுவாமி. -ஆகியோர் அங்கம் வகித்தனர். இவர் கள் அனைவரும் மேனாட்டிலக்கியப் பயிற்சி மிக்க தமிழ் ஆர்வலர் கள். ஆகவே, இவ்வட்டத்தில் மேனாட்டு இலக்கியங்களும்,தமிழ் இலக்கியங்களும் வாசிக்கப்பட்டு நன்கு விவாதிக்கப்பட்டன இத் அறிவின் தகைய விமர்சன விவாதங்கள் இலக்கிய தரத்தை மேம்படுத்தின. நல்ல இலக்கியம் எது ? நசிவு இலக்கியம் எது? எழுத்தாளன் எதனைப்படைக்கவேண்டும்? உலகின் உன்னத இலக்கியங்கள் எப்படி, என்ன பொருள் பற்றி, எவ்வாறு அமைந்துள்ளன? – என்ற கேள்விகட்கு சிறந்த விடையளித்தன. இதனால் உள்ளத் தெளிவும் உணர்ச்சிப் பெருக்கும் இவரிடம் இயல்பாகவே எழலாயின. அதே வேளையில்தான் வாழ்ந்த கிராமம், அதன் மக்கள் சமுதாய ஏற்ற இறக்கங்கள், அவர்கள் தம் பிரச்சனை என்பனவெல்லாம் அவர் மனக் கடலில் அலைகளாக எழுந்தன.

கலைநோக்கு 

உலகின் உயர்ந்த இலக்கியங்கள் அனைத்தும் வாழ்வினடியாக எழுந்திருத்தலையும், அதனால் இலக்கியமும் மக்களின் வாழ்வும் உயர் நிலை பெற்றிருப்பதையும் இவரால் நன்கு அவதானிக்கமுடிந் தது. அத்துடன் உலக இலக்கியங்களில் பிரதேச முக்கியத்துவம் காணப்படுதலும், அதே வேளையில் அந்தப் பிரதேச உணர்வை மீறி தேசிய, சர் தேசிய உறவுகள் மலர்வதையும் அறியலானார். அத்துடன் ஒவ்வொரு படைப்பாளியும் தன்னையும், த ன்னைச் சூழ்ந்திருப்பதினின்றும் விடுபட்டு வாழ முடியாது என்பதனையும் நன்குணரலானார். எனவே, இவரது படைப்புக்கள் இலங்கை வாழ் மக்களின் பின்னணியிலே எழலாயின. இவரின் படைப்புக்களை ஈழகேசரி வெளியிட்டு முதலில் ஆதரவளிக்கலாயிற்று. இவ்வா தரவில் இவர் எழுத்து வளம்பெறலாயிற்று. 

கிராமத்தின் அழைப்பு 

“நகர வாழ்க்கையுடன் நான் என்றுமே ஒன்றியதில்லை. கிராமத்தின் அழைப்புக் குரல் எப்பொழுதும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது’ என்று கூறும் சி.வைத்திய லிங்கம் அவர்களின் வாழ்வும், பிழைப்பும் கொழும்பு போன்ற மாநகரங்களிலே நடந்து கொண்டிருந்தாலும், அவரின் உள்ளத் திலே கிராமத்தின் ஜீவநாதமே ஒலித்துக் கொண்டிருக்கின்றது தான் வாழ்ந்த வாழ்க்கை-இளவயது நினைவுகளை அவரால் மறக்கவே மூடியவில்லை. அத்துடன் ஒரு உண்மைக் கலைஞனின் மனம் செயற்கைப் பூச்சுக்கள் நிறைந்த நகரங்களை விட, உண்மையும் தெளிவும் மிக்க இனிய கிராமங்களையே நாடும். அவனுக்கு கிராமங்கள் ஜீவதாது ஏந்தி நிற்கும் புத்தம்புது மலராகவே விளங்கும். இம் மக்களின் வாழ்வும் வளமும் அவனுக்குக் காவியமாகவே விரியும். அதுவும் கிராமத்தில் பிறந்த ஒரு உணர்ச்சிப் பிறவியைப்பற்றி வேறு சொல்ல வேண்டியதில்லை 

“கிராமச் சூழ்நிலையிலே வளர்ந்தவன் நான். கள்ளங்கபட மில்லாத கிராமவாசிகளுடன் ஒன்றி வாழ்ந்திருந்தவன். தோட் டந்துரவுகளிலும், வயல் வெளிகளிலும் வெய்யிலிலும் மழை யினிலும், இரவிலும் பகலிலும் அவர்களுடன் சேர்ந்து உழைத் திருக்கின்றேன். அங்கு அசையும் காற்றும். வீசும் நிலவும். ஊறும் நீகும் என்னை இன்பலாகிரியில் ஆழ்த்திவிடுகிறது’ என்கிறார் 

எண்ணமும் எழுத்தும் 

“தத்துவ விசாரமும், வட மொழி இலக்கியப்பற்று, கவியின் பம் ஆகியவற்றில் பற்றுங்கொண்ட’ சி.வைத்தியலிங்கம் அவர்க ளின் படைப்பிலே இவையே ஆழமாக வேரூன்றிக் காணப்படு கின்றன. இதற்கு இவர் மிகப் பற்றுக்கொண்ட எழுத்துலக முன் னாடிகளே காரணர்களாக விளங்குகின்றனர். இவர் பற்றுக் கொண்ட பாரதி பரம்பரையினரும், வடமொழி இலக்கிய மேதை களும், தாகூர், கல்ஸ்வேதி, துர்க்கனேவ், போன்றோரின் பாதிப்பு இவரிடையே மிகவும் காணப்படுகிறது. 

சமுதாயம் பற்றிய இலக்கியக் கண்ணோட்டம் தாகூர், துர்க் கனேவ் போன்றோரால் ஏற்பட்டிருக்கலாம் என்பதனை இவரது படைப்புகள் வலியுறுத்துகின்றன. இவரது படைப்புக்களில் ஏழை மக்களின் வாழ்க்கைத் தாக்கங்களும், அவர்களின் மனவுணர்வுக ளுமே பெரிதும் சித்தரிக்கப்படுகின்றன. இச்சித்தரிப்புக்கள் வாசிப்போரிடையே ஒரு சமூக சித்திரமாக விளங்குவது மட்டு மன்றி, அவ்வாழ்க்கை முறை பற்றிய அனுதாபத்தையும், அனு தாபத்தை மீறிய ஒரு ஜீவத் துடிப்பையும் ஏற்படுத்திவிடுகின்றன. 

இவரின் கதைகள் சமுதாய வாழ்வினடியாக மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புகொண்டு விளங்குகின் றன. ஆனால் அவர் தம் வாழ்க்கைப் பிரச்சனைகளை இவை தொட வில்லை என்றே கூறல் வேண்டும். ஆயினும் அதே வேளையில் நாகரிக முதிர்ச்சி என்பதனை அறியாத கிராமமக்களின் வாழ்க் கையில் வாசகருக்கு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்திவிடுகின்றார். இவ்வாறு இவர் கதைகள் விளங்கக் காரணம் இவரும் ஒரு கிரா மத்தை – ஏழாலை-சார்ந்தவர் என்பதுடன், அதன்மீது இளமை முதலே மாறாத பற்றுக் கொண்டமையையும் கூறலாம். 

இவரின் நீண்ட கால இலக்கிய முயற்சிகளின் அறுவடை எண்ணிக்கையளவில் மிகச் சொற்பமாகும். ஏறக்குறைய இருபத் தைந்து சிறு கதைகளையே படைத்துள்ளார் எனலாம். இக்கதைகள் எல்லாவற்றிலும்- ‘என் காதலி’ என்ற தமிழ்க்கன்னி பற்றிய உருவகக் கதை தவிர்ந்த-நடமாடும் பாத்திரங்கள் ஈழ மண்ணி லேயே னி ஜ கதவர்கள். அவர்கள் உணர்வுகள், எண்ணச் சுழிப் புக்கள், மன ஏக்கங்கள் எல்லாமே ஈழத்தின் சொத்துக்கள். சமூக நசிவுகளைக் கண்டு ஏங்கும் இதயமிவருக்குண்டாயினும், அவை வலிந்து வற்புறுத்தப்படாமல், பாத்திர மனவுணர்வுகளின் மூல மாகச் சித்தரிக்கும் பண்பு இவர் கதைகளுக்குண்டு. இதனால்தான் இவரது கதைகளிலே சம்பவங்களிலும் பார்க்க சம்பவங்களினடியாகத் தோன்றும் உணர்வு நிலையே முக்கியமாக இடம் பெறும்’ எனச் சில விமர்சகர்கள் கருதுகின்றனர். 

இலக்கிய அறுவடை 

பாற்கஞ்சி (ஆனந்தவிகடன்), மூன்றாம்பிறை (அல்லையன்ஸ் கதைக் கோவை), தியாகம், களனிகங்கைக் கரையில், பார்வதி, ஏன் சிரித்தார், அழியாப்பொருள், பைத்தியக்காரி, புல்லு மலையில், நந்தகுமாரன், பூதத்தம்பி கோட்டை, நெடுவழி. விதவையின் இருதயம், இப்படிப்பல நாள்,மின்னி மறைந்த வாழ்வு (கலைமகள்), கங்காகீதம் (கிராமஊழியன்), பொன்னி.டிங்கிரி மெனிக்கா, பிச்சைக்காரர், உள்ளப்பெருக்கு, என் காதலி (ஈழ கேசரி) – போன்ற கதைகளை இவர் தனது எழுத்துலக வாழ்வில் எழு தியுள்ளார். 

நந்தகுமாரனும், தியாகமும், பூதத்தம்பி கோட்டையும், வரலாற்றுக் கதைகள். ‘தியாகம்’ மகன் துட்டகைமுனுவின் சாலி வேடுவப் பெண் அசோகமாலவைக் காதலிப்பதைக் கூறுவது. ‘நந்தகுமாரன்’- பு தர் தன்தம்பி நந்தகுமாரனையும் துறவியாக் குவதைக் கூறுவது. 

இத்தகைய வரலாற்றுக் கதைகளை எழுதுவது அக்காலத்தில் ஈழத்திலிருந்த எழுத்தாளர்களின் தவிர்க்க முடியாத செயலாக இருந்தது. ஒரு வேளை ஈழத்து எழுத்துக்கு அதிக இடம் கொடுத்த கலைமகளை வைத்து எழுதியதாலிருக்கலாம். 

இவரின் ஏன் சிரித்தார். புல்லுமலையில், களனிகங்கைக் கரையில், பார்வதி, அழியாப் பொருள், பைத்தியக்காரி, உள்ளப் பெருக்கு – ஆகிய கதைகள் ஆண் – பெண் உறவு பற்றியவை. இவை மனோதர்மத்துடன் கூடிய ஆண் பெண் மன அசைவுகளின் ஓட்டத்தை நளின பாவத்திவ் சித்தரிக்கின்றன. இத்தகைய சித்தரிப்பு இவருக்குக் கைவந்ததுமட்டுமல்லாமல், இவரது ஆக்க உயர்வுக்கும் காரணமாக அமைகின்றது. இச்சிறப்பு இவருக்கு கு. ப. ரா-ன் பாதிப்பால் – ஆத்மீக உறவால்தான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆயினும்- 

இவருடைய களனிகங்கைக் கரையில், பார்வதி முதலிய கதைகளின் பாத்திரப் பெயர்களிலும், சம்பவச் சித்தரிப்பு களிலும் வங்கக் கதைகளின் சாயல் பரவிக்கிடப்பது குறிப்பிடத் தக்கது. 

இத்தகைய மனவுணர்வுக் கதைகளில் அழியாப் பொருள், உள்ளப் பெருக்கு இரண்டும் உன்னதமானவை. தன் மச்சாளின் இனிய நினைவுகளையே காவிய வாழ்க்கையாகக் கருதிய இளைஞன் ஒருவன், அவள் கன்னியாகவே இறந்த பின்பும், தன் மணவாழ்வையே வெறுத்து, அவள் நினைவையே ஆதார சுருதியாகக் கொண்டு வாழ்க்கை நடாத்தியதைக் கூறுவது. 

‘உள்ளப் பெருக்கு’ – தன் தந்தையின் குடி வெறியால் தாய் படும் கொடுமையைக் கண்ணுற்று, ஆடவர் குலத்தையே வெறுத்த ஒரு பெண்ணின் மன நெகிழ்வைக் காட்டுவது. இவ் விரண்டு கதைகளும் கு.ப.ரா-வின் எழுத்தினடிப்படையில் எழுந்த வாசகர்கள் படிக்கவேண்டிய கதைகள். 

பாற்கஞ்சி, நெடுவழி இரண்டும் கிராமத்தின அவலக் குரலைச் சித்தரிப்பதாயினும், பாற்கஞ்சியில் ஈழத்தின் வடபாகக் கிரா மமும். நெடுவழியில் தென்னிலங்கைக் கிராமமும் சித்தரிக்கப் படுகின்றது. இரண்டுமே இவருக்குக் புகழைக் கொடுக்கக் கூடிய கதைகள். 

நெடுவழியில் கிராமப்பெண் முத்துமெனிக்கா தன் கண வனுடன் கொண்ட ஊடல் காரணமாக அவன் அவளைவிட்டு நெடுங்காலம் பிரிந்துபோய் விடுகிறான். எதிர்பாராத விதமாக தன் இளமையின் கோரப்படியில் சிக்கிய முத்துமெனிக்கா தன் கற்பை இழந்து, ஒரு குழந்தைக்குத் தாயாகியும் விடுகிறாள். மீண்டு வந்த கணவன் அவளை வீட்டைவிட்டே துரத்தி விடுகி றான். இக்கதையில் ஆசிரியர் சமூகத்தைப் பார்த்துக் கேட்கும் கேள்விகள் மிகச் சிறப்பானவை. 

‘கங்காகீதம்’ புத்த பிக்கு ஒருவர் மேல் ஒருத்திக்கொள் ளும் ஒருதலைக் காமமும்; அது ஏற்படுத்தும் சிக்கல்களையும் கூறு கிறது. 

மின்னி மறைந்த வாழ்க்கை – குழந்தையற்ற தம்பதிகள் அநாதையாகக் கிடைத்த குழந்தையை வளர்த்து, பின் அதனை இழந்து வருத்தப்படும்போது, அங்கேயே வேலைக்காரியாக இருந் தவள் இழந்த குழந்தை தன்னுடையதே எனக்கூறிக் கண்ணீரை வரவழைப்பது. 

காலமும் கருத்தும் 

இவர் கதைகளின் களத்தையும், கருத்தையும் அவதானிக்கு மிடத்து இவர் கிராம வாழ்க்கைக்கு முக்கியம் கொடுத்தாலும் -அதாவது பிரதேசங்களைச் சித்தரிப்பதன் மூலம் ஒரு தேசிய உணர்வுக் கலைஞராகவே மின்னுகிறார். ஈழத்தின் தமிழ் வரலாற் றுக் கதைகளு ன்,சிங்கள வரலாற்றுக் கதைகளையும் எழுதி யுள்ளார். அதே போல தமிழ் – சிங்கள கிராமங்களையும் எழுதியுள் ளார். ஆகவே களத்தில் தேசிய உணர்வுபடர்ந்திருப்பது போலவே, கருத்துக்களிலும் உலக மக்கள் எல்லோரினதும் ஒத்த மனவுணர் வுகளையே காட்டியுள்ளார். 

இக்களங்களின் இயற்கைத் தோற்றங்களைத் தமது கதை கட்கு பக்கத் துணையாகக் கையாளுவதில் இவர் சமர்த்தர் இத் தகைய முயற்சியினால்’ இவர் படைப்பு இயற்கையோடு இயைந் ததாக மாறிவிடுகின்றது. இத்தகைய வர்ணனை நிலைகளில் இவ ருக்கு இவரின் வடமொழி இலக்கியப் பயிற்சி உறுதுணையாக அமைந்து விடுகின்றது. வடமொழி கலந்த இவரது தமிழ் உரை நடை இறுக்கமான ஒரு சோபையைப் பெற்று மிளிர்வதுடன், அவர் கூறவந்த உணர்வுகளையும் முழுமையாக வெளிக்கொ ணர்ந்து விடுவதுடன் காவிய அழகையும் பெற்றுவிடுகின்றது. வீட்டை விட்டு கணவனால் நள்ளிரவில் துரத்தப்பட்ட முத்துமெனிக்காவின் நிலையை வர்ணிக்கிறார்: 

‘…அவள் நடக்கத் தொடங்கினாள். மெல்லிய குளிர் காற்று வீசத் தொடங்கியது. ஒரு முச்சந்தி குறு+கே வந்தது. அதன் மத்தியிலே ஒரு பிரமாண்டமான வெள்ளரச மரம். அதன் நிழ லில் நிஷ்டை கூடும் நிலையில் ஒரு புத்த விக்கிரகம் யாரோ வழிப்போக்கர்கள் ஏற்றிப் போன ஒரு மெழுகுவர்த்தி எரிந்து அவியும் தறுவாயில் இருந்தது. 

இலக்கிய நெஞ்சம் 

இவரின் படைப்புக்கள் இவ்விதம் வாழ்வும் வளமும் பெறக் காரணம் அவருக்கு இயல்பாக இருந்த இலக்கிய நெஞ்ச மாகும். அவரது இலக்கிய நெஞ்சமே ‘என் காதலி’ என்ற உரு வகச் சிறுகதையாகவும் பரிணமித்துள்ளது அக்கதையில் அவ ரின் இலக்கியத்துணைவர்களையும், தனது வெற்றியின் இரகஸ்யத் தையும் கூறுகிறாரென்றேபடுகிறது. 

‘என்னைச்சுற்றி என் பக்தர்கள் ஒவ்வொரு ஷணமும் கூடிக் கொண்டே வருகிறார்கள். என் உதவிக்கு காளிதாசன் வருவான். பவபூதி வருவான். கம்பன் என்றுமிருப்பான். புரந்தரதாஸ் இருக் கின்றார். துளசிதாசரும், தாகூரும் இருக்கிறார்கள். என்னைப் போஷித்து காதலித்து வளர்த்த அகத்தியன் முதல் பாரதி ஈறாக உள்ள என் இரத்த பந்துக்களின் ஆத்ம சக்தி இருக்கின்றது .

– ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள், முதற் பதிப்பு: ஜூலை 1973, முன்னோடிகள் கலை இலக்கிய விமர்சகர் குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *