மனத்தின் வேகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 1,987 
 

ஒரு தையற்காரர், கட்டிலில் உட்கார்ந்து தைத்துக்கொண்டிருக்கிறார்… அவர் மனம் விரைகிறது….

ஊரிலே திருவிழா வந்து விட்டது… அதனைச் சென்று காண வேண்டும். அவர் மனக்கண் முன் திருவிழாக் கூட்டம் நின்றது.

மனைவியோ , தன் தாய் வீட்டில் குழந்தை பெற்றிருக்கிறாள். அவளையும் பார்த்தாக வேண்டும்!

குழந்தை வீறிட்டு அழும் குரல் அவர் காதுகளில் கேட்டது.

தையற்காரர் உள்ளம் விம்மி யெழுந்தது. அப்புறம் என்ன ?

இரு கைகளும் நூலைக் கோத்து வாங்குகின்றன. வலது கையிலுள்ள ஊசி ஏறி இறங்குவதைப் பார்க்க முடிய வில்லை …. அவ்வளவு வேகம்!

சோழன் நற்கிள்ளியை வென்று வாகை கொள்ள வந்தான் ஒரு மல்லன்.

மற்போர் மன்றத்தில் போர் தொடங்கி விட்டது! மற்போர் ! மற்போர்!

நற்கிள்ளியின் கைகள், தையற்காரனின் ஊசிபோல் விரைகின்றன…

அப்புறம்?- மல்லன் மண்ணைக் கவ்வினான்!

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *