எனக்கு வீண் தொல்லைதானே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 821 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு செல்வனிடத்திலே ஓர் அரைச் சோம் பேறி வேலையாளாக அமர்ந்திருந்தான். சொன்ன வேலைகளை அந்தச் சண்டி ஒழுங்காகச் செய்யவே மாட்டான்.ஏதாவது தில்லுமல்லுப்பேசிக்கொண்டு அரைகுறையாகச் செய்து முடிப்பான். ஆயினும் அவ்வேலையாளைச் செல்வன் விரட்டிவிடவில்லை. ஏதோ ஒருபற்றினால் வைத்துக்கொண்டிருந்தான். 

ஒரு நாள் செல்வனுக்குச் சிறிது காய்ச்சல் கண் டது. அவன் வேலையாளைப் பார்த்து, ” மருத்துவர் வீட்டிற்குப் போய் அவரை உடனடியாக அழைத் துக்கொண்டுவா” என்று சொன்னான். பிறகு இருவருக்கும் பின்வருமாறு உரையாடல் நடை பெற்றது. 

வேலையாள்:-இப்பொழுது காலை பத்து மணி. மருத்துவர் வீட்டில் இருக்கிறாரோ, அல்லது எங்கே னும் வெளியே போய்விட்டாரோ? 

செல்வன் :-வீட்டில் இருப்பார் போய்ப்பார். 

வேலை :- இருந்தாலும் உடனே வருகிறாரோ அல்லது பிறகு வருகிறேன் நீ போ என்கிறாரோ? 

செல்வன்:-வருவார் போ. 

வேலை :- வந்தாலும் அவரிடம் நல்ல மருந்து இருக்கிறதோ இல்லையோ? 

செல் :- இருக்கும் போ. 

வேலை:- அப்படி இருந்து அவர் உடனே இங்கு வந்து மருந்து கொடுத்தாலும் காய்ச்சல் நிற்கிறதோ இல்லையோ? 

செல்:-மருந்து சாப்பிட்டால் காய்ச்சல் நின்று விடும் போ. 

வேலை:- அப்படி நிற்காவிட்டால் என்ன செய்கிறது? 

செல்:- (எரிச்சலோடு) நிற்காவிட்டால் சாகிறேன் போ. 

வேலை:- அப்படிச் சாகிற நீங்கள் எனக்கு வீண் அலைச்சல் கொடுக்காமல் சாகக்கூடாதோ? அலைவது வீண் தொல்லைதானே. 

செல் :-சரி சரி. நீ நல்ல வேலையாள். இனி மேல் உனக்கும் நமக்கும் ஒத்துவராது வேறிடம் பார்த்துக்கொள். 

– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *