மற்றவர் வெயில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 21, 2025
பார்வையிட்டோர்: 260 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செத்த மிருகம் ஒன்றை ஞாபகப்படுத்துவது போல வழியில் கிடந்தது அந்தப் பாறை, பாறைக் கூட்டங்கள் அதன் பின்புறத்தில் நிறையத் தெரிந்தன. மஞ்சளும் சிவப்புமான அந்தப் பாறைமுகம் நசுங்கிக் கிடப்பது போலத்தான் தெரிகிறது. நெடுநாள்களாகவே அந்தப் பகுதியில் பயணம் செய்யும்போதெல்லாம் அந்தப் பாறைக் கூட்டம் நிரம்பிய மலைத் தொடரையும் நிலப்பகுதி யையும் பார்த்தபடியே போயிருக்கிறான். பாறைகள் பல்வேறு உருவம் கொண்டு திரியும். அரக்கு நிறப் பாறைகள்தான் அந்தப் பகுதியில் அதிகம். மலையின் உச்சியில் இடிந்துபோன குதிரை லாயம் ஒன்றும், நீண்ட தூண் வரிசைகளும் இருப்பதாகத் தகவல் அறிந்திருந்தான். அந்த மலைத் தொடரில் நிறைய குகைகள் இருந்தன. ஏதோ ஒரு குகை ஒன்றின் உள்ளே புணர்ச்சியின் பல்வேறு நிலைகள் கொண்ட கல் உருக்கள் செதுக்கப்பட்டிருப்ப தாகப் படித்திருக்கிறான். குகையின் ஊடே நடமாடித் திரிந்த ஏதோ ஒருவனின் சிலையாக இருக்கக் கூடும். அவன் வந்த இறங்கியபோதே வெயில் ஏறத் தொடங்கியிருந்தது. வெயிலில் பாறைகளின் முகம் குரூரமும் கசப்பும் நிரம்பி வழிவதைப் போவ மாறிவிடுகிறது. பாறைக் கூட்டத்தின் ஊடே காற்று அலைந்த படியிருந்தது.உய்லான் குருவிகள் பாறைகளைத் தட்டி கடக் கின்றன. பஸ்ஸில் வரும்போது கொள்ளும் பிரம்மாண்டமான தோற்றம் அழிந்து தரையில் படுத்திருக்கிறது மவை. புற்கள் காய்ந்து சருகாக அசைகின்றன.

அவன் பாறைக் கூட்டத்தின் ஊடே நடந்து போய்க்கொண்டி ருந்தாள். முதுகைக் காட்டியபடி நிற்கும் ஒற்றைப் பாறை நோக்கி அவன் கண்கள் அசைந்து சென்றன. யார் நடமாட்டமும் இல்லை. வெட்டவெளியில் இரவிலே சூழ்ந்து நிற்கும் படைகளின் அசைவற்ற தன்மையை ஞாபகப்படுத்துகின்றன. கறுப்புப் பாறைகள். எல்லாமும் அடங்கி உள்போய்க் கொண்டிருந்தது. சப்தம் திரும்பவும் தன் ஊற்றினுள் சென்று அடங்குவது போல ஏதோ ஒரு இடத்தில் கிளம்பி மற்ற இடத்தில் தேய்ந்து ஒடுங்குகிறது. அவன் தன் தலையைச் சரிசெய்து கொண்டான். அவன் படிப்பதற்காக எடுத்து வந்த புத்தகத்தைப் பாறை ஒன்றின் மேலே விரித்து வைத்தான். காற்றில் பக்கங்கள் அவையத் தொடங்கின. அதன் சப்தம் விநோதமாகக் கேட்கத் தொடங்கியது. சடசடப்பு காற்றுக்கும் தொற்றிக்கொண்டது போல சப்தம் எழுந்து கொண்டேயிருந்தது. அந்தப் பகுதியில் அதிகம் மரங்களேயில்லை என அப்போதுதான் தெரிந்தது. எட்டியவரை வெட்டவெளிதான். காய்ந்துபோன செடிகள் ஒருமித்து நிற்கின்றன. பாதைத் தடங்கள் நிறைய அழிந்து போயுள்ளன. அவன் பாறைகளின் நடுவில் நடந்து நின்று வானத்தைப் பார்த்தான். எதிர்கொள்ள முடியாத வெக்கை ஒளிச் சிதறல்! வெளுத்துப்போன வானம். இந்த இடம் தன் ஞாபகங் களின் எல்லாப் புறங்களையும் துளையிடுவதாக உணர்ந்தான். பாறைகள் தன் பிராயத்தின் ஒரு பொருளைப் போல நினைவில் கசியத் தொடங்கியதாக உணர்ந்தான்.

நடக்க நடக்க வெளியின் சப்தம் ஓய்ந்துபோனது. சப்தமற்ற இடம். இதன் எழில் ஒரு புள்ளியில் அசைவு கொண்டிருப்பதாகத் தோன்றியது. திரும்பிப் பார்த்தான். வெகு தூரம் வரை பாறைகள் மட்டுமே. அதன் வெகு தூரத்துக்குப் பின்பு பயணிகள் போகும் பாதை. இரண்டாகப் பிளவுற்ற பாறையின் மீது நின்று பார்த்தான். கிராமம் ஒன்றின் தலை தெரிந்தது. மரங்களின் உயரம் குறைந்த தோற்றம். மூழ்கிய கிராமத்தின் வெளிமுகம் போலத் தெரிந்தது அந்தக் காட்சி. மலையின் பல பக்கங்களிலும் வாய் திறந்த குகை களைப் பார்த்தான். இருட்டு பிறக்கும் குகை உட்புறங்களில் வௌவால்கள் சப்தமிடுகின்றன. குகைவாயிலை அடைத்த நாணல்கள் சலளம் கொண்டபடியே இருந்தன.

அவன் பாறையில் வைத்துவிட்டு வந்த புத்தகத்தை நினைத்தான். அதன் புரளும் சப்தம் கேட்கிறதா. காற்றில் எந்தச் சப்தமு மில்லை. பக்கங்கள் எழுந்து அடங்கும் சப்தம் காற்றில் கரைந் திருக்கக் கூடும். எலிகளைப் புல்லாங்குழல் வாசித்து இழுத்துக் கொண்டு போன பைப்பரைப் பற்றிய புத்தகம் அது. கிளம்பும் போதுதான் வாங்கினான். பழைய புத்தகக் கடையின் ஓரத்தில் கிடந்தது. புத்தக அட்டை முழுவதும் எலிக் கூட்டம். மஞ்சள் உடையணிந்த எலிகள். அவற்றைக் கூட்டிச் செல்லும் வயசாளியின் அரக்கு அங்கி. அங்கியின் விளிம்பில் ஊர்கின்றன எலிகள். பஸ்ஸில் அதை அவனால் படிக்க முடியவில்லை. ஏதாவது ஒரு பாறை ஒன்றில் படுத்தபடியே படிக்கலாம் என்று தான் முதலில் தோன்றியது. அதுவும் சாத்தியமற்றது என இங்கே வந்தபின்புதான் உணர்ந்துகொண்டான். புத்தகத்தின் சப்தமற்ற அகண்ட வெளி. குட்டையாக நிற்கும் இரண்டு மரங்களைப் பார்த்தான். எதிர்த்து எதிர்த்து நின்றன இரண்டும். வாதாமரம் போலத் தெரிந்தது. அகன்றன இலைகள். நகரின் எந்தப் பக்கமிருந்து வேண்டுமானாலும் வரும்படியாகப் பாதைகள் திறந்து கிடக்கின்றன. மலை எல்லாம் பாதைகள் வழியாகவும் வந்து அடையும்படியிருந்தது.

அந்த மலைத் தொடர் வழியெங்கும் பாறைகள்தான் சிதறிக் கிடந்தன. பாறைகளின் மீதேறி நடந்தபடியே சென்றான். வெயில் கூடுவதும் மங்குவதுமாகவே இருந்தது. காற்று வலுத்து அடிப்பது போலத் தெரிந்தது. ஒரு பாறை கூட மற்றொரு பாறையின் உருவத்தை ஒத்திருக்கவில்லை. சிறு பள்ளங்கள் நிரம்பிய பாறைகளில் மினுக்கம் தெரிந்தது. இரண்டாகப் பிரிந்த பாதை வழியில் நடந்தாள். அவன் குட்டி குட்டிப் பாறைகளைக் கடக்கும்போது எதிர்பார்ப்பற்றுப் பார்த்தான். வெயில் எல்லாப் பக்கமும் இறங்கிக்கொண்டிருந்தது.

உயரம் அதிகமில்லை. நல்ல திரேகமும், சதைப்பிடிப்புமான பெண். கறுப்பு. நிறைய அடர்ந்த தலைமயிர். மஞ்சள் கறுப்புப் பொட்டுப் பொட்டாகச் சேலை. அவள் எப்படி அந்த இடத்துக்கு வந்தாள் என்று தெரியவில்லை. பாறையின் மேலே காலைத் தூக்கி வைத்தபடி நின்று எதிர்ப் பாதையைப் பார்த்துக் கொண்டி ருந்தாள். காற்றில் ஆடி விலகும் பாவாடையை மீறித் தெரியும் கறுப்புச் சதை. அவன் பார்த்தபடியேயிருந்தான். அரக்குப் பாறை வெடித்து முளைத்த மரத்தைப் போல இருந்தாள். அவன் நடந்து தொடும் தூரத்தில் நின்று கொண்டிருந்தாள். காற்றின் சப்தம் உரத்தேயிருந்தது. வெயில் ஏறிவிட்டது. அவள் திரும்பி அவனைப் பார்க்கவேயில்லை. அவன் பாறையை விட்டு இறங்கி நின்றான். அவனின் முதுகு தெரிந்தது. பெரிய பாறை அவன் முன்புறத்தில் இடப்புறமாகத் தெரிகிறது. அந்தப் பக்கம் எவரும் வருவதாகவும் தெரியவில்லை. தூரத்துப் பாதை வரை பார்த்தான். அரவமில்லை. அவன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் திரும்பிப் பார்த்திருக்கக் கூடும் என்பது போல அவனுக்குப் பட்டது. ஒரு கணம் அவள் தலை திரும்பி அலைந்தது. வெற்றிவைச் சிவப்பு. பாறைகளின் மேல் வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு காலை, பாறையிலிருந்து எடுத்து அடுத்த பாறை மீதேறி நின்று கொண்டாள். அவனுக்கு நன்றாகத் தெரியும்படி அவள் முகம். காற்று மெல்ல ஓய்ந்து முனங்குகிறது. சடசடப்புச் சப்தம் கேட்பது போல இருந்தது. அவன் அவளைத் தொட்டுவிடலாமா என நினைத்தான். பாறைகள் மூர்க்கம் கொண்டு பதுங்கிய மிருகம் போலாயின. ஒரு பாறையைக் கூட பார்க்க இயலவில்லை, அவனால்.

அவள் காற்றின் நிசப்தத்தைக் கேட்டபடியே நின்றிருந்தாள். வெற்றிலைச் சாற்றை திரும்பவும் துப்பினாள். பாறையில் அது வழிந்தது. அவளுக்கு இந்தப் பாறைக் கூட்டங்களைப் பார்க்க வேடிக்கையாக இருக்கின்றது. பாறை ஒன்றைத் தொட்டுப் பார்த்தாள். உஷ்ணமாக இருந்தது. வீட்டிலிருந்து கிளம்பும்போது சாப்பிடாமல்தான் வந்தாள். தோப்புத் தெருவில் ராசைய்யாவைப் பார்க்காமலிருந்தால் சாப்பிட்டிருக்க மாட்டாள். அவன் அவளைப் பார்த்ததும் மடக்கிவிட்டான். சலூன் கண்ணாடியில் அவள் வருவதைப் பார்த்திருப்பான். அவளை மூக்கபிள்ளைச் சந்துக்குக் கூட்டி வந்தான். சாப்பாடு சாப்பிட்டு அவள் வெளியே வரும்வரை நின்றிருந்தான். அவள் தோள் மீது கையை வைத்து அழுத்திக் கேட்டான்.

“வேறு என்ன?”

“எங்க போறது இந்த மத்தியானத்திலே’

“இப்பிடி நடந்து பாறைமடத்துக்குப் போ, வரேன்”

“வெயிலா இருக்கு”

“வேற என்ன வீட்டுக்கா கூட்டிட்டுப் போக முடியும்”

அவள் சந்தைவிட்டு விலகி வெளியே வந்தாள்.

”அங்க வந்துருவியா”

”கடைய சாத்திட்டு வாரேன். நடந்துக்கிட்டு இரு’

அவன் போனபின்பு கடையில் வெற்றிலை வாங்கிப் போட்டுக் கொண்டு நடந்தாள். பலரோடும் இந்தப் பாறைக் கூட்டத்துக்கு இடையில் வந்திருக்கிறாள். இரவில் வரும்போது எதுவும் தெரிவதில்லை. எல்லாமும் இருட்டில் மூழ்கித் தெரியும். குகைகளில் கேட்கும் விநோத ஒலிகள் அந்தப் பிரதேசமெங்கும் கேட்கும். அவள் யாரோ ஒரு நடுத்தர வயசுக்காரனோடு வந்து பாறை மீது இரவில் படுத்துக் கிடந்தாள். நடு இரவுக்குப் பின்பு குளிர் எழுந்து உறக்கம் கலைந்தது. தலைகீழாக உறங்கிக் கொண்டிருந்தார் அந்த ஆள். அவள் சேலை கசங்கிக் கிடந்தது. மங்கிய நிலா வெளிச்சம். பாறைகள் ஒவ்வொன்றாகத் தெரியத் தொடங்கின. அந்த நபரின் வேஷ்டி பாறையின் மீது உரிந்து கிடந்தது. அவள் எழுந்து நடந்தாள். பாதையின் மங்கிய வெளிச்சத்தில் குளிர் அடங்கியிருந்தது. எல்வோரையும் விட்டு, தான் உவகத்தின் வெளியில் வந்துவிட்டது போல இருந்தது. பாறைகள் அசூயை கொள்ளும் பல பொருள்களாக மாறின. நசநசப்பும் விகாரமும் கொண்ட புதுத் தோற்றமானது வெளி. அவள் அந்த இடத்திலிருந்து படுத்திருந்த பாறைக்கே வந்தாள். அந்த நபர் எழுந்து உட்கார்ந்திருந்தான். அவள் எதிரில் போய் உட்கார்ந்து கொண்டான். அவளின் கறுத்த உடல் அவனைக் கிளர்ச்சியூட்டியிருக்க வேண்டும். தலையை அழுத்திப் படுக்க வைத்தான். அவன் தலை அவள் மேல் பாதி புதைந்தபோது நட் சத்திரம் எரிந்து சரிவதைப் பார்த்தபடியிருந்தாள். ஒவ்வொன்றாக சரிந்தபடியிருந்தன. கறுப்பு பிளந்து வரும் நட்சத்திர ஒளியைத் தொடர்ந்து பார்க்க இயலவில்லை. விடிவதற்கு முன்பே அந்த நபர் கிளம்பிப் போய்விட்டார். பாறைகள் பகலில் தன்னியல்பு திரும்பின. சென்ற நாள்கள் எரிந்து ஞாபகத்தின் விகாசத்தில் வீழ்ந்துவிடுகின்றன.

அது என்ன புத்தகம் எனப் பார்த்தான் ராசைய்யா. வெறும் எலிகளாகப் படம் திரம்பியிருந்தது. அரக்கு அங்கியணிந்த ஒருவனின் முதுகுத் தோற்றம். எலிகள் பின்தொடருகின்றன. புரட்டிப் பார்த்தான். எதுவும் பார்க்கும்படியாக இல்லை. யாராவது காலேஜ் பையன்கள் மறந்துவிட்டுப் போயிருக்கலாம். அல்லது யாராவது ஒருவன் பெண்ணை அழைத்துக்கொண்டு இந்தப் பாறைகளுக்கு நடுவில் மறைந்திருக்கலாம். எலிகளைப் பார்த்தான். மனித முகங்கள் கொண்ட எலிகள். மஞ்சள் சட்டை போட்டிருந்தன. எலிக் கூட்டம் போலத்தான் இந்தப் பகுதியில் சிதறிய குட்டிப் பாறைகளும். புத்தகத்தை எடுத்துக்கொண்டு வேகமாக நடத்தான். கண்ணுக்கு எட்டியவரை அவள் தெரிய வில்லை. புத்தகத்தை என்ன செய்வது என யோசனையற்று வேறு ஒரு கல் மீது திறந்து கிடக்கும்படிப் போட்டுப் போனான். எல்லாப் பக்கங்களும் பிரித்து காற்றில் பறந்தன. அவன் பார்க்கும் போது அவள் நடந்து போவது போலத் தெரிந்தது. அவளுக்குப் பின்னே இன்னொரு நபரும் போய்க்கொண்டிருந்தான்.

ராசைய்யா வரக் காணோம். என்ன செய்யலாம் என நினைத்தாள் அவள். திரும்பியபோது பின்னாடி நிற்கும் ஆளைப் பார்த்தாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன். வெளியூர்க் காரனாகத்தான் இருப்பான். வெற்றிலையை அவன் பக்கம் பார்த்துத் திரும்பித் துப்பிவிட்டு திரும்பிக்கொண்டாள், அவளையே வெறித்துக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்துச் சிரிக்கலாமா என யோசித்தபடியே பாதையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் திரும்பியது தன்னைப் பார்க்கத்தான் என அவனுக்குப் பட்டது. வீழ்த்திவிடலாமா என்றபடி நடந்தான். உடம்பின் எல்லா சிறு புள்ளிகளிலும் வெறி பற்றிக்கொண்டது போலாகியது. ஏதாவது ஒரு ஆயுதத்தால் அவளைத் தாக்கி விழச் செய்யலாமா எனத் திரும்பினான். திரும்பவும் அவள் அவன் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டுக் கடத்தாள். நிதானமாக நடந்து சென்றாள். குகை வாயில்கள் திறந்து கிடந்தன. பாய்ந்து அவளைத் தூக்கிக் குகைக்குக் கொண்டு சென்றால் அவள் எழுப்பும் சப்தம் எழுந்து இங்கேயே அடங்கிவிடும்; பாறை இடைவெளியில் இருந்த வெற்றிடம் அகன்று தெரிந்தது. அவள் நடக்கவில்லை. அவன் ஏதாவது கேட்கலாமா என்பது போலப் பார்த்தான்.

தூரத்தில் நிற்கும் இருவரின் உருவத்தையும் ராசைய்யா பார்த்தான். அவனுக்குக் கோபம் வந்தது. எப்படி அவளைப் பிடித்தான் எனத் தெரியவில்லை. அவன் மட்டும் அவனோடு மறைந்துவிட்டால், இதைப் பற்றி நினைக்கவே முடியவில்லை. பாறையைத் தூக்கி அவன்மேல் எறிந்துவிடலாம் என்ற அளவு ஆத்திரம் வந்தது. வேக வேகமாக நடந்தான். கல் தட்டி விரவில் நகம் பிய்ந்தது. புத்தகச் சவசவப்பு கேட்டபடியேயிருந்தது. அவள் திரும்பிப் பார்த்தபோது பின்னால் வருபவனைத் தவிர வேறு எவரையும் காணவில்லை. பின்தொடர்ந்து வரும் இந்த விளையாட்டு ஸ்கூலில் துரத்தி மறைந்த நிழல் விளையாட்டைப் போலவே மாறியது. அவன் மிக வேகமாக வந்ததும் அவளும் வேகமானாள். பாறைகள் பயணத்தில் கடந்து போகும் மரங்களைப் போலப் பின்னோக்கிப் போய்க்கொண்டே யிருந்தன. சட்டெனப் பாறைகள் முடிவுற்று மலையாகியது. அவள் வெறித்துப் போய் நின்றாள்.

ராசைய்யா உரக்க சப்தமிட்டான். எட்டுமா எனப் பார்த்தான். குரல் மலையில் சென்று மோதிச் சிதறியது. அவள் பெயரைத் திரும்பவும் கத்தினாள். ஏதோ ஒரு சப்தம் கேட்பது போல அவளுக்குப் பட்டது. பின்னாடி வருபவன் கண்கள் வெறியில் மினுங்கின. அவன் சில அடிகளுக்குப் பின்னேதான் இருந்தான். நன்றாக அவன் முகத்தைப் பார்த்தான். புள்ளி புள்ளியாகத் தோலில் குத்து விழுந்த முகம். கட்டையான புருவ மயிர்கன். அவள் பார்ப்பதையே பார்த்துக்கொண்டிருந்தான். யாரோ அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது அவனுக்கும் கேட்டது. யாராவது அவளோடு வந்தவர்களாக இருக்கலாம். அவர்கள் வந்துவிட்டால் என்னவாகும் என நினைத்தான். அந்தப் பெண் மலையடிவாரத்துக்கே வந்துவிட்டான். புற்கள் அழிந்த நிலப்பரப்பு. அவன் வேட்டையில் பின்தங்கிய மிருகத்தைப் போலப் பார்த்துக்கொண்டிருந்தான். பாதையை விட்டு விலகிப் பாறை பாறையாகத் தாவிக் கடந்தாள். ராசைய்யா வருவது அவளுக்குத் தெரிந்தது. அவன் நின்றுகொண்டே இருந்தான். ஏதாவது ஒரு ஆயுதத்தால் உடலைக் கிழிக்க வேண்டும் என்பது போல ஆகியது. சுற்றும் முற்றும் பார்த்தான். அவள் போய்க் கொண்டேயிருந்தாள்.

ராசைய்யா அவள் தன்னை நோக்கி வருவதைப் பார்த்தான். பின்னாடி வந்தவனைக் காணவில்லை. அவனும் பாறை பாறையாகத் தாவிக் கடந்து போனான். ராசைய்யாவின் பக்கம் வந்து நின்று சிரித்தாள். ராசைய்யா அவளிடம் கேட்டான்.

”அந்த ஆளு யாரு…?

“யாருக்குத் தெரியும். நானா கூட்டிட்டு வந்தேன்”

இருவரும் இறங்கி நடந்தார்கள். பின்னாடி வந்தவனைக் காண வில்லை. அவள் ராசைய்யாவின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டு நடந்தாள். குத்துச்செடிகள் காற்றில் அலைந்து கொண்டிருந்தன.

எங்கே போனாள் அவள் என அவனுக்குத் தெரியவில்லை. எந்தப் பக்கம் மறைந்திருக்கக் கூடும். யாரோ ஒருவனின் குரல் கேட்டதே அவன் பின் சென்றுவிட்டாளா. வேகமாகப் பெரிய பாறை மேலேறி நின்று பார்த்தான். நகரம் பல வளைவாகவும் தெளித்தும் கிடப்பது தெரிந்தது. தப்பிய மாடுகளைப் போல சில மேய்ந்துகொண்டிருந்தன. அந்தப் பெண்ணைக் காணவில்லை. எங்கும் பாறை உருக்களே தெரிந்தன.

உருண்ட கல்லாகப் பார்த்து ஒன்றை எடுத்து எறிந்தான். காற்றைக் கிழித்து விழுந்தது. ராசைய்யா புல்லை விலக்கி உள்ளே நுழைந்தான். அதைக் குகையின் உள்வாசல் என்பார்கள்.

கல்குளம் இருந்த இடம். படிகள் தூர்ந்துபோயிருந்தன. கல் அழியும் காலம். குளம் மூடி ஆழம் மறைந்துபோயிருந்தது. படுக்கைகள் போல கல்லாலாகிய திண்டுகள் இருந்தன. சாமியார் உடல் படர்ந்த கல்படுக்கைகள் செதில் செதிலாகப் பெயர்ந் திருந்தன. அவள் அதன்மேல் படுத்துக்கொண்டாள். ராசைய்யா குகைச் சுவரைப் பார்த்தான். பச்சை உதிரும் சுவர்கள். அவள் உடைகளைக் களைந்து கொண்டிருந்தான். வெளவாலின் சிறகடிப்பு ஏதோ ஒரு மூலையில் கேட்டு மங்குகிறது. வெளிச்சம் படராத தரைகள். ராசைய்யா குகையெங்கும் உடல் வாடை நிறைவதை உணர்ந்தான்.

எந்தப் பாறையின் பின்னால் ஒளிந்திருப்பாள் என்ற வேட்கை அதிகமானது அவனுக்கு. பாறைகளைத் தாவித் தாவி எட்டிப் பார்த்தான். அவள் ஒளிந்து கொண்டிருக்கிறாள் என்ற உண்மை கசப்பாக அடைத்தது அவனை. பிறழ்வு கொண்டவன் போலக் குதித்துத் தேடினான். காற்றைத் தவிர எதுவுமில்லை. குரூரமும் வெறியும் கொண்ட உடல் விறைத்தது. பாறைகள் வெறிக் கின்றன எனத் தெரிந்தது. மங்கிய வெயில். பாறைகள் எல்லாம் மாறிவிட்டன. அவன் இடைவெளி இடைவெளியாக நடந்தான். புணர்ச்சியின் ரூபநிலை கொண்ட சிலைகள் அடங்கிய குகையின் வழி எந்தப் பக்கம் எனத் தெரியவில்லை. இரண்டு மரங்களும் கூட இப்போது தன்னைப் பார்க்கின்றன என அவன் உணர்ந்தான். மேல் குகை வாசல் வழியாக உள்ளே நுழைந்தான். சருகுகள் நிறைந்த குகைப் பாதையின் அகலம் குறைந்துகொண்டே உள் போனது.

குகையின் உட்புறத்தில் சுவாசத்தின் சப்தம். வரிசை வரிசையாகக் கல் படுக்கைகள். உட்புறத்திலும் அகன்ற கல் கூட்டம். அதன் பின்னாடி ஏறிப் பார்த்தான். குனிந்து உட்கார்ந்திருக்கும் சிறுவனின் முகம் தெரிந்தது. எட்டி உள்ளே பார்த்தான். ஆடை களற்ற சிறுவன். சிவப்பு உடல், அவன் முகம் மங்கியிருந்தது. நன்றாகப் பார்த்தான். அந்தச் சிறுவன் முகம் அவனுடைய தாகியது. அவன்தான் சிறு வயதில் இருந்த சரியும் மயிர்க ளோடான முகம். வியர்க்கத் தொடங்கியது. அந்தச் சிறுவனின் அசைக்காத கண்கள் அவனையே பார்க்கின்றன. குகைக்குள் திரும்பிக் குதித்தான். அந்தப் பெண் கல் படுக்கையில் கால்கள் விரியப் படுத்திருந்தாள். வேகத்தோடு அவள் மேல் பாய்ந்தான். உதட்டை வெட்டியது கல். எந்த உருவமுமற்ற பாறைப் படுக்கை. விழுந்ததில் அதிர்வடைந்தது குகை. கல் தேய விழுந்து கிடந்தான்.

காற்று புத்தகத்தின் பக்கத்தை அறுத்தது. அறுபட்ட பக்கங்களின் ஊடே சென்று ஒடுங்கியது புத்தகச் சப்தம். வெற்று வெளியில் புத்தகத்தின் அறுபட்ட பக்கங்கள் சப்தமிட்டுக் கொண்டிருந் ததைக் கேட்க எவருமில்லை நெடுநேரம் வரை.

– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *