மரணவாசலில் ஒரு மகத்தான தரிசனம்
கதையாசிரியர்: ஆனந்தி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2026
பார்வையிட்டோர்: 2,348
அமுது சுரந்தது அன்பே சிவமானது. உலகம் போகிற போக்கு, வாழ்கிற வாழ்க்கை, எதுவும் ஒட்டவில்லை. மாது ஒரு தனித் துருவமாகத் தான் அங்கு வந்து சேர்ந்தாள் , இது அப்பன் மடியல்ல, அன்பு செய்ய ஆளின்றி மடிந்து போதலும் மண் கவ்வி வீழ்தலும் எத்துணை கொடுமை. இந்தக் கொடுமையின் நிழல், ஒரு சகாப்த காவியத்தையே படைத்து விட்டு, போயிருப்பதாய் நினைவு கூரும் போதெல்லாம் சாதாரண மரண நிகழ்வு கூட மாதுவின் மனதில் எவ்வித தாக்கத்தையும், ஏற்படுத்தாமலே மறைந்து போய் விடுகிறது.
அப்படித்தான் மனநலம் கெட்டுப் போய் உயிர் விட்ட மகள் இழப்பிலும் நேர்ந்தது. மறக்க முடியாத, அவளின் சோக வரலாறு அவள் மனம் திருந்த மட்டுமல்ல உலகிற்கே வேதம் சொல்கிற கதைதான் இதுவும் நன்றாக பூத்துக் குலுங்க, வேண்டிய ஒரு அபூர்வ மலர் அவள், வன்மம் பிடித்த வாழ்க்கை மனிதர்களின், தலையீட்டினால், அவள் வாழ்க்கை கெட்டது. மனமும் கெட்டது இதை விளக்கி எழுதப் போனால், இந்தக் கனவு வாழ்க்கையின் சுவடுகளே விட்டுப் போய் பாலைவன நெருப்பில் கருகி வீழ்ந்த அவள் கதை ஒரு நிலை பெற்ற துன்ப காவியமாகவே, வேதம் சொல்லி அழ வைக்கும் .அப்படி மாது அழுது தீர்த்த கதையின் காலடிச் சுவடுகளை பற்றி, எழுவதாகவே, மாதுவின் இன்றைய ஒவ்வொரு நகர்வும் முதுமை நெருப்பில் கருகி அழிந்து போனாலும் அந்த ஆறாத ரணங்களின் வலி சுமக்கும் நாயகியாகவே இன்னும் அவள் இருக்கிறாள்.
அவளுக்குத் தெரியும், அவள் வீட்டு மற்றத்தில் ரோஜா பூக்கவில்லை மாறாக முட்கள் தான் தைத்தன. அதுவும் அவள் கணவனும் அவன் சார்ந்த உறவுகளுமே, மனதில் சுமந்து கொண்டு வந்த முட்கள் அங்கு பலிக்கடாவாக்கப் பட்டு ஒரு யுகமே போய் விட்டது, இப்போது அவனுமில்லை அவன் வாரிசுவையும் இழந்து விட்ட பின் இனியென்ன புது வேதம்.
மகள் இறந்து போவதற்கு முதல் நாள் மாலை, அவள் தேகமே சுட்டது. அதற்குப் பனடோல் கூடக் கொடுக்கவில்லை, இனி மருந்து தான் தாங்குமா அவளுக்கு?நடக்கவே முடியாமல், போன வெறும் நடைப் பிணம் தான் அவள் இப்போது காலம் கடந்த உண்மை.
அருமை அப்பாவை அழிக்கிற அப்பாவாய்க் கண்ட பின் நடை என்ன, பேச்சும் போனது. கடைசியாக மூச்சும் நின்றது.
அவள் உயிர் விட்டுக் கிடந்த சோக நாள். அழிக்க வந்த ஒரு மனிதனை பற்றியதாகவே, தொடர்ந்து கொண்டிருந்த, அவளின் நிழல், வாழ்க்கையின் ஓட்டம் அன்றோடு முடிந்தது. மூளை செத்தால் என்ன நடக்கும்? தலை கீழான நடத்தைதான், சாந்தி இழப்புத் தான் அது என்ன வகையான இழப்பு? பலிகளின் சண்டை குறித்த பயம், அவள் சாக்க்டையில் தள்ளி விட்ட மாதிரியே ஒரு நிகழ்வு , சாதாரணமாக பொலிஸைக்ண்டாலே குலை நடுங்கும் இவள் என்ன செய்தாள் தெரியுமே?
ஒரு நாள் மங்கிய மாலை நேரம் போல் தெஹிவளை பொலிஸ் ஸ்டேசனிலிருந்து போன் வந்தது, மாதுவிடம் சொன்னார்கள். உங்கள் மகள் இஞ்சை வந்து நிற்கிறாள் வந்து கூட்டிப் போங்கோ என்ற போது மாதுவிற்கு தலை சுற்றியது. இந்தக் காணாமல், போதல் அடிக்கடி நிகழும் கேட் திறந்திருந்தால், இஷ்டத்துக்கு அவள் வெளியே போய் விடுவாள், அப்பாதான் அரை மனதோடு தேடிக் கண்டு பிடித்து எழுத்து வருவாள்.
அன்றும் அப்படித் தான் நடந்தது. அவருக்கு நன்ராக சிங்களம் தெரியும். சிங்களம் படித்த உயர் அதிகாரிஅன்று அவளைக் கொண்டு வந்து விட்ட பின் எரிச்சலோடு சீறினார்.
மூதேவிஅங்கை ஏன் போனனீ?
சண்டையை நிப்பாட்டச் சொல்லிக் கேட்கத் தான்
ஆர் போடுற சண்டை?
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கலையாத வேடம்
எஸ்.மதுரகவி
June 17, 2026
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 17, 2026
திருப்புமுனை
ஜெயந்தி சங்கர்
June 17, 2026
