கல்யாண களேபரத்தில்…

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 3,395 
 
 

“நான்தான் பிரேமா. என் ஆத்துக்காரர் பேர் தேவநாதன். அவர் ஆர்கிடெக்ட். நிறைய கமெர்சியல் காம்ப்ளக்ஸ் காண்ட்ராக்ட் எடுத்து முடிச்சு கொடுப்பார். இண்டஸ்ட்ரில நல்ல பேர். பூர்வீக வழியில் ஒரு ஏழெட்டு கிரவுண்ட் போரூரில் இவர் பேருக்கு வந்ததில் நல்ல வீடா கட்டிட்டார். பின்னாடி சின்னதா ஒரு தோட்டம். நான் பிறந்து வளந்ததெல்லாம் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள கிராமம். இந்த மாசத்தோட முப்பத்தஞ்சு வருஷம் ஆச்சு இவரைக் கல்யாணம் பண்ணிண்டு இங்கே வந்தப்புறம்.

ஆருஷ், இவன் என்னோட பையன். முப்பது வயசுல ‘எனக்கு கல்யாணமே வேண்டாம்’ னு சொல்லிண்டு உட்கார்ந்திருக்கான். அவனுக்கு இன்ஜினீயரிங், டாக்டர் இதுல எல்லாம் இஷ்டம் இல்லை. அதனால் ஆர்ட்ஸ் படிச்சான். நன்னா ஓவியம் எல்லாம் வரைவான். அவன் வரைஞ்ச ஓவியம் ஒண்ணைப் பாத்துட்டு, அவன் ஃப்ரெண்ட் வினீத்தோட அப்பா தாணுகிருஷ்ணன் ரொம்ப பாராட்டினார். கூடவே ‘ நானும் என் பார்ட்னரும் ஒரு வருஷம் முன்னாடி நகை டிசைனிங் பண்றதுக்கு ஒரு வெப்சைட் ஆரம்பிச்சு இப்ப நல்லா போகுது. உனக்கு ட்ராயிங் நல்லா வரதால எங்களுக்கு உதவியா இருக்க முடியுமா? நல்ல சம்பளம் தர்றோம் ” அப்டின்னு சொல்லிட்டார். இவனும் சரின்னு சொல்லிட்டான்.படிப்பை முடிச்சு மூணு நாலு மாசம் ஆகி வேற என்ன பண்றதுன்னு யோசிச்சிண்டு இருந்தவனுக்கு இது இன்டரஸ்டிங்கா இருந்தது. அவாளோட இவன் ஒரு ஒண்ணரை வருஷம் ஒர்க் பண்ணிட்டு, யுகேக்கு போய் ஜுவல்லரி டிசைனிங் சம்மந்தமான படிப்பு முடிச்சான். யுகே, பெல்ஜியம், அமெரிக்கா எல்லாம் இதே ஃபீல்டுல வேலை பாத்துட்டு ரெண்டு வருஷம் முன்னாடி இங்கே வந்து சொந்தமா தொழில் ஆரம்பிச்சு நடத்தி வர்றான். நன்னா போயிண்டிருக்கு. கல்யாண விஷயத்தில்தான் பிடிவாதமா இருக்கானேன்னு, முழிச்சிண்டிருந்தப்போ இது நடந்தது.


ரெண்டு மாசம் முன்னாடி இவரோட அண்ணா பெண் நளினாவுக்கு கல்யாணம் நடந்தது இங்கேதான் சென்னைல. இவர் அண்ணா, என் பெரிய மச்சினர் கேசவன் பெங்களூரில் இருக்கார். எவர்சில்வர் பாத்திரங்கள், மர சாமான்கள் மற்றும் கல்சட்டி வகைகள் இவைகள் விற்பனை செய்யும் பெரிய கடை வைத்து நடத்தறார். அவர் வைஃப் கல்யாணி ட்யூஷன் க்ளாஸ் நடத்தி வரார். ஒரே பொண்ணு. சென்னை சௌகரியமா இருக்கும்னு சொல்லி

எல்லாரும் சம்மதிக்க நல்ல படியா திருமண வைபவம் முடிஞ்சுடுத்து. அவா எல்லாரும் திருப்பதி, பழனி இங்கே எல்லாம் போயிருந்தா.

ஆனால் என்னவரோட பால்ய நண்பர்கள், என் மச்சினருக்கும் நன்னா தெரிஞ்சவா எல்லாரும் சிதம்பரம் பக்கத்தில் உள்ள கிராமத்திலேர்ந்து வந்தவாளோட அரட்டை அடிச்சுண்டு உட்காந்திருந்தார் இவர். அவங்கள்ல ரெண்டு நண்பர்களுக்கு ஆகாது. எல்லாம் வெத்து விஷயத்துக்குத்தான். சும்மா ஆர்க்யூ பண்ணிண்டே இருப்பாங்க.

என் தங்கை லாவண்யா, அவ ஹஸ்பண்ட் பூபாலன் இந்தோர்ல இருந்து வந்திருந்தா. ரெண்டு பேரும் விவசாயப் பொருட்கள் பேக்கேஜிங் தயாரிப்பு, மசாலா பொடிகள் வியாபாரம் இதெல்லாம் செய்யறா. அவளோட பையன் சித்தாந்த் வரலை. ஆனால்பொண்ணுசௌதாமினிவந்திருந்தா. அம்மாவுக்கும் பொண்ணுக்கும் எப்பவுமே தகராறு உப்புச் சப்பில்லாத மேட்டருக்கு.

அடுத்து இவரோட சித்தப்பா சேஷகிரியும் சித்தி பாகீரதியும் பூனாவில் இருந்து வந்திருந்தா. அவாளுக்குள்ளேயும் ஏதோ உரசல். சித்தப்பா ரிசர்வ் வங்கியில் ஆஃபீஸரா இருந்து ரிடையர் ஆனவர். ரெண்டு பொண்ணு, ஒரு பையன். பொண்ணுங்க ஃபாரின்ல இருக்கா. பையன் கிரிதர் டில்லியில் இருக்கான். டாக்டர் அவன்.

அடுத்ததா, அமெரிக்காலேர்ந்து கல்யாணி மன்னியோட தங்கை சியாமளா, அவ ஹஸ்பண்ட் ஸ்ரீநாத், அவ பொண்ணு தான்யா, அவா ஃபேமிலிக்கு நெருங்கிய நண்பராத்து பொண்ணு அன்விகா. நல்ல வேளையா இந்த க்ரூப்ல யாருக்கும் சண்டை, சச்சரவு, ஆர்க்யூமென்ட் இல்லை. ஆனா அன்விகாவும் ஆருஷ் போல கல்யாணமே வேண்டாம்னு சொல்ற ரகத்தில் இருக்கறவ. 29 வயசு ஆகறது. வந்த அன்னிலேர்ந்து ஆருஷுக்கும் அன்விகாவுக்கும் இடையில் கிண்டல், கேலி, நையாண்டி, அரட்டைகள், சின்னச்சின்ன சண்டைகள் போய்க்கொண்டே இருக்கு.

இதெல்லாம் இப்படி இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் இந்த ரெண்டு நாளில் அந்த ரெண்டு கிராமத்து ஃப்ரெண்ட்ஸ் சண்டை போடாமல் ஒத்துமை ஆகிட்டா. அதுல ஒருத்தர் ராஜன். அவரோட பை ரூம்ல வச்சிருந்தது எங்கேயோ மிஸ் ஆயிடுத்து. இன்னொரு நண்பர் ஜெயராம், அவரோட லெதர் பவுச் ஷெல்ஃப்ல இருந்து காணாமல் போயிடுத்து. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி எல்லா இடத்தையும் போய் சுத்தி சுத்தி தேடிருக்கா. எப்படியோ ஏதோவொரு இடத்திலேர்ந்து ராஜன் பை ஜெயராம் கிட்டேயும், ஜெயராமின் பவுச் ராஜன் கிட்டயும் கிடைச்சு ஒருத்தருக்கொருத்தர் சந்தோஷமா கொண்டு வந்து மாத்திண்டா. அதுலேர்ந்து பழசெல்லாம் மறந்து ஃப்ரெண்ட்ஸ்

ஆகுங்கடா அப்டின்னு இவரும் மத்த நட்புகளும் சொல்ல கட்டிப்பிடிச்சு ஒத்துமை ஆயிட்டா.

இதே போல சௌதாமினி போட்டிருந்த தங்க கொலுசு ஒண்ணு எங்கேயோ கழண்டு விழுந்துடுத்து. அம்மா கிட்ட சொல்லாம எங்கிட்ட சொன்னா. கல்யாணத்துக்கு வந்தவாளோடயும் பேசிண்டு கொலுசையும் தேடிண்டிருந்ததை எப்படியோ லாவண்யா நோட்டம் பாத்துட்டு கேட்டா என்ன விஷயம்னுட்டு. அவ கிட்ட மறைக்க முடியாமல் உண்மையை சொல்லிட்டேன். எந்த உணர்வையும் காண்பிக்காம என்னை அமைதியா இருக்க சொல்லி அவளும் தேடினாள். கடைசியாக அவ கையில்தான் கிடைச்சது. ஏதோவொரு ரூமில் மூலையில் கிடந்திருக்கு. முந்தின நாள் ராத்திரி அங்கேதான் இதுகள் மெஹந்தி போடறது, அது இதுன்னு கூத்தடிச்சிண்டு இருந்ததுங்க. லாவண்யா சுத்தி சுத்தி அங்கேயே தேடி கண்டு பிடிச்சுட்டா. சௌதாமினியிடம் நான் இதை சொன்னேன். அவ்வளவுதான். தாங்க முடியாத சந்தோஷத்தில் அம்மாவைக்கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்து கொலுசை வாங்கினா. லாவண்யாவுக்கு ஒரே ஆனந்தம். ரெண்டு பேரும் கடைசி வரையில் சச்சரவு இல்லாமல் ஃப்ரெண்ட்லியா இருந்தா.

இப்படித்தான் பாகீரதி சித்தி கல்யாண ஹாலில் மாடிக்கு ஏறும்போது மேல் படி கிட்ட போனவுடன் கால் தடுக்கி விழப்பாத்தவளை பக்கத்திலேயே இருந்த சேஷகிரி சித்தப்பா தாங்கி பிடிச்சுட்டார். ஆனால் சித்திக்கு கால் சுளுக்கி நடக்க முடியாதபடி ஆயிடுத்து. சித்தப்பா சித்தியை அங்கே பக்கத்தில் இருந்த சோஃபாவில் உட்கார வச்சிட்டு ஆருஷை அழைச்சிண்டு போய் ஸ்ப்ரே, ஏதோவொரு ஆயில் இதெல்லாம் வாங்கிண்டு வந்து சித்தி காலுக்கு மாலிஷ் பண்ணி ஒத்தடம் எல்லாம் கொடுத்துண்டு அவ பக்கத்துலயே இருந்தார். சாயங்காலத்திலேர்ந்து நைட் சித்திக்கு தூக்கம் வர வரைக்கும் எல்லா ஹெல்ப்பையும் பண்ணிண்டு இருந்தார். அடுத்த நாள் முதல் ஊருக்கு கிளம்பும் நிமிஷம் வரை சந்தோஷமா பேசிண்டிருந்தா.

இப்படி என் பெரிய மச்சினர் பெண் கல்யாணம் இங்கே நடந்ததில நிறைய அனுகூலங்கள்தான் இருந்தது. என்ன, எங்காம் பெரிய இடமா இருக்கறதால கல்யாணத்துக்கு வந்தவாள்லாம் ரெண்டு நாள் கூடவே தங்கிட்டு போறேன்னுட்டா. கல்யாணத்துல சந்திச்ச ‘குக்’ கையே இங்கே வரச்சொல்லி ஹெல்ப் பண்ண சொல்லிட்டேன். அதனால சமையலுக்கு பிரச்சினைகள் இல்லாமல் போனது.

அதையும் விட முக்கியமானது இந்த கல்யாண அமர்க்களத்தில் என்ன நடந்ததுங்கறதை சொல்றேன் பாருங்கோ.

மண்டபம், ஸ்டேஜ் இதெல்லாம் ஒரு பார்ட்டி வந்து ‘டெக்கரேட்’ பண்ணிண்டிருந்தா. ரெண்டு ஆண், ரெண்டு பெண்கள் இதையெல்லாம் செஞ்சிண்டிருந்தா. அதுல ரெண்டு பேரு மத்தியானமா வேற இடத்தில் வேலைன்னு ,துரை, லதா அப்படிங்கற ரெண்டு பேரை மீதி வேலைகளை பாத்துக்க சொல்லிட்டு கிளம்பிட்டா. நாங்க எல்லாரும் ஒரு நாள் முன்னாடியே போனதால் இதெல்லாம் பாக்க முடிஞ்சது. மச்சினர் கேசவன் அண்ணாவும் கல்யாணி மன்னியும் கேட்டரிங் முதல் நாள் காலம்பறத்திலேர்ந்து ஏற்பாடு பண்ணிட்டதால எல்லாரையும் நேரா அங்கே வரச்சொல்லிட்டோம். நாங்களும் போய் கேம்ப் போட்டுட்டோம்.

துரை, லதா இவா அலங்கார வேலையெல்லாம் செஞ்சிண்டே இருக்கும்போது அங்கே ஒரு இளைஞன் சில ஹெல்ப் பண்ணிண்டு இருந்தான் அவாளுக்கு. கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு பெண்மணி, கிட்ட தட்ட நாற்பது வயசு இருக்கும். அவள் அந்த பையனோட பேசிட்டு அவளும் கூடமாட அவாளுக்கு ஒத்தாசையா இருந்தா. கொஞ்ச நேரத்தில் இந்த பெண்மணி போய் அவா எல்லாருக்கும் காபியோ, ஜுஸோ வாங்கி கொடுத்து ரொம்ப அனுசரணையாக இருந்தா. துரை, லதா இவாளுக்கு தெரிஞ்சவா போல் இருக்குன்னு நினைச்சுட்டு போய்ட்டோம். நைட் ரிசப்ஷன் எல்லாம் முடிஞ்சதும் பனிரெண்டு மணிக்கு மேல் மறுநாளுக்காக மேடையை அலங்காரம் செய்ய துரையும், லதாவும் ஆரம்பிச்சா. அப்பவும் அவாளுக்கு அந்த பெண்மணியும், பையனும் உதவி பண்ணிண்டு இருந்தா. அப்புறமா நாங்க தூங்க போய்ட்டோம்.

மறுநாள் கல்யாணத்தன்னிக்கு கார்த்தாலேர்ந்து இந்த பெண்மணி, அந்த இளைஞன் மட்டுமே இருந்தா. துரை, லதா இவாளை காணோம்.

அதைப் பார்த்து யாரோ கேட்க, இளைஞன் ‘ அவா ரெண்டு பேருக்கும் திடீர்னு நைட்டு உடம்பு சரியில்லாமல் போய்டுத்துன்னும், மாத்திரை சாப்பிட்டு படுத்திண்டிருக்கா, மேல எலக்ட்ரிக் சாமான்கள் வைக்கிற ஸ்டோர் ரூம்ல, மத்தியானம் வருவா, நாங்க பாத்துப்போம் அதுவரைக்கும் . எங்க கம்பெனில சொல்லிட்டோம் ‘அப்டின்னு சொல்லிண்டிருந்தான்.

ஆனால் சும்மா சொல்லக்கூடாது. ரெண்டு பேரும் வெறும் டெக்கரேஷன் ஒர்க் மட்டும் இல்லாமல் மத்த வேணுங்கற ஹெல்ப் எல்லாம் பண்ணினா. ஸ்டோர் ரூமிலேர்ந்து தேவையானது எடுத்து வர்றது, ஸ்டேஜில அங்கங்கே கிடக்கிற வேண்டாத குப்பையை எடுத்து சுத்தம் பண்றது, சேர்களை கரெக்டா போடறது, தண்ணீர் கேன் காலியாச்சுன்னா திரும்ப ஃபில் பண்றது இப்படி நிறைய நச்சு வேலைகளை எல்லாம் யாருமே சொல்லாம அவா ரெண்டு பேரும் பாத்துண்டு இருந்தா. அந்த பெண்மணி தேங்காய்

பையெல்லாத்தையும் கரெக்டா அடுக்கி வைக்கிறது, பொண்ணு ரூமில் எல்லாத்தையும் எடுத்து ஒழுங்கா வைக்கிறது இப்படி உதவி செஞ்சிண்டிருந்தா. இதுக்கிடையில் அப்பப்ப ஸ்டேஜ் ஒர்க், ஊஞ்சல் மாட்றது, மந்திரம் சொல்லிண்டு உட்கார்ந்திருக்கற வாத்யார் ஸ்வாமிகளுக்கு காபி வாங்கி கொடுக்கறது இதையெல்லாமும் சூப்பரா பண்ணா.எல்லாரும் ரொம்பவே பாராட்டினா.

அந்த பையன் வெளியில் கேட் அருகே சரியாகக்கட்டாத வாழை மரத்தை நன்றாக வைத்து கட்ட உதவினான். அந்த பெண்மணி குத்து விளக்கில் தீபம் நேராக எரிந்து கொண்டிருக்கும் படி எண்ணெய் கரெக்டா ஊற்றி, திரிகளை சரி செய்து நேர்த்தியாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் ஆருஷ், அன்விகா இவா ரெண்டு பேருக்கிடையில் ஆர்க்யூமென்ட், நக்கல் இவைகளெல்லாம் இருக்குன்னு சொல்லியிருந்தேன் இல்லையா, அவாளுக்கு இடையே இந்த பெண்மணியும், பையனும் சேர்ந்து அவங்க ரெண்டு பேர் நக்கல்களுக்கு பாய்ண்ட் எடுத்து கொடுத்து வேடிக்கையாக சிரித்துக் கொண்டு பழகி சிலமணி நேரங்களில் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டா.

“என்ன, ஆருஷ் மேலயும் கீழேயும் மூணு நாலு தடவை போய்ட்டு வந்து பிஸியா இருக்கற மாதிரி காண்பிக்கறயா?” அன்விகா கேட்பாள்.

” நீ இங்கே இவங்களோட உட்கார்ந்துண்டு அரட்டை அடிக்க வந்திருக்கேங்கறது எனக்கு தெரியும். பாக்கறவா கிட்ட நீயும் டெக்கரேஷனுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி புளுகுவே, நான் எல்லாம் அப்படி இல்லை தெரியுமா?” ஆருஷ் பதில்.

” நாம் எதை செய்தாலும் விளம்பரம் இல்லாம செய்வோம். இவங்கதானே இந்த பந்தா எல்லாம் காட்டுவாங்க அன்விகா, நீ கேளும்மா” அந்த பெண்மணி எடுத்து கொடுப்பாள்.

“: சார், இங்கே விளம்பரம் செய்யலைன்னு சொல்லிட்டு பேசறவங்க அத்தனை பேர்கிட்டேயும் எல்லாமே தான் செஞ்சதா சொல்லுவாங்க, இதானே பொண்ணுங்க வழக்கம்?கேளுங்க சார் நீங்க ” அந்த பையன் ஆருஷிடம் சொன்னான்.

இப்படி பேசிப் பேசி நட்பாகி பெண்மணி பேர் சாந்தி, பையன் பேர் கிரீஷ்னு தெரிஞ்சுண்டா.

கல்யாணம் தடபுடலாக நடந்து முடிந்தது. எக்கச்சக்கமான கூட்டம். நிறைய கிஃப்ட்ஸ் பெட்டி, பெட்டியா குவிஞ்சுது. மேடைல எல்லாத்தையும் வைக்க இடம் போதாது அப்டின்னு சொல்லிட்டு கல்யாணி மன்னி ‘ நம்ப ரூமில் கொண்டு பாதிக்குமேல வச்சுக்கிட்டு வரலாமே’ ன்னு சொல்லிண்டிருந்தா. வழக்கம்போல அன்விகாவும் ஆருஷும் ‘ நாங்க எடுத்துண்டு போறோம் ‘ னு சொல்லும்போது சாந்தி ” நீங்க இங்கே உட்கார்ந்து வர்றதை வாங்கி வைங்க. நானும் கிரீஷும் கொண்டு வைக்கறோம் ரூமில். அன்விகா என்னோட வந்து ரூமை காட்டு. அப்புறமா இங்கே ஆருஷுக்கு ஹெல்ப்பா இரு. நாங்க ரெண்டு மூணு தடவையாக எடுத்துட்டு போய் வச்சுட்டு வர்றோம்” என்றாள்.

கல்யாணி மன்னி ” இல்லை, அன்விகா நம்பர் எல்லாம் எழுதி எல்லாத்தையும் கரெக்டா பண்ணிண்டிருக்கா, அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். அனுசுயாவை உங்கூட அனுப்பறேன்” ன்னு சொன்னாள்.

அப்போ ஒரு பெரிய பிஸினஸ் நபர், பெரிய மச்சினருக்கு நெருங்கிய நண்பராம், சூப்பரான வைரம் பதிச்ச நெக்லஸ் கொடுத்திருந்தா. திறந்து பாருன்னு சொல்லிட்டு தான் கொடுத்தார். எல்லாரும் பாத்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டா.இது போல் நிறைய காஸ்ட்லி கிஃப்ட் வந்தது.

அன்விகா சமயோசிதமா எல்லாத்தையும் வரிசையா வச்சு நம்பர் போட்டு அந்த பெண்மணி கிட்ட கொடுத்து கொண்டு வைக்க சொன்னாள். கல்யாணி மன்னி அவா அத்தை பெண் அனுசுயா கிட்ட சாவியைத்தந்து ” இந்த அம்மா கொண்டு வந்து தர்ற பெட்டி எல்லாத்தையும் அங்கே உள்ள பீரோல கீழ் ஷெல்ஃபில நம்பர் படி வச்சுடு.எல்லா பெட்டிகளும் சேர்ந்தப்புறம் பூட்டிண்டு வா” என்று அனுப்பினாள்.

எல்லா வேலைகளும் திட்டமிட்டபடி நடந்தது. கொஞ்சம் சந்தடி அடங்கிய நேரத்தில் சாந்தி ரூம் சாவியை கல்யாணி மன்னியிடம் கொடுத்துட்டு ” அனுசுயா பொண்ணு உங்ககிட்ட கொடுக்க சொல்லி சொன்னது. அது ஏதோ ஃபோன் பேசிட்டு இருக்கு. எல்லா பெட்டியையும் நீங்க சொன்ன இடத்தில வச்சாச்சு அம்மா” அப்டின்னு சொன்னா.” ரொம்ப தேங்க்ஸ் ” கல்யாணி மன்னி சாந்தி கையை குலுக்கினாள்.

கல்யாண மரபுப்படி வைதீக காரியங்கள் மீதி இருந்ததால் மேடையில் பொண்ணு, மாப்பிள்ளை உட்கார்ந்து மந்திரம் சொல்லும் வைபவம் நடந்துண்டிருந்தது. ஆனால் சாப்பாட்டு பந்தி ஜோரா ஆரம்பிச்சு போயிண்டு இருந்தது. கல்யாணி மன்னி அனுசுயா எங்க போய்ட்டான்னு கத்திண்டிருந்தா.

சாந்தியை அரை மணி நேரமா காணாததால ஆருஷ் அன்விகாவைக் கேட்டான். ‘கார்த்தால சாப்பிடாததால சாப்பிட போயிருக்காங்க’ ன்னு சொல்லி

‘கிரீஷ் இருப்பானே, அவன் எங்க, ஓ, அவனும் சாப்பிட போய்ட்டான் போல் இருக்கு’ ன்னு அதையும் சேர்த்து சொன்னாள். நாங்க எல்லாரும் அதுக்கப்புறம் பொண்ணு, மாப்பிள்ளையோட ஒரு பந்தில உட்கார்ந்து சாப்பிட்டு வர வரைக்கும் அவா ரெண்டு பேரை பாக்கல. ஆருஷ் ‘ ஏதாவது ரூமில் தூங்கிண்டு இருப்பா.வரட்டும்’ ன்னு எங்க கிட்ட சொன்னான்.

மதியம் 3 மணி ஆயிடுத்து. நாங்க எல்லாரும் சாப்பிட்டு முடிச்சு அரட்டை கூட்டம் ஒரு பக்கம், குறட்டை கூட்டம் ஒரு பக்கம், விளையாட்டு குழந்தைகள் ஒரு பக்கம் இப்படி சிதறி இருந்து சந்தடி கொஞ்சம் அடங்கின நிலைல இருந்தது. அப்ப உடல்நலம் சுகமில்லாம ஸ்டோர் ரூம்ல படுத்திண்டு இருந்த ரெண்டு ‘டெக்கரேஷன்’ கம்பெனி காரங்க வந்தா. அன்விகாவும், ஆருஷும் அவாளோட ஹெல்த் பத்தி கேட்டுட்டு ‘ ஆனால் உங்க ஃப்ரெண்ட்ஸ் அந்த சாந்தியம்மாவும், கிரீஷ் பையனும் நல்லா ஹெல்ப் பண்ணாங்க. நீங்க சாப்டிங்களா?’ அப்டின்னு சொன்னவுடனே துரையும், லதாவும் ” எங்க ஃப்ரெண்ட்ஸ் இல்லை. மாப்பிளை வீட்டு சொந்தம்னு சொன்னாங்களே, அது பொய்யா?” ன்னு கேட்டா.

உடனே அன்விகாவும் ஆருஷும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துண்டு” சம்திங் ஈஸ் ராங் ” அப்டின்னு சொல்லிட்டு துரை கிட்ட” உங்களுக்கு உடம்புக்கு என்னாச்சு? ஏன் திடீர்னு படுக்க போய்ட்டீங்க?” ஆருஷ் கேட்க, ” சார், ஸடனா வயிறு கலக்கிடுச்சு. அதை அவங்க கிட்ட சொன்னேன். உடனே ரெண்டு மாத்திரை கொடுத்தாங்க. அவ்ளோதான். அடுத்த பத்தாவது நிமிஷத்துல கண் சொருகிடுச்சு. அந்த ரூமுக்கு எப்படி போனேன்னு தெரியாது.” அப்டின்னான்.

லதா சொன்னாள். ” துரைக்கு உடம்பு சரியில்லை.அதனால அந்த ஸ்டோர் ரூம்ல படுக்க வச்சிருக்கோம்னு சொல்லிட்டு என்னை அங்கே அழைச்சிட்டு போனான்.துரையை பாத்ததுக்கப்புறம், ‘ இங்கே பாரு, யாரும் கவனிக்காம ஒரு சென்ட் பாட்டில் இருக்கு. அது சென்ட் தானா, என்னன்னு பாத்து சொல்லு நீ’ அப்டின்னான் அவன் காட்டின பாட்டில திறந்து ஸ்மெல் பண்ணதுதான் தெரியும். மயங்கி சாஞ்சுட்டேன். இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி துரை தான் தண்ணி தெளிச்சு முழிக்க வச்சாரு. அவங்களை தேடி பிடிக்கலாம்னுதான் வந்தோம். எங்கே சார் அவங்க? மாப்பிளை வீட்டு சொந்தம்னு பொய் ஏன் சார் சொன்னாங்க?”

” இதை சொல்றதுக்கு எங்க மேனேஜருக்கு கால் பண்ணோம். அவர் எங்களை நீங்க இங்கேயே தங்கிட்டு மறுநாள் வர்றதுக்கு ஒரு லேடி ஃபோன் செஞ்சு பர்மிஷன் கேட்டாங்க. நான் ஓகேன்னுட்டேன். என்ன ஆச்சுன்னு கேட்டார். அப்புறமா கூப்டறேன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டு வந்தேன்.யாருங்க அந்த லேடி?” துரை கேட்டான்.

அன்விகாவும் ஆருஷும் உடனே ” எல்லா சிசிடிவி ஃபுட்டேஜ் செக் பண்ணணும். போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுவோம். அதுக்கு முன்னாடி அவங்க என்ன திருட்டுத்தனம் செஞ்சிருப்பாங்க அப்டிங்கறதை நாம் கண்டு பிடிக்கணும் ” அப்டின்னு பேசிண்டா.

அன்விகா” ஏய் ஆருஷ், கடைசியா கிஃப்ட் எல்லாம் எடுத்து போய் வச்சா பாரு. சாவி கொண்டு கொடுத்தா அனுசுயா ஏதோ ஃபோன் பேசிண்டிருக்கா அப்டின்னுட்டு. அனுசுயா கிட்ட கேட்கணும்.அவ எங்கே?” கேட்டாள்.

ஆருஷ் கல்யாணி மன்னியிடம் கேட்க, மன்னியும் ரொம்ப நேரமா பாக்கலைன்னும் சொல்ல இன்னும் சந்தேகம் வலுவா போய்டுத்து எல்லோருக்கும். அன்விகா உடனே ” ஆருஷ், வா போய் அந்த ரூமில் பாக்கலாம். எனக்கு சந்தேகம்.அந்த சாந்தியும், கிரீஷும் ஏதோ சில கிஃப்ட் திருடியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்” ன்னு சொன்னாள். கல்யாணி மன்னியும் சாவியை கொடுத்துட்டு சொன்னா” அனுசுயாவையும் ஒரு மணிநேரமா காணுமே, வாங்க நானும் வரேன்” னு சொல்லி எல்லாரும் அந்த ரூமுக்கு போய் பார்த்தோம்.

” கிஃப்ட் பெட்டி மொத்தம் 32, எல்லாம் இருக்கா பாரு” அன்விகா சொல்ல, நாங்க எண்ணிட்டு ” கரெக்டா இருக்கு. அழகா வரிசையாவும் வச்சிருக்கா” அப்டின்னு பதில் கொடுக்க “பெட்டி எல்லாம் இருந்தா போதுமா? உள்ளேயும் கரெக்டா இருக்கான்னு பாருங்க” ன்னு ஆருஷ் சொன்னான். எங்களுக்கு மண்டையில் அடிச்ச மாதிரி இருந்தது.அன்விகா சொன்னா, ” பாக்ஸ் நம்பர் 14 பாரு, அப்புறம் 25,27,31 இதையெல்லாம் பாரு”

பெட்டி 14ல் இருந்த நெக்லஸ், 27ல் இருந்த வைர மோதிரம், 31ல் இருந்த செயின், தங்க காசுகள் 3 இதெல்லாம் காணாமல் போயிருந்தது.

அப்போ சிசிடிவி செக் பண்ணிண்டிருந்தவா வந்து சொன்னா ” அந்தம்மாவும், பையனும் கடைசியா சாப்பாட்டு ஹாலுக்கு போற மாதிரிதான் இருக்கு. இடைல இந்த பாக்ஸ் எல்லாம் தூக்கிண்டு போற காட்சி எல்லாம் இருக்கு. சந்தேகத்துக்கு இடமாக எதுவும் இல்லையே. “

அதுக்குள்ள கல்யாணி மன்னியும் நானும்” ஏன் இந்த டாய்லெட் திறக்க முடியல” ன்னு கேட்டோம். ஆருஷும், அன்விகாவும் உடனே” ஒரு நிமிஷம், எங்களுக்கு ஒரு சந்தேகம் ” அப்டின்னு சொல்லி கதவை திறக்க ட்ரை பண்ணா, கதவுக்கு அந்த பக்கம் யாரோ படுத்துண்ட மாதிரி இருந்தது. உடனே ” ஏய் ஆருஷ், ஐ திங்க் அனுசுயா ” அப்டின்னு கத்தினா. ஹால் மேனேஜர் எங்க கூடவே இருந்ததால, ஆட்களை விட்டு, கதவை கட் பண்ணி எடுத்து பாத்தா, அனுசுயா உள்ளே மயங்கி படுத்திண்டிருக்கா.

ஒரு வழியா எல்லா வழிகளையும் கையாண்டு அனுசுயாவை நினைவு திரும்பி லெவலுக்கு கொண்டு வந்து ‘ என்ன ஆச்சு ‘ ன்னு கேட்டா, லதா சொன்ன அதே கதையை சொல்றா. ‘ சாந்தியம்மா பெட்டியை எல்லாம் கொண்டு வந்து அடுக்கி வச்சுட்டு, கடைசியா கொண்டு வந்த பாக்ஸை வச்சதுக்கப்புறம், நாம பூட்டிட்டு போகலாம்னேன். அப்போ, இதை பாரும்மா, இது என்ன செண்ட் பாட்டிலா, இங்கே திறந்து விழுந்து கிட்ந்தது, என்னன்னு பாத்து சொல்லுன்னா. நானும் எடுத்து மோந்து பாத்தேன். அப்புறமா என்ன நடந்ததுன்னு தெரியல. இப்பதான் முழிச்சிருக்கேன்’ அப்படின்னு பலவீனமான குரலில் பேசினாள்.

அப்புறம் என்ன, ஆருஷ், அன்விகா, சௌதாமினி, லாவண்யா, தான்யா, ராஜன் எங்க ஆத்துக்காரர் இப்படி ஒரு துப்பறியும் டீமே ரெடியாகி எப்படியெல்லாம் செக் பண்ணி இந்த ரெண்டு பேரையும் கண்டு பிடிக்கறதுன்னு திட்டம் போட்டா. ஆயுஷ் மறுபடியும் எல்லா சிசிடிவி ஃபுட்டேஜ் காட்சியை பாக்கும்போது, அன்விகா அந்த வீடியோ காரரை கேட்டா, ” இங்கே ஒரு பையன் ட்ரோன் வச்சு எல்லாத்தையும் எடுத்திண்டிருந்தான்.அவன் எங்கே ” கீழேதான் என் ப்ரதரோட பேசிட்டிருக்கான்” வீடியோ எடுப்பவர் சொன்னார்.

ஆருஷ், அன்விகா போய் அவனைப் பார்த்து ட்ரோன் காட்சிகளை செக் பண்ணும்போது சாந்தியும், கிரீஷும் வெளியே போவது ஒரு ஃப்ரேம்ல தெரிஞ்சது. டைம் கரெக்டா மேட்ச் ஆனது. அவங்க ரெண்டு பேரும் டைனிங் ஹால் போற மாதிரி போய்ட்டு சிசிடிவி கண்ணுல படாமல் பின் பக்கம் சைட் வழியாக வாசலுக்கு வந்து கொஞ்சம் நடந்து போய், ஆட்டோ அல்லது கார்ல போயிருக்கான்னு முடிவுக்கு வந்தோம்.

அதற்குள்ள போலீஸ் டீம் வந்தா. விஷயத்தை விவரமா சொன்னோம்.அவாளும் ஃபுட்டேஜ் பாத்துட்டு கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் கொடுத்தா. மூணு மணி நேரம் கழிச்சு தகவல் வந்தது. அவா ரெண்டு பேரும் இங்கேர்ந்து ஒரு ஆட்டோவில் ஏறி பக்கத்தில் உள்ள மெட்ரோ ஸ்டேஷன் போய் அங்கேருந்து சென்ட்ரல் போனதை வச்சு பார்த்து, சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயிலில் உட்கார போகும்போது பிடிச்சுட்டா.

பொருட்கள் நல்லபடியாக திரும்பி கிடைச்சுடுத்து. அந்த ரெண்டு பேரும் சென்னையில் நிறைய கல்யாண நிகழ்வுகள்ல இது மாதிரி வெவ்வேற பொய்களை சொல்லி கூட்டத்தோட மிங்கிள் ஆகி திருடியிருக்காங்க.போலீஸே இவங்களை தேடிண்டுதான் இருந்திருக்கா. ஒவ்வொரு தடவையும் எதையாவது சுருட்டிட்டு உடனே ரயில் மூலமாக ஆந்திராவுக்கும், பஸ் மூலமா பெங்களூருக்கும் ஓடிடுவாங்க. மறுபடியும் கொஞ்ச நாள் கழிச்சு நோட்டம் விட்டு வசதியான இடத்து கல்யாணத்தை

செலக்ட் செஞ்சு அவங்க வேலையக் காட்டுவா. இதே வழக்கம்னு போலீஸ் தகவல் மூலமா தெரிஞ்சது. எப்படியோ ஆருஷ், அன்விகா இவாளோட பிரசென்ஸ் ஆஃப் மைண்ட் வேலையால இவா தப்பிக்கறதுக்கு முன்னாடி பிடிக்க முடிஞ்சுது.

எல்லோருக்கும் சந்தோஷம் தாங்க முடியலை. அன்விகாவையும், ஆருஷையும் அத்தனை பேரும் பாராட்டினா. அவாளோட ஸ்விஃப்ட் நடவடிக்கையாலதான் சாதிக்க முடிஞ்சதுன்னு பேசிண்டிருந்தா.

அடுத்த நாள் கார்த்தால நான் முன்னாடி சொன்ன அத்தனை பேரும் கிளம்பி எங்காத்துக்கு வந்ததுக்கப்புறம் பாத்தா, ஆருஷும், அன்விகாவும் நல்ல ரொம்ப நாள் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி, ஆர்க்யூமென்ட் துளியும் இல்லாமல் ஜோக்ஸ் எல்லாம் அடிச்சுண்டு பேசிண்டிருந்ததை பார்த்து எங்களுக்கு ஆச்சரியம்.

நான் மத்யான சாப்பாட்டு நேரத்தில ஆருஷ் கிட்ட கேட்டேன். ” என்னடா, நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டிங்களா?” அப்டின்னு. அவன் அதுக்கு என்ன சொன்னான் தெரியுமா, ” அம்மா, இப்போ என் கிட்ட நீ எதிர் பார்த்த சேஞ்ச் வந்தாச்சு. அன்விகாவுக்கு ஓகேன்னு சொல்லிட்டா.,அவளை கல்யாணம் பண்ணிக்கறேன். எனக்கு, என் லைஃப்க்கு அவ நல்ல சூட்டபிலா இருப்பான்னு நினைக்கிறேன். நீ அவளோட பேரண்ட்ஸ் கிட்ட வீடியோ கால் மூலமா பேசுறியா?” அப்டின்னான்.

எனக்கு சந்தோஷம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் அன்விகாவையும் கேட்கணும் , அவாத்தில ஏதாவது அப்ஜெக்ட் பண்ணாமல் இருக்கணும்கிற பதட்டம் ஒரு பக்கம்.” ” சரிடா, அப்பா கிட்ட சொல்லிட்டு இன்னிக்கே பேசிடலாம்” னேன்.

” பிரேமா, நாங்க எல்லாரும் அவனை அப்பவே கேட்டு விஷயத்தை தெரிஞ்சுண்டுட்டோம். தேவநாநனுக்கும் தெரியும்.அவனோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சீக்கிரம் வீடியோ கால் பேசி முடிவு பண்ணிட்டு அடுத்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுடா.இல்லேன்னா பையன் மனசு மாறிடப்போறான்னு கலாட்டா செஞ்சுண்டு உட்கார்ந்திருக்கா.” சேஷகிரி சித்தப்பா சிரிச்சுண்டே சொன்னார்.


அப்புறமா என்ன, எல்லாம் நல்லபடியாக முடிஞ்சு அன்விகா திரும்ப போய் அவ அப்பா, அம்மாவோட நெக்ஸ்ட் மந்த் வந்து நிச்சயம் ஆகி இதோ இன்னும் மூணு மாசத்திலே கல்யாணம் நடக்க நாள் பார்த்தாச்சு.

‘நாரதர் கலகம் நல்லதா முடியும்’ னு சொல்ற மாதிரி ‘நளினா கல்யாண களேபரத்து நடுவில் ‘ நிறைய நல்லதா நடந்திருக்கு. சண்டை போட்டுண்டவா எல்லாரும் நட்பாயிட்டா. ரொம்ப நாள் அகப்படாமல் இருந்த ஃப்ராடு பேர்வழிகள் மாட்டினாங்க.

முக்கியமா ஆருஷ் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுத்து. இப்பத்தான் மனசு நிறைஞ்சிருக்கு.”.

2 thoughts on “கல்யாண களேபரத்தில்…

    1. Thanks a lot Hema. உன்னைப் போன்றவர்கள் படித்து எழுதும் கருத்துக்களே எனக்கு மேலும் எழுத ஊக்கம் தரும் மருந்து. நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *