ஒரு சிதைந்த வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 27, 2023
பார்வையிட்டோர்: 9,884 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

அல்சய்மர் என்னும் முதுமறதி வியாதியினால் கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கும் என் மனைவியை பார்க்கும்போது என் இதயம் உடைகிறது.

சில சமயம் வீட்டில் பாத்ரூம் எங்கே இருக்கிறது என்பதை கூட மறந்து விடுகிறாள்.

அத்தனை கஷ்டத்திலும் அவள் நல்ல நல்ல புத்தகங்களில் மனதை செலுத்துவதை பார்த்து சிறிதாக ஆறுதல் அடைகிறேன்.

அவள் படுக்கைக்கு அருகில் நாலைந்து புத்தகங்கள்.

ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்க்கிறேன்.

திவ்யா சுப்ரமண்யம் எழுதிய புகழ் பெற்ற நாவல்.

நான் கண்ணீரை அடக்கிக் கொள்கிறேன்.

அவள் தான் திவ்யா சுப்ரமண்யம்.

நஞ்சப்பன் ஈரோடு பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *