ஆடு! பாடு! அதோ…அவன் நாடு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,409 
 
 

முடமோசி . “விறலி! ஆய் என்று வாய் மணக்க மக்கள் கூறுகின்றனர். அவன் பெயரை நீ கேட்டிருக்கின்றாய் ஆனால் அவனை நீ பார்த்ததில்லை!

விறலி: “நான் பார்க்க வேண்டும்!”

முடமோசி: அப்படியானால் நேரே நடந்து போ. அதோ ஒரு மலை தெரிகிறது பார். அதன் வழியாக நடந்து போ…..

மலைக் காற்று வந்து நின் கூந்தலை (மயிரைக் கோதி விடும்… உன் செவியில் ஆய் பெயரை ஓதிவிடும்……

அணிமயில் போன்று அடி பெயர்த்து நடந்து செல்…… போ….. ஆயைப் பார்…. ஆ… பாடு…. அதோ அவன் நாடு!

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *