ஒரே பிரசவத்தில் மூன்று!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 13,202 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

எங்கள் வீட்டிற்கு நேர் பின் பக்கத்து வீட்டுப் பொன்னம்மாவுக்கு நிறைய சிநேகிதிகள். காலையில் இருந்து அவர்கள் வீட்டில் யாராவது வந்து விசாரித்துக் கொண்டே இருந்தார்கள்.

“ எப்ப பிரவம் ஆச்சு?…”

“ இன்று காலையில் தான்!…”

“ ஆச்சரியமா இருக்கே…. ஒரே பிரசவத்தில் மூன்றா?…..”

“ ஆமாம்! தேவி….எல்லாம் சுகப் பிரசவம்….மூன்றும் நல்லா இருக்கு!..”

“எத்தனை ஆண்?..எத்தனை பெண்?…”

“இரண்டு ஆண்!…ஒரு பெண்!…”

“ கொஞ்ச நாளைக்கு நிறைய பால் கொடுங்க!..”

“நீங்க சொல்லனுமா அக்கா!………….தேவையான அளவு கொடுத்துக் கொண்டுதானிருக்கிறேன்!…”

“ நிம்மிக்கு ஒரே பிரசவத்தில் மூன்று…..அதுவும் சுகப் பிரசவம் என்று கேட்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு!…”

“இதென்ன தேவி அதிசயம்?….எங்க பெரியப்பா வீட்டு ‘அம்மு’வுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்தாக்கும்!..”

அந்த நேரம் பார்த்து ‘வள்..வள்’ ‘கீச்…கீச்’ என்று சத்தம் வந்தது!

அப்பொழுது தான் பொன்னம்மா வீட்டு நாயை அவர்கள் ‘நிம்மி’ என்று கூப்பிடுவது என் நினைவுக்கு வந்தது!

– மார்ச் 2015

துடுப்பதி ரகுநாதன் கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *