வேலை..! – ஒரு பக்க கதை
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 13,144
இந்த பத்தாவது நேர்முகத்தேர்வு கலாட்டாதான். கேட்கிற கேள்விக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டி பதில்தான். உறவு, சிபாரிசு, பெரிய இடம்ன்னு ஆட்களைப் பொறுக்கி வைச்சுக்கிட்டு தேர்வை அரசாங்கத்தை ஏமாத்தற கண்துடைப்பு நாடகமாய் நடத்துறதுக்கு எதுக்குச் சரியான பதில்,பொறுப்பான பேச்சு ?!
இப்போ கல்லூரி வளாகத் தேர்வும் கழிசடையாய்ப் போச்சு.!
கம்பெனிக்காரங்க….மொதல்ல நல்ல கல்லூரிகளாய்ப் பார்த்து திறமையானவர்களைப் பொறுக்கி எடுத்துப் போனாங்க. அதை விளம்பரம் செய்து அந்த கல்லூரி காசு பார்த்தைப் பார்த்ததும்…அடுத்து உள்ள கல்லூரிகளெல்லாம் பசங்ககிட்ட வேலைக்குப் பணம் வாங்கி அதை கம்பெனிகளுக்கு கொடுத்து வரவழைச்சு அதிலும் திறமைக்கு பலன் இல்லாம செய்ஞ்சுட்டானுங்க.
………என்று மனதில் எரிமலை வெடிக்க புறப்பட்ட கபிலன் தேர்வில் கன்னா பின்னாவென்றுதான் பதில் சொன்னான்.
ஆனால்…. ”பிடிங்க வேலைக்கான உத்தரவு!” என்றதும்தான்…
”எப்படி சார்.??!” அதிர்ந்தான்.
”அது அப்படித்தான்!” என்றார் அவர்.
” ப்..புரியலை…!? ’’ கேட்டு குழம்பினான்.
” பதில்லேயே… உங்க கோபம் தெரியுது. நீங்க நேர்மையானவங்கதான். நீங்களும் திறமைசாலிதான். அதான் தேர்வு. ”
அவர் சொன்னார்.
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
யாரைத்தான் நம்புவதோ…?!
வளர்கவி
August 16, 2026
அலைபேசியும் அழுக்கு வேஷ்டி தாத்தாவும்
முனைவர் வெங்கடேஷ் கணபதி
August 16, 2026
கமலாவின் தோழிகள்!
ரகுராமன் சீனிவாசன்
August 13, 2026
