கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2025
பார்வையிட்டோர்: 4,277 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்போது எனக்கு அகவை பத்திருக்கும்.

நான் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தேன்.

“முத்தழகி முத்தழகி” என்று விளித்தவர் வேறு யாருமில்லை; என் தாய்தான். எனக்கு என் தாய் விளித் தது எரிச்சலாக இருந்தது. “ஏம்மா என்னைக் கூப்பி டுறீங்க? நான்தான் விளையாடிக்கிட்டிருக்கேனே…” என்று சொல்லியபடி கை. கால்களை உதறினேன்.

“அடம்பிடிக்காதேடி கண்ணு … விளையாண்டது போதும் வாடி…” என்று செல்லமாக அழைத்தார்.

நான் வேண்டா வெறுப்பாக என் தாய் நிற்கும் இடத்திற்குச் சென்றேன். என் தாய் என் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தார்.

“எப்போதும் வெளியில் போய் விளையாடாதேடி ஊரார் கண்ணிருக்கே அது பொல்லாதது. கல்லேறுக்குத் தப்பினாலும் கண்ணேறுக்குத் தப்ப முடியாதுடி” என்று சொல்லியபடி வரும்போதே தெரு மணலில் கொஞ்சம் அள்ளிக்கொண்டு வந்தார்.

வீட்டிற்கு வந்ததும் நேராகச் சமையற்கட்டிற்குள் சென்றார். கொஞ்சம் உப்பும், மிளகாயும் எடுத்தார். என்னை ஓர் இடத்தில் அமரச் சொன்னார். அமர்ந்ததும் மிளகாய், உப்பு, மணல் மூன்றையும் ஒன்று சேர்த்துத் திட்டிச் சுத்தினார். வலமிருந்து இடமாகவும், இட மிருந்து வலமாகவும் மூன்றுமுறை என் தலையைச் சுத்தி விட்டு மிளகாய், உப்பு, மணல் எல்லாற்றையும் அடுப்பில் போட்டார்!

உப்பு வெடித்தது. கருகிய மிளகாய்நெடி மூக்கைத் துளைத்தது. நெடிமூக்கில் ஏறியதும் நான் தும்மினேன்

“அடேயப்பா எவ்வளவு திட்டி இருந்திருக்கு” என்று என் தாய் சொன்னார்.

“ஏம்மா சூடத்தை ஒரு நாளைக்குச் சுத்துறீங்க. ஒரு நாளைக்கு மிளகாய், உப்பு, மணல் எல்லாஞ்சேத்துச் சுத்தி அடுப்பில் போடுறீங்களே ? இப்படி எல்லாம் செய் றது ஏம்மா ? எனக்குச் சுத்தியிருக்கும் மிளகாயையும், உப்பையும் சேர்த்து வைத்திருந்தா குறைந்தது ஒரு மூட்டையே இருக்குமே” என்று கேட்டேன்.

அது போனா போயிட்டுப் போகுது! நீ மட்டும் ஊரார் கண்ணில இருந்து தப்பினா அதுவே போதும்” என்றார் என் தாய்.

“அப்படினா?”

“அதுவா நீ மூக்கும் முழியுமா நல்லா இருக்கிறே. உன் நிறம் இருக்கிறதே இதைப்போல் இங்கே யாருக்கா கிலும் இருக்கா? யாருக்குமே இல்லே. எல்லாம் காக் காய்க் குஞ்சுகளைப்போல் இருக்குதுங்க. உன் நிறம் இருக்கே அது பொன்நிறம்டி கண்ணு!” என்று சொல்லி விட்டு இரண்டு கன்னங்களிலும் முத்தம் கொடுத்தார். முத்தம் கொடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார். “பூஞ் சிட்டைப்போல இருக்கும் உன்னைப் பார்த்து இந்த காக் கைக்குஞ்சுகளைப் பெற்ற காக்காய்களின் கண்கள் கொத் திடாமல் இருக்கத்தான் திட்டி சுத்துறேன்” என்றார்.

இப்படி எத்தனையோ நாட்கள்.

அப்போது நான் அழகாகத்தான் இருந்தேன். இரு பது அகவை (வயது) ஆகிய நான் இப்போதும் அழகா கத்தான் இருக்கிறேன். ஆனால்…?

என் தாய் இப்போது அவ்வளவாக வெளியில் அனுப் புவதே கிடையாது. என் அழகைப் பார்த்து எந்தக் கழுகாகிலும் கொத்திக்கிட்டு போயிடும் என்று நினைத் தோ, இல்லை என் அழகைப் பார்த்து உமிழ் நீர் குடித் தவர்கள் ஏளனமாகப் பேசுவார்களே என்று நினைத்தோ தெரியவில்லை. என் அழகைப் புகழ்ந்து பேசியவர்கள் இன்று எனக்கு ஏற்பட்ட அந்தச் சிறுகுறையை வைத்துக் கொண்டு ஏளனமாகப் பேசுகிறார்கள். ஏன்தான் இப்படி பேசுகிறார்களோ என்று எண்ணியபடி அமர்ந்திருந்தேன்.

அப்போது என் தாய் அங்கு வந்தார். வந்ததும் என் தலைமுடியைக் கோதிவிட்டார். முகத்தைப் பலமுறை தடவிவிட்டார். என் தாயின் கை என்னுடலைத் தீண்டிய தும் எனக்கு இனந்தெரியாத உணர்வு பிறந்தது, உடல் புல்லறித்துவிட்டது. குருதி புத்துணர்வு பெற்றதுபோல இருந்தது. எதையெதையோ நினைத்துக்கொண்டிருந்த என் மனம் குதூகலம் அடைந்தது.

நான் மகிழ்ச்சிமேலிட என் தாயைப் பார்த்தேன். என் தாயின் முகம் வாடிப்போய் இருந்தது. என் தாயின் கலையிழந்த முகத்தைப்பார்த்ததும் என் உள்ளக் கெலிப்பு இமைப் பொழுதில் மாறிவிட்டது. உடல் சேர்ந்து விட்டது.

“அம்மா ஏம்மா ஒருவகையா எதையோ பறி கொடுத்ததைப்போல இருக்கிறீங்க?” என்று கேட்டேன்.

என் நெஞ்சில் இருந்த என் தாயின் கைவிரல்கள் குளிரால் நடுங்குவதுபோல் நடுங்கின. உதடுகள் படபடத் தன. கண்கள் கடலை நினைவு கூர்ந்தன.

“அம்மா… ஏம்மா… அழுகிறீங்க?” என்று இரக்கந் தொனிக்கக் கேட்டேன்.

“முத்தழகி உனக்கு…” என் தாயால் அதற்குமேல் சொல்ல நா எழவில்லை. கண்கள் தரையை நோக்கின. முன்றானையை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு அழு கையை அடக்கிக்கொண்டார்.

“அம்மா… அம்மா…” என்று அழைத்தபடி கன்னங் களில் கைகளை வைத்து முகத்தை ஏந்தினேன். என் தாயின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீர் என் விரல்களை நனைத்துக்கொண்டிருந்தது. என் முன்றானையால் தாயின் கண்ணீரைத் துடைத்தேன். என் தாய் அழுவதைப் பார்த்து என் மனம் தாழவில்லை. பார்த்ததும் என்னையறி யாமலே கண்ணீர் சொரிந்தேன். என் தாய் தன் வாயில் திணித்து வைத்திருந்த முன்றானையை எடுத்து என் கண் ணீரைத் துடைத்துவிட்டார்.

“அம்மா நீங்க ஏம்மா அழறீங்க?” கெஞ்சிக் கேட்டேன்.

“….”

வாய் திறக்காமல் என்னை வாஞ்சையோடு பார்த்தார்.

நான் மீண்டும், “அம்மா நீங்க என்னை நினைத்துத் தானே அழறீங்க?” என்று கேட்டேன்.

என் தாய் தன் தொண்டைக் கரகரப்பைப்போக்கிக் கொண்டு, “ஆமாடி கண்ணு அதை நினைக்கும்போது என் நெஞ்சமே வேகுதடி. உன் அழகுக்கு இப்படியொரு நிலை ஏற்படும் என்று நினைக்கலேடி! அகவை இருபது ஆகியும் இன்னும் நீ…” அதற்குமேல் சொல்ல நா எழாமல் சொல்ல வந்ததை நிறுத்திக்கொண்டார்.

“அதற்கு என்னம்மா செய்யமுடியும்? சிலருக்கு இரு பது இருபத்தோர் அகவைக்கு மேலேதான் ஏற்படும் என்று பெரியவங்க சொல்லுறதா நீங்கதானே சொன் னீங்க! அப்படிச் சொல்லிய நீங்களே இப்போது எதை யெதையோ நினைத்து நினைத்து ஏம்மா அழறீங்க?” என்று ஆறுதல் மேலிடக் கேட்டேன்.

“இல்லேடி உன் வயசுப் பொண்ணுகளெல்லாம் பிள்ளையைக் குட்டியைப் பெத்துக்கிட்டு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கிறாங்க பார்த்தியா?”

“அதுக்கு என்னம்மா செய்யுறது?”

”ம்… நம்ம கையிலா இருக்கு, அன்று எழுதியவன் எப்படி எழுதியிருக்கிறானோ அப்படித்தானே நடக்கும்?” என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டார். அந்த மூச்சு வீட்டு முகட்டையே தூக்கிக்கொண்டு பறந்து விடுவது போல இருந்தது.

“இதுக்கு நீங்க ஏம்மா கவலைப்படுறீங்க?”

“உனக்கு என்ன தெரியும். எங்களுக்கும் தள்ளாத காலம் வந்துவிட்டது. காடு வாவா என்றும் வீடு போ போ என்றும் சொல்லுற இந்த வயதிலே உன் கழுத்தில் தாலி ஏறுவதையும், நீ உன் கணவன் வீட்டில் நீ இன்ப மாக வாழ்வதைப் பார்க்க வேண்டும் என்றும், உன் வயிற்றில் பிறந்த பிள்ளையிடம் கொஞ்சிக் குலாவ வேண் டும் என்றும் ஆசையாக இருக்காதா ?” என்று தாயார் தன் உள்ளத்தில் உள்ள ஆசையை வெளியிட்டார்.

“திருமணம் பிள்ளை குட்டி” என்று என் தாய் சொல்லியது எனக்கு வேம்பாகக் கசந்தது. திருமணஞ் செய்துகொண்டு ஆணுக்கு அடிமையாக இருப்பதா சேச்சே கூடவே கூடாது. பிள்ளையைப் பெற்றுக் கொண்டு இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும் தொல்லைப்படுவதா கூடவே கூடாது. உரிமையோடு வாழவேண்டும் என்று எண்ணியபடி அமர்ந்திருந்தேன்.

“என்னடி பேசாமல் இருக்கிறே” என்றார் என் தாய்.

“ஒண்ணுமில்லேம்மா”

“வயது ஏறிக்கிட்டே போகிறதே இருபதாச்சே என்று கவலைப்படுகிறாயா, ம்… கவலைப் படாமல் இரு. இன்னும் இரண்டு மூன்று மாதத்திற்குள் பூப்பெய்திடு வேணு கணிகர் சொல்லியிருக்கிறார்” என்றார் என் தாய்.

நான் இன்னும் பூப்படையாதது குறித்துத்தான் கவலைப்படுகிறேன் என்று என் தாய் நினைத்துக்கொண்டி ருந்தார். ஆனால்… நான்?

“ம்… என்னடி நான் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிக்கிட்டிருக்கேன் நீ பாட்டுக்குப் பேசாமல் இருக்கிறே”

“அம்மா அம்மா… மாவுக்கு வழியே இல்லேங்கிற போது நீங்க ஆப்பத்துக்குத் துடிக்கிறீங்களே. எப்படி யாகிலும் என்னைப் பிடித்து யாருக்காகிலும் அடிமை யாக்கிவிட வேண்டும் அப்படித்தானே” நான் சற்று உணர்ச்சி மேலிடச் சொற்களை அள்ளிக்கொட்டினேன்.

“நல்லா இருக்குடி உன் பேச்சு. ஏண்டி திருமணம் செய்துகொள்வது அடிமைத்தனமாடி. அதில் இருக்கிற இன்பம் இருக்கே அது உனக்குத் தெரியுமாடி. கணவ னுக்கு அடிமையப் போல பணிவிடை செய்வதில்தாண்டி பேரின்பமே இருக்கு” என்று பெருமையாக அளந்தார்.

“உங்களுக்கு அடிமைத்தனம் கூடவே பிறந்துவிட்ட தம்மா. ஆணுக்குப் பெண் எந்த வகையிலும் இளைத்த வள் இல்லை” என்று உரிமைக்குரல் எழுப்பினேன்.

“ம்… நீயாடி பேசுறே. உன் படிப்புடி பேசுகிறது. சரி சரி உனக்கிட்டே என்னால் பேசமுடியாது எனக்கு வேலையிருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

நான் என் தாயைப் பார்த்தபடியே இருந்தேன். என் தாய் கருநாடகப்பாணியில் பேசிவிட்டு போனதை நினைக்கும்போது சிரிப்பாக இருந்தது. எல்லாவற்றையும் விட என் தாய் கொசுவம் போட்டு புடவை கட்டியிருந்த தைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. என்தாய் தலை மறைந்ததும் செய்தித்தாளை எடுத் தேன். பக்கங்களைப் புரட்டினேன். உள்பக்கத்தில் உள்ள செய்தி என் கண்களில் பட்டது ‘படித்தேன். அச்செய்தி எனக்குப் படித்தேனாகவே இனித்தது. கருத்தூன்றிப் படித்தேன் எனக்கு அது சிறந்த கருத்தாகப்பட்டது. அந்தச் செய்தியில் உள்ளதைப்போல் செய்துகொள்ள என் மனம் துடித்தது.

உடனே செய்தித்தாளை மேசைமீது போட்டுவிட்டு என் அறைக்குள் சென்றேன். புடவை உடுத்திப் பொட் டிட்டுக்கொண்டு என் தோற்றத்தை நானே நிலைக் கண் ணாடியில் பலமுறை பார்த்தேன். என் அழகைத்தான் நான் பலமுறை பார்த்தேன். பார்த்துச் சிரித்துக்கொண்டேன்.

பிறகு அங்கிருந்து என் தாயார் இருக்குமிடத்திற்கு வந்தேன்.

“அம்மா”

“என்னடி?”

“அம்மா நான் வெளியில் போகப்போகிறேன்”

“வெளியவா? ஊகூம் கூடாது”

“ஏம்மா?”

“ஏனா? ஏண்டி இப்படிக்கேக்கிறே. ஊரு கிடக்கிற கிடை உனக்குத் தெரியாதா?” அதோட இந்த நிலையில் போனா ஊரார் பலவாறு வாய்க்கு வந்தபடி பேசுவாங்கடி”

ஊரார் ஏதாகிலும் உளறிக்கிட்டுதாம்மா இருப் பாங்க. அதுக்குப் பயந்து கொண்டிருந்தா முடியுமா? நான் கட்டாயம் போகத்தான் வேண்டும்”

“எங்கேடி அப்படிக் கட்டாயம் போகவேண்டும்?”

“அம்மா எனக்கு அகவை இருபதுக்குமேலே ஆகிவிட்டதா என்ன?”

“ஆமா அதுக்கு…?”

“அதனாலே மருத்துவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்ட நிலையை எடுத்துச்சொல்லி காரணம் கேட்டுகிட்டு வரப்போகிறேன்” என்று மனத்தில் நினைத்துள்ளதற்கு மாறாகக் கூறினேன். என் மனத்திலுள்ள அந்த உண் மையை மட்டும் என் தாயிடம் சொல்லவில்லை.

என் உள்நோக்கத்தை அறியாத என் தாய், “அப்பா வரட்டுமே. அவர் வந்ததும் உன்னை அழைச்சுக்கிட்டுப் போகச் சொல்றேன்” என்றார் வெள்ளை உள்ளத்தோடு.

“அப்பாவும் வரவேண்டாம், நீங்களும் வரவேண் டாம். நானே போய் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு வந்துவிடு கிறேன். நானென்ன சின்னப் பிள்ளையா? துணைக்கு ஆள் கூட்டிக்கிட்டுப்போக. உங்களுக்கு ஏம்மா வீண் அலைச்சல். காசும்வேறு செலவு. என்று சொல்லிவிட்டு நடந்தேன். “நீ சொல்வது என்னமோ சரிதான். இருந்தாலும் எனக்கு என்னமோபோல் இருக்குது. அதுசரி இருந்தது இருந் தாற்போல் அப்படி என்னடி நினைச்சுக்கிட்டே?”

“காலம் வரும்போது, எல்லாம் தானாக வரும் என்று நீங்கதானே சொன்னீங்க”

“ம்… அதுவும் சரிதான் போனோம் வந்தோம் என்று சுருக்கா வந்திரு”

“சரிம்மா…”

மருத்துவமனையை நோக்கி விரைந்தேன்.

ஊட்ரம் சாலை பொது மருத்துவமனை

நான் என் பெயரைப் பதிவு செய்துவிட்டு அங்கு போடப்பட்டிருந்த விசிப் பலகையில் அமர்ந்திருந்தேன்.

அழைப்பு வந்ததும் மருத்துவர் அறைக்குள் சென்றேன்.

பெண் மருத்துவர்தான் உள்ளே இருந்தார். என்னி டம் பல கேள்விகளைக் கேட்டார். பெண் மருத்துவரிடம் சொல்வதற்கு என்ன வெட்கம் இருக்கிறது. அவர் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமாக விடையளித்தேன்.

சற்று நேரத்திற்குள் மற்றும் நான்கு மருத்துவர்கள் வந்துவிட்டனர். என் உடலை நீண்ட நேரம் பலவகை மருத்துவக் கருவிகளால் சோதனைசெய்து பார்த்தனர். அவர்களின் மருத்துவ ஆய்வு முடிய அரைமணி நேரம் ஆகிவிட்டது.

ஆய்வுமுடிந்ததும் மருத்துவர் ஒருவர், “சிறு அறுவை மருத்துவந்தான் செய்யவேண்டும். அறுவை மருத்துவம் சிறிதுதான் என்றாலும் நீங்கள் மருத்துவமனையில் குறைந் தது ஒரு கிழமையாகிலும் தங்கியிருக்கவேண்டும். என்றார்.

எனக்குத் தாங்கமுடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த மகிழ்ச்சியில் “சரியென்றேன்’

பிறகு நான் வரவேண்டிய நாளை ஒரு சீட்டில் எழு திக்கொடுத்தனர். நான் அச்சீட்டைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு விரைந்தேன்.

நாட்கள் பல உருண்டன. குறிப்பிட்ட நாளும் வந்து விட்டது.

நான் குறிப்பிட்ட நேரப்படி மருத்துவமனைக்குச் சென்றேன்.

சற்று நேரத்திற்குள் என்னை அறுவை மருத்துவ அறைக்கு அழைத்துச் சென்றனர். உள்ளே சென்றதும் சிறிது அச்சமாகத்தான் இருந்தது. அச்சத்தோடு அங் குள்ள அறுவை மருத்துவக் கருவிகளைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தேன். தலைமைத் தாதி என்னை அங்கு கிடந்த படுக்கையில் படுக்குமாறு பணித்தாள். நான் படுத்து ஐந்து நிமையங்களுக்குள் கையில் ஊசி மருந்து செலுத்தப்பட்டது. அது மயக்க ஊசிதான்.

அதன்பின் … ஒன் று மே…


“சுருக் சுருக்” என்று வலி எடுத்தது. நான் மெல்ல எழுந்திருக்க முயன்றேன். முடியவில்லை. மெல்லக் கண் விழித்துப் பார்த்தேன். பல படுக்கைகளுக்கு நடுவில் என் படுக்கைக் கிடந்ததைப் பார்க்கும்போதுதான் அறுவை மருத்துவம் முடிந்துவிட்டது என்று யூகித்துக் கொண்டேன்.

மறுநாள். என் பெற்றோர்கள் என்னைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

“அறுவை மருத்துவம் முடிந்துவிட்டதா முத்தழகி” என் தந்தைதான் இப்படிக் கேட்டார்!

நான், “முடிந்துவிட்டதப்பா, இன்றைக்குக் கொஞ் சம்கூட வலியே இல்லை” என்றேன்.

என் தாயார் என் கன்னத்தைத் தடவிவிட்டபடி கூர்ந்து என் முகத்தை நோக்கினார். அவர் முகம் மலர்ந்தி ருந்தது. ‘நான் பூப்பெய்தி விட்டேன்’ என்று என் தாய் நினைத்ததை அம்முகமலர்ச்சி சொல்லாமல் சொல்லியது. என் தாய்க்குத்தான் எத்துனை மகிழ்ச்சி. சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டிற்குச் செல்லும்போது என் தந்தையிடம் இருபது வெள்ளி கேட்டேன். அவர் “ஏன்” என்றார். “ஏதாகிலும் செலவுக்குத்தான்” என் றேன்.

“இந்தா” என்று இரண்டு சிவப்புத்தாள்களை எடுத் துக் கொடுத்தார். நான் வாங்கிக்கொண்டேன்.

அன்று மாலையே அங்கு பணிபுரியும் தாதியிடம் இரு பது வெள்ளியையும் கொடுத்து, “எனக்குக் கொஞ்சம் உதவி செய்யவேண்டும்” என்றேன். அவள் “என்ன” என்று கேட்டாள்.

“துணி மணி…” அதற்குமேல் வெளிப்படையாகச் சொல்வதற்கு என்னவோபோல் இருந்தது. காதோடு காதாக அவளிடம் சொல்ல நினைத்ததைச் சொன்னேன்.

அவள் சிரித்தபடி இருபது வெள்ளியையும் வாங்கிக் கொண்டாள்.

நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன்.

நாட்கள் நகர்ந்தன. பெற்றோர்களும், உற்றார் உற வினர்களும், நண்பர்களும் பலமுறை வந்து பார்த்து விட்டுச் சென்றனர்.

ஆறாம் நாள் மாலை.

மாலை வேளைக்கு வந்த தாதி எனக்காக தைக்கக் கொடுத்திருந்த துணிமணிகளை வாங்கிக்கொண்டு வந்தி ருந்தாள்.நான் அவற்றை வாங்கிப் பார்த்துவிட்டு என் அலமாரிப் பெட்டியில் வைத்துக்கொண்டேன். தாதி என்னைப் பார்த்துச் சிரித்தாள். நானும் சிரித்தபடி ‘நன்றி’ என்றேன்.

அவள், “அதற்கென்ன” என்று சொல்லிவிட்டு போய் விட்டாள். நான் இன்றையப் பொழுது எப்படிப் போகுமோ என்று எண்ணியபடி என் எதிர்கால கற்பனை உலகில் மூழ்கினேன்.

மறுநாள்! ஏழாம் நாள்! அன்றுதான் பெயர் வெட் டும் நாள். விடிந்துவிட்டது.

நான் எனக்கு நல்வாழ்வு பிறந்துவிட்டது எனும் மகிழ்ச்சியில் அமர்ந்திருந்தேன்.

மணி ஒன்பதாகியது. மருத்துவர்கள் வந்துவிட்ட னர். என்னை அழைத்து நீண்ட நேரம் பரிசோதனை செய்துவிட்டுச் சிரித்தனர். நானும் அவர்கள் மகிழ்ச்சி யில் கலந்துகொண்டேன். என்றாலும் அவர்கள் அடைந்த இன்பத்தைவிட நான்தான் பன்மடங்கு உவகையடைந் தேன். அந்த ஆய்வு அறை முழுதும் சிரிப்பொலி நீக்கமற நிறைந்திருந்தது.

மருத்துவர் சான்றிதழை எடுத்தார். அதில் என் பெயரை எழுதும்போது பார்த்துக் கொண்டிருந்தேன். பெயரில் கடைசி எழுத்து மாற்றப்பட்டிருந்தது.

பிறகு அந்தச் சான்றிதழை அவரிடமிருந்து வாங் கிக் கொண்டு உடைமாற்றச் சென்றேன். மாற்றிக் கொண்டு வெளியில் வந்தேன். நான் படிக்கட்டில் இறங் கும்போது என்னைப் பார்த்துத் தாதியர் சிரித்தனர். சிலர் ஏறஇறங்கப் பார்த்துவிட்டுச் சிரித்தபடி கைகாட்டி விடையளித்தனர். நானும் சிரித்தபடி விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு விரைந்தேன்.

“அம்மா”

என் தாய் திரும்பிப் பார்த்தார். என்னைப் பார்த்த தும் என் தாயின் கருமணி விழிகளை இமைகள் மறைக் கத் தயங்கின. இமைகொட்டாது என்னையே பார்த்தார்.

“என்னம்மா அப்படிப் பார்க்கிறீங்க?” என்று கேட்டேன்.

அதற்கும் என் தாய் பேசாமல் என்னைக் கூர்ந்து நோக்கியபடியே இருந்தார். சற்று என்னைக் கூர்ந்து நோக்கி விட்டு, “நீ.. நீ.” அவர் குரலில் வியப்பு தொனித்தது.

“நான்தாம்மா”

“நீயா?” வியப்புடன் கேட்டார்.

“ஆமம்மா”

“முத்தழகியா நீ?”

நான் சிரித்தபடி, “இப்போது என் பெயர் முத்தழகி இல்லேம்மா?” என்றேன்

“என்னடி சொல்கிறாய்?”

“முத்தழகி என்ற பெயரை மருத்துவர் முத்தழகன் என்று மாற்றிவிட்டாரம்மா! இனிமேல் நான் உங்களுக்கு மகள் இல்லை, மகன்! இதோ அடையாள அட்டை யில் பெயர் மாற்றுவதற்கு சான்றிதழும் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லியபடி மருத்துவர் கொடுத்த சான்றிதழை நீட்டினேன்.

“அப்படியா?” வாயைப் பிளந்தார்.

“ஆமம்மா” சிரித்தபடி சொன்னேன்.

“இதென்னடி காலம்?” தாடையில் கைவைத்தபடி என்னைப் பார்த்துக்கொண்டு நின்றார்.

“எல்லாம் அறிவியலின் முன்னேற்றம்மா” என்றேன் நான்.

இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். என் தாயா ருக்கு நான் ஆணாக மாறியதில் கொஞ்சம் மனவருத்தம். இருந்தாலும் நான் அமைதியாக எடுத்துச் சொல்லி அவர் வருத்தத்தை மாற்றிவிட்டேன்.

சற்று நேரங்கழித்து வேலைக்குச் சென்றிருந்த என் தந்தையும் வந்துவிட்டார். செய்தியறிந்ததும் ஆத்திர மடைந்தார். என் தாயார் தயவால் என் தந்தையின் சினத்தைப் படிப்படியாக மாற்றிவிட்டேன்.

நாட்கள் மாதங்களாக மலர்ந்தன. நான் அடையாள அட்டையில் என் பெயரை மாற்றிக்கொண்டேன்.

இப்போது நான் ஆண்! என் பெயர் முத்தழகன். எங்கும் எக்கூச்சமுமின்றி சென்று வந்தேன். அடிமை யைப்போல் அடுப்படியில் கிடந்த எனக்கு உரிமை கிடைத்துவிட்டதில் பெருமகிழ்ச்சி. ஆனால் என் முன்னாள் தோழியர்களிடம் பேசுவதற்கு எனக்கென்னவோ கூச்ச மாகத்தான் இருந்தது. என்னைப் பார்க்கப் – பேச அவர் களும் வெட்கப்பட்டனர். முன்னாள் எங்களுக்குள்ள நெருங்கிய தொடர்பு இப்போதில்லை. இனி அவர்கள் பழக்கம் தேவையும் இல்லை என்று எண்ணியிருந்தேன்.

என் இனமான ஆண்களுடன் சேர்ந்து கொண்டேன். எனக்கு இப்போது நண்பர் பலர் இருக்கின்றனர். அவர் களின் பரிந்துரையின் பேரில் செம்பலாங் கப்பல் கட்டும் துறையில் வேலைக்கும் அமர்ந்துவிட்டேன். சம்பளம் நூற்றைம்பது வெள்ளி.

வேலைக்குச்சென்று பல நாட்கள் ஓடின.

அன்று கொதிகலனுக்குப் பக்கத்தில் வேலை செய்ய வேண்டியிருந்தது. ஒரே சூடு சூட்டிற்குப் பக்கத்தில் நின்றுதான் வேலை செய்தேன் வேலையும் கடுமையாக இருந்தது. என்னால் சூட்டைத் தாங்கிக்கொண்டு வேலை செய்ய முடியவில்லை. வியர்த்துவேறு கொட்டியது களைத் துப்போன நான் ஒதுக்குப்புறமாகப் போய் அமர்ந்தேன். அப்போது வேகாத வெயிலில் நின்று சாலை வெட்டும் தொழிலாளர்களையும், சாலைக்கு கீழ் (தார்) போடும் தொழிலாளர்களையும், மின்வடம் போடும் தொழிலாளர் களையும் நினைத்துப் பார்த்தேன். வாயால் சொல்வது எளிது; ஆனால் செய்துபார்த்தால்தான் அதன் அருமை பெருமை தெரியும் என்று பெரியவர்கள் சொல்வது உண்மை என்று அப்போதுதான் எனக்குப் புரிந்தது. ஆணாகப் பிறப்பதைவிட பெண்ணாகப் பிறந்துவிடலாம் என்று ஆடவர்கள் பலர் சொல்லியதையும் நினைவுகூர்ந்து பார்த்தேன். இவற்றில்தான் எத்துணை உண்மை இருக் கிறது.

நான் வேலைக்கு வந்தபிறகு ஒவ்வோர் ஆணும் தத் தம் குடும்பத்தைக் கட்டிக் காப்பதற்குச் செய்யும் முயற் சியும், அதற்காகக் களைப்பையும், உணவு, உறக்கத்தை யும் பொருட்படுத்தாமல் கூடுதல்நேர வேலை செய்வதை யும் தெரிந்தபிறகு பெண்ணாகப் பிறப்பதே மேல் என்று தோன்றியது. ஆண்களுக்குத்தான் எத்தனையெத்தனை கவலை!

இப்படி எண்ணிக்கொண்டிருக்கும்போது கண்காணி வந்துவிட்டார்.

“என்னடா முத்தழகா ஏன் உட்கார்ந்திருக்கே? இதென்ன வீடா இல்லை வேலைசெய்யும் இடமா? ம்… போய் வேலையைப் பாருடா” என்று அதிகாரம் தொனிக்கச் சொன்னார்.

வேலைக்காரன் கண்காணியிடம் எதிர்த்தா பேசமுடியும். உடனே எழுந்து வேலையைச் செய்தேன்.

அன்றைப் பொழுது எப்படியோ ஓடிவிட்டது. களைத்துப்போய் வீட்டிற்குவந்தேன். வந்ததும் வியர்வை யால் நனைந்து சாம்பல் பூத்துப்போன சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு குளிக்கச் சென்றேன். குளித்து முழுகிவிட்டு தலை சீவிக்கொள்வதற்கு நிலைக் கண்ணாடி முன்போய் நின்றேன். என் முகத்தை என்னாலேயே பார்க்க சகிக்கவில்லை. கருப்பேறிப்போய் இருந்தது. கதிர வனின் திருவிளையாடல்தான் அது. சோகமாக மீண்டும் கண்ணாடியைப் பார்த்தேன். அன்றொரு நாள் செய்தித் தாளைப்பார்த்துவிட்டு மருத்துவமனைக்குப் போனபோது நான் உடுத்திக்கொண்டு கண்ணாடியில் பார்த்த அதே உருவம் என்னைப் பார்த்துச் சிரித்தது. அந்தப் பெண் உருவம் என்னைப் பார்த்துச் சிரிப்பது என்னைப் பகடி செய்வதுபோல் இருந்தது. நான் வெட்கத்தோடு அங் கிருந்து அகன்றேன். மீண்டும் பெண்ணாக மாறிவிடுவது தான் நல்லது என்று என் உள்மனம் சொல்லியது.

இரவு மணி ஒன்பதாகிவிட்டது. நான் சாப்பிட்டு விட்டுப் படுக்கச் சென்றேன். உடம்பெல்லாம் புண்ணைப் போல் வலித்தது. உடல் சோர்ந்து வந்தது. கண்ணைக் கொண்டு போய்வேறு செருகியது. நான் அசதியில் தூங்கிவிட்டேன்.

இசை ஒலி. அது முடிந்ததும் “காலை மணி ஐந்து, சிங்கப்பூர் வானொலி…” இதைச் செவிமடுத்தும் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமல் புரண்டு படுத்தேன்.

கொக்கரக்கோ எங்கள் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள சந்தைக் கடையிலுள்ள கோழிக் கூண்டிலிருந்துதான் இந்த ஒலிகேட்டது. நேரத்தைக் காலந்தவறாமல் உண ரும் கோழி இன்று அறுக்கப்பட்டாலும்படும் என்பதை உணராமல் கூவியது. நான் உடம்பு வலியோடு மீண்டும் புரண்டு படுத்தேன்.

“முத்தழகா முத்தழகா” என் தாயார்தான் விளித்தார்.

என் தாயின் குரல் கேட்டும் என்னால் எழுந்திருக்க முடியவில்லை.

“வேலைக்குப் போக மணியாச்சு எழுந்திரு” என்று சொல்லியதும் என் காதில் விழுந்தது. அதை வாங்கிக் காதில் போட்டுக்கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தேன். என் மனம் ஆணாகக் பிறந்த ஒவ்வொருவருக்கும் இப்படித்தான் உடம்பு வலிக்குமோ என்று எண்ணியது.

சற்று நேரம் படுத்துக்கிடந்துவிட்டு எழுந்தேன். குளித்து முழுகிவிட்டு பசியாறினேன். பசியாறிவிட்டு நேராக மருத்துவமனைக்கு விரைந்து சென்றேன்.

எனக்கு ஏற்பட்ட மனமாற்றத்தை மருத்துவரிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னேன். மருத்துவர் நான் சொன்னவற்றை கவனமாகச் செவிமடுத்துக்கொண்டி ருந்துவிட்டு, “இப்போது நீங்கள் பெண்ணாக மாற ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் ஆசைப்படுவது சரியாக இருக்கலாம், அது உங்கள் உரிமையும்கூட. ஆனால் பெண்ணாக மாற்ற உங்கள் உடலமைப்பு ஏற்புடையதாக இல்லை. முதலில் உங்களை ஆணாக மாற்றினோம் என்றால் அப்போது உங்கள் உடம்பு ஆணாக மாறுவதற்கு வேண்டிய அத்தனை அறிகுறிகளையும் பெற்றிருந்தது. அதனால் தான் மாற்றவும் முடிந்தது. இனிமேல் நீங்கள் பெண்ணாக மாறுவது என்பது இயலாத ஒன்று. இயற்கையின் ஒத்துழைப்பு இல்லாமல் உங்களை எப்படி பெண்ணாக மாற்றமுடியும்? முடியாததற்குத் தயவு செய்து மன்னித்து விடுங்கள்” என்று வருத்தம் மேலிடச் சொன்னார்.

நான் அதைச் செவிமடுத்ததும் அதிர்ச்சியடைந்தேன். எப்படியோ என்னையறியாமலே மருத்துவருக்கு “நன்றி” சொல்லிவிட்டு தொங்கிய முகத்துடன் வெளியில் வந்தேன். அன்று என்னைப் பார்த்துச் சிரித்த தாதியர் இன்று என்னை இரக்கத்தோடு பார்த்துக்கொண்டு நின்றனர்.

– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *