கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 10, 2025
பார்வையிட்டோர்: 14,769 
 
 

ஹலோ அண்ணே பஸ் ஸ்டாப்க்கு வர போகுது என்னய கூட்டிட்டு போக வரியா என கேட்க வரேன் என்கிறான் சத்யா.  அண்ணே சொல்லு அனிதா கடைக்கு போணும் காசு எடுத்துட்டு வா என சொல்லிவிட்டு போனை வைக்கிறாள்.  சத்யா காசை எடுத்துக்கொண்டு அனிதாவை அழைக்க பைக்கில் செல்கிறான், பஸ் வர அவனும் சரியாக வந்துவிட்டான்.  எங்க போணும் என கேட்க சூப்பர் மார்க்கெட் போணும் என்கிறாள்.  சரி என வண்டி சூப்பர் மார்க்கெட் பக்கம் செல்ல நீ போய் வாங்கிட்டு வா நா இங்கயே வெயிட் பண்றேன் என்கிறான். 

அவளும் சென்று தேவையானதை வாங்கி விட்டு  வந்தாள்.  போலாமா? என கேட்கிறான். இல்ல அண்ணே  இன்னும் ஒன்னு வாங்கணும் அது இங்க இல்ல பக்கத்து தெருவுல இருக்க கடைக்கு போணும் என்கிறாள்.  அவனும் சரி வா என அழைத்துக் கொண்டு செல்கிறான். அங்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். 

ரோடு கிராஸ் பண்ணும் பொழுது வண்டி வருகிறதா என பார்க்க நிமிர்ந்தவள் சத்யாவை பார்க்க அவனும் அவளை பார்க்கிறான். கடந்த பிறகும் கூட அவளை கண்ணாடி வழியாக பார்க்கிறான்.  வீட்டுக்கு வந்து விட்டனர்.  

அவளது அந்த பார்வை அவனை ஏதோ செய்கிறது, அதையே நினைத்துக் கொண்டு இருக்கிறான்.  மறுநாள் நாம வீட்டுக்கு வரப்ப அஞ்சு மணி ஆச்சு ஒருவேளை முன்னாடியே வந்துட்டா என்ன பண்றது என்று யோசித்தவன்  அவ்விடத்திற்கு நாலுமணிக்கெல்லாம்  போய் நின்று விட்டான்.  

வெயிட் பண்ணிட்டே இருக்கான் நாலு அரை ஆச்சு அஞ்சு ஆச்சு ஆறு ஆச்சு வரல போகலாம் என கிளம்பிட்டான்.  அவ வந்தா கூடயே ஒரு பொண்ணும் வந்தா இவன் வேகமா அவ முன்னாடி போய் நின்னான். ஒரு நிமிஷம் உங்க கிட்ட பேசணும் குறுக்க ஏதும் பேசாதீங்க. 

நா நேத்து உங்கள ரோடு கிராஸ் பண்றப்ப பாத்தேன். உங்க பார்வை இருக்கே சத்தியமா சொல்றேன் மயங்கிட்டேன். அப்படி ஒரு மேஜிக் உங்க பார்வைக்கு, நேத்து முழுக்க அதே நெனப்பு தான்.   

நீங்க என்ன பாத்திங்களான்னு எனக்கு தெரியல, மத்தபடி இது லவ் இல்ல. உங்க பின்னாடி சுத்தல. உங்க கிட்ட சொல்லணும்ன்னு தோணுச்சு சொல்லிட்டேன் அவ்ளோதான். மத்தபடி எதும் இல்ல, வரேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான். 

அவன் என்ன சொன்னான் டி என ஜாடையில் கூட வந்தவளிடம் கேட்கிறாள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *