முள்முடி மன்னர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2025
பார்வையிட்டோர்: 316 
 
 

(1991ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10

“எங்கள் தெருவால், எங்கள் ஒழுங்கையால்
நாங்கள் போக முடியாமல் இருக்கிறது. என்ற
சிந்தனை எழுந்தது. இராணுவ முகாமுக்கு
முகாம் தறிபட்டுப் போய் இருக்கும் 
தென்னை மரங்களையும், பனை மரங்களையும்
நினைத்தான்’ 

இரவு அமைதியாக இருந்தது. நிலவுக்கதிர்கள் மாமர இலைகளை தழுவிக்கொண்டு தரையைத் தொட்டன. நிலவு பிரகாசிக்கும் வானமும், நட்சத்திரங்களும் அந்த வேளையில் மனதுக்கு திருப்தியைக் கொடுத்தன. 

சாய்மனைக் கதிரையில் படுத்திருந்த ஞானரூபன் நில வொளியில் வெள்ளிகளாய் பளபளத்த இலைகளைப் பார்த்தபடி இருந்தான். தூரத்தில் சிறுகுழந்தை ஒன்றின் அழுகுரல் மட்டும் கேட்டது. 

மாலை தணிந்துதயங்கித் தயங்கி இருள் கவியும் நேரம் ஞானரூபன் அடிமேல் அடிஎடுத்து வைத்து வெளியே வந்தி ருந்தான். இப்போது ஓரளவு அவனால் நடக்கக் கூடியதாக இருந்தது. 

ஏற்கனவே ஐயா மாமர நிழலில் படுத்திருந்த சாய் மனைக் கதிரை இப்போது வெறுமையாக இருந்தது. அறையினுள் இருந்த போது தனிமையும், இருளும் அவனுக்குள் சலிப்பை ஏற்படுத்தியிருந்தன. 

ரம்மியமான மாலை நேரத்து மயக்கத்தால் அவனுள் எழுந்த கிளர்ச்சி காரணமாக அவன் தளிர்நடை பயின்று படியிறங்கினான். குசினிவாசலில் நின்ற அம்மா ஒடி வந்தாள். 

“ஏன், என்னடா தம்பி செய்யப் போறாய்” 

“ஒண்டு மில்லை. அதிலை படுக்கப் போறன்,” 

“சரி – சரி – வா” என்றபடி அம்மா அவனுக்கு துணை யாக வந்தாள் சாய்மனைக் கதிரையில் படுக்க உதவி செய்து ‘பனி தொடங்கப் போகுது. கெதியில் உள்ளுக்குப் போக வேணும் என்று சொல்லிவிட்டு பழையபடி குசினிக் குள் போய் விட்டாள். 

பௌர்ணமிதினமான அன்றையதினம் இருளின் பின்ன ணியில் எட்டிப்பார்த்த நிலவில் தன்னை மறந்த நிலையில், வெகுநேரம் இயற்கையுடன் ஒன்றிப் போய் விட்டான். 

திடீர் என அவனை சுயநிலைக்கு கொண்டு வந்தவள் அம்மா தான். 

“தம்பி ஞானம் பனிசாடையாய் தொடங்கி விட்ட தெடா” என்று குசினி வாசலில் நின்று சத்தம் போட்டாள். ‘ம்'” என்று தான் பதில் சொன்னான். ஞானரூபன். ஆனால் எழும்புவதற்கு மனம் வரவில்லை. 

நிலவு வேலிக் கரையோரமாக நின்ற தென்னை மரத்தின் மேலாக பூரிப்புடன் எட்டிப் பார்த்தது. அம்மா பழையபடி ”பனி” பற்றி சொல்லத் தலைப்பட்டாள். 

“கொஞ்ச நேரம் இதில படுக்கப் போறன். என்னைக் குழப்பா தேங்கோ”. என்று அவன் பதில் சொன்ன பிறகு அம்மா மௌனித்து விட்டாள். அவளுக்கு அவன் குணம் தெரியும் தானே. 

நேரம் இரவு ஏழரை மணியாகி இருக்க வேண்டும். வா னொலியில் டெல்லியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் செய் திகள் முடிந்து விவசாய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியிருந்தன. “தவலிங்கம் எங்கே? போனான். இன்னமும் கனகசபை கடையில் தான் நிற்கிறானோ? தான் இல்லாமல் தனி ஆளாக நிண்டு தண்ணி அடிக்கிறானோ” என்றும் அவன் யோசித்தான். 

பக்கத்தில் யாரோ இருமுவது கேட்டது. பழக்கமான குரல்தான்.ஞானரூபன் பார்வையைத் திருப்பினான். மெல் லிருள் பரவியிருந்த வீட்டின் வெளி விறாந்தையில் அம்மா, ஐயா, மனோகரி, மேனகா என்று நான்கு பேரும் கதைத் துக் கொண்டு இருந்தார்கள். இருமியது ஐயாதான். “ஏன் ஐயா இருமிறியள். உங்களை வெளி விறாந்தையில படுக்க வேண்டாம் எண்டு எத்தினை தரம் சொல்லியாச்சு.” என்று மனோகரி கேட்டாள். 

“மனோகரி அக்காவுக்கு என்ன ஐயாவில வலுகரிசனை யாய் இருக்கு” என்று கேட்டாள் மேனகா. 

“என்ன” என்ற மனோகரியின் கேள்வியில் அதட்டல் இருந்தது. 

இல்லை,” என்று இழுத்த மேனகா சிரித்தாள். “நீ எதையோ மனசுக்குள்ள வைச்சுக் கொண்டு கதைக்கிறாய் மேனகா.” 

“இல்லை. அண்ணையின்ரை கடிதம் வந்திட்டுது தானே. உன்ரை கலியாணப் பேச்சில ஐயா அமளியாய் இறங்கியிட்டார். அதுதான் ஐயாவில உனக்கு நல்ல அக் கறையாய் இருக்கு எண்டு சொல்ல வந்தனான்.” என்று சிரித்தபடியே சொன்னாள் மேனகா. 

“போடி விசரி உனக்கேன் உந்தத் தேவையில்லாத கதையள் கலியாணம் பேசிறதும் கலியாணம் முடிக்கிற தும் என்ன புதினமான விசியமே.” என்று டையில் வந் தாள் அம்மா “சரி – சரி தேவையில்லாமல் கதைச்சு சண் டை பிடியாதேங்கோ,” என ஐயா சொல்லிக் கொண்டு பழையபடி இருமினார். 

“அவன் பெரியவன், பெரியவன் மாதிரித்தான் இருக் கிறான். இஞ்சத்தைய நிலையை சரியாய் தெரிஞ்சு கொண்டு மனோகரிக்கும் அலுவலைப் பார்க்கச் சொல்லி எழுதிப்போட்டான். இனி அம்பாள் விட்டவழி,” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் அம்மா, 

“அவன் இருக்கிற படியால் தானே நாங்கள் எங்கடை சீவியத்தைக் கொண்டு நடத்தக் கூடியதாய் இருக்கு. இல் லாட்டி நான் எடுக்கிற பென்சன் காசில என்னத்தை, செய் யிறது. முப்பது முப்பத்தைஞ்சு வரிசம் எடிகேஷன் டிப்பார்ட் மென்டில இருந்து வாத்திமாரோடை சண்டை பிடிச்சது தான் மிச்சம். தாலியறுந்த சிங்களத்தைப் படிக்காமல் இங்கிரி மென்டுகளும் ஒழுங்காய் கிடைக்காமல் புறமோஷ னும் இல்லாமல் – ம் .. உதுகளைக் கதைச்சு என்ன செய் யிறது. தமிழராய்ப் பிறந்து தமிழராய் வாழுற எல்லாருக் கும் உள்ள பிரச்சினை தானே.” என்று பெருமூச்சு விட்ட ஐயா சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு பிறகும் சொன்னார். 

“எங்கடை பெரியவன் இண்டைக்கு வெளியால போன தால நாங்கள் கஸ்டமில்லாமல் சீவிக்கிறம். எங்கடை வீட் டுக் குமருகள் கரைசேருது. எண்டதெல்லாம் உண்மைதான். ஆனால் வடிவாய் யோசிச்சுப் பார்த்தால் இதெல்லாம் சந்தோஷப்படக் கூடியவிசயமாயோ, பெருமைப் படக் கூடிய விசயமாயோ இருக்கோ” என்று சொல்லிக் கொண்டு வந்த ஐயா இருமத் தலைப்பட்டார். 

“ஐயா, கனக்கக் கதைக்காதேங்கோ,” என்றாள் மனோகரி. 

“எங்கடை பெரியவன் மாத்திரமல்ல – பெரியவனைப் போல இருக்கிற பெடியள் எல்லாம் இஞ்சையே வடிவாய் படிச்சு நல்ல தொழிலை இஞ்சையே பார்த்தால் எப்படி இருக்கும். யோசிச்சுப் பாருங்கோ,’ 

ஐயா சொன்னதை எல்லோரும் மௌனமாகக் கேட் டார்கள். இயற்கையிடம் மனதைப் பறிகொடுத்திருந்த ஞானரூபனும் கேட்டான். 

ஒழுங்கைப் பக்கமாக சரசரப்புகள் கேட்டன. சீரான வேகத்துடன் நடக்கும் உருவங்கள் அசைந்தன. சட்டென்று ஐயாதான் பேச்சை நிறுத்திக் கொண்டார். எல்லோரும் ஒழுங்கையைப் பார்த்தனர். 

“ஐயா ஆமிக்காரர் போறாங்கள்” என்று மேனகா சொன்னாள். 

நடந்து வந்தவர்களின் நடை தடைப்பட்டது. யாரோ ஒருவரின் அர்த்தம் புரியாத சத்தம் உரத்த குரலில் வெளிப் பட அதே அர்த்தம் புரியாத மொழியில் பதிலும் வெளிப்பட்டது 

விறாந்தையில் அமர்ந்திருந்தவர்கணீன் நெஞ்சில் இனம் தெரியாத கலக்கம் ஏற்பட்டிருந்தது. விறாந்தை மின்சார விளக்கு எரியவில்லை. குசினிக்குள்ளும் வீட்டின் ஹோலி னுள்ளும் தான் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. 

எதிர் வீட்டின் முன்புற விளக்கு எப்போதும் போலவே எரிந்து ஒழுங்கைவரை வியாபித்திருந்தது. அது காரணமாக கேற்றின் மதிலோடு நின்ற தலைப்பாகை அணிந்தவனை வடிவாகப் பார்க்க முடிந்தது. 

கோதாரி விழுவான்கள் என்ன செய்யப் போறான் கள்,” என்று அம்மா கேட்டாள் 

“அவன்கள் என்னத்துக்கு நிற்கிறான்களோ? நீயேன் அந்தரப்படுகிறாய்” என்றார் ஐயா. 

திடீர் என பலபேரின் சத்தங்கள் ஐக்கியமாயின. உரத்த தொனியில் அவை கேட்டன. சைக்கிளை உருட்டியபடி வந்த இளைஞன் ஒருவன் தயங்கித் தயங்கி அவர்களின் முன்னால் நிற்பதும் அவர்கள் அவனைக் சூழ்வதும் தெரிந் தது. 

எல்லாமே மிகக் குறுகிய நேரத்தினுள் நடந்தன. 

ஐயோ அம்மா.” என்று தான் முதலில் அந்த இளைஞன் அலறினான். 

“ஐயோ அம்மா – என்ரை அம்மா, அடியாதேங்கோ. ஐயோ, ஐயோ” என்று வெளிப்பட்ட இளைஞனின் குரல் அந்தப் பகுதியையே கரைய வைத்தது. 

அம்மா நடுங்கத் தொடங்கி விட்டாள் மனோகரியும்’ மேனகாவும் ஒருவர் கையை ஒருவா பிடித்துக் கொண்டு நெருங்கினார்கள். பொல பொல வென்று கண்ணீர் பெருக் கெடுக்கத் தொடங்கியது. 

ஐயா கண்களை மூடிக்கொண்டு 

”அம்மாளே, என்ரைஅம்மாளே,” என்று முணுமுணுக்க முனைந்தார். 

நடுங்கிக் கொண்டிருந்த அம்மா 

“ஐயோ – என்ரை பிள்ளை ஞானம்-ஞானம்” என்று புலம்ப வெளிக்கிட்டாள் 

“அம்மா – ஞானரூபன் அங்கை படுத்திருக்கிறான், நீங் கள் பேசாமல் இருங்கோ,” என்றாள் மேனகா 

”நான் அவனுக்குக்கிட்டப் போகட்டே. அவன் தனிய இருக்கிறான்’” என்று அம்மா சொன்னாள். 

“வேண்டாம் அம்மா நீங்கள் எழும்பிப் போறதை ஆமிக்காரர் கண்டு பிழையாய் நினைச்சிட்டால் சோலி அம்மா கொஞ்ச நேரம் பேசாமல் இருங்கோ,” என்று பதில் சொன்னால் மனோகரி. 

”அம்மா – ஐயோ அம்மா என்ரை அம்மா, அடியா தேங்கோ எனக்கு நெஞ்சுக்குத்து வாறது. நான் கூலிக்குப் போற ஆள். அது தான் கை எல்லாம் காய்ச்சுப் போய் இருக்கு” அவன் கத்திக் கொண்டு இருந்தான். 

தரையில் விழுந்து கிடந்த அவனை அவர்கள் பந்தாடிக் கொண்டிருந்தார்கள். அவன் கொண்டு வந்த சைக்கிளும் அவனைப் போலவே சிதைவுண்டு வேவிக் கரையோரமாகக் கிடந்தது. 

சில நிமிடங்களுக்குப் பின்னர் அவர்கள் நகரத் தொடங் கினார்கள். கூடவே இளைஞனையும்கொண்டு அணி
வகுத்துச் சென்ற அவர்கள் எல்லோரும் போய்ச் சேர்ந்த வெகு நேரத்துக்குப் பின்னர் தான் விறாந்தையில் இருந்த வர்கள் மூச்சு விட்டார்கள். எதிர் வீட்டின் விறாந்தையி லும் நடமாட்டம் தெரிந்தது. அதைவிட அவர்களின் கல கலச் சிரிப்பொலி முந்திக் கொண்டது. 

அம்மா ஞானரூபனை நோக்கி ஓடினாள். “தம்பி ஞானம் எழும்பனெடா. உள்ளுக்க வந்துபடு. நீ பயந்திட்டி யே,” என்றாள் வேதனையுடன். 

ஞானரூபன் விழியோரங்கள் கண்ணீர் வழிந்திருந்தது. எப்படி கணணீர் தன் கண்களில் உருவானது என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடியவில் 

உடல் சில்லிட்டுப் போய் இருந்தது. நெஞ்சில் ஏற் பட்டிருந்த பதட்டம் இன்னமும் அடங்கவில்லை அன்றைக்கு ஒரு நாள் தெருவில் தான் கிடந்த போது உடம்பு அனு பளித்த வேதனையை அவன் இப்போதும் அனுபவித்தான். 

நிலவு இப்போது நன்றாக உயர்ந்திருந்தது. அதன் வெண்மையான கதிர்கள் அ வனை நேராகத் தழுவிக் கொண்டன. 

ஆனால் நிலைமை என்ன மாதிரி மாற்றம் அடைந்து விட்டிருந்தது. நிலவும் அதனால் இயற்கை மீதும் ஏற்பட் டிருந்த பிடிப்பும் இரசனை எல்லாம் இடம் தெரியாமல் ஒளித்துக் கொண்டன 

வானம் அழகாக இருந்து என்ன? நிலவு பிரகாசித்து என்ன பிரயோசனம்? இயற்கை மோக வெறியை ஊட்டித் தான் என்ன நடக்கப் போகின்றது? 

தலையை மோதி உடைக்க வேண்டும் போல ஒருவகை வேகம் உண்டானது. அம்மாவின் வேண்டுகோளைத் தடுக்க முடியாமல் அவள் துணை செய்ய அறைக்குள் வந்து கட்டி லில் படுத்துக் கொண்டான். 

எங்கள் தெருவால்? எங்கள் ஒழுங்கையால் நாங்கள் போக முடியாமல் இருக்கிறது. என்ற சிந்தனை எழுந்தது. 

இராணுவ முகாமுக்கு முகாம் தறிபட்டுப் போய் இருக்கும் தென்னை மரங்களையும்ம் பனை மரங்களையும் நினைத் தான். 

தெருவோரத்து மதில்களை உடைத்து சீமெந்துக் கற் களை ஏற்றிக் கொண்டு பாழ்படுத்தி விட்ட தோட்ட நிலங் களின் ஊடாக விரைந்து போகும் இராணுவ வண்டிகளும் அவன் மனதில் தோன்றின. 

“உவன் நாசமறுவான் தவலிங்கம் எங்கை துலைஞ் சான். இப்ப கனகசபை கடைக்குப்போய் கொஞ்சம் என்ன அரை அடிச்சால் தான் நிம்மதி வரும். இல்லாட்டி இர வைக்கு நித்திரையும் வராது,” என்றும் யோசித்தான். 

இவ்வளவு காலமும் வீட்டை விட்டு புறப்படாமல் விட்டதால் கனகசபை கடைப் பக்கம் போகவில்லை. அத னால் சாராயத்தை மறந்த மாதிரியாகி விட்டது. 

“குடித்தால்” எல்லாம் சரி வந்து விடும் என்ற யோ சனை ஏற்பட்டது. குடிக்காமல் சாதாரணமாக இருக்கின்ற படியால் தான் இப்படி குழம்ப வேண்டியுள்ளது. எனவும் னைத்தான். அது காரண்மாக மீண்டும் தவலிங்கத்தின் மீது எரிச்சல் மூண்டது 

ஒழுங்கையில் சன நடமாட்டம் ஏற்பட்டிருக்க வேண் டும். ஆட்களின் ஆரவாரம் கேட்டது. சண்முகமும் வேறு ஆட்களுமாக இருக்கலாம் சண்முகத்தின் சத்தம் கேட்டது 

”உங்களுக்கு ஏன் தேவையில்லாத வேலை. ஒழுங்கை யில கிடக்கிற சைக்கிள் கிடக்கிற மாதிரிக் கிடக்கட்டுமன். ஆமியிட்டை அடிவாங்கினது உண்மையாய் கூலிக்காரன் தானோ அல்லது கூலிக்காரன் மாதிரி வந்தவனோ. இந்தக் காலத்தில் ஆரை நம்புறது” என்று அவர் சொன்னது தெளிவாகக் கேட்டது. 

அதனைத் தொடர்ந்து வாசல் கேற் திறபடும் ஓசை யும் சைக்கிள் சத்தமும் கேட்டன. தவலிங்கம் தான் வந்து கொண்டிருந்தான். 

– தொடரும்…

– முள்முடி மன்னர்கள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1991, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *