முள்முடி மன்னர்கள்





(1991ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9

“இத்தினை வயது வந்தும், இவ்வளவும் நடந்த
பிறகும், இந்த மண்ணில சீவிச்சுக் கொண்டு
உப்பிடிக் கேட்கிறதுக்கு உம்மால
எப்பிடி முடியுது எண்டு எனக்கு
விளங்கேல்லை. ஏன்தான் உப்பிடி
அந்நியப்பட்டுப் போய் நிற்கிறீரோ”
காயத்திரியின் முகத்தில் வழக்கமான சோபை இருக்க வில்லை. ஒருவகைச் சோகம் அப்பியிருந்தது. விழிகளில் வியப்பு. அவள் ஆர்வமுடன் ஞானரூபனைப் பார்த்தாள். கல்யாணியிடம் எப்போதும் போலவே எதுவித மாறுபாடும் இல்லை.
“வாங்கோ வாங்கோ இஞ்சை கதிரையில இருக்க லாம்,” என்றான் ஞானரூபன்.
அவன் படுத்திருந்த கட்டிலின் எதிரே இரண்டு கதிரை கள் இருந்தன.
“இப்ப எப்படிச் சுகமே.” என்று காயத்திரி கேட்டாள். “பரவாயில்லை,” என்னும் போதே ஞானரூபனின் குரலில் சோகம் இழையோடியது.
“‘பரவாயில்லை எண்டால்,” காயத்திரி திரும்பவும் கேட்டால்.
“அண்டைக்கு இருந்ததைவிட பரவாயில்லை. ஆனால் நோமலாய் வர எத்தினை மாதமாகுமோ தெரியாது. உடம்பு முழுக்க நோ இல்லாத இடமே இல்லை. எலும் பிலேயும் இரண்டு மூண்டு இடத்தில் வெடிப்பு இருக்க வேணும்,”
“அப்ப ஏன் அவசரப்பட்டு வீட்டை வந்தனீர் வடி வாய் மாறும் வரைக்கும் ஆஸ்பத்திரியில நிண்டிருக்கலாம் தானே”
“அங்கை இருந்து என்ன செய்யிறது. ஆஸ்பத்திரி நாத்தத்துக்கு என்னால இருக்கேலாமல் இருக்கு, ஆஸ்பத் திரி முழுக்க சூட்டுக் காயத்தோடை ஆட்கள், செல் அடி யில கால் கை போன ஆட்கள் என்று ஒரேசனம். அவை யளைப் பார்த்துக் கொண்டு எத்தினை நாளைக்கு அங்கை இருக்கிறது,” என்று சொல்லும் போதே ஒருவகை வெறுப்பு வெளிப்பட்டது.
“அவையளும் ஆட்கள் தானே,” என்றாள் காயத்திரி. ஞானரூபன் சிறுபொழுது மௌனமாக இருந்தான்.
“உண்மைதான் ஆனால் என்ரை நிலைமை அப்படி. இப்ப நாளைக்கு ஒருக்கா ஆஸ்பத்திரிக்குப் போக வேணும்,,
“ஆரோடை போறது,”
“தவலிங்கம் வருவான். ”
”அவரை நேற்றைக்கும் கண்டு கதைச்சனான்”
“ஒவ்வொரு நாளும் பொழுதுபட அவன் வாறவன் அவன் வந்தால் தான் பொழுதும் போகும், புதினங்களும் தெரியும்.”
“ஏன் வீட்டில பொழுது போகாதோ”
“இஞ்சை ஆரோடை கதைக்கிறது. வீட்டாக்களோ டை முகத்துக்கு நேர முகம் பார்த்துக் கதைச்சே எவ்வளவு காலமாச்சு”
”ஏன்,” என்று கேட்டது கல்யாணி தான்.
ஞானரூபன் திரும் பி கல்யாணியைப் பார்த்தான் முகத் தில் சிறு புன்னகை வெளிப்பட்டது. கல்யாணியும் சிரித் தாள்.
“கனக்க கதைச்சால் என்ன” என்று கேட்டான் ஞானரூபன்
“உமக்கு சில விசயங்கள் கஷ்டமான விசயம் தானே. அது மாதிரித்தான் எனக்கும் கனக்கக் கதைக்கிறது கஷ்டம், கல்யாணி பதில் சொன்னாள்.
“நெடுக வெளிக்கிட்டுத் திரிஞ்ச ஆட்களுக்கு இப்பிடி ஒரே இடத்தில படுத்திருக்கிறது கஷ்டம் தான்.” என்று காயத்திரி சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டு சொன்னாள்
“என்ன செய்யிறது. என்ரை தலைவிதி” ஞானரூபன் பதில் சொன்னான்.
“இந்தியன் ஆமிக்குத்தான் தாங்கஸ் சொல்ல வேணும்’”
“ஏன்,”
“அவன்கள் அடிச்ச படியால் தானே இப்ப வீட்டில இருக்கிறீர்”
“உதைப் பற்றிக் கதைச்சு என்ரை மூட்டைக் குழப்ப வேண்டாம். அண்டைக்கு நான் தப்பினதே பெரிய காரி யம். அவன்கள் துவக்கை உரப்பையுக்க ஒளிச்சு வைச்சுக் கொண்டு போனவனைப், பார்த்துக் கொண்டு இருந்திருக்க வேணும். நானும் வசதியாய்ப் போய் ஆப்பிட்டுப் போனன். சும்மா கொஞ்சப் பேர் துவக்குகளோடை திரிய எங்களைப் போல ஆட்களுக்குத்தான் பிரச்சனை, தேவையில்லாமல் அடி, தேவையில்லாமல் துவக்குச்சூடு யோசிச்சுப் பாக்க விசர்தான் வருகுது.
காயத்திரி மெல்லியதாகச் சிரித்தாள். அவளின் சிரிப்பை ஞானரூபன் வினோதமாகப் பார்த்தான்.
“அண்டைக்கு நீர் ஆமிக்காரனிட்டை அடிவாங்கா விட்டால் இன்னுமொரு நாளைக்கு வேண்ட வேண்டியிருக் கும். அதுதான் உண்மையான நிலைமை. அவனுக்காக எனக்கு அடிச்சவன். இவனுக்காக என்னை உதைச்சவன் எண்டதெல்லாம் நாங்கள் எங்களுக்குச் சொல்லிக் கொள் ளும் சமாதானம் தான்” என்றாள் காயத்திரி.
“ஏன் அவன்கள் என்ன வீடு வீடாகத் தேடிவந்தே அடிக்கிறான்கள்.” என்று ஞானரூபன் கேட்க.
“இத்தினை வயது வந்தும், இவ்வளவும் நடந்த பிறகும் இந்த மண்ணில சீவிச்சுக் கொண்டு உப்பிடிக் கேட்கிற துக்கு உம்மால எப்பிடி முடியுது எண்டு எனக்கு விளங் கேல்லை. ஏன் தான் உப்பிடி அநிநியப் பட்டுப் போய் நிக்கிறீரோ தெரியாது. இலங்கை ஆமி நாங்கள் அவன் களுக்கு எதிராகச் சண்டையைத் தொடக்க முதலே 1958 ம் ஆண்டிலேயே அடிக்கத்தொடங்கியிட்டாங்கள் எண்டு தெரியுமே.”
ஞான ரூபன் பதில் சொல்லாமல் கூரையைப் பார்த்த படி இருந்தான்.
அமைதிகாக்க வந்த இந்த இந்தியன் ஆமிக்காரர்கூட இஞ்சை வரேக்க பெரிய செயின் போட்ட டாங்கிகளோடை தான் வந்தவை. அவை வரேக்க சண்டையும் தொடங்கேல்லை.
காயத்திரியின் முகம் சிவந்திருந்தது. கையில் இருந்த கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.
“நான் கனக்க கதைக்க விரும்பிறதில்லை. ஆனால் சிலபேர் கதைக்கிற கதையளைக் கேட்டுக் கொண்டு இருக் கேலாது” என்றாள் சிரித்துக் கொண்டு. காயத்திரி.
சத்தம் செய்யாமல் மனோகரி அறைக்குள் வந்தாள். காயத்திரியையும் கல்யாணியையும் பார்த்து சினேக பூர்வ மாகச் சிரித்தாள். அவள் கையில் சில்வர் தட்டு.
“நாங்கள் வந்து உங்களுக்கு கரைச்சலைக் கொடுத் திட்டம்” என்று சொல்லிக் கொண்டு காயத்திரி சில்வர் கிண்ணத்தை எடுத்தாள்.
மனோகரி பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தபடி வெளி யே போய் விட்டாள்
“நல்ல அக்காமார் உங்களுக்கு” என்றாள் காயத்திரி, ஞானரூபன் அதற்குப் பதில் சொல்லவில்லை.
“முதலாளி வந்தவரே.” எனக் கல்யாணி கேட்டாள்.
“ஓமோம் – இரண்டு தரம் வந்தவர். ஆயிரம் ரூபாய் காசும் கொண்டு வந்து தந்தவர். இரண்டாந்தரம் வரேக்க இராமநாதரும் வந்தார்.”
“நாங்கள் ஒவ்வொரு நாளும் வெளிக்கிட, வெளிக்கிட ஒவ்வொரு பிரச்சினை வந்திடும். பின்னேரத்தில் வெளிக் கிட்டு வந்து திரும்ப வீட்டை போக பொழுதுபட்டிடும். சந்திக்கு சந்தி அவன்களுக்கு அடையாள அட்டை காட்டிக் கொண்டு பொழுது பட்ட நேரத்தில நிக்கச் சரிவராது தானே, இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே, அதுதான் விடிய வெளிக்கிட்டனாங்கள்.”
“வீட்டில ஐயா என்ன மாதிரி” என ஞானருபன் கேட்டான்.
“புதிசாய் என்ன மாற்றம் அவரில வரப் போகுது. அவர் உள்ள படிதான். ஐயாவைப் போல ஆட்களில் மாற்றம் வாறதைவிட எங்களைப் போல ஆட்களில் தான் மாற்றம் வரவேணும். மாற்றம் காண வேண்டிய ஆட் களும் நாங்கள் தான், உண்டாக்க வேண்டிய ஆட்களும் நாங்கள் தான்,” என்றாள் காயத்திரி.
பிறகும் வெகுநேரம் வரை கதைத்துக் கொண்டு இருந்து விட்டு காயத்திரியும் கல்பாணியும் போய் விட்டார்கள்.
அது வரையில் அறையில் மிதந்த வசந்தம் மறைந்து விட்டதை ஞானருபன் உணர்ந்தான். காயத்திரியின் பேச் சில், கருத்துக்களில் தனித் தன்மைகள் இருப்பதை அவள் போன பின்னர் நினைவுகளை மீட்டுப் பார்க்கும் போது உணர முடிந்தது.
பொழுதைப் போக்காட்டுவதைப் பற்றி யோசிக்க அவனுக்கு விசராக இருந்தது.
“ஞாயிற்றுக்கிழமை எண்டாலும் உவன் தவலிங்கத் துக்கு கண்டறியாத வேலை. எனத் தனக்குள் முணு முணுத்துக் கொண்டான்.
விழிகளை சிறு பொழுது மூடஅறைக்குள் காலடி ஓசை கள் கேட்டன. பழக்கமான ஓசைதான்.
“தம்பி ஞானம்’ என்ற அம்மாவின் குரலில் இருந்த கனிவு முன் எப்போதும் இல்லாத வகையில் இதமாக இருந்தது.
விழிகளைத் திறந்தான் கையில் கோப்பையுடன் அம்மா நின்றாள். கோப்பியின் மணம் மூக்கைத் துளைத்தது. “கோப்பி குடியன்டா தம்பி” என்று விழிகளில் பொங்கும் கருணையுடன் அம்மா பல்வியமாகக் கேட்டாள்.
யோசிக்க நேரம் எடுக்காமல் சட்டென்று ஆம்என ஞானரூபன் தலையசைத்தான். கோப்பிக் கோப்பையை ஓரமாக வைத்து விட்டு, அம்மா கட்டிலில் அமர்ந்து கொண் டாள். பிறகு இரண்டு தலையணைகளை எடுத்து அவன் தலைப்பக்கம் உயர வைத்து தலையை உயர்த்தினாள் வெகு அவதானமாக அவனுக்கு கோப்பியை பருக்கத் தொடங் கினாள்.
ஒழுங்கைக் கரையோரமாக யாரோ பெரிதாகச் சத்தம் போட்டுக் கதைப்பது கேட்டது. காதில் விழுந்த குரல் முன்பும் கேட்ட மாதிரியாகத்தான் இருந்தது.
ஒரு சில விநாடிகளுக்குள் தோளில் துவாயும் சேட்டு அணியாத வெற்றுடம்புடன் நின்ற அந்தக் கடைக்காரர் நினைவுக்கு வந்தார். இன்னமும் அவருக்கு சண்முகம் வீட்டாக்கள் கொடுக்க வேண்டிய காசைக் கொடுக்கவில்லை வெறுப்பும் வேதனையும் கலந்த நிலையில் அந்த மனிதர் இப்போதும் கத்திக் கொண்டு நின்றார்.
இப்போது மாத்திரம் அல்ல, இதற்கு முன்னரும் அந்த ம னி சர் வந்து பேசி விட்டுத்தான் போய்க் கொண்டிருந்தார்.
போனமுறை ஒழுங்கையினால் போன யாரோ விசயத் தைக் கேள்விப்பட்டு விட்டு
“இந்தியன் ஆமிக்காரரின்டை காம்பில போய்ச் சொல் லுங்கோவன். அவன்கள் உவரைப் பிடிச்சு இரண்டு நாள் வைச்சிருந்து நாலுஅடி போட்டாங்கள் எண்டால் தரவேண் டிய காசைத் தராமல் எங்கே போகப் போறார்.” என்று சொன்னார்.
அதற்கு அந்தக் கடைக்காரர் சம்மதிக்கவில்லை. “ஏன் தம்பி தேவையில்லாத வேலையை. எங்கடை பிரச்சினையை நாங்கள் பாக்காமல் எங்கையோ இருந்து வந்தவனீட்டைப் போவான் எங்கடை ஆக்கள் தங்கள் சொந்த நன்மைக் காக உப்பிடி உப்பிடிப் போய்த்தான் போத்துக்கீசர் ஓல்லாந் தர் காலம் தொடக்கம் இண்டைக்கு வரைக்கும் அன்னியர் ஆட்சிக்கு முகம் கொடுக்க வேண்டியதாய் இருக்கு”, என்றார்.
இப்போதும் அவர் சண்முகத்தின் வாசலில் நின்று பேசு கின்றார். ஆனால் சண்முகம் வீட்டாக்களில் இன்னமும் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை.
சண்முகம் காலையில் எப்போதும் போல வெகு நேர்த் தியாக உடை அணிந்து கையில் சிகரெட்புகை விடத்தான் போகின்றார். மாலையில் நிறை வெறியில்தான் வருகின் றார்.
பிரியாவும் பிருந்தாவும் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் எல்லோரின் வி ழிகளையும் சுண்டியிழுக்கும் வண்ணமாய் அலங்கரித்துக் கொண்டுதான் போய் வருகின் றார்கள்.
ஞானரூபன் நினைவில் அந்தக் கடைக்காரன் வந்தார். அவளன் ஏழ்மையும் அதனை அசட்டை செய்யும் சண்முகம் வீட்டாக்களின் செயற்பாடுகளும் சங்கடத்தினை உண்டு பண்ணின.
சண்முகம் வீட்டார்கள் பற்றி தவலிங்கம் அடிக்கடி சொல்வது உண்மைதான் என்றும் அப்போது நினைத்தான்.
பிரியாவுக்காக மருந்து வாங்கப் போய் மருந்தும் வாங் காமல், சண்முகத்தின் சைக்கிளையும் கை விட்டு அரைகுறை உயிரோடு வீடு வந்து சேர்ந்த அந்த இரவு அவனுக்கு மீண்டும் நினைவில் துளிர்த்தது.
“ஐயோ என்ரை அம்மாளே.” என்று முதலில் பெருங் குரலில் அழத் தொடங்கியது அம்மாதான். மனோகரியும் மேனகாவும் அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு விம் மினார்கள். தகப்பனார் பிரமை பிடித்தவர் போல நின்று கொண்டிருந்தார்.
அழுகுரலின் ஆரவாரத்தினால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் வந்து சேர்ந்து விட்டார்கள். சண் முகமும் வந்தார். விடயத்தைக் கேள்விப்பட்டார்.
“என்ரை சைக்கிள் என்ன மாதிரி” என்று அவனைத் துளைத்தெடுக்கத் தொடங்கிவிட்டார்.
“பெடியன் உயிரோடை வந்ததைப்பற்றி திருப்திப்படா மல் உங்களுக்கு சைக்கிளே” என்று யாரோ பேசினார்கள்.
ஆனால் சண்முகம் அமைதியடையவில்லை. இரவு நேரத்தில அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக எல் லோரும் குழம்பிக் கொண்டு இருக்கையில் சண்முகம் சைக் கிளுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.
அவன் ஆஸ்பத்திரியில் இருக்கும் போதோ, பின்னர் வீடு வந்த இத்தனை நாட்களில் கூட பிரியா, வந்து பார்க்க வில்லை.
“உங்கடை பிரண்டுக்கு ஆமி அடிச்சுப் போட்டுதாமே” என்று சிரித்துக் கொண்டு ஒழுங்கையில் ஒரு நாள் பிரியா தன்னிடம் கேட்டதாக தவலிங்கம் சொன்னான்.
அவள் ஒழுங்கையில் நடந்து போகும் போது அவளுடன் ஒருவன். சைக்கிளில் கதைத்துக் கொண்டு போனதாகவும் தவலிங்கம் புதினம் சொன்னான்.
“பாத்தியே மச்சான் – நான் வேளைக்கே சொன்னான் உதுகளை நம்பக்கூடாது” என்று தவலிங்கம் சிரித்தான்.
ஞானரூபன் அந்த நினைவுகளில் இருந்து மீண்டான். அம்மா அவன் நெஞ்சைத் தடவிக் கொண்டிருந்தாள்.
சிறிதளவு ஆதரவு கூடக் காட்டாமல் வெறுப்யையே வீட்டில் உள்ள அம்மாவிடமும் சகோதரிகளிடமும் செலுத்தி வந்த அவனுக்கு அவர்கள் காட்டிய அன்பு சற்று நெகிழ்ச் சியை உண்டு பண்ணியிருக்க வேண்டும்.
அவன் கண்களை மூடிக் கொண்டான். நெஞ்சைத் தடவி விட்ட அம்மா அவன் தலையைத் தடவி விட்டுக் கொண்டிருந்தாள்.
– தொடரும்…
– முள்முடி மன்னர்கள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1991, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.