முள்முடி மன்னர்கள்





(1991ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 | அத்தியாயம்-7

“….சந்தோஷமாய் இருக்கிற வயதில
எங்கடை விரூப்பப்படி சந்தோஷமாய்
இருக்கேலாமல் இருக்கு. எங்கை தான்
நிம்மதியாய் இருக்கக் கூடியதாய் இருக்கு
வெளியில தான் நிம்மதியாய் திரியலாமோ
சந்திக்கு சந்தி அடையாள அட்டை
காட்டி….”
குசினியினுள் இருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிர்கள் திரே இருந்த மாமரத்தில் இலைகளில் சிதறி இருந்தன.
இராக் குருவி ஒன்று கீச்சிட்டபடி வீட்டின் கூரை யை வட்டம் போட்டு தொலைவில் மறைந்து போயிற்று. ஞானரூபன் அண்ணார்ந்து வானத்தைப் பார்த்தான். வா னம் வெகு அழகாக இருந்தது.
நெஞ்சில் மெல்லிய எரிவு ஏற்பட்டது. என்ன செய்ய லாம் என்று யோசித்தான். கனகசபையிடம் கேட்டால் “இன்னும் ஒரு றாம் சாராயம் குடிச்சால் நெஞ்சு எரிவு நிற்கும் ” என்றுதான் சொல்லுவான் என ஞானரூபன் நினைத்தான்.
ஒழுங்கையில் சரசரப்புக் கேட்டது. வேலியின் அடிப் பகுதியால் சீராக நடக்கும் பாதங்கள் தெரிந்தன.
கனகாலத்துக்குப் பிறகு நடந்து போயினம் என அவன் நினைத்தான். ஒழுங்கையால் வழக்கமாகப் போகின்றவர் களைக் கண்டாலே குரைக்கும் இந்த நாய்கள் அன்னிய தேசத்தில் இருந்து வந்து இங்கு நடைபயில்பவர்களைக் சண்டு ஏன் இப்போது குரைக்கவில்லை எனவும் அவன் நினைத்தான்.
ஒழுங்கையால் அணிவகுத்துப் போனவர்கள் சண்முகம் வீட்டுக் கேற்றினை இழுத்துப் பார்த்து விட்டு ஓங்கி உதைந்து விட்டுப் போனார்கள். நிட்சயம் திரும்பி வரும் பொழுதும் இப்படி செய்வார்கள் எனவும் அவன் நினைத் தான்.
“ஆமிக்காரர் போறாங்கள்” என குசினிக்குள் இருந்து மனோகரி சொன்னதும் இவனுக்குக் கேட்டது. குசினிவா சல்படியில் தான் இருப்பது அவர்களுக்கு இன்னமும் தெரிய வில்லை. என்பதையும் அவன் உணர்ந்தான்.
மெல்லியதாகக் காற்று காற்று அடித்தது. அதில் குளிர்மை கலந்திருந்தது. அப்போதைய நிலையில் அவனுக்கு அந்த அனுபவம் ஆறுதலைக் கொடுத்தது. பரிபூரணமான அமைதி ஒன்று அப்போது நிலவியது.
அதனூடாக அம்மா குரல் வெகு துல்லியமாகக் கேட்டது.
“பெரியவனுக்கு கடிதம் எழுதியாச்சே”
“இல்லையப்பா- இண்டைக்குக் காலமை பென்சன் எடுக்க றூறல் பாங்குக்குப் போய் வந்ததோடை பொழுது போச்சுது. காலை ஒன்பது மணிக்குப் போய் மத்தியானம் வரை அங்கை அந்த வெய்யிலுக்க கிடந்து காய வேண்டிக் கிடக்கு” எனச் சலித்துக் கொண்டார் கணேசபிள்ளை.
“அப்ப இரவைக்கு எழுதி நாளைக்குப் போடலாம் தாளே” என அம்மா நகுலாம்பிகை விடுவதாக இல்லை.
“இனி எழுதுறது கஸ்டம், கண்ணாடி போட்டாலும் இரவில பார்வை பிரச்சினையாய் தான் இருக்கு. நாளைக் குக் காலமை எழுதி நாளைக்கே போடுறன். மனோகரி நீ என்ன மாதிரி? கொண்னைக்கு நீ எழுதினனியே,’*
“நானும் எழுதினனான். மேனகாவும் எழுதினவள் இரண்டையும் காலமைக்குத்தாறன்,” என்றாள் மனோகரி, “என்ன மாதிரி அவனுக்கு எழுதப் போறியள்,” என அம்மா மீண்டும் கேள்விக்கனை தொடுத்தாள்.
“என்னத்தை எழுதுறது. திரும்பத்திரும்ப ஒண்டைப் பற்றிக் கதைச்சு என்ன பிரயோசனம். நாங்கள் பெரிய வனை நெடுக கரைச்சல் குடுக்கிறதும் சரியில்லைதானே. அவன் வெளியில போய் உழைச்சுத்தான். கார்த்திகாவை யும் கல்பனாவையும் கரைசேர்த்தவன். இப்ப அவனும் குடும்பகாரனாய் விட்டான். இனிமுந்தின மாதிரி அவனிட் டை தொட்ட தெல்லாத்துக்கும் உதவி கேட்கலாமே”.
“அப்ப என்னப்பா செய்யிறது. அந்த நாளையில் நாலு பெட்டையளுக்கு இரண்டு பெடியன் ஒவ்வொருத்தனும் இரண்டு இரண்டு பெட்டையளைக் கரைசேர்ப்பங்களெண்டு ஒரு ஆறுதலாய் இருந்தது. ஆனால் என்ன மாதிரி எல்லாம் கனவாய் போச்சு,” என்றாள் கண்கலங்க அம்மா.
“ஏனப்பா நீ கண்ணீர் விடுகிறாய் பெரியவன் தன்ரை கடமையைச் செய்தவன் தானே – இப்பவும் அவன் என்ன மனோகரியையோ, மேனகாவையோ றோட்டிலேயே விடப் போறான். நீ ஒண்டுக்கும் கவலைப்படாத”
“எனக்கென்ன கவலை. அவன் பெரியவன் மாதிரி உவன் சின்னவன் ஞானரூபனும் இருந்தால் எப்படி இருக்கும். இஞ்சை தான் இருக்கத்தான் சரிவராட்டி வெளியில தன்னும் போயிருக்கலாம் தானே. பெரியவன் இண்டைக்குச் சொன்னாலும் நாளைக்கு ரிக்கட் அனுப்புவன்”
“ஞானரூபன் வெளிநாடு போவன் எண்டு நீங்கள் நினைக்கிறீங்களே,” எனக் கேட்டாள் மேனகா.
•அவன் எங்களுக்குத் தான் ஒண்டும் செய்யாட்டியும் பரவாயில்லை. கடைசி ஒழுங்காய்த்தன்னும் இருந்தால் எப் படி இருக்கும். ஆருக்குச் செய்த பாவமோ இப்பிடி ஏன் அவன் இருக்கிறான். எண்டு தெரியேல்லை”, என்று சொன்ன அம்மாவின் குரல் உடைந்து போய் இருந்தது.
“என்ன செய்யிறது எங்கடை தலைவிதி அப்பிடி. தாய் தேப்பனின் கஸ்டத்துக்காக, சகோதரங்களுக்ாக வெளிநாடு போய் உழைக்கிற பெடியள் ஒருபக்கம் எங்கடை சுதந்திரத் துக்காக உயிரையே பணயம் வைத்து போராடுற பெடியன் கள் மற்றப் பக்கம் இடையில ஞானரூபனைப் போல பெடியளும் இருக்குதுகள்.” என கணேசபிள்ளை. யோசித்தார்.
ஞானரூபனுக்கு உடம்பில் தீப்பற்றிக் கொண்டது. போல பரபரப்பு ஏற்பட்டது. தன்னைப் பற்றி இப்படித் தீவிரமாகக் கதைப்பதைக் கேட்க உடலும் உள்ளமும் வேகம் கொண்டன.
எல்லாராலும் எல்லாம் இயலுமா? என் சுபாவம் இப் படி, இப்படி இருப்பது எனக்கு விருப்பமாக இருக்கிறது. எனது சுதந்திரத்தை, என் விருப்பத்தைக் கெடுக்க இவர் கள் யார்? என அவன் தன்னுள் கேள்வி கேட்டுக் கொண் டான்.
“ஞானரூபனும் வெளியில் போய் இருந்தால் இப்ப இவளவை இரண்டு பேருக்கும் கலியாணத்தைச் செய்து கொடுத்திருக்கலாம் நானும் நிம்மதியாய் செத்துத் துலைஞ் சிருக்கலாம். இப்ப எனக்கு ஒரு கவலையும் இல்லை. ஞானருபன் உப்பிடித் திரியிறதும் குடிச்சுப் போட்டு வாறது கூட எனக்கு அவ்வளவு வேதினையைத் தாறேல்லை. உவளவை இரண்டு பேரையும் குமராய் வைச்சிருக்கிறது தான்….”
“அம்மா திருப்பித்திருப்பி கீறல் விழுந்த றைக்கோட் மாதிரி ஏன் ஒரே கதையை கதைச்சுக் கொண்டு இருக் கிறீங்கள். எங்களுக்கு கலியாணம் செய்து வைக்க வேணும் எண்டு இப்ப ஒரு அவசரமும் இல்லை”, என்றாள் மனோகரி.
கணேசபிள்ளையர் சாப்பிட்ட கோப்பையைத் தூக்கிக் கொண்டு எழும்பினார். ஞானரூபன் அந்த நேரத்தில் அவரை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்க விரும்பினான். அதனால் எழும்பி அறையை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
மனத்தில் குழப்பங்கள் அதிகமாகி இருந்தன. கனக சபை கடையில் வைத்து உடம்புக்குள் செலுத்திய சங்கதி கள் அவனுக்கு ஒரு உத்வேகத்தை அப்போது கொடுத்துக் கொண்டிருந்தது.
அப்பா, அம்மா, மனோகரி, மேனகா ஆகியோருக்கு மாத்திரம் அல்ல வெளியில இருக்கிற அண்ணை புவனச் சந்திரனுக்கும் பாடம் படிப்பிக்க வேணும், என்று அவன் நினைத்தான்.
போட்டிருந்த சேட் வியர்வையில் ஊ ஊறிப்போய் இருந் தது. அதனைக் கழற்றி கொடியில் போட்டு விட்டு சாரத்தை எடுத்தான்.
பெரியண்ணை எப்போதாவது எனக்கு கடிதம் போட் டிருக்கின்றாரா? சுகதுக்கங்களை விசாரித்திருக்கின்றாரா? கடைசி செலவுக்குக் கொஞ்சம் காசு அனுப்பி இருக்கின் றாரா? என்னை ஒரு விடுகாலி காவாலியாக இங்குள்ள வர்கள் மாத்திரம் அல்ல அவரும் நினைத்து விட்டார் என அவன் அப்போது நினைத்தான்.
எனக்கென்ன நான் யாருக்கும் பயப்படப் போவது மில்லை. பயப்படுவதுமில்லை. என்ரை விருப்பப்படி போறன், வாறன் எந்த அலுவலையும் என்ரை விருப்பப்படி தான் செய்வன்.
சாரத்தை அணிந்து கொண்டு லோங்சைக் கழற்றிய போது பொக்கற்றில் இருந்த நெயில் பொலிஸ் போத்தல் தரையில் விழுந்து சிதறியது.
சட்டென்று அவன் நினைவில் பிரியா தோன்றினாள். விழிச் சிறகுகள் படபடக்க கன்னக் கதுப்புக்களில் செழுமை பளபளக்க அவள் நாளைக் காலையில் வழிமறித்து நெயில் பொலிஸ் கேட்டால் என்ன சொல்வது என்ற கேள்வி அவ னுள் எழுந்தது.
அது காரணமாக கோபம் கிளர்ந்தெழுந்தது. நெயில் பொலிஸ் போத்தல் உடைந்ததுக்கு கூடக் காரணம் வீட்டாக்களின் கதைதான் என்ற மாதிரியான ஒரு உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.
தரையில் சிதறிக் கிடந்த றோஸ்கலர் பொலிசை விடா மல் பார்வையினால் அலைந்தான். அறைவாசலில் யாரோ வந்து நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. கோபத் துடன் திரும்பிப் பார்த்தான். மனோகரிதான் நின்றாள்.
“அம்மா சாப்பிடவரட்டாம்” என்றாள் அவள் எந்த விதமான சலனமும் இல்லாமல்.
தம்பியின் அறையில் நெயில் பொலிஸ் சிதறியிருப்பது அவளுக்கு எந்தவிதமான அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்பதை அவள் வெளியில் காட்டவில்லை.
மனோகரி சொன்னதை அவன் காதில் விழுத்தியதாகக் காட்டவில்லை. ஆனால் கோபமாக அவளைப் பார்த்தான்.
அவளும் சிறு பொழுது மௌனமாக இருந்து விட்டு ‘அம்மா சாப்பிடவரச் சொன்னவ” என்று சொல்லி விட்டு நடக்கத் தொடங்கினாள்
கண்டறியாத சாப்பாடு, உங்கடை சாப்பாடு சாப் பிடாதது தான் ஒரு குறை,” என்று சத்தம் போட்டான் அவன்.
அதற்கிடையில் மனோகரி குசினிக்குள் போய் விட்டாள்
ஞானரூபன் சத்தம் போட்டது தாய்க்குக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் எங்கிருந்தும் பதில் கிளம்பவில்லை.
துவாயை எடுத்துக் கொண்டு அவன் கிணற்றடியை நோக்கி நடந்தான். குசினிக்குள் அம்மாவும் மனோகரியும் மேனகாவும் ஆளை ஆள் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள். வெளி விறாந்தையில் ஐயா இருந்து சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்தார்.
குசினிக்குள் புகுந்து எல்லாவற்றையும் தூக்கி அடித்து நொருக்கித் தள்ள வேண்டும் போல மனம் அந்தரப்பட்டது தான் சாப்பிடப் போகும் வரை அவர்கள் அப்படியே குசினிக்குள் இருப்பார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.
தன்னைத் திட்டிக் கொண்டு விமர்சனம் செய்து கொண்டு “சாப்பிடவரச் சொல்லிக் கேட்பதும் தனக்காக குசினிக்குள் காத்திருப்பதும் என்ன ரீதியில் என்ன நாடக மா? ஆடுகிறார்கள்.
கிணற்றடியில் முகம் கழுவும் போது யாரோ வீட்டு வாசலில் நின்று ‘தம்பி – தம்பி” என்று கூப்பிடுவது கேட் டது. வீட்டில் தம்பி என்று கூப்பிடக் கூடிய ஆள் தன்னைத் தான். தன்னைக் கூப்பிடும் ஆள் யாராக இருக்கலாம் என அவன் யோசித்தான்.
அதற்கிடையில் ஐயா கேற்றடிக்குப் போய் நிற்பதும் குசினி வாசலில் அம்மாவும் தமக்கைமாரும் நின்று கொண்டு கேற்றடியைப் பார்ப்பதும் தெரிந்தது.
முகத்தைத் துடைத்துக் கொண்டு அவன் கேற்றடியை நோக்கி விரைந்தான். எதிர் வீட்டு மின்சார வெளிச்சத்தில் ஒரு ஆண் நிற்பது தெரிந்தாலும் முகம் தெரியவில்லை.
இவன் கேற்றடியை நெருக்க “தம்பி வாரும்” என அந்த மனிதர் சொன்னார். ஐயா ஓசைப் படாமல் அந்த இடத்தைவிட்டு நழுவினார்.
மிக நெருக்கமாகச் சென்ற பின்னர் தான் கேற்றடியில் நிற்பவர் முன் வீட்டு சண்முகம் எனத் தெரிந்தது. ”தம்பி” என்ற அவரைப் பார்த்து சினேகிதமாக “என்ன” என்றான் ”ஒரு அலுவல் தம்பி கேற்றைத் திறவும் ” என்றார் சண்முகம்.
உட்பக்கமாக கம்பியினல் கொழுவியிருந்த கேற் றினைத் திறந்து கொண்டு இவன் வெளியே போனான். எதிர் வீட்டு வாசலில் சண்முகத்தின் மனைவியும் மகளும் அது பிரதீபாவுமாக இருக்க வேண்டும். நிற்பது தெரிந்தது
சற்று நேரத்துக்கு முன்னர் வரை பெரிதாக அமளிப் பட்டுக் கொண்டிருந்த ரீவி அடங்கிப்போய் இருந்தது.
“தம்பி ஒரு அவசரமான அலுவல் அதுதான் உம்மட் டை வந்தனான். பிரியாதான் சொன்னாள் உம்மட்டைக் கேட்டால் கட்டாயம் செய்து தருவீர் எண்டு” என்றார் சண்முகம் வெகுநிதானமாக.
“என்ன.” என்றதில் ஆர்வம் இருந்தது.
“மகளுக்கு ஒரே தலையைச் சுத்தும் சத்தியுமாய் இருக்கு என்ரை வைபுக்கு கைமருந்து ஒண்டும் தெரியாது. பிள்ளையைப் பார்க்க பாவமாய் இருக்கு,’
“ஆருக்கு பிரியாவுக்கே சுகமில்லை.” என்ற கேள்வி யில் அதீதமான படபடப்பு இருந்தது. அக்கறையும் கவலை யும் வேதனையும் அதில் இழையோடிப் போய் இருந்தன
“ஓம் தம்பி பிரியாவுக்குத்தான். பின்னேரம் தொடக் கம் ஒரு மாதிரி சோர்ந்து போய்த்தான் இருந்தவள் டொக் டரிட்டை போற தெண்டால் சந்தி கழிஞ்சுதான் போக வேண்டும். இப்ப ஒன்பது மணியாகிவிட்டுது. நேரம் கெட்ட நேரத்தில் இந்த ஒழுங்கையால போகப் பயம் தானே. தம்பி ஆமிக்காரர் இதால கொஞ்ச நேரம் முந்தித்தானாம் போனவங்கள். இப்ப திரும்பி வாறாங்களோ தெரியாது பிள்ளை சொன்னது உம்மட்டைச் சொன்னால் நீரே போய் டொக்டரிட்டைச் சொல்லி மருந்து வேண்டிக் கொண்டு வருவீராம்.”
பிள்ளை சொன்னது என்ற சொற்பதங்கள் அவனை வெகுவேகமாக ஆட்டம் காண வைத்தது. பிரகாசமான விழிகள் மின்ன சிவந்த அவள் வதனம் எப்படி சோர்ந்து போய் இருக்கும்? நினைத்துப் பார்க்க என்னவோ போல இருந்தது.
“நில்லுங்கோ வாறன்,” என்று சொல்லிவிட்டு விரைந்து அறைக்குத் திரும்பி வந்தான். சேட்டை எடுத்துப் போட் டுக் கொண்டு லோங்ஸ் பொக்கற்றில் இருந்த காசை எடுத் துப் பார்த்தான். அறுபதுரூபாய் இருந்தது. மருந்துக்குக் காணும். காணாமல் விட்டாலும் சொல்லிப் போட்டு நாளைக்கு தவலிங்கத்திட்டை வாங்கிக் கொடுக்கலாம். என நினைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
சைக்கிள் காத்துப்போய் கனகசபை கடையில் வைத்து விட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்தது. “உங்களிட்டை சைக்கிள் இருக்கா, என்று சண்முகத்தைக் கேட்டான்.
“ஓம் தம்பி,”
“கொண்டு வாங்கோ,”
அவர் கொண்டு வந்தார்.
“தம்பி வீட்டில இவையள் தனியத்தானே. நான் நிற் கிறன் நீர் போட்டு வாருமன்” என்றார் சண்முகம்.
“ஓமோம்” என்றபடி சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒழுங்கையில் இறங்கி இருளில் மறைந்து போனான்.
குசினிவாசலில் அம்மாவும், மனோகரியும், மேனகா வும் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
– தொடரும்…
– முள்முடி மன்னர்கள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1991, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.