முள்முடி மன்னர்கள்





(1991ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

“ஆமிக்காரன் மறிச்சால் நான் கதை
சொல்லுவன் அவை ஆர் எங்களை
மறிக்க. நாங்கள் என்ன துவக்கை
தூக்கிக் கொண்டு சண்டை
பிடிக்கவே திரியிறம் துவக்கோடை
திரியிறவனை தேடிப் பிடிக்கட்டுமன்.”
அழுக்குப் படர்ந்த மேசை பிசுபிசுத்தது. கறுப்பாக விளிம்பு கட்டியிருந்த பிளாஸ்டிக் தட்டில் பொரித்த கடலை அளவுக்கு மிஞ்சிய உப்பும் தூளும் சகிதமாக.
கறைபடிந்த கிளாஸ்கள் அரைவாசி நிரம்பி இருந்தன ஞானரூபன் கையில் சிகரெட் அவன் முன்னால் இருந்த தவலிங்கம் கண்களை இடுக்கிக் கொண்டு இருந்தான்.
கனகசபை கடைவாசலில் எப்போதும் போல இரை தேடிக் காத்திருந்தான். என்னவோ தெரியவில்லை கடையில ஆட்கள் இல்லை.
பிரகாசம் இல்லாமல் எரிந்த மின்சார வெளிச்சத்தில் தூசுபடிந்த கண்ணாடி சோக்கேசும், மேசைகளும் கதிரை களும் இதர தட்டு முட்டுச் சாமான்களும் மங்கலாகத் தெரிந்தன.
கடலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டே ஞானரூபன் தவலிங்கத்தைப் பார்த்தான் தவலிங்கம் இப் போதும் கண்களை இடுக்கிய படிதான் இருந்தான்.
“என்னடாப்பா – ஏன் சோர்ந்து போய் இருக்கிறாய்,”
“நானோ -சா – ஒண்டும் இல்லை,” என்ற தவலிங்கம் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“இருக்கிறதை அடியன் மற்றத்தரம் எடுக்க வேண்டாமே, ”
“இதோடை காணுமடாப்பா – உங்கைபார் நேரமும் நல்லாய் போட்டுது: ஏழு மணி இருக்கும் இருட்டுக்கை போய் வேலியுக்க பதுங்கி இருக்கிற இந்தியன் ஆமிக்காரனிட் டை அடி வாங்க வேண்டி வந்திடும்,” என்ற தவலிங்கம் கிளாசை கையில் தூக்கினான்
”உனக்கு எப்பவும் அந்தரம் தான். ஆறுதலாய் அனு பவிச்சு தண்ணியடிக்க உனக்குத் தெரியாது. சந்தோஷ மாய் இருக்கிற நேரத்தில ஏன் உந்தக் கண்டறியாத கதை யெல்லாத்தையும் கதைக்கிறாய்” என்று சொன்ன ஞான ரூபனின் குரலிலும், உடலிலும் உற்சாகம் மிகுந்திருந்தது.
சிறிது நேரம் மெளனம் நிலவியது. ஞானரூபனின் கையில் இருந்த கிளாஸ் வெறுமையாகியது.
“மச்சான் நீ ஒண்டுக்கும் கவலைப் படாத உனக்கு வீட்டை போகப் பயம் எண்டால் நான் கொண்டே உன் னை விடுவன். ஆமிக்காரன் மறிச்சால் நான் கதை சொல்லு வன். அவை ஆர் எங்களை மறிக்க. நாங்கள் என்ன துவக் கைத்தூக்கிக் கொண்டு சண்டை பிடிக்கவே திரியிறம். துவக்கோடை திரியிறவனை தேடிப்பிடிக்கட்டுமன்,” என்ற ஞானரூபன்” கனகசபை அண்ணை” என்று உரக்கக் கூப்பிட்டான்.
“வாறன் தம்பி” என்றார் கனகசபை.
“கெதியாய் வாங்கோ அண்ணை. …. எடேய் தவலிங் கம் கிளாசைக் கெதியாய் முடியடா. சீமானோடை நான் படுறபாடு,” என்று முணுமுணுத்தான் அவன்.
“என்ன இண்டைக்கு உஷாரைக் காணேல்லை,” என்ற படி வந்த கனகசபை வெறுங் கிளாஸ்களை தூக்கிக் கொண்டு பின்பக்கம் போனான்.
ஞானரூபன் பொக்கற்றில் இருந்த சிகரெட்டை எடுத்து தவலிங்கத்திடம் கொடுத்து விட்டுத் தானும் ஒண்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.
கனகசபை கிளாஸ்களைக் கொண்டு வந்து “டப்’ ‘டப்” என வைத்தான். மஞ்சள் திரவம் கிளாஸினுள் ஆடியதை பார்வையினால் அளந்தபடி ஞானரூபன் சிறிது நேரம் இருந்தான்.
“மச்சான் உனக்குத் தெரியுமே, எங்கடை முதலாளி பேக்கள்ளன். ஒரு நாளைக்கு என்ரை கையால தான் அடி வாங்குவான்,” என்ற ஞானரூபன் பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாக தவலிங்கத்தைப் பார்த்தான்.
தவலிங்கம் அதை சுவாரசியம் இல்லாமலே கேட்டான்.
“அவரின்டை சேட்டையைப் பாரன் ஒரு மாதிரி அமளி இல்லாத நேரத்தில அவரின்டை சேட்டை பெரிய சேட்டை”
“ஏன்,” என்றான் தவலிங்கம்.
”பாவம் அந்தப் பெட்டையள். பக்கத்தில நிண்டு கதைக்கேக்க தற்செயலாய் நடக்கிற மாதிரி அதுகளின்ரை கையில தோளில தொட்டுத் தொட்டுக் கதைக்கிறான் டாப்பா. பார்த்துக் கொண்டு நிண்டால் பத்திக் கொண்டு தான் வரும் மச்சான் என்ன செய்யிறது. எண்டு பல்லைக் கடிச்சுக் கொண்டு இருக்கிறன்,” என்ற ஞானரூபன் உறு மினான் “உதுக்கேன்டாப்பா நீ மண்டையைப் போட்டு உடைக்கிறாய், நீ கொழுவிக் கொண்டு என்ன செய்யப் போறாய் இப்படி எத்தனை வேலையைக் குழப்பிக் குழப்பி கடைசியாய் இப்ப உந்த வேலையில வந்து நிற்கிறாய், பெட்டையள்தான் உதுக்கு ஏதும் செய்யலாம்,’ என்றான் தவலிங்கம் போடா மடையா, அதுகள் என்ன செய்யிறது. வேலையைத்தான் விட்டிட்டுப் போகலாம் ஆனால் வேலை யை விட்டுப் போட்டு அதுகள் என்ன செய்யிறது. நினைச்ச உடன வேலை தேட முடியுமே அதுவும் எண்பத்தியேழாம் ஆண்டுப் பிரச்சனை தொடங்கின பிறகு அதை இதை சாட்டாய் வைச்சுக் கொண்டு மாதம் மாதம் குடுக்கிற சம்பளத்தையே ஒழுங்காய் ஒருத்தனும் குடுக்கிறான்கள் இல்லை,” என்றான் ஞானரூபன்.
தவலிங்கம் ஞானரூபனை ஆச்சரியமாகப் பார்த்தான். ஞானரூபனிடம் கொஞ்ச தீவிரத்தன்மை இருக்கின்றது தான். ஆனால் அது சாதாரண நேரங்களை விட கொஞ்சம் தண்ணி உள்ளே போன பின்னர் தான் தீவிரமானதாக முனைப்புப் பெறும். எனவே அதன் பிறகு கத்திக் கொண்டு இருப்பான்.
தெருவால் நாலைந்து இராணுவ வாகனங்கள் விரைந்து போயின. அவை போன பின்னர் கனகசபை கடையை விட்டு இறங்கி அவை போன திசையைப் பார்த்தான்.
“ஏன் கிளாசை வைச்சுக் கொண்டு இருக்கிறாய் நேரம் போகுதெடாப்பா,” என்றான் தவலிங்கம்.
“எடவிசரா நான் எவ்வளவு முக்கியமான கதை கதைச் சுக் கொண்டு இருக்கிறன். நீ திரும்பத் திரும்ப கீறல் விழுந்த றைக்கோட் மாதிரி கத்திக் கொண்டு இருக்கிறாய்.” என்ற ஞானரூபன் கிளாசை எடுத்து ஒருதடவை இழுத்தான் கண்களை இறுகமூடி அதன் கசப்பினை அனுபவித்தான்.
‘சொல்லு மச்சான் உவன்களை என்ன செய்யிறது நீ இருந்து பாரன். உவன்களுக்கு நான் பாடம் படிப்பிக் காட்டி “என்று கோபித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான் ஞானரூபன்.
சட்டென்று அவன் உள்ளத்தில் காயத்திரி தோன்றி னாள். சிவந்த முகமும் கலங்கிய விழிகளுமாக அவள் அவனுள் வியாபித்தாள்.
காலையில் அவள் சொன்ன கதைகளைக் கேட்டபோது நெஞ்சத்தில் ஒரு தயக்கம் ஏற்பட்டது. காயத்திரி போன்ற பெண்கள் மாப்பிள்ளை பிடிக்கவா வேலைக்கு வருகின்றார் கள்? காயத்திரி பான்ஸி கடையிலும், அவள் சகோ தரி ரொபிக் கொம்பனியிலும் வேலை செய்வதால் தான் அவர் களது வீடு வீடாக இருக்கின்றது. என்று அப்போது அவன் யோசித்தான்.
குமுறி எழும் உணர்வுகளுடன் அதனைக் கொட்டித் தீர்க்க முடியாமல் கஸ்டப் பட்டுக் கொண்டு இருந்த காயத்திரியை அப்போது பார்க்க பாவமாக இருந்தது.
“மச்சான், அவள் சரியான பாவமடா” என்று தவ லிங்கத்தைப் பார்த்து ஞானரூபன் சொன்ன போது கண் கள் கலங்கியிருந்தன.
தவலிங்கம் சிரித்தான்.
“ஏன்டாப்பா நான் வெறியில் சொல்லுறன் எண்டு நினைக்கிறியே, எனக்கு இன்னும் நல்லாய் வெறி ஏறேல்லை மச்சான். நான் உண்மையாத்தான் சொல்லுறன் ஐஞ்சு குமருகள். தாய் தகப்பன் எண்டு ஏழு பேருக்காய் அவள் கஸ்டப்பட்டு உழைக்கிறாள். பார் எவ்வளவு பாவம் எண்டு ஆனால் தேப்பனுக்கு தண்ணியடிக்க காசில்லை எண்டு மாப்பிள்ளை பிடிக்கப் போறியோ எண்டு கேக்கிறாராம்”, “நாளைக்கு நாங்களும் இப்பிடித்தான். ஏன் இப்பவும் குறைவே…” என்று இழுத்தான் தவலிங்கம்.
”உனக்கு உந்த விசர்கதை தான் கதைக்கத் தெரியும்.” என்ற ஞானரூபன் கிளாசில் இருந்த மிச்சத்தையும் குடித்தான்.
கனகசபை படியேறி கடைக்குள் வந்தான்.
“இண்டைக்கு உங்கடை ராசியாக்கும், ஒருத்தரையும் காணேல்லை. சீ. ரி. பி. பொன்னுத்துரையும் பூலோகசிங்கமும் எங்கைபோய் துலைஞ்சினமோ இப்பவே நேரம் ஏழ ரையாய் போச்சு, நான் கடைபூட்டப் போறன்” என்றான் தவலிங்கம் இருந்த இடத்தை விட்டு எழுந்தான்”வா கெதியாய் வா – நேரம் போச்சு,” என்றான்.
ஞானரூபன் அவனைக் கோபத்துடன் பார்த்தான்.
”கொஞ்சம் அடிச்சால் உனக்கு மூளை குழம்பிப் போயி டும் பொறன் போவம் எங்கடை சந்தியில ஆமிக்காம் இருக்கேக்கையே நான் இரவு எட்டு மணிக்கு போறனான் ‘சரி -சரி இப்ப எழும்பு, அங்கை அம்மா ஒழுங்கையில நிண்டு கண்ணீர் விட்டுக் கொண்டு இருப்பா அம்மா அழத் தொடங்க எனக்கு ஐயா ஆட்டுக்காயத்தோடை நடுறோட் டில செத்துக் கிடந்தது தான் ஞாபகத்துக்கு வரும்,” என்றான் தவலிங்கம்.
“ஏன்டா அதுகளை யோசிச்சு கவலைப்படுகிறாய். உது களை மறக்கத்தானே நாங்கள் தண்ணியடிக்கிறது. இல் லாட்டி வேறை என்னத்துக்கு நாங்கள் வேலை மினைக் கெட்டு இந்தக் கடையில வந்து குந்தியிருந்து கொண்டு தண்ணியடிப்பான்,” என்ற ஞானரூபன் வாங்கைத் தள்ளிக் கொண்டு எழும்பினான்.
இருவரும் வெளியே வந்தார்கள். வெளியே இருள் கனத் திருந்தது. தூரத்தே தெருவோரத்து மின்விளக்குகள் சில ஒளிப் பொட்டுக்களாக மின்னின.
கடைவாசலில் அவர்களின் சைக்கிள்கள் அநாதரவாக இருந்தன.
“காலைமை அவள் அழுது கொண்டு சொன்னது இப் பவும் என்ரை கண்ணுக்க நிக்குது மச்சான், என்று சோகத்துடன் சொன்ன ஞானரூபனின் தலையை மெது வாகத் தட்டிக் கொண்டு “மச்சான் உன்ரை வீட்டில் உனக்கு இரண்டு பொம்பிளைச் சகோதரங்கள் இருக்கு எண்டதை மறந்து போனியோ,” எனக் கேட்டான் தவலிங்கம்.
ஞானரூபன் பட்டென்று துள்ளி விழுந்தான் “உனக்கு எப்பவும் உந்த விசர்கதை தான் கதைக்கத் தெரியும். அவைக்குத்தானே வெளிநாட்டில ஒரு பெரிய அண்ணை பெரிய வேலையோடை இருக்கிறார். எண்டு மறந்து போனியே”
தவலிங்கம் அதற்குப் பதில் சொல்லாமல் கடையை விட்டு இறங்கி சைக்கிளை எடுத்தான். ஞானபனும் சைக் கிளை எடுத்துக்கொண்டு உருட்ட ஆரம்பிக்க சட்டென்று அந்த வித்தியாசம் தெரிந்தது. சைக்கிளின் பின்டயர் ஒடுங் கிப் போய் இருந்தது. காற்று இல்லை.
“இஞ்சைபார் கஸ்டகாலத்தை,”
“சரி சரி சைக்கிளைத் தூக்கி கடையுக்க விடு இனி நாளைக்கு காலமைதான் காத்து அடிக்கிறதோ ஒட்டுற தோ எண்டு பார்க்கலாம். நான் உன்னைக் கொண்டு போய் விட்டிட்டுப் போறன்,’
“சீச்சி -நீ போ. நான் நடந்து போறன்,” என்ற அவன் சேட்டைப் போட்டுக் கொண்டு வெளியே வந்த கனகசபையிடம் சொல்லிவிட்டு சைக்கிளை கடைக்குள் ஏற்றினான்.
“சரி – சரி மச்சான் கெதியாய் வாவன்” என்ற தவ லிங்ககத்தின் அழைப்பை நிராகரித்த ஞானரூபன் ‘நீ போ டாப்பா கொஞ்சத்தூரம் தானே. நான் நடந்து போறன்” என்று சொல்லிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். ”சொல் லுறதைக் கேளடாப்பா,” என்றபடி தவலிங்கம் சைக்கிளை உருட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினான்
தவலிங்கம் போக வேண்டிய ஒழுங்கை முகப்பிலும் பிரயோசனப் படாமல் போய் ஞானரூபனைக் கேட்டுப் விட்டது. இருவரும் பிரிந்து கொண்டார்கள்.
ஞானரூபன் தங்கள் ஒழுங்கையில் இறங்கினான். நேரம் இரவு எட்டு மணியாகி இருக்கவேண்டும். ஒழுங்கைக் கரை யோரத்து வீடுகள் கடும் இருளில் தலை மறைவாகிப் போய் இருந்தன.
வானத்தில் நட்சத்திரங்கள் மட்டும் யாருக்குமே பயப் படாமல் ஒளிர்ந்து கொண்டிருந்தன.
காற்றில் மிதப்பது போல இருந்தாலும் ஞானரூபன் வெகு நிதானமாக நடந்தான். வீட்டை அண்மிக்க ஒழுங்கையில் வெளிச்சம் எட்டிப் பார்த்தது.
தங்கள் வீட்டுக்கு முன் வீடான. சண்முகத்தின் வீட்டு முன் விறாந்தை லைட் மட்டும் வெகுபிரகாசமாக எரிந்து கொண்டு ஒழுங்கையையும் சுகம் விசாரித்துக் கொண்டு இருந்தது.
ஞானரூபன் தன் நடையின் வேகத்தினைக் குறைத்துக் கொண்டு சண்முகம் வீட்டைப் பார்த்தான். வெளி விறாந் தைலைட் எரிந்து கொண்டு இருந்தாலும் ஆட்கள் யாரும் இல்லை.
திறந்திருந்த கதவின் ஊடாக வீட்டின் ஹோலில் ரீ.வி. எங்கே செயல் படுவது தெரிந்தது. சத்தமும் கேட்டது. யோ வசதியாக வீடியோ டெக் கிடைத்திருக்க வேண்டும். விடியும் வரை பரவாயில்லை. என்று ஞானரூபன் நினைத் தான்.
கணப் பொழுதில் பிரியாவின் ஞாபகம் வந்தது. கூட வே அவளது ”மரூண்” கலர் நெயில் பொலிசும் ஞாபகமானது. லோங்ஸ் பொக்கற்றில் அது பத்திரமாக இருந்தது.
அதனை என்ன செய்வது என்று நினைத்தான் சில நிமிடங்கள் சண்முகத்தின் கேற்றடியில் நின்று பார்த்தான். பிறகு கேற்றினைத் தொட்டுப் பார்த்தான். அது பூட்டப் பட்டு இருந்தது. ரீ. வி. வேலை செய்து கொண்டு இருப் பதால் சத்தம் போட்டுக் கூப்பிட்டாலும் கேட்காது.
இரவு எட்டு மணிக்குப் பிறகு வந்து நிண்டு யாரைக் கூப்பிடுவது என்று குழம்பிய அவன் பேசாமல் தங்கள் வீட்டுப் பக்கம் திரும்பினான்.
கேற்றினைத் தள்ள அது திறந்து கொண்டது வெளி விறாந்தை லைட் எரியவில்லை. வீட்டின் ஹோல் லைட் மட்டும் எரிந்து கொண்டு இருந்தது.
ஆட்களின் அமளியைக் காணவில்லை. எங்கே போ னார்கள் எல்லோரும்? குசினிப்பக்கம் நடந்தான். அப்பா சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். மேனகாவும், மனோகரி யும் சுவர் ஓரமாக அமர்ந்து இருந்தனர்.
ஞானரூபனுக்கு கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட்டது. சுவரைப் பிடித்துக் கொண்டு குசினியின் படிக்கட்டில் அமர்ந்தான்.
– தொடரும்…
– முள்முடி மன்னர்கள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1991, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.