முள்முடி மன்னர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2025
பார்வையிட்டோர்: 267 
 
 

(1991ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

“எண்பத்தி யேழில் பிரச்சனையான ஒரு 
மாதத்தில் அவர் நீண்ட தெருவில் 
நெடுஞ் சாணாய் விழுந்து கிடந்தார்.
தெருவோரத்து ஒற்றைப் பனை
மரத்தின் நிழல் அவர் முகத்தில்
விழுந்திருந்தது..” 

காலையில் வேலைக்குப் போகும் போது இருப்பது போல எதிர் காற்று உதைக்கவில்லை. ஓடும் வழத்திற்கு காற்று இருந்தபடியால் சைக்கிளை ஓடுவது இலகுவாக இருந்தது. 

சனங்கள் இல்லாத பஸ்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி வர மூச்சுத் திணறும் சனங்களுடன் பஸ்கள் யாழ்ப்பாணத் தில் இருந்து போய்க் கொண்டிருந்தன. 

நீலவானத்தில் சாம்பற் பூச்சு படர, மேற்கு வானமு. தின் அடிக்கோடி செந்நிறமாக ஜொலித்தது. றோட்டுக் கரையோரத்து சில வீடுகளில் பெண்கள் கேற்றடியில் தவம் இருந்தார்கள். 

மினித் தியேட்டருக்குப் பக்கத்துக் கடையில் எப்போதும் போல பிளேன் ரீ குடித்து, சிகரெட் புகைத்துப் புறப்பட்ட போது மாலை ஆறு மணியாகி விட்டது. 

“றோட்டு என்னமாதிரி வெளிச்சுப் போச்சு எண்டு பாரன் மச்சான்” என்றான் தவலிங்கம். 

“எங்கடை ஊரில் இருந்து பக்கத்து ஊருக்குப் போற தே வேறை நாட்டுக்கை போற மாதிரி இருக்கு, எங்கை யோ இருந்து வந்தவன் எங்களை எங்கடை சொந்த மண்ணில எப்பிடி யெல்லாம் ஆட்டிப்படைக்கிறான் பார். பிறகு எப்பிடி ஆறு மணிக்குப் பிறகு சனம் ஏன் றோட் டுக்கு வரப் போகுது. எங்களைப் போல ஆட்களைத் போலஆட்களைத் தவிர” என்றான் ஞானரூபன். 

“இப்பிடியான காலத்தில் இப்பிடிக் கூத்தடிக்கிற நாங் கள் எல்லாம் நோமலாக இருந்தால் எப்பிடி இருப்பம்” தவலிங்கம் கேட்டான். 

“இப்ப நாங்கள் செய்யிறதுகளை ஒரு கூத்தடிப்பாய் நான் நினைக்கேல்லை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாய் தங்கடை உணர்வுகளை வெளிப்படுத்தினம். நாங்கள் இந்த வழி எங்களுக்கு வேறை எங்கையும் போக விருப்பம் இல்லை. வெளிநாடு போகக்கூட மனம் ல்லை. வேறை நாங்கள் என்ன செய்யலாம். எங்கடை மண்ணை ஆக்கிரமிச்சுக் கொண்டு இருக்கிறவனோ னாடை சண்டை பிடிக்கத் தான் எங்களால முடியுமே அவன்களோடை சண்டைப் பிடிச்சு நாங்கள் ஏன் வீணாய் சாகவேணும் ஆனால் எங்களால. எதையும் பார்த்துக் கொண்டு இருக்கவும் மனமில்லை என்றான் ஞானரூபன், தவலிங்கம் சிரித்தான். 

”நீ நல்லாய் சிரி,” என்ற ஞானரூபன். 

“கொஞ்சம் சைக்கிளை நிற்பாட்டு மச்சான் சிகரெட் வேண்ட வேணும்,” என்றான். 

“என்னடாப்பா நீ இப்பதான் வெளிக்கிடேக்க குடிச்சனிதானே” 

“இல்லை மச்சான் குடிக்க வேணும் போல இருக்கு”, என்ற அவன் அரசடிச் சந்திக் கடையில் சைக்கிளை நிறுத்தினான். 

நான்கு சிகரெட்டுகள் வாங்கி இரண்டை பொக்கற்றில் போட்டுக் கொண்டு. ஒன்றை பற்ற வைத்துக் கொண்டு மற்றதை தவலிங்கத்திடம் கொடுத்தான். அவனும் பற்ற வைத்தான். இரண்டு பேரும் ஒருதடவை நன்றாக புகை யை இழுத்து அனுபவித்து சைக்கிளில் பயணப்பட்டார்கள். 

வழியில் ஒரு இராணுவ தடைமுகாமடியில் இறங்கி அடையாள அட்டை காட்டிக் கொண்டு அப்பால் போக வேண்டியிருந்தது. 

சந்திக்கு வந்த போது மாலை ஆறு முப்பதாகி விட்டது. எப்போதும் போலவே ஹர்த்தால் காலத்து சந்தி போல வெறிச் சோடிப்போய் இருந்தது. 

தேனீர்க் கடை ஒன்று முழுமையாக திறந்திருக்க அதன் பக்கத்தில் இருந்த கனகசபையின் கடை ஒற்றைக் 
கதவில் காணப்பட்டது. 

அதுவும் ஒரு தேனீர் கடையாகத்தான் இருந்தது. வியா பாரம் நன்றாக எடுபடாமல் போகவே கனகசபை வழியை மாற்றிக் கொண்டான். 

ஒவ்வொரு நாளும் பிழையில்லாமல் போத்தில்கள் பறக் கும். காலை எட்டு மணிக்கு கடைமுகம் மலர்ந்தாலும் மத்தியானமும் பின்னேரமும் நாலு மணிக்குப் பின்னரும் வியாபாரம் சூடு பிடிக்கும் சைக்கிள்களும் மோட்டார் சைக்கிள்களும் கடை வாசலில் பழிகிடக்க அதில் வ வந்த வர்கள் எச்சில் படுத்தப்பட்ட கிளாஸ்களை மேலும் எச்சிற் படுத்தி,” தண்ணி” அடித்துக் கொண்டு இருப்பார்கள். 

அவித்த முட்டையும், அரை அவியல் கறியும் பொரித்த சமாச்சாரங்களும் கனகசபை பக்குவமாகப் பரிமாறுவதால் சர்வதேசப் புகழ் பெற்ற கடையாகி விட்டது. 

கேட்பதற்கு ஆள் இல்லை: தடுப்பதற்கு சட்டங்கள் இல்லை. என்னும் போது எப்படித் தடைப்படும் வியா பாரம். கனகசபை உள்ளேயும் கவனித்துக் கொண்டு அடிக் கடி வெளியேயும் வந்து பார்ப்பான். 

வழக்கமான வாடிக்கை யாட்களை காத்திருந்து அழைப் பது போல காதல் வலை வீசுவான், கனகசபையின் கடைக் குப்போக வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் வருகின்ற வர்களைக் கூட வழி மடக்கி வார்த்தையாடி – தண்ணி காட்டி விடுவான். 

ஞானரூபனுக்கும் தவலிங்கத்திற்கும் அந்தச் சந்தி வரை தண்ணி அடிக்கும் எண்ணமே இருக்கவில்லை. சில வேளை களில் இண்டைக்கு குடிக்க வேணும்,” என்ற எண்ணம் சைக்கிளில் வரும் போதே வந்துவிடும். பல வேளைகளில் கனகசபையின் முக தரிசனம், பின்னர் தொடங்கும் கதை யும் சேர்ந்து குடிக்கச் செய்து விடும். 

கையில் காசு இருக்க வேண்டும் என்பது முக்கியம் அல்ல. அவர்களைக் குடிக்கப் பழக்கிய கனகசபை அப்படி அவர் களை பரிதவிக்க விட்டு விடமாட்டான் அவர்கள் கடனுக்கும் குடிப்பார்கள். 

அவர்கள் படிக்கும் காலத்திலே கனகசபை கடை முக்கியமான இடம் சுல்லூரிக்குப் போகும் போதும் வரூம் போதும் ரியூஷனுக்கு வெளிக்கிட்டாலும் கனகசபை கடை ஒரு தங்குமடம், ரீ குடிப்பது என்று தொடங்கி, சேர்ந்திருந்து கும்மாள மடிப்பது, கள்ளச் சிகரெட் புகைப்பது. என்று எல்லாமே அங்குதான் அரங்கேறின. 

அப்போது அவர்களில் எட்டுப் பேர் இருந்தார்கள். இப்போது உயிருடன் இருப்பவர்கள் ஐந்து பேர் தான் அதில் மூன்று பேரும் ஆளுக்கு ஒரு நாடாக வெளிநாட்டில் அகதியாக இருக்கின்றார்கள் இறந்து போய் விட்ட மூன்று பேரும் விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித் தவர்கள் தான். 

கனகசபை கடையுடன் உயிரும் பிராணனுமாக ருந் தவர்கள் தவலிங்கமும் ஞானரூபனும் தான். 

தேனீர் கடையாக இருந்த தன் கடையை சில்லறை யாகச் சாராயம் விற்கும் கடையாக மாற்றிக் கொண்டான் எப்போதாவது கொஞ்சம் கொஞ்சமாக குடித்துப் பழகி யிருந்த ஞானரூபனும் தவலிங்கமும் முன்னேறியதும், குடிக் கும் கலையில் நிபுணர்களாக மாறியதும் அதன் பின்னர் தான். 

கனகசபையின் கடை இருந்த சந்தி அவர்களின் ஊரின் தொடக்கத்தில் இருந்தது. தவலிங்கமும் ஞானரூபனும் பிரிந்து கொள்வதும் அந்தச் சந்தியில் தான். 

“என்னடாப்பா இண்டைக்கு கனகசபை கடைவாசலில் கன சைக்கிள்களைக் காணேல்லை,’ என்றான் ஞானரூபன். 

“சாமான் இல்லையோ,'” 

”அப்பிடி இருக்காது. கனகசபை வலு விண்ணன்”, ஞானரூபன் பதில் சொன்னான். 

அவர்கள் கடையை அண்மித்த போது கடை வாசலில் நான்கு சைக்கிள் மாத்திரம் நின்றன. உள்ளே யாரோ, உரத்த குரலில் கத்துவது கேட்டது. 

”உள்ளுக்க,சி. ரி. பி. பொன்னுத்துரை போல கிடக்கு’ ஒரு சொட்டுச் சாராயம் உள்ளுக்க போக மனிசன் கத்தத் தொடங்கி விடும்.” எனச் சொல்லிக் கொண்டு ஞானரூபன் சிரித்தடன். 

அது ஒரு நாற்சந்தி தான். என்றாலும் பிரதான தெ ருவை ஊடறுத்துச் சென்றது ஒழுங்கைப் பாதை தான். 

பிரதான தெருவின் இரண்டு பக்கமும் கொஞ்சக் காலத் திற்கு முன்னர் பல கடைகள் இருந்தன. ஒரு புறம் கனக சபை நாகலிங்கம் போன்றோரின் தேனீர் கடை.களும் சங் கரப்பிள்ளையின் பலசரக்குக் கடையும் இருந்தன, 

எதிர்ப் புறம் ஒரு சலூன் ஒரு லோன்றி பலசரக்கும் மரக்கறியும் விற்கும் ஒரு பெட்டிக்டை. 

ஒரு காலத்தில் இவை எல்லாவற்றிலும் நல்ல வியா பாரங்கள் நடந்தன. என்பதை பின்னர் வரும் சரித்திரம் சொல்லும். எப்போதும் ஆரவாரமிக்க கடைத் தெருவாக அது இருந்தது. என்பதை நாளைய சந்ததி நம்புமா? என் பதும் கஸ்டமே. 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொம்பர் போட்ட குண்டுகளால் சலூன் லோன்றி போன்றவை அடியோடு அழிந்து போய் விட்டன. கனகசபையின் கடைப் பகுதியும் அரைகுறையாகத்தான் மிஞ்சியது. 

முற்றாக இடிந்த பகுதி இடிந்த பகுதியாகவே தான் இருக்கின்றது. இன்னமும் அதற்கு சாபவிமோசனம் கிட்ட வில்லை. மறுபிறப்பு கிடைக்காத பலவிதமான சங்கதிகளு டன் அவையும் சேர்ந்து விட்டன. 

ஞானரூபனும், தவலிங்கமும் இடிந்து கிடந்த கடை களுக்கு முன்னால் சைக்கிளை நிறுத்தினார்கள். 

“இண்டைக்கு நான் வேளைக்குப் போக வேணும்” என்றான் தவலிங்கம் 

‘‘ஏன்‘” 

“ஒவ்வொரு நாளும் பிந்திப் போறது எனக்கு என்ன வோ அரியண்டமாய் இருக்கு, அம்மாதானே தனிய வீட் டில் வேறை ஆர் இருக்கினம்,” 

“பக்கத்தில உங்கடை சொந்தக்காரர் இருக்கினம் தானே.” 

“இருந்தாலும் எங்கடை வீட்டில அம்மா தனிய. முந்தி எண்டால் அக்காவும் இருந்தா. இப்ப அவ கலியாணம் முடிச்சுப் போன பிறகு அம்மா பாடு கஷ்டம். இப்ப தனிய இருந்து, ‘அப்பா’ இருந்தால் எனக்கு எவ்வளவு ஆறுதல் எண்டு அடிக்கடி சொல்லுறது என்னை மறைமுகமாய் குத் துற மாதிரி இருக்கு.” 

ஞானரூபன் எதுவுமே கூறாமல் தவலிங்கம் சொன்ன தைக் கேட்டான். ஆசிரியர் வேலை பார்த்த கனகலிங்கத் தாருக்கு ஒரு மகளும், தவலிங்கமும் தான் பிள்ளைகள். 

எண்பத்தியேழில் பிரச்சனையான ஒரு மாதத்தில் அவர் நீண்ட தெருவில் நெடுஞ்சாணாய் விழுந்து கிடந்தார். தெருவோரத்து ஒற்றைப் பனை மரத்தின் நிழல் அவர் முகத்தில் விழுந்திருந்தது. திறந்திருந்த விழிகள் நிலைக் குத்தாக நின்றன. நெஞ்சத்தின் வழிபாக சுரந்த செங்குருதி தெருவை நனைத்திருந்தது. தமிழ் மண்ணை ஆக்கிரமிக்க வந்த இந்திய இராணுவம் கொன்ற அப்பாவிகளில் அவரும் ஒருவர் ஆனார். 

தவலிங்கத்தின் அப்பா அப்படித்தான் செத்துப் போ னார். அப்பாவைத் தேடிவந்த தவலிங்கமும் அம்மாவும் அதிர்ந்து போனார்கள். நடுத் தெருவில் விழுந்து குளறும் அம்மாவையே பார்த்துக் கொண்டு தெருவோரத்தில் குந்தி விட்டான் தவலிங்கம் இருந்ததெல்லாம் கொடுத்து அக் காவுக்கு கலியாணம் செய்து கொடுத்தாச்சு, அப்பாவின்ரை பென்சன் வீடோ பென்சனாக அம்மாவுக்கு வருகுது எனக் குக்கூட அம்மா கொஞ்சக்காணி வைச்சிருக்கிறா, எங்களுக்கு பொருளாதாரப் பிரச்சனை இல்லை. அம்மாவின்ரை தனிமைதான் ஒரு பிரச்சினை” என்றான் தவலிங்கம். 

ஞானரூபன் இடிந்த கட்டிடங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். சலூன் வைத்திருந்த தங்கராசாவும் லோன்றி வைத்திருந்த பொன்னம்பலமும் இப்போது வரு கின்ற வருமானத்துடன் குடும்பத்தைச் சமாளிப்பார்களா? ஒரு நாளைக்கு ஒரு தரம் ஆவது சாப்பிடுவார்களா? 

கடைச் சொந்தக்காரர் புதிதாக கடைகட்டி வீடியோக் கடைக்கும், மினித்தியேட்டருக்கும் கொடுக்கப் போவதாக ஊரில் பேசிக் கொண்டார்கள். 

“எனக்கு உன்னையும் உன்னர குடும்பத்தையும் நினைச்சால் தான் கவலை” 

“ஏன்” என்று கேட்ட ஞானரூபன் முகத்தில் தீவிரத் தன்மை தெரிந்தது. 

”உனக்கு இன்னும் இரண்டு பெண் சகோதரங்கள் இருக்கே, அது உனக்குப் பொறுப்புத் தானே, நீ என்ன தான் கூத்தடிச்சாலும் அது உனக்குப் பிரச்சனை தானே, 

ஞானரூபனின் முகம் சட்டென்று மாற்றம் அடைந்தது. ஆர் சொன்னது எனக்குப் பொறுப்பு எண்டு. எனக்கு என்ன வில்லங்கம். தங்கடை பிள்ளையளை என்ன செய்யி றது எண்டு அப்பருக்கும் அம்மாவுக்கும் தெரியும் தானே,’ என்றான் ஞானரூபன். 

தன் கடைக்கு வெளியே வந்த கனகசபை இருவரை யும் கண்டான். 

“என்ன ஞானரூபன் உதென்ன வேலை, நான் வந்து கூப்பிடவேணும் எண்டே நிற்கிறியள். வாங்கோவன்,” 

“இல்லை. நாங்கள் போக வேணும் ” என தவலிங்கம் சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்தான். 

“நான் போக வேண்டாம் எண்டு சொல்லேல்லை களைச்சுப்போய் வந்திருப்பியள், வாங்கோவன். ஒருக்கா அடிச்சிட்டுப் போகலாம்,’ என்ற கனகசபை கடையை விட்டு இறங்கி அவர்களை நெருங்கினான். 

தவலிங்கத்தின் மனத்தில் வேதனை பிறந்திருந்தது. ஞானரூபன் குழம்பிப் போய் இருந்தான். கனகசபையின் வார்த்தை ஜாலங்களும் அப்போதைய நிலையும் சேர்ந்து அவர்கள் மனத்தை மாற்றியது. 

உள்ளே போய் அதிக நேரம் இருக்க வில்லை. சிகரெட் டைப் பற்றவைத்துக் கொண்டு மீண்டும் வெளியே வந்த போது கனகசபையின் பக்கத்துக் கடையான நாகலிங்கத் தின் தேனீர்க் கடை பூட்ட ஆயத்தமாகி இருந்தது. 

ஏற்கனவே வெறியேறிப் போயிருந்த இரண்டு பேர் கனகசபையின் கடை வாசலில் அமர்ந்திருந்தார்கள். ஒரு வர் சி.ரி.பி பொன்னுத்துரை மற்றது பூலோகசிங்கம். “நேற்றைக்கு வெறியேறி நாங்களும் உப்பிடித்தான் இரவு எட்டு மணிவரை உதிலை இருந்திருக்க வேணும்,” என்று சொல்லிச் சிரித்தான் ஞானரூபன். 

“கனகசபை கடை. பூட்டேக்க தானே எங்களை எழுப் பிக் கலைச்சது,” 

“வெறி எண்டாலும் உதெல்லாம். ஞாபகமாய் இருக்கு”

“சைக்கிளில் தானே வீடுகளுக்குப் போனனாங்கள், ‘ என்றான் தவலிங்கம் 

“அப்ப என்ன வெளிக்கிட்டாச்சோ. இண்டைக்கு வேளைக்குப் போல,” எனக் கேட்டபடி வெளியே வந்தான் கனகசபை, 

“ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்கு நிண்டு மினைக்கெட்டால் எங்கை போய் முடியும்,” எனக் கேட் டான் தவலிங்கம். 

“எனக்கென்னப்பா – நாட்டில இப்ப இருக்கிற நிலை மை தொடர்ந்து இருக்க வேணும். அப்பதான் என்ரை வியாபாரம் ஒழுங்காய் நடக்கும். நானும் என்ரை வயித் தை நிரப்பலாம். அப்பநாளைக்கு வாங்கோவன்,” என்றான் அட்டகாசமாக சிரித்துக் கொண்டு கனகசபை. 

தவலிங்கம் அவனை விநோதமாகப் பார்த்தான் “எப் பிடி இருக்கு கதை பாத்தியே,” எனக் கேட்டான் தவலிங்கம் இதைத்தவிர வேறை மாறிக் கதைச்சால் தான் புதினமாய் நினைக்க னேணும். அவனவனுக்கு என்னென்ன தேவையோ அவனவன் அப்பிடித்தான் கதைப்பான்,” ஒவ் வொருத்தனும் தன்ரை தன்ரை விருப்பப்படி தான் வாழ விரும்புவான். அது இயல்பு தானே. எனக்கும் உனக்கும் என்ன பிரச்சினை. தண்ணி அடிச்சு சந்தோஷமாய் இருந்தால் காணும், அது மாதிரித்தான் எல்லாருக்கும்.” என் றான் ஞானரூபன். 

சந்தியில் இருந்து புறப்பட்டு தவலிங்கம் தங்கள் ஒழுங் கையால் திரும்ப ஞானரூபனும் தனது ஒழுங்கைக்குள் இறங்கினான். 

இருள் ஆக்கிரமிப்பாளராக மாறியிருந்தது. அடிவானத் தில் ஒளிப் பொட்டாக நிலவு முகம் காட்டிற்று. உயர்ந்த மரங்களில் இலைகள் அதன் கதிர்களால் பொன்னாய் பள பளத்தன. 

நீண்டிருந்த ஒழுங்கையில் வெறுமை களிநடனம் புரிந் தது. ஒழுங்கைக் கரையோர வீடுகள் சிலவற்றில் தான் வெளி மின் விளக்குகள் எரிந்தன. 

தங்கள் வீட்டுக்குக் கிட்டவர யாரோ பெரிதாக சத்தம் போட்டுப் பேசுவது கேட்டது. சைக்கிளின் வேகத்தினைக் குறைத்தான். 

எதிர் வீட்டின் முன் விறாந்தை மின்விளக்கு வழக்கம் போல எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சம் ஒழுங் கையிலும் படம் காட்டிற்று. 

எதிர் வீட்டில் குடியிருப்பவர்கள் அந்த வீட்டுக்கு வந்து ஆறு மாதங்கள் இருக்கும் அந்த வீட்டில் இருந்தவர்கள் குடும்பத்தோடு கனடா போக வீட்டைப் பாதுகாக்க வாட கை இல்லாமல் களரவ விருந்தினர்களாக இப்போது இருப்பவர்கள் வந்திருக்கின்றார்கள். 

மூன்றுபெண்கள் மூத்தவளுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. கல்லானாலும் கணவனுக்காக காத்திருப்பவர்கள் இரண்டு பேர், சிறுவர்கள் இரண்டு பேர், பன்னிரண்டு பத்துவயதுகளில், வீட்டுக் கூரையும் மாமரக் கிளைகளுமாக இருப்பார்கள். இல்லா விட்டால் ஒழுங்கையில் பந்தடிப் பதாகச் சொல்லிக் கொண்டு ஒழுங்கையால் போவோரை பந்தடிப்பார்கள். 

குடும்பத்தலைவரான சண்முகம் வெகு நேர்த்தியாக உடையணிந்து காலையில் தான் போவார். மாலையில் ஒழுங்கை வேலிகளைத் தடவிக் கொண்டு வருவார். அர சாங்க திணைக்களம் ஒன்றில் வேலை புரிந்தவர் அவர். ஏதோ தில்லுமுல்லு புரிந்ததால் வேலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டு உள்ளார் என்று கேள்வி, என்றாலும் அவளுக்கு சில செல்வாக்குகள் இருப்பதால் அதைவைத்து அப்பாவிகளைப் பதம் பார்த்துப் பிழைத்துக் கொள்வதாகச் சொல்லுகின்றார்கள். 

ஞானரூபனுக்கு சண்முகத்தின் கடைசிப் பெண் பிரியா வைத் தான் தெரியும். அவளுக்கு மூத்தவளான பிரதி பாவையும் தெரியும் தான். 

ஆனால் வந்த அடுத்த நாள் காலையே ஞானரூபனைப் பார்த்துச் சிரித்து. 

“எங்கை ரவுணுக்கே போறீங்கள். வரேக்க…” என்று பேச்சுக்கு அழைத்தவள் பிரியா தான். 

– தொடரும்…

– முள்முடி மன்னர்கள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1991, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *