முள்முடி மன்னர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 15, 2025
பார்வையிட்டோர்: 277 
 
 

(1991ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12

“என்ரை பிள்ளை இயக்கத்துக்குப் போட்டுது எண்டு
ஆரோ அநியாயப்படுவார் இந்தியன் ஆமிக்குச்
சொல்லிப் போட்டான்கள். அதுதான் வந்தவன்கள் 
வீட்டில இருந்த எங்களையெல்லாம் என்ன சித்திரவதைப்
படுத்தினாங்கள் தெரியுமே.” 

பொருட்களை வாங்க சனங்கள் வரிசையாக நிற்பதைப் போல நோயாளர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். 

போட்டிருந்து நீண்ட வாங்குகளில் நெருக்கித் தள்ளிக் கொண்டு இருப்பவர்களை விட நின்று கொண்டிருந்தவர்கள் அதிகம். 

இண்டைக்குப் பின்னேரம் இரண்டு மணி ஆனாலும் டொக்டரிட்டைக் காட்டச் சந்தர்ப்பம் வருமோ” என்று ஞானரூபன் நினைத்தான். 

வழக்கத்தை விட இன்று வீட்டை விட்டுப் புறப்படவே நேரமாயிற்று. பிறகு இடையில் இந்திய இராணுவத்தின ரின் திருவிளையாடல்களால் மேலும் நேரம் போய் விட்டி ருந்தது. 

ஆஸ்பத்திரிக்கு வந்து சேரும் போதே நோயாளர்களின் வரிசை எல்லை மீறி இருந்ததை கண்டான். கார்ச்சாரதி யின் உதவியுடன் தணீர் நடை பயின்று வந்து சேர்ந்த போது மனத்தில் நிம்மதி இருக்கவில்லை. 

காரின் கதவை ஒங்கியடித்து. “”எடடாகாரை” என்ற இந்திய இராணுவத்தின் நாட்டாண்மைக் குரலின் பின்னணியில் தவலிங்கம் தன்னைப் பார்த்த பார்வையில் இழையோடிப் போயிருந்த சோகத்தின் நினைப்பு அவனுக்கு வந்தது. 

நெஞ்சத்தை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வே தனை ஏற்பட்டது. நெஞ்சில் பெரும் சுமை ஏறி மூச்சு விடக் கஸ்டமாக இருப்பது போலவும் இருந்தது. 

பெரிதாக குழறி அழுது வேதனைகளைக் கொட்டித் தீர்த்தால் சிறிது சுமை குறையும் தான் ஆனால் என்ன செய்வது. 

முகங்களில் வியர்வை குமிழ் குமிழாகப் பூத்திருக்க. வரிசையாக நின்ற சகலரினதும் முகங்களும் பொலிவு இழந்து தான் இருந்தன. எல்லோர் முகங்களிலும் வேதனை தான். எல்லோருக்கும் தனியே நோய் வேதனை மாத்திரமா? 

சென்ற தடவை கொஞ்சம் நேரத்துக்கு வந்த படியால் வாங்கில் இருக்க இடம் கிடைத்திருந்தது. எதிர் வாங்கில் கவர்ச்சியும் கருமை நிறமும் கொண்ட இளம் பெண்ணொ ருத்தி அமர்ந்திருந்தாள். எண்ணெய் பூசினாற் போல அந்த கருமை பளபளத்தது. 

“எப்பிடி இருக்கு மச்சான்” என்றான் ஞானரூபன்.

“ஏன் கேட்கிறாய்” என்று கேட்டான் தவலிங்கம்.

”கறுப்பு எண்டாலும் செந்தளிப்பாய் இருக்கு” எனக் காதுக்குள் குசுகுசுத்தான் ஞானரூபன். 

அன்று அவர்கள் சிரித்துக் கதைத்து என்ன சந்தோஷ மாக இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அந்த சந்தோஷ மும் இல்லை. தவலிங்கமும் இல்லை. 

வழியில் தவலிங்கம் இறக்கப்பட்ட பின்னர் கார் புறப் பட்ட போது ஞானரூபன் கண்கள் கண்ணீரில் கரையத் தொடங்கின. 

“தம்பி நீரும் சுகமில்லாத ஆள் கண்டபடி யோசிக் காதேயும். ஏதோ நடந்தது நடந்திட்டுது. இனிப் பார்க்க வேண்டியதைப் பார்க்க வேண்டியது தான். நாங்கள் காரை இனித் திரும்பிக் கொண்டு போனால் பிரச்சினை” என்றார் கார்சாரதி. 

‘அப்ப என்ன செய்யிறது”. என்ற ஞானரூபனின் குரல் வேதனையால் உடைந்து போய் இருந்தது. 

“கிட்டடியில் ஆரேம் தெரிஞ்சாக்கள் இல்லையே. சொல்லி விட்டால் போய்ச் சொல்லுவினம் தானே. தோட் டில் பாருமன் ஆரேம் தெரிஞ்சாக்கள் வரியினமே எண்டு,”

“எனக்கு ஆஸ்பத்திரிக்கு போகவே விருப்பமில்லை. திரும்பிப் போனால் நல்லது போல கிடக்கு.” 

“தம்பி எனக்கு உம்மடை மனநிலை விளங்குது. ஆனால் என்ன செய்யிறது. நீரும் கட்டாயம் ஆஸ்பத் திரிக்குப் போய்க் காட்டத்தானே வேணும். ஏதோ நல்ல காலம் அவன்கள் உம்மைச் சந்தேகப்படேல்லை. உம்மடை சினேகிதன் மாதிரி உம்மையும் சந்தேகப்பட்டிருந்தால்நிலை மை என்ன மாதிரி இருக்கு மெண்டு யோசிச்சுப் பாரும். நீர் திரும்பிப் போய் பெரிசாய் என்ன நடக்கப் போருது. ஆனபடியால் நீர் ஆஸ்பத்திரிக்கு வாரும்.” என்று வெகு நிதானமாக கார்ச் சாரதி சொன்னார். 

சற்றும் எதிர்பாராத விதமாக தவலிங்கம் வீட்டுக்கு எதிர்வீட்டுக் காரரான பொன்னம்பலத்தார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். காரை நிறுத்தி அவரிடம் விபர மாகச் சொல்லி அவரை அனுப்பிய பின்னர் தான் கொஞ் சம் ஆறுதல் ஏற்பட்டது. ஞானரூபனுக்கு. 

“பொன்னம்பலம் போய் தவலிங்கம் வீட்டை சொல்லி என்ன நடந்திருக்கும் அவன் அம்மா என்ன செய்வாள். தவலிங்கம் இப்ப என்ன செய்து கொண்டு இருப்பான்.” என்ற நினைவுகள் அவன் மனதில் உருவாகின. 

திடீர் என ஆஸ்பத்திரியின் பிரதான வாசலில் அமளி ஏற்பட்டது. வரிசையாக சில வாகனங்கள் வந்து நின்றன. 

அவற்றின் கதவுகள் திறபட்டு பின்னர் ஓங்கியடித்து மூடும்சத்தம் காதைப் பிளப்பது போலக் கேட்டது. 

ஒருவகை நிசப்தம் நிலவிய அந்தப் பகுதியில் அவர் களின் கடூரமான பேச்சுச் சத்தம் எல்லோரையும் பரபரப்பில் ஆழ்த்திற்று. 

வாகனங்களில் இருந்து இறங்கிய இந்திய இராணுவத் தினர் செங்குருதியால் குளித்திருந்த இருவரை தூக்கிக் கொண்டு வந்தார்கள். தோளில் தூங்கிய துப்பாக்கிகளும், முகத்தில் தொங்கிய அலட்சியங்களுமாக அவர்கள் சனங்களை ஊடறுத்துக் கொண்டு நடந்தார்கள். 

உயிருள்ள மனிதர்களா அல்லது சடலங்களா என்று. யாருமே உணராத நிலையில் அவற்றினை ஒப்படைத்து விட்டு வந்த மாதிரியே விளையாட்டு மைதானத்தில் விளை யாடி விட்டு சந்தோஷமாகப் போகும் விளையாட்டு வீரர் களைப் போல போனார்கள். 

மருண்டு சோர்ந்து போய்க் காணப்பட்ட சனங்கள் அதற்குப் பின்னர் தான் நிம்மதி மூச்சு விடுபவர்கள் போல காணப்பட்டார்கள். 

“சூட்டுக் காயங்களோ” என்று கேட்டான் ஞானரூபன். 

“அப்பிடித்தான் இருக்க வேண்டும். சரியான இரத்தம் போயிருக்கு.” என்றார் கார்ச் சாரதி. 

“செத்துப் போச்சினமோ,” 

“என்னெண்டு தெரியேல்லை,” 

“பார்த்தால் அப்பிடித்தான் தெரியுது.” என்றான் ஞானரூபன். 

“செத்துப் போய் இருந்தாலும் புதினமில்லை. ஏன் தெரியுமே தம்பி. இந்த ஆஸ்பத்திரி எண்டு இல்லை. எல்லா ஆஸ்பத்திரிக்கும் ஒவ்வொரு நாளைக்கும் உவன்களிட்டை சூடு வாங்கியோ. அடி வாங்கி காயப்பட்டோ, ஆட்கள் வந்த படியதான் இருக்கினம் செத்துக் கொண்டும் தான் இருக்கினம்” என்றார் கார்ச் சாரதி. 

ஞானரூபனுக்கு மீண்டும் தவலிங்கத்தின் நினைப்பு வந்தது. தாளமுடியாத சோகம் மீண்டும் அவனுள் எழுந்தது. 

இராணுவத்தினர் கொண்டு வந்த இரண்டு பேரையும் கண்டவுடன் முதலில் அவன் அணிந்திருந்த ஆடைகளைத் தான் பார்த்தான். அதன் பின்னர் தான் சிறிது ஆறுதல் ஏற்படது. இப்போது அந்த ஆறுதல் மறைந்து போயிற்று 

அவர்களின் முன்னால் கலைந்த தலையும் கறுத்து சிறுத்த முகமுமாய் ஒரு பெண் நின்றிருந்தாள். நடுத்தர வயதிருக்கும். 

வெளிறிச் சிதைந்த சேலையும் அதற்குப் பொருத்த மில்லாத சட்டையுமாக வறுமை அவளில் கொலுவிருந்தது இரண்டு கைகளிலும் கட்டுப்போட்டிருந்தது. 

”என்னம்மா நடந்தது” என்று கார்க்காரர் தான் கேட்டார். 

அந்தப்பெண் திரும்பி கார்ச்சாரதியைப் பார்த்தாள். முகத்தில் எந்தவிதமான மாறுதல்களும் ஏற்படவில்லை. 

“இரண்டு கையிலையும் காயமோ?” 

“இல்லைத் தம்பி” எனப் பதில் சொன்னாள் அந்தப் பெண். 

“அப்ப” 

“இரண்டு கையும் முறிஞ்சு போச்சு” 

“சா” என்ற கார்ச்சாரதியின் முகத்தில் கவலை தோன்றியது. ஞானரூபனும் பரிதாபமாக அந்தப் பெண் ணைப் பார்த்தான். 

“என்ன நடந்தது” 

“சனியன் பிடிச்ச காலம் தம்பி. இஞ்சை பிறந்திருக்கக் கூடாது. தம்பி அதுவும் தமிழராய்” என்று சொன்ன பெண் சி து நேரம் மெளனமாக இருந்து விட்டு மீண்டும் சொன்னாள். “ஏன் தம்பி தேவையில்லாமல் கதைப்பான் கதைச்சு என்ன பிரயோசனம் எங்கடை தலைவிதி அனுபவிக்கிறம்” என்றாள். 

ஞானரூபனுக்கு அந்தப்பெண்ணின் கதைகளில் அக்கறை பிறந்தது. மீளமுடியாதசோகம் அவளுள் ணைந்திருப்பதை உணர்ந்தான். 

“சொல்லுங்கோ அம்மா என்ன நடந்தது” என்றான்.

“சொல்லி என்ன பிள்ளை செய்யிறது. எனக்கும் உன்னைப் போல ஒரு பெடியன். அவனைத் தேடித்தான் வந்தவன்கள் வேலியையும் பிரிச்சு என்ரை வீட்டையும் நாசமாக்கிப் போட்டுப் போட்டான்கள்” என்று சொல்லும் போதே இதுவரை இருந்த இறுக்கம் போய் அந்தப் பெண் ணின் குரலில் கசிவு ஏற்பட்டிருந்தது 

“என்ரை பிள்ளை இயக்கத்துக்குப் போட்டுது எண்டு ஆரோ அநியாயப் படுவார் இந்தியன் ஆமிக்குச் சொல்லிப் போட்டான்கள். அதுதான் வந்தவங்கள். வீட்டில இருந்த எங்களையெல்லாம் என்ன சித்திரவகைப் படுத்தினாங்கள் தெரியுமே. அந்தக்கவலையை ஆரிட்டைப் போய்ச் சொல்லுறது. கொண்டுவா உன்ரை மேனை எண்டு அவன்கள் கேட்டால் நான் எங்கை போறது. அவனைப் போய் எங்கை இருந்து கொண்டு வாறது. கடைசியில ஆத்திரத்தில எனக் கும் என்ரை பொம்பிளைப் பிள்ளையளுக்கும் அடி அடி எண்டு அடிச்சுப் போட்டுப் போட்டாங்கள்” எனக் கண் ணீர் பொங்க சொல்லி முடித்தாள் பெண். 

“அதாலயே அம்மா கை இரண்டும் முறிஞ்சது?”’ என்று கேட்டார் கார்ச்சாரதி. 

“எனக்கு இரண்டு கையும் முறிஞ்சது உடம்பிலேயும் காயம் பிள்ளையளுக்கும் காயங்கள்” என்றாள் பெண் 

இவருக்கும் ஆமிக்காரர் அடிச்சுத்தான் காயமும் நோவும் என்று ஞானரூபனைக் காட்டி கார்ச்சாரதி சொன்னார். 

“அப்பிடியே பிள்ளை நான் அப்பவே யோசிச்சனான்” என்ற பெண் ஞானரூபனை கனிவுடன் பார்த்தாள். 

ஞானரூபனின் முகத்தில் சட்டென்று ஒரு மாற்றம் ஏற்பட்டு இருந்தது அது நல்லதாகத் தெரியவில்லை. 

இப்ப நாங்கள் காரில வரேக்கையும் ஒரு பிரச்சனை நடந்தது. 

“என்ன” என்று கேட்டாள் பெண் 

கார்ச்சாரதி தவலிங்கம் காரில் இருந்து இறக்கப்பட் டதைச் சொன்னார். அந்தச் சமயத்தில் வரிசையின் நகர் வினால் நகரத் தொடங்கினாள் பெண். 

முகம் மாறிப் போயிருந்த ஞானரூபன் கார்ச் சாரதியை சட்டென்று முறைத்தான். 

“உங்களுக்கு ஏன் தேவையில்லாத கதையளை”

“எது தம்பி'” 

“எனக்கு ஆமி அடிச்சது தவலிங்கத்தை ஆமிக்காரன் பிடிச்சதையெல்லாம் ஏன் சொன்னனீகள்”. 

“அதில என்ன தம்பி” 

“முந்திப் பிந்தி தெரியாத மனிசியிட்டை உதுகளை யெல்லாம் ஏன் சொல்லுவான். எத்தினை சனம் உங்கடை கதையளைக் கேட்டிருக்கும் தெரியுமே” 

“எங்களை நம்பி அந்த மனிசி இவ்வளவும் கதைக்குது நாங்கள் சொன்னால் என்ன? நாங்கள் என்ன பொய்யை யே சொன்னனாங்கள்” 

ஞானரூபன் சமாதானப்படவில்லை அவர்கள் நின்ற பகுதி வழியாக ஒரு மின்னல் அடித்தது. ஞானரூபனின் உடலில் அத்தனை மன உணர்வுகளுக்கும் மத்தியில் கிளர்ச்சி பிறந்தது. 

நாலாபுறமும் பார்வைகளை எறிந்து கொண்டு கால் கொலுசு சப்தித்தாற் போல சிரித்துக் கொண்டு பிரியா வந்து கொண்டிருந்தாள். பொறி தட்டினாற் போல அந்தப் பகுதியெங்கும் பிரகாசம் பரவியது போல ஞானரூபனுக்கு இருந்தது. 

அவளுடன் கூடவே ஒருவன் தேவையில்லாமல் சிரித்துக் கதைத்தபடி வந்தான். இவன் தான் அந்தப் புதிய சிநேகிதனா” என்று ஞானரூபன் நினைத்தான். 

அவளின் பார்வை அவன் மேல் விழுந்தது அது எந்த விதமான மாறுதலும் அடையாமலும் இருந்தது. 

‘ஐயோ உங்களுக்கு என்ன மாதிரி’ என்று கவலையுடன் கேட்காமல்- 

“என்ன இன்னும் அவன்களின்ரை அடி நோ தீரேல்லையோ” என்று பிரியா கேட்டாள். 

கூட வந்தவன் இப்போதும் சிரித்துக் கொண்டு இருந் தான் ஞானரூபன் பதில் சொல்லவில்லை. 

அவள் அப்பால் நகர்ந்தாள்.

– தொடரும்…

– முள்முடி மன்னர்கள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1991, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *