கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 5, 2024
பார்வையிட்டோர்: 3,660 
 
 

(1957ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

நான்காம் அத்தியாயம்

கலங்கமாலரையர்

பூதுகன் சிறிது அலட்சியமாகச் சிரித்த வண்ணம் “ஆம். நான் பூதுகனேதான். கலங்கமாலரையர் என்ற தங்களுடைய நாமதேயம் இந்த ஆசிரமத்தில் புகுந்ததும் எப்படி மாறியிருக்கிறதென்று அடிகள் கருணை கூர்ந்து அருளவேண்டும்!” என்றான் கேலி செய்கிறவன் போல்.

“நான் எப்பொழுதும் எங்கிருந்தாலும் கலங்கமா வரையரேதான்” என்றார் அவர்.

”உடை, உருவம், இடம், வாழ்க்கைநிலை, மதம் எல்லாம் மாறி விட்டனவே. ஒரு சமயம் நாமதேயமும் மாறி யிருக்கிறதோ என்ற சந்தேகம்? அதனால் கேட் டேன். தூய எண்ணங்கள் நிறைந்த புத்த சங்கத்தில் திருடர்கள். கொÜபகாரர்கள், கொடியர்கள், பொய் யர்கள், ராஜத் துரோகிகள், தேசத்துரோகிகள், சமூக பிரஷ்டம் செய்யப் பட்டவர்கள் இவர்களுக்கு எல்லாம். இடம் கிடைத்து விடுவதுதான் மனத்தைமிகவும் வருத்து கிறது.தலையை முண்டிதம் செய்து கொண்டு சீவர ஆடை உடுத்திக் கொண்டு விட்டால் இத்தகைய வஞ்சகர்கள் எல்லாம் உலகில் நல்லவர்கள் போல் வாழவும் வழி ஏற்பட்டு விடுகிறதே என்ற மனக் கொதிப்புத்தான் எனக்கு” என்றான் பூதுகன் சிறிது ஆத்திரத்தோடு.

“பூர்வாசிரமத்தில் எப்படி இருந்தாலும் துறவு நிலையை அடைந்தவனை அந்த அழுக்குகள் எல்லாம் ஒட்டாது என்ற உண்மையை நீ தெரிந்து கொள்ளவில்லை” என்றார் அவர்.

“இப்படி ஏதாவது வேண்டுமானால் சொல்லிக் கொண்டு திரியலாம். அந்த அழுக்குகள் துறவு நிலையிலும் அவனை ஒட்டுவதோடல்லாமல் சங்கத்தையே வந்து பற்றிக் கொள்கின்றன. இதுதான் உண்மை நிலை, புத்தர் என்னும் மகா புருஷர் உலகில் உள்ள மக்கள் படும் பலவிதமான இன்னல்களைப் போக்கச் கருதி ஒரு மார்க்கத்தைக் கண்டு பிடித்தார். அவருடைய மார்க்கத்தில் பல ருக்குப் பற்றுதல் ஏற்பட்டு அதைப் பின் பற்றினார்கள். தம் கொள்கைகளைப் பின்பற்றுகிறவர்கள் ஒருமுகமான அபிப்பிராயத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே சில வரைமுறைகளோடு சங்கம் என்பதை ஏற்படுத்தினார். இதையொரு மதமாக்க வேண்டுமென அவர் சுருதியதாகத் தெரியவில்லை. ஆனால் அவருக்குப் பின்னால் வத்த அவருடைய சீடர்கள் எப்படியோ அதை மதமாக்க முயற்சித்தார்கள். மதம் என்று சொல்லி விட்டாலே. அதற்கு ஒரு கடவுள் வேண்டாமா? பகவரையே கடவுளாக்கி விட்டனர். கௌதமர் கடவுளானவுடனே அவருக்கு ஒரு சிலை: அந்தச் சிலையை வைக்க ஒரு கோயில் – விஹாரம், கோயிலும் சிலையும் ஏற்பட்ட உடனே பூசை வேண்டாமா? பூசை நடக்கும் வேளையில் மணி, நகரா இவையெல்லாம் வேண்டாமா? இந்த மதத்தை வளர்ப்பதற்கு மற்ற மதங்களில் உள்ளது போல் புராணங்கள், கதைகள், கட்டுக் கதைகள். அதற்குப் பிரசாரகர்கள், வாதம் – பிரதிவாதம் எவ்வளவு ? சைவ மதாச்சாரியார்களும் வைஷ்ணவ ஆழ்வார்களும் பொது மக்களை வசீகரிக்க மனத்தை மயக்கும் பாடல்களும், நாட் டியம், நாடகம் இவைகளையும் ஏற்படுத் தினார்கள் என்றால் உடனே புத்தசமயத்தினரும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டு விடுகின்றனர். இப்படி யெல்லாம் செய்யச் சொல்லிப் பசுவர் கட்டளை யிட்டாரா? கலங்கமாலரையரே! போதி மாதவர் உலகில் பிறந்த ஒவ்வொருவரும் மனப் பக்குவம் அடைந்து சன்மார்க்க நெறியில் நிற்க வேண்டுமென்று விரும்பினாரே தவிர மத சம்பந்தமான போட்டிகளில் இறங்கித் துவேஷத்தை வளர்க்க அவர் விரும்பவில்லை. சங்கத்தில் சேரும் ஒவ்வொரு பிக்ஷுக்களும் அனுசரிக்க வேண்டிய முறைகளை வகுத்து வைத்தார். உலக நலனுக்காக அனைவரும் சன்மார்க்கத்தைக் கடைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக; பொதுப்பணி புரியச் சங்கத்தில் சேருபவர்கள் ஆசை, அவா முதலியவைகளை விட்டு, எல்லாவற்றையும் சர்வபரித் தியாகம் செய்து விட்டுத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்குத் துறவிக்குரிய கடுமையான விதிகளை விடுத்தார். துறவிக்குரிய இந்த விதிகள் பொது மக்கள் யாவராலும் பின்பற்ற முடியாதவை. பொதுமக்கள் புத்தபிரானின் உத்தமமான மார்க்கங் களை அனுசரித்துக் கூடுமான வரையில் தங்கள் வாழ்க்கையில் சீர்திருந்தலாமே தவிர எல்லோருமே துறவறமார்க்கத்தை ஏற்றுக் கொள்வது கடினம். இத்தகைய நிலையில் புத்த மதத்தில் பற்றுள்ள ஒருகஸ்தர்களையும் உபாசகர்கள் என்று கூறி அவர்களையும் சேர்த்துக் கொள்ளுகின்றனர். புத்தரின் நிரீசுவர வாதமும், அனாத்மவாதமும் மறைந்து கடவுள் பக்திதான் அதிகமாகி விட்டது. நான் இப்படியெல்லாம் சொல்கிறேன் என்று வருத்தப் படாதீர்கள். இந்தப் பாரதத்தில் புத்தரென்னும் புருஷரால் ஒரு உன்னதமான கொள்கை எடுத்துக் காட்டப்பட்டது. ஆனால் அந்த உத்தமமான கொள்கையை அது பிறந்த இந்தப் புனிதமான பாரதத்திலேயே புதைத்து விடுவோமா என்ற அச்சம்தான் எனக்கு. இந்த உன்னத மார்க்கம் நமது நாட்டுக்குப் பயனாகாத வண்ணம் வெளி நாட்டுக் கெல்லாம் பயனுள்ளதாகி விடுமோ என்ற பயம் தான் எனக்கு, தன் கொள்கைகை வேத சமயங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு அச்சமயத் தோடு புத்தசமயமும் கடலில் கலந்த சிறு நதி போலக் கலந்து ஐக்கியமாகி விடுமோ என்றுதான் நான் நினைத்து மன வருத்தம் அடைகிறேன்” என்றான் பூதுகன்.

பௌத்த பிக்ஷுவாகிய கலங்கமாலரையர் பூதுகனின் நீண்ட பிரசங்கத்தைக் கேட்டுச் சிறிது ஆத்திரம் அடைந்தாலும் அடக்கமான குரலில், “பூதுகா! நீ நன்றாகப் பேசுவாய் என்று எனக்குத் தெரி யும். அழகாகத்தான் பேசி விட்டாய். உனக்கு இப்படிப் பேசிப் பேசிப் பழக்கம். புத்தர் பெருமான் ஒருமதத்தை ஏற்படுத்த விரும்பினாரா இல்லையா என்பது வேறு விஷயம். அவர் வழியைப் பின்பற்றுகிறவர்கள் உலகில் அதிகமாகி விட்டபடியால் அது ஒரு மதமாகி விட்டது. புத்தர் கட வுளைப் பற்றியும் ஆத்மாவைப் பற்றியும் அதிகம் பேசாததால் அவர் அனாத்மவாதி, நிரீசுவரவாதி என்று நீ உன்னுடைய நாஸ்திகக் கூட்டத்தோடு அவரையும் சேர்த்துக் கொள்ளப் பார்க்கிறாய், ததாகதர் உலகில் கண்ணெதிரே காணும் இன்னல்களையெல்லாம் அழிக்க நினைத்தார். ஒவ்வொரு மனித இதயத்திலும் அன்பு, அஹிம்சை, ஈகை, இரக்கம், பொறுமை முதலிய நற்குணங்களே குடி கொள்ள வகை செய்தார். உலகைப் பற்றி இருக்கும் துயர அழுக்குகள் எல்லாம் நீங்கிவிடும் என்று நம்பினார். ஆத்மா, கடவுள், சுவர்க்கம் என்பவைகளைப் பற்றி மக்களுக்குப் போதனை போக்க செய்தால் தங்களுக்கு எட்டாத விஷயங்களைப் பற்றிச் சர்ச்சை செய்து உலகில் கண்ணெதிரில் நடக்கும் தீமைகளை மறந்து வீண் பொழுது ஆரம்பித்து விடுவார்கள் என்று கருதியே எளிய மார்க்கங்களை உபதேசித்து அருளினார். அவர் கடவுள் இல்லை யென்று எங்கும் சொல்ல வில்லை. கடவுளைப் போற்றும் மதங்களையும் அவர் வெறுக்கவில்லை. ‘இந்த ஆத்மா என்பது என்ன? அது ஒன்றா, இரண்டா?” என்பதைப் பற்றியும் விவாதம் செய்யவில்லை. இந்த வாழ்விலேயே நிர்வாண நிலை அடையும் போதனைகளைச் செய்தாரே தவிர தனியாகச் சுவர்க்கம், நரகம் என்று எதையும் பேசவில்லை. மனிதர்கள் சிறந்த பண்பாடுகளுடன் வாழ்ந்தால் பிறப்பு இறப்பற்ற நிர்வாண நிலையை அடையலாம் என்பது தான் அவருடைய தத்துவம்” என்று சொல்லி நிறுத்தினார்.

பூதுகன் சிரித்தான்! “சரிதான்! அத்தகைய நிர்வாண நிலையை அடையச் சிலா உருவங்களும், அவைகளுக்கு பேரிகை மணி யோசைகளும் முழங்கி, மலர்தூவிப் பூசைகள் எல்லாம் செய்ய வேண்டுமென்று அவர் சொல்ல வில்லை யென்று நினைக்கிறேன்” என்றான்.

“ததாகதர் அப்படிச் சொல்லவில்லை தான்.ஆனால் பகவர்மகாபரி நிர்வாணம் அடைவதற்கு முன்பே யாவரும் அவரைத் தெய்வமாகவே கொண்டாடினர். பகவர் மகாபரி நிர்வாணம் அடைந்த பிறகு அவரை ஒவ்வொருவரும் தெய்வமாகக் கொண்டாடுவதில் வியப்பில்லை அல்லவா? அவருடைய சன்மார்க்கப் போதனைகளில் மனம் வைத்தவர்கள் அவருக்கு உரு அமைத்துத் தெய்வமாகக் கொண்டாடித் தொழுவதில் பிசகு என்ன இருக்கிறது? மகத நாட்டை ஆண்டவனும் ததாகதரிடம் பேரன்பும் பக்தியும் கொண்டவனுமாகிய பிம்பிசாரன் ராஜக்கிருகத்தில் பகவரை அழைத்து உபசரிக்கும் பொழுது பகவர் திரியஸ் திரம்ஸ லோகத்துக்குச்சென்றபோது அவருடைய பிரி வாற்றாமை தாங்காது அவருடைய அழகான உருவம் போல் சிறந்த சிற்பி ஒருவனைக் கொண்டு சிருஷ்டிக்கச் செய்து அதை திருத்ரகூட விஹாரத்தில் எழுந்தருளச் செய்து வணங்கியதாக வரலாறு சொல்கிறது. பகவர் தேவலோகத் திலிருந்து திரும் பிய பின் பிம்பிசாரன் தம்மீது வைத்துள்ள அன்பையும் பக்தி யையும் அறிந்து மிக வும் மன மகிழ்ச்சி யுற்றார் என்று தெரிகிறது! இவ்வரலாறுகளை அறிந்த பகவரின் அடியார்களுக்குப் பிம்பிசாரனைப் போல் தாங்களும் ஐயனுக்குத் திருவுருவம் அமைத்து வணங்க வேண்டுமென்று தோன்றாதா?” என்றார் கலங்கமாலரையர்,

பூதுகன் ஏளனமாகச் சிரித்துக் கொண்டே “அழகு! அப்புறம்..?”என்றான். “இதப் போலவே பௌத்த பிக்ஷக்களின் கையில் ஜெபமாலைகள் வைத்துக் கொண்டிருப்பதற்கும் ஒரு காரணம் உண்டு. ததாகதரின் சீடரில் ஒருவனான வைடூர்யன் என்பவன் இந்தச் சித்தத்தை அடக்குவதற்கு என்ன செய்யலாம் என்று ஐயனைக் கேட்கவும், ஐயன், ‘அரசமரத்திலிருந்து கடைந்து எடுத்த நூற்றெட்டு மணிகளாலாகிய மாலையைக் கொண்டு ஜபிக்கும்படி உபதேசித்தார். அவன் அவருடைய உபதேசத்தைக் கேட்டு ஐயனின் உபதேசப் படியே செய்து நிர்வாண நிலையை அடைந்தான். வைடூர்யனுக்கு தேசித்த வழியைப் பின்பற்றி அவருடைய பக்தர்களாகிய மற்றவர்களும் ஜபமாலையை வைத்துக் கொண்டு தியானம் செய்து கடைத்தேற வேண்டு மென்று நினைவரலாகாதா?” என்றார் கலங்கமாலரையர்.

“தாராளமாக….” என்றான் பூதுகன் பரிகாசமாக.

“பெருமானின் திருவடித் தாமரை களை மலர்களைக்கொண்டு அர்ச்சிப்பதற் சூரிய காரணத்தையும் சொல்லுகிறேன். பகவர் தம் தாயாகிய மாயாதேவி தேவலோகத்தில் தேவனுக்கு மகளாய் இருப்பதை யறிந்து அவருக்கு உபதே சம் செய்ய வேண்டும் என்ற கருத்தில் தேவலோகம் சென்றபோது அங்கிருந்த அவருடைய தாயாகிய மாயாதேவி அவரிடம் உபதேசம் பெற்றுத் தன் காணிக்கையாக அவருக்கு ஒரு மந்தார மலரை அளித்தாளாம். அவரும் அன்போடு அம்மலரைப் பெற்றுக் கொண்டாராம். இதிலிருந்து பகவரின் திருவடிகளில் மலர்களை அர்ப்பணிப்பது பசுவருக்குச் சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்று ஒவ்வொருவரும் நினைக்கலா மல்லவா? புத்த விஹாரங்களில் கொடிகள் படருவதும், பேரிகைகள் முழங்குவதும், மணியோசை கேட்பதும் ஏனென்று கேட்கிறாய்? அதற்கும் ஒரு காரணம் உண்டு. போதி மாதவருக்கு விரோதி யாய் இருந்த தேவதத்தன் என்பவன் பசுவரைக் கொல்ல நினைத்து ஒரு மந்திரவாதியைக் கொண்டு பல பேய்களை ஏவி விட்டான். அந்தச் சமயத்தில் பசுவரின் உயிரைக் காப்பாற்றுவதற் காகத் தெய்வலோகத்திலிருந்து தெய்வ கணங்கள் படையெடுத்து வந்து அப் பேய்களை விரட்டியடித்தன. அந்தச் சமயத்தில் தேவகணங்கள் கைகளில் கொடிகள் ஏந்தியும், மணியோசை எழுப்பியும், பேரிகை முதலிய வாத்தி யங்களை அடித்துக் கொண்டும் வந்த னர். தேவகணங்கள் மந்திரவாதியால் ஏவி விடப்பட்ட பேய்களைத் துரத்திய பின் அந்த மந்திரவாதியையும் கொல்ல நினைத்துத் துரத்தின.அச்சமயம் மந்திர வாதி உயிர் தப்ப ஒரு காளையுருவம் எடுத்து ஓடினான். அவன் காளையுருவம் எடுத்து ஓடுவதை அறிந்த தேவகணங் கள் அந்தக் காளையையும் துரத்தின. அச்சமயம் அந்த மந்திரவாதி ததாகத ரின் பாத கமலங்களில் வந்து விழுந்து அடைக்கலம் வேண்டினான். ததாகதர் அவரை மன்னிக்கவும் தேவகணங்கள் அவனை உயிரோடு விட்டன. தளக்கு அடைக்கலம் கருணை உள்ளத்தை அறித்த மந்திர அளித்த ததாகதரின் வாதி தானும் மனம் திருந்தியவனாய், பகவரைப் புகழ்ந்து வணங்கி மறுபடி யும் மனித உரு எடுத்தால் தனக்குக் கேவலமான ஏற்பட்டு விடுமோ என அஞ்சித் தான் காளை உரு விலேயே இருப்பதாகவும் தான் இறந்த பிறகு தன்னுடைய உடற் தோலால் பேரிகைகள் கட்டுவித்துப் புத்த விஹா ரங்களில் அந்தப் பேரிகைகள் முழங்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண் டான். அதன் காரணமாகத்தான் புத்த விஹாரங்களில் பூசை நேரத்தில் பேரி கைகள் முழங்குகின்றன. தேவகணங்கள் கையில் கொடி ஏத்தி, மணியோசை அடித்து, பல வாத்தியங்களை இசைத்து வந்ததால்தான் புத்த விஹாரங்களில் பல வாத்தியங்களின் ஒலியும் மணியோ சையும் கேட்கின்றன’ என்றார்.


பூதுகன் எதிரொலி செய்யும்படி யாகக் கலகல வென்று சிரித்தான். “கலங்கமாலரையரே! இதெல்லாம் என்ன கதை? நான் சொல்லியவைகளை யெல்லாம் மறந்து விட்டு என்னையும் பாமரன் போல் நினைத்து உங்கள் புராண வரிசைகளை யெல்லாம் காட்டு கிறீர்களே? போகட்டும். தலையை மொட்டையடித்துச் சீவர ஆடையை உடுத்திக் கொண்டதும் நன்றாகத் தேறி விட்டீர்கள் என்று தான் தெரிகிறது. இப்பொழுதுதான் நீங்கள் தேரராகி விட்டீர்களே? இன்னும் கொஞ்ச நாளில் கொட்டியளப்பதற்கு இன்னும் பல கட்டுக் கதைகளை யெல்லாம் தெரிந்து கொண்டபின் மகாதேரர் ஆகிவிடு வீர்கள். இருக்கட்டும். இனிமேல் உங்க ளுடைய சொந்தக் கதைக்கு வருகிறேன். திடீரென்று ஏன் வேஷம்? தஞ்சையில் அனுபவித்த லாச போகங்களை யெல்லாம் விட்டு இப்படிப் பூம்புகாரிலுள்ள புத்த விஹாரத்தில் வந்து அடைந்து கிடப்பா னேன்? இதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். இப்பொழுது நீர் போடும் இந்த வேஷம் சாதாரண காரியத்துக் காக என்று நினைக்கவில்லை. யாரைக் கொலை செய்து எந்த ராஜ்யத்தை நிலை திறுத்துவதற்காகவோ?” என்றாள்.

கலங்கமாலரையர் அவனுடைய வார்த்தையைக் கேட்டுக் கோபமோ ஆத் திரமோ அடையவில்லை. அவர் முகம் சிறிது சுருங்கியது. அவர்மனத்திலிருந்த சோகத்தைத் தான் எடுத்துக் காட்டு வதுபோல இருந்தது. ”பூதுகா! அரசியல் என்னும் பகடையாட்டம் ஆடிக் களைத்திருக்கும் தருணம் இது. எனக்கு இனி எந்த சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்த வேண்டுமென்றே, எந்த சாம் ராஜ்யத்தைக் குலைக்க வேண்டு

மென்றோ எண்ணம் ஏற்படாது. என் மனம் எல்லாவற்றையும் துறந்து ஓர் நிலையை அடைத்து விட்டது. இன்று நான் ததாகதரின் சேவகன், என் வாழ் நாளில் இந்த மனத்துக்குச் சிறிது அமைதி கொடுக்க எண்ணி எஞ்சி நிற்கும் சிலநாட்களையும் அவன் திருவடி நிழலிலிருந்தே அன்புப் பணி புரிந்து கடத்தி விட நினைக்கிறேன். இது உண்மை’ என்றார்.

”உண்மைதான்! இன்னும் சில நாட்க ளாவது உயிர் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்காதா? கொடும்பாளூர் வீரர்களிடம் யாரேனும் தலையைக் கொடுப்பார்களா? இப்படித்தலையை மொட்டை யடித்துக் காஷாயம் தரித்துக் கொண்டு கையில் ஓடு எடுத்துப் பிச்சை எடுத்து உண்பதும், உறங்குவதுமாய் இந்தப் புத்த விஹாரத்திலிருந்து காலத்தைக் கழித்து விடுவதும் நல்லதுதான். இருந் தாலும் அந்தக் கொடும்பாளூர் வீரர் களின் கண்களில் படாமல் இருக்க வேண்டுமென்று நீங்கள் எப்பொழுதும் புத்தர் பெருமானை வேண்டிக் கொண் டிருக்கவும் வேண்டியது,தான். கலங்க மாவரையரே, நான் பூதுகன் – உங்களைப் யாரையுமே போன்ற நான் எப்பொழுமே எளிதில் நம்புவதில்லை. இருக் கட்டும். உங்களிடம் நான் தனிமையில் ஒரு விஷயம் பேசவேண்டும். கொஞ்சம் வெளியே வந்தால் பேசலாம் ” என்று சொன்னான், கலங்கமாலரையரும் அவ னைப் பின்தொடர்ந்தார்.

ஐந்தாம் அத்தியாயம்

முகம் கறுத்தது!

பூதுகனும் சுலங்கமாலரையரும் அந்தப் புத்த விஹாரத்தை விட்டு வெளியே வந்த போது எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. சம்பாதி வனம் என் னும் அவ்வழகிய மலர்ச் சோலையே இருளில் அழுந்திக் கிடப்பது போல் இருந்தது. சிறிது நேரத்துக்கு முன் அடித்த பெரு மழை ஓய்ந்துவிட்டாலும் வானத்தில் இருள் மேகங்கள் முட்டி மோதிக் கொண்டுதானிருந்தன. கடலில் எழும் அலையோசையின் பேரிரைச்சல் அடங்குவதும் பிறகு அவை எழுவதும் போல் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன. கலங்கரை விளக்கின் ஒளி கெட்ட எண்ணங்கள் சூழ்ந்த மனத்திலும் சிறிது நல்ல ஒளியை எடுத்துக் முகம் தெளிவாகத் தெரியாவிட்டாலும் காட்டுவது போல் ஒரே நிலையில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் அந்த இருளில் ஒரு பெரிய மரத்தடியை அடைந்தனர். பரவி யிருந்த பெருங் கிளைகளின் அடர்த்தி யினால் அவ்விடம் மாத்திரம் மழை ஈரம் படாமல் இருந்தது. இப்படி உட் கார்ந்து பேசலாமே?” என்றான் பூதுகன். ”’சரி'” என்று சொல்லி அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்தார் கலங்கமாலரை யர். காற்று சிலுசிலுவென்று அடித்துத் துணியால் போர்த்தி யிருக்கும் ‘தேகத் தையும் தொட்டுச் சிலிர்க்க வைத்தது. பூதுகன் மெதுவாகப் பேசினான்: “உண்மையாகவே அரசியல் நோக்கம் கொண்டவர்களுக்கு மாறுவேடம் பூண்டு தங்கள் காரியத்தில் வெற்றி காண்பது தர்ம விரோதமாகாது, நான் ஒரு நாஸ்திகவாதி. நான் பெருத்த மத வைரியைப் போலக் காணப்பட்டாலும் அரசியலில் எப்பொழுதும் ஒரு கண் உடையவன். நான் உங்கள் கொள்கைக்கு விரோதமானவன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் உங்களைத் தனியாக அழைத்தேன். சிதைந்து அழிந்து போன சோழ சாம்ராஜ்யத்தை மறுபடியும் நிலைநிறுத்தி இந்த நாட்டை ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள் சிலர். அது உங்களுக்குப் பிடிக்காத விஷயம் இல்லையா?” என்றான்..

இந்த இருளில் கலங்க மாலரையரின் அவர் விடும் பெருமூச்சு அவருடைய மனக்கொதிப்பை எடுத்துக் காட்டுவது போல் இருந்தது. அவர் மெதுவான குரலில், எனக்கு இந்த எண்ணம் எல்லாம் இப்பொழுது இல்லை. கருணைக்கடலான புத்தரின் திருவடிகளை நம்பிவந்த எனக்கு மறுபடியும் அத்தகைய எண் ணங்களெல்லாம் எழாமலிருக்க வேண்டு மென்றுதான் பிரார்த்திக்கிறேன்.பாண் டியர்களின் கையும், பல்லவர்களின் கையும் ஓங்கி நிற்கும் இந்தத் தருணத் தில், ‘இந்த நாட்டை யார் ஆண்டால் என்ன?” என்ற எண்ணம்தான் எனக்கு இப்பொழுது ஏற்பட்டுள்ளது. நான் தஞ்சையில் முத்தரையர்களுக்காகப் பட்டபாடுகள் போதும். சோழர்கள் ஆண்டாலென்ன? முத்தரையர்கள் ஆண்டால் என்ன? யாராய் இருப்பி னும் பாண்டியர்களுக்கோ, பல்லவர்களுக்கோ அடிமையாக இருக்க வேண்டியவர்கள் தானே? இதை மாபெரும் சாம்ராஜ்யமாக்கி விடலாம் என்று யார் நினைத்தாலும், அது வெறும் கனவாகத் தான் முடியும். பூதுகா! என்னை விட்டு விடு. இதைப்பற்றிப் பேசி என் மனத் தைக் குழப்பாதே. நான் இன்று அடைத் துள்ள நிலையைப் பார்த்து என்னை ஏமாற்றிப் பயமுறுத்துவதற்கு மூய லாதே, நீ இன்று சோழ வம்சத்தின ருக்கு எதிரி என்று அறிந்ததினால் சந் தோஷம் அடைந்து விடமாட்டேன், அன்பையும் அஹிம்ஸையும் கடைப்பிடித்து ஒழுகும் துறவு மார்க்கத்தில் ஈடுபட்டுள்ள என்னுடைய பாதைகள் எல்லாம் இப்பொழுது வேறாகத்தானே இருக்கும்?” என்றார் கலங்கமாலரையர். ”மாலரையரே! நீங்கள் இன்று புத்த சங்கத்தில் சேர்ந்து துறவு மார்க்கத்தில் ஈடுபட்டு விட்டீர் என்பதை நான் அறி ஏற்பட்ட தோல்வி நெஞ்சில் ஆழப் யாமலில்லை. ஆனால் ஒரு மனிதனுக்கு பதிந்த வடுப்போல என்றும் மறையாது இருக்கும் என்று தான் நினைக்கிறேன். எனக்கு உங்கள் வார்த்தையில் பிக்கை இல்லை என்று அர்த்தமில்லை. அரசியல் நோக்கம் கொண்டவர்கள் பளிச்சென்று தங்கள் உள்ள நிலையை எவரிடமும் சொல்லி விடமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். அதுவும் உங்களைப் போன்ற ஒரு சாம்ராஜ்யத் தையே ஆக்கவும் அழிக்கவும் திறனுடை யவர்களின் மனப்போக்கு எப்படிப் பட்டதாய் இருக்கும் என்று எனக்குத் தெரியாதா? தாங்கள் என்னிடம் எதை யும் மறுப்பதால் பலன் ஏதுமில்லை. நீங்கள் செய்த சதிச் செயலுக்காக உங்களைப் பழி வாங்கக் கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் எனக் குத் தெரியும், அவர்களிட மிருந்து நீங்கள் தப்புவதற்கு இந்த மார்க்கம் தான் சரியானது என்பதைக் கண்டு பிடித்ததுதான் உங்கள் புத்திசாலித் தனத்துக்குச் சிகரம் வைத்தா ற்போ லிருக்கிறது. ஆனால் மற்ற நகரங்களை காட்டிலும் இந்தப் பூம்புகார் நகரத்தில் தான் நம் பழைய சாம்ராஜ்யப் பித்துக் கொண்ட உளவாளிகள் அதிகமாகத் திரிந்து வருகிறார்கள் என்பதை மாத் திரம் நீங்கள் மறந்து விடக் கூடாது என்றான் பூதுகன்.

இதைக் கேட்டதும் கலங்கமாலரையர் ஒரு கணம் திகைத்து நின்றார். அடுத்த கணம் அவருடைய கம்பீரமான முகம் கலங்கிக் கறுத்தது.

ஆறாம் அத்தியாயம்

அவள் யார்?

பூதுகன் கலங்கமாலரையரை ஆறுதல் செய்வது போல் “இந்த மாறன் முத்தரையர் முத்தரையனுக்காக நீங்கள் பட்டபாட்டுக்கு அவர்கள் கொஞ்சம் கூட நன்றி செலுத்தாமல் உங்களை இந்த நிலையில் கொண்டு வந்துவிட்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? கொடும்பாளூர் இருக்கு வேளிர் என்றால் அவர்களுக்கு அவ்வளவு பயமாக இருக்கிறது. சாம்ராஜ்யத்தைக் கட்டியாள்வது மாத்திரம் போதாது. பிரயத்தனமும் வேண்டித் தான் இருக்கிறது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தாற் போல், பல்லவர்கள் வலுத்தால் பல்லவர் பக்கத்திலும், பாண்டியர்கள் வலுத்கால் பாண்டியர்கள் பக்கத்திலும் இருந்து எவ்வளவு நாட்களுக்கு இந்தப் பேரரசைக் காப்பாற்ற முடியும்? முத்தரையர் குடும்பத்தில் எனக்கு மிகப் பற்றுதல் உண்டு. ஆனால் அவர்கள் இத்தகைய சந்தர்ப்பத்தில் உங்களைப் போன்ற சுத்த வீரர்களைக்கூட மறந்து விடுகிறார்களே என்ற வருத்தம்தான் எனக்கு” என்றான். கலங்கமாலரையர் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, “அவர்களைச் சொல்லுவதினால் பயன் இல்லை. கொடும்பாளூர் அரசர்கள் மீது நேராகப் படையெடுத்தால் அவர்கள் என்றும் யுத்தம் செய்யத் தயாராய் இருக்கிறார்கள். ஆனால் தனிப் பட்ட ஒருவனைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னைக் கொலை செய்துவிட வேண்டும் என்பதற்காக உளவாளிகளை அங்கங்கே வைத்துக் காரியம் செய்பவர்களை என்ன செய்ய முடியும்? ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பெரிய யுத்தத் தில் இறங்க முடியுமா? நான் செய்த உதவிக்காக மாறன் முத்தரையன் எனக்கு நன்றி செலுத்த வேண்டு மென்று நான் விரும்பவில்லை, பூதுகா ! இப்படி யெல்லாம் ஏதாவது பேசி என் மனத்தைக் கிளறாதே! என்னுடைய துறவு நிலையில் இவை யெல்லாம் பேசக் கூடிய வார்த்தைகளில்லை” என்றார்.

“நீங்கள் இப்பொழுது இருக்கும் நிலையில் இதெல்லாம் பேசக் கூடிய வார்த்தைகளில்லைதான். ஆனால் அரசி யல் இருக்கட்டும். மதத்துக்கு ஆபத்து ஏற்படுமானால் அதிலிருந்து மதத்தைக் காப்பாற்றுவதுதானே உங்களைப் போன்ற துறவிகளின் கடமையாகும். ‘இன்று மதத்துக்காக அரசியலா? அல் லது அரசியலுக்காக மதமா?” என் பதைத் தெளிவாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. உங்களுக்கு மாத் திரம் இல்லை. எனக்கும் அத்தகைய கவலை ஏற்பட்டுள்ளது. இந்த நாடு இருண்டு கிடக்கும் இந்த நிலையிலும் வேறு மதத்தினர் ஆங்காங்கு புற்றீசல் போல் புறப்பட்டுக் கொண்டிருக்கின் றனர். அவர்கள் தங்கள் மதம் உயர் வடைவதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் தாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. குடந்தையில் சைவ மதத் தினரான அப்பரின் சிஷ்யர்களும், வைஷ்ணவ மதத்தினரான திருமழிசை ஆழ்வாரின் சீடர்களும் செய்யும் அட்ட காசங்களுக்கு அளவேயில்லை. அவர்க ளுடைய அபிப்பிராயம் எல்லாம் மறு படியும் சோழ வம்சத்தினர் பதவிக்கு வந்தால் தங்கள் மதத்துக்கு ஒரு உன்னத நிலை ஏற்படும் என்பதுதான். சோழ சாம்ராஜ்யம் நிலைபெற்றால் வைஷ்ணவமும், சைவமும் தழைத் தோங்கும். கரிகாலனின் குலத்தில் உதித்த ஒருவன் அரசைக் கைப்பற்று வானேயானால் தம் முன்னோர்கள் செய் ததுபோல் எண்தோள் ஈசர்க்கு நூற்றுக் கணக்கான மாடக் கோயில்களும் கூட கோபுரங்களும் கட்டுவிப்பான் என்று கனவு காணுகிறார்கள், சிவனடியார் களும் வைஷ்ணவ பக்தர்களும், மாலரையரே! அவர்களுடைய கனவு பலிக்குமானால் உம்மைப்போன்ற சர்வம் சூன்யம் என்ற புத்தமதக் கொள்கை களைப் பின்பற்றியவர்களும், என்னைப் போன்ற சார்வாகரின் நாஸ்திகக் கொள் கைகளைப் பின்பற்றியவர்களும் என்ன சதியை அடைவார்கள் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! நீங்கள் பௌத்த பிக்ஷு ஆவதற்கு முன்னால் எத்தகைய சூழ்ச்சி நிறைந்த காரி யங்கள் எல்லாம் செய்து சோழ பாரம் பர்யம் மறுபடியும் தலையெடுக்கா வண் ணம் செய்ய முயற்சித்தீர்களோ, அதை விட இந்தக் காரியத்தில் அதிகப் பொறுப்பு இப்பொழுது நீங்கள் பௌத்த மதத்தில் சேர்ந்த பிறகு உங் களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் ”’என்றான்.


வானத்தில் குமைந்திருந்த கரு மேகக் கூட்டம் கொஞ்சம் கொஞ்ச மாகக் கலைந்து அங்கு மிங்கும் நட்சத் திரங்கள் ஒளிவீசத் தொடங்கின. கீழ் வானத்தே சந்திரனும் மெதுவாக எழுந் தான். கலங்கமாலரையர் சிறிது நேரம் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவர் போல் இருந்து விட்டு, “பூதுகா! இவ் வளவு நாட்களும் அமைதி நிலையிலிருந்த என் மனத்தை நீ வந்து குழப்பிவிட் டாய். நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் அரசியலின் செல்வாக்கு பெற் றுத் தங்களுடைய மதத்தைப் பரப்ப வேண்டுமென்று பௌத்த பிக்ஷு நினைப்பது பெரும் தவறு, அது ததாக தருக்கு உவப்பான காரியம் என்று எனக்குப் படவில்லை. சாம்ராஜ்ய நிகழ்ச்சிகளில் கவனம் வைத்துத் துறவு வாழ்க்கையின் புனிதத் தன்மையை நான்குலைத்துக்கொள்ள விரும்பவில் லை…..! என்றார்.

பூதுகள் அலட்சியமா கச்சிரித்தான். ”கவங்க மாலரையரே! துறவு வாழ்க்கையை மேற் கொண்ட பின் இவ்வளவு கோழைத்தனம் உங்கள் மனத்தில்வந்து சூழ்ந்து கொள்ளும் என நான் நினைக்கவில்லை. பாவம், மனிதன் வாழ்க்கையில் சிறிது தோல்வியுற்றா லேயே தன்னுடைய திடமான நம்பிக்கை,வீரம், மேதாவிலாசம் இவைகளை இழந்து விடுவான் போலிருக்கிறது. கரு கரு வென்று வளர்ந்திருந்த உங்கள் மீசையை அகற்றியதோடு உங்களுடைய ஆண் தன்மையையும் அல்லவா சுரண்டி எறிந்து விட்டீர்கள் போலிருக்கிறது. சேனைத் தலைவராக அகன்ற மார்பிலே சுவசம் தரித்து, கையில் வாளேந்திக் கடல் போல எதிர்த்து வரும் படைக ளோடு வீரப் போர் புரியும் உங்கள் மார்பகத்தைச் சீவர ஆடையால் மூடிய பின் நெஞ்சில் எழும் வீர உணர்ச்சிகளை யும் வேறு ஏதோ மூடிமறைத்து விட் டதுபோலிருக்கிறது. நீங்கள் ஒன்றை உணர வேண்டும். ததாகதர் கூறிய படியே இந்த மதம் இந் நாட்டில் ஸ்தாபிக்கப் பட்டுள்ளதா என்பதை வரலாற்றின் மூலமாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். த்தாகதர் பரி நிர்வாணம் அடைந்த பல ஆண்டுக ளுக்குப் பின் அசோகன் என்னும் பேரரசன், பௌத்த உபாசகனாகி இந்த உலகெங்கும் பரவச் செய்யா விட்டால் இந்த மதத்துக்கு இன்று உலகில் இவ் வளவு பெருமை ஏற்பட்டிருக்கும் என்று கன்வுகூடக் காண முடியாதே! இந்த உலகத்தில் எந்த நாட்டிலுமே மத வாதிகள் அரசியலாரின் பேராதரவைப் பெறாமல் ஒரு உன்னத நிலையை அடைந்ததில்லை. இந்தத் தமிழகத்தில் பௌத்த மதமும், ஜைன மதமும் காலூன்றியதற்கு அரசர்களின் ஆதரவே கார ணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மதத்தின் காரணமாகப் பேரரசுகள் அழிவதுண்டு; எழுவதும் உண்டு. ‘மன்னன் வழி மக்கள்’ என்பது போல் மன்னன் எதை விரும்புகிறானோ அந்த வழியை மக்கள் தாங்களாகவோ அல்லது பலாத்காரமாகவோ கடைப் பிடித்து நடக்க வேண்டி யிருக்கிறது. இப்படி இருக்க மதவாதிகளின் கடமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்ப தைத் தாங்கள் உணராமல் இருக்க முடியாது” என்றான்.

கலங்கமாலரையர் ஒரு நீண்ட பெரு மூச்சுக்கிடையே, “பூதுகா! நீ என் மனத்தைமிகவும் குழப்ப நிலைக்கு உள்ளாக்கு கிறாய். நீ சொல்வதெல் லாம் சரிதான். ஆனால் நான் எத்தகைய நிலையில் இந்தக் கோலம் பூண்டு இங்கு இருக்கிறேன் என்ற ரகசியம் உனக்குத் தெரியாது” என்றார்.

அந்த நிலவின் ஒளியில் அவருடைய முகத்தில் வாட்டத்தின் கோடுகள் வீழ்ந்திருந்ததைப் பூதுகன் கண்டான். மாலரையரே! அந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டு மென்பது என் விருப் பம். உங்கள் நிலையைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக் கிறது. உலகில் இந்த உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வாழ்வதற்கு வேறு வழியில்லாமல் தான் நீங்கள் இப்படித் தலையை முண்டிதம் செய்து கொண்டு வே ராடையைப் போர்த்திக் கொள்ளும் படி நேர்ந்திருக்கிறது என்று நான் ஊகிக்கிறேன். புத்தர் பெருமா னின் ஜராவக்கத்தில் ‘எலும்புகளைக் கொண்டு ஒரு வீடு கட்டப்பட்டிருக் கிறது. அதில் ஊனையும் உதிரத்தையும் குழைத்துச் சாந்தாகப் பூசப்பட்டிருக் கிறது. முதுமையும், மரணமும், கர்வ மும் கபடமும்தான் அதில் குடிபுகுந் திருக்கின்றன. மனித வாழ்வு நிலையான தில்லை’ என்று சொல்லியிருந்தாலும் எந்த மனிதனுக்கும் இந்த உயிரின் மேலுள்ள ஆசை நீங்குவதில்லை. எந்த மனிதனும் தன் கடமையைச் செய்து முடிக்கும் வரை இந்த உயிரைக் காப் பாற்ற வேண்டும் என்று நினைக்கிருன். மாலரையரே ! உங்கள் ரகசியத்தைத் தாராளமாக என்னிடம் சொல்லலாம். நாஸ்திகம் பேசுகிறவர்கள் எல்லாம் நம்பிக்கைத் துரோகம் செய்து விடுவார்கள் என்று நினைத்து விடா தீர்கள் ‘ என்றான் பூதுகன்.

கலங்கமாலரையர் அத்தச் சமயத் தில் மனத்தில் திகைப்பும் குழப்பமும் அடைந்தவராயிருக்கிறார் என்பது அவர் முகக் குறியிலிருந்து நன்கு தெரிந்தது. அவர் மெதுவான குரலில், “பூதுகா ! பல போராட்டங்களில் உயிருக்கு அஞ் சாமல் நின்று போராடிய நான் இன்று உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த மார்க்கத்தில் பிரவே சிக்கவில்லை. இன்று என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை தான். நான் நினைத்த கடமை நிறைவேறும் வரையில் இந்த வேடத்தில் இருக்க வேண்டுமென்ற எண்ணம்தான் எனக்கு, என் னுடைய வீர உணர்ச்சியோ ஆண்மையோ குலைந்து விடவில்லை. நான் கோழையாகி விடவில்லை. இன்றுள்ள நிலையை பிறருடைய இடையூறு இல்லாமல் என்னுடைய காரியத் தைச்சாதித்துக்கொள்ள இதுதான் எனக்குச் சரியான மார்க்கமாகப்படுகிறது. எனக்கு எந்த மதத்தைப் பற்றியும் கவலை இல்லை. இதுதான் எப்பொழுதும் என்னு டைய தியானம். தஞ்சை யர்கோன் மாறன் முத்தரையனின் உப்பைத் இன்றதற்காக என்னுடைய கடமையைச் செலுத்த நினைக்கிறேன். அவர்களுடைய நலனுக்காகச் சோழ வம்சத்தைச் சேர்ந்த பூண்டு ஒன்று எங்கேனும் முளைத்திருந்தாலும் அதைக் கிள்ளி எறிந்து விடத்தான் இத்தனை நாட்களும் பாடுபட்டேன். இப்பொழுதும் அத்தகைய நோக்கம் தான் எனக்கு. நான் என் நன்றி யைச் செலுத்தும் வகையில் முத்தரை யர்களுக்காக எத்தகைய சூழ்ச்சி களைச் செய்தாலும், வீரத்தனமான காரியத்தைச் செய்திருந்தாலும் அவர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையிலோ தங்களுடைய சாம்ராஜ்யத்தைப் பெருக் கிக் கொள்ளும் வகையிலோ என்னோடு ஒத்துழைப்பவர்களாகத் தெரியவில்லை. இது அவர்களுடைய அறியாமை என்று தான் நினைக்கிறேனே தவிர அவர்களுக்கு என்னிடம் அன்பில்லை யென்று நினைக்கவில்லை. இன்றைய நிலையில் அவர்கள் பாண்டியர்களுக்கு உட்பட்டோ, பல்லவர்களுக்கு உட்பட்டோ அடிமைப்பட்டுக் கிடந்து தங்களுடைய சிறு ராஜ்யத்தை காப்பாற்றிக் கொண்டு உயிர் வாழ நினைக்கிறார்களே தவிர, சோழ பாரம்பர்யத்தில் வந்த கரிகாலனைப் போலவோ, நலங்கிள்ளி யைப் போலவோ வீர உணர்ச்சியோடு தங்கள் சாம்ராஜ்யத்தைப் பெருக்கிக் கொண்டு சார்வ பௌமர்களாய் வாழும் ஆசையில்லை. கொடும்பாளூர் இருக்கு வேளிர்களுக்குச் சோழ வம்சத் தின் ரத்த சம்பந்தம் இருப்பதனாலோ என்னவோ, வீர உணர்ச்சியில் சிறந்த வர்களாக இருக்கிறார்கள். அவர்களுக் குத் தங்கள் சாம்ராஜ்யத்தை’ வளர்த் துக் கொள்ள வேண்டும் என்ற எண்ண மில்லா விட்டாலும் மறுபடியும் இங்கே சோழ சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டு மென்பதில் கண்ணும் கருத்துமா யிருக்கி றார்கள். அவர்களைப் பண்டோடு ஒழித் துக் கட்டிவிட நினைக் கும் என்னை ஒழித்து விட வேண்டும் என்று அவர்கள் நிலைப்பதும் சகஜம் தானே? பூதி விக்கிரம கேசரியின் புதல்வர்களான ஆதித் திய இருக்கு வேளா னும் பராந்தக இருக்கு வேளானும் என்னைப் பழி வாங்க உளவு பார்த்துத் திரிகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். பழையா றையை ஆண்ட குமா ராங்குஜனுடைய மக னைத் தஞ்சை அரியணை யில் ஏற்றப் பார்க் றார்கள் கொடும்பை இருக்குவேளிர்கள். அதற்கு அனுகூலமாக அவருடைய சகோதரி அனுபமாவையும் சோழ வம்சத்தில் யாருக்கேனும் மணம் முடிக்க வேண்டும் என்ற ஆசையும் அவர்களுக்கு இருக் கிறது. இதை அறிந்துகொண்டு, பழை பாறையிலுள்ள சங்கமாதேவியையும் அவளுடைய குமாரனையும் ஒழித்துவிட முயற்சி செய்தேன். ஆனால் இந்த ரகசி யத்தை எப்படியோ அறிந்து கொண்ட கொடும்பாளூரார்கள் என்னை ஒழித்து விடத் திட்டமிட்டுவிட்டார்கள். தஞ்சையர்கோன் மாறன் முத்தரையனின் குமா ரன் இளங்கோதரையன் கொடும்பாளூர் அரசகுமாரியான அனுபமாவின் அழகில் மயங்கி அவளை மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசையில் உழன்று கொண்டிருக்கிறான். இது நடக்குமா? அவனுடைய சபல புத்தியை அறிந்த கொடும்பாளூர் மன்னர்களின் குமாரர் களாகிய ஆதித்தனும், பராந்தகனும் இளங்கோதரையனிடம் நட்புரிமை பாராட்டி, ஆசை வார்த்தைகள் காட் டிப் பேசி வருகின்றனர். இந்த நிலையில் என்னுடைய அந்தரங்கமான காரியங் களை யெல்லாம் கூட அவர்கள் தெரிந்து கொண்டு விட முடிகிறது. அரச குடும் பத்தினர் இருக்கும் நிலையில் நான் ஏதேனும் ஆபத்தான நிலையைச் சுட்டிக் காட்டினாலும் கூட அவர்கள் மனத்தில் ஏறுவதில்லை. இளங்கோதரையன் கொடும்பாளூர் இளவரசி அனுபமாவின் மோகத்தில் சிக்கித் தவிக்கிறான். இந்த நிலையில் தான் என்ன செய்ய முடியும்? என்னுடைய ‘காரியங்க ளெல்லாம் கொடும் பாளூர் இருக்குவேளிர் களுக்குப் புரிந்து விட் டதனால் நட்புரிமை கொண்டே என்னைக் கவிழ்க்கச் சதி திட்டம் போட்டு விட் டார்கள். இத்தருணத் தில் நான் தஞ்சைமா நகரிலிருந்து ஆபத்துக் கிடையே என்னுடைய காரியங்களைக் கவனிப் பதை விட இத்தகைய துறவு வேடத்தில் பல காரியங்களைச் சாதித் துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் இந்தப் பூம்புகாருக்கு வந்துவிட்டேன். நான் ஒவ்வொன்றையும்வில ரமாகச் சொல்லுவ தற்கு இது சமயமில்லை. எல்லாம் உனக்குப் பின்னால் ஒரு சமயம் தெரிவிக்கிறேன்.”

”இவ்வளவு தூரம் நீங்களும் நானும் மனம் விட்டுப் பேசி ஒரு காரியத்தில் இறங்கிய பின் நீங்கள் என்னிடம் எதையும் சொல்லாமலா இருக்கப் போகிறீர்கள்? இப்பொழுது நீங்கள் சொன்ன வரையிலேயே அநேக விஷ யங்கள் விளங்கி விட்டன. கவலைப் படாதீர்கள்! பழையாறையிலிருக்கும் சோழன் மனைவி கங்கமா தேவியையும் அவள் மகனையும் ஒழிக்க எவ்வளவு நேரமாகும்? கோடீச்சுவரத்தில் சந்தகன் என்னும் சோதிடன் இருக்கிறான். அவன் சாக்த மதத்தைச் சேர்ந்தவன். மந்திர தந்திரங்களில் நிபுணன். பத்திற்கு பக்ஷம் மாகாளிக்கு நரபலி கொடுப்ப தென்று விரதம் எடுத்திருக்கிறன். அவ னிடம் சொன்னால் போதும். ஒரு பக்ஷத்தில் கங்கமா தேவியின் புத்திரளை யும், ஒருபக்ஷத்தில் அவள் புத்திரியையும் மாகாளி தேவிக்கு நிவேதனம் செய்து விடுவான். நினைத்தால் அம் மூவரையும் ஒரே பக்ஷத்தில் பலி இட் டாலும் இட்டு விடு வான். மாய தந்திரங் களில் மிகவும் வல்லவ ளுாகிய அவள் எனக்கு ஆருயிர் நண்பன். நான் சொன்னால் எதையும் தட்டமாட் டான்” என்றான். ”கோடீச்சுவரத்துச் சந்தகனா? அவனைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். சார்வாக சமயத்தைச் சேர்ந்த நாஸ்திகனான உனக்கு இந்த மந்திர தந்திரங்களில் எல் லாம் நம்பிக்கை உண்டா?” என்றார்.

பூதுகன் சிரித்தான். “எனக்கு மந்தி ரத்தில் நம்பிக்கை இல்லை. தந்திரத்தில் எனக்கு எப்பொழுதுமே அழியாத நம் பிக்கை யுண்டு. எப்படி இருந்தால் என்ன? இப்பொழுது நம்முடைய நோக்கம்தானே நமக்குப் பெரிது. போகட்டும், இன்று இந்த விஹாரத்தில் பூசை நடக்கும்போது ஒரு சிறு கலவரம் ஏற்பட்டதல்லவா? யாரோ ஒரு பிக்ஷுணி மீது ஒரு பிக்ஷு ஏதோ குற் றம் இருப்பதாகச் சொல்லிப் பழி சுமத்த முற்பட்டாரல்லவா? அதன் ரகசியம் உங்களுக்கு ஏதேனும் தெரி யுமா? அந்தப் பிணியைப் பார்த் தால் எனக்குச் சிறிது சந்தேகமாகவே இருக்கிறது. நல்ல அழகி, இளம் வயது. இப்படிப்பட்ட பெண் ஏன் பிணிக் கோலம் தாங்க வேண்டும் என்றுதான் எனக்குத் தெரியவில்லை. அந்தப் பி அவள் மீது ஏதோ குற்றம் இருப்பதை உண்மையாகவே உணர்ந்திருக்க வேண் டும்; அவர் மிகவும் ஆத்திரம் அடைந் திருக்கவேண்டும் என்பதை அவகுடைய முகபாவனையிலிருந்து நான் தெரிந்து கொண்டேன். மாலரையரே! இந்த ரகசியம் இந்தப் பிக்ஷக்களின் கூட்டத்தில் ஊடாடும் உங்களுக்குக் கொஞ்ச மாவது தெரிந்திருக்கலாம். அதன் விவரத்தைக் கேட்க வேண்டும் என்ற துடிப்பு எனக்கு ” என்றான்.

“அதன் விவரம் எனக்கு ஒன்றும் தெரியாது. இனிமேல்தான் அதைப் பற்றி நானும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. பூதுகா! புத்தபெருமானிடமும் அவ ருடைய உபதேச மொழிகளிலும் எனக்கு அளவற்ற பிரேமை உண்டு. நான் ஒரு புத்த பிக்ஷு வாக வேண்டும் என்று கனவில்கூட ஆசைப் பட்டதில்லை. அரச சேவையில் ஈடுபட்டு ராஜ தந்திர நோக்கங் களிலேயே எப்பொழு தும் சிந்தனை யை  ̆ச் செலுத்திக் கொண்டு வரும் எனக்கும் இந் தத் துறவு வாழ்க்கைக் கும் எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்? எப் படியோ மனப் பக்கு வம் வராவிட்டாலும் நான் ஒரு பௌத்த பிஷூ ஆக வேண்டிய விதி ஏற்பட்டுவிட்டது. நான் உண்மையாகவே மனப் பக்குவத்தோடு பிக்ஷவாகிச் சங்கத்தில் சேர்ந்திருந்தாலும் இங்கு இருக் கும் நிலையில் நான் வெறுப்படைந்து வேறு வழியில் செல்லும் உத்தேசம் தான் ஏற்பட்டிருக்கும். பூதுகா / புத்த பெருமானின் வாழ்க்கை அவருடைய களவு, அவருடைய உபதேசங்கள் எல் லாம் பரிசுத்தமானவை. ஆனால் இங்கு இருக்கும் பௌத்த பிக்ஷக்களின் நோக்கம் வாழ்க்கை நடைமுறையில் இவை எல்லாம் வேறு. எல்லாம் மதப் பிரசார நோக்கத்தில்தான் நடக்கின்ற னவே தவிர, எதுவும் துறவு வாழ்க்கைக் குள்ள கொள்கையோடு நடப்பதில்லை. எப்படியோ இங்குள்ளவர்கள் துறவு வாழ்வை மேற் கொண்டவர்கள் போலிருப்பினும் உலக நடைமுறையில் ஓரளவு பற்றுக் கொண்டவர்கள்தான். அவர்கள் ஓரளவு உலக வியவகாரங்களி லும் கவனம் செலுத்துவது என்னைப் போன்றவனுக்கும் ஓரளவு பயனளிக்கக் கூடியதாய்த்தான் இருக்கிறது. இன் றைய நிலையில் அவர்கள் எப்படி இருப்பி னும் அவர்களும் சிதைந்துபோன சோழ சாம்ராஜ்யத்தின் பெருமைகளை அடிக் கடி பேசுகிறார்கள் என்ற வருத்தம்தான்எனக்கு. மறுபடியும் சோழசாம்ராஜ்யத்தினர் ஆளுகைக்கு நாடு உட்பட் டாலும் அவர்களுக்கு மிகுந்த திருப்தி அளிக்கும் போல்தான் இருக்கிறது. இதற்குக் காரணம் சோழ மன்னர்கள் வேறு சமயத்தவர்களாயினும் புத்த பிக்ஷுக்களின் துறவு வாழ்க்கைக்கு மதிப்பு வைத்து அவர்களுக்குப் புத்த விஹாரங்களும் பள்ளிகளும் அமைத்துக் கொடுத்ததே காரணமாகும். இன்று இக் காவிரிப் பூம்பட்டினத்தையும் அதைச் சுற்றியுள்ள சில இடங்களையும் புத்த மதத்தைச் சேர்ந்தவனும் களப் பிரகுல திலகனுமான அக்கூட விகந்த னின் வம்சத்தினர் அரசாட்சி செய்வ தில்கூட இந்தப் புத்தபிக்களுக்குத் திருப்தி கிடையாது. என்று கலங்க மாவரையர் சொல்லிக் கொண்டு வரும் போது. அந்தப் புத்த விஹாரத்தி லிருந்து யாரோ வெளியே வருவது போல் தெரியவே சட்டென்று இரு வரும் அந்த மரத்துக்குப் பின்புறம் சென்று தலைமறைவாக ஒதுங்கி நின்ற னர். அந்த விஹாரத்திலிருந்து வெளியே வந்தது யாரென்று அவர்க ளுக்கு விளங்கி விட்டது. அவள் ஒரு பௌத்த பிக்ஷுணி. ஆம், இன்று பூசை வேளையில் எந்தப் பிஷூஷணியின் மீது ஒரு புத்தபிஷூ குற்றம் சுமத்தினாரோ அதே இளம் வயதுடைய புத்தபிக்ஷணிதான். பௌத்த விகாரத்திலிருந்து வெளிவந்த அந்தப் பெண் அந்த அழகான சோலை யைத் தாண்டிக் கடற்கரையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தான். சுலங்கமாலரையர் வியப்புக் குரலில், “பூதுகா, பார்த்தாயா அவளை? இதில் ஏதோரகசியம் இருக்கிறது” என்றார். பூதுகன் அலட்சியம்நிறைந்த குரலில், இதில் என்ன ரகசியம் இருக்கப் போகிறது? சாதாரணமாகப் களின் இதயத்தை அறிவதே கடினம். அதிலும் இளம் வயதுடைய அழகான பெண்ணின் மனத் துடிப்பு களையும், ரகசியங்களையும் நடத்தைகளை யும் அறிந்து கொள்வது மகா கடினம். பருவத்தின் விபரீத விளையாட்டுக்களை யெல்லாம் இந்த விஹாரத்தில் உள்ள துறவிகள் எவ்வளவு தூரம் அறிந்திருக் கப் போகிறார்கள்? இந்தப் பருவத்தில் துவராடை யணிந்து பிணியாகிவிட் டால், மன ஆசைகள் எல்லாம் போய் விடுமா? இந்த இன்பகரமான நிலவு வேளையில் யார். எங்கு அவளை எதிர் நோக்கிக்காத்திருக்கிறானோ? இந்த ர சுசி யத்தை நாம் அறிந்து கொள்வது மிகக் கடினமா?” என்றான்.

– தொடரும்…

– மாலவல்லியின் தியாகம் (தொடர்கதை), கல்கி வார இதழில் 1957-01-13 முதல் 1957-12-22 வரை வெளியானது.

– கி.ரா.கோபாலனின் மறைவுக்குப் பின் அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு ‘மாலவல்லியின் தியாகம்’ தொடரின் கடைசி பத்து அத்தியாயங்களையும் எழுதி முடித்தார் கல்கியில் மற்றொரு உதவி ஆசிரியராக இருந்த ஸோமாஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *