பசியும் பாசமும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2025
பார்வையிட்டோர்: 902 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சீதையாச்சி அப்பம் சுடுவதற்கு எழுந்துவிட்டாள். *களு…களு…களு…” தேங்காய் துருவும் சத்தம் கேட் கிறது. “எடி பிள்ளை எழும்பனடி விடிஞ்சு போச்சு.. இந் தப் பாலைப் பிழிஞ்சுதாவன்” 

“என்னணை, விடியமுந்தி எழுப்பிறா… இப்பவே சுட்டு வைச்சு என்னத்துக்கு -காஞ்சு விறைச்சல்லே போம்: பேசாமைக்கிட …” 

செல்லி மறுபுறம் திரும்பிப் படுக்கிறாள். 

“கண்ணைத் துறந்து பார் … பலார்… பத்தி விடிஞ்சு விட்டுது. நீ கிடந்த கிடையாக் கிடக்கிறாய்….” 

பகல் முழுவதும் வேலை செய்த அலுப்பு; உடனே எழுந்திருக்க முடியவில்லை கால் கைகளை நீட்டி முடக்கி உடலை உலுப்பி எழுந்துவிட முயல்கிறாள். உடலின் அசதியை பார்த்துக்கொண்டு வாளாவிருந்துவிட அவ ளென்ன குபேரன் வீட்டுப் பிள்ளையா ? 

செல்லி எழுந்து பாலைப் பிழிந்து கொடுக்கிறாள்.

சீதையாச்சி …! 

குக்குடு கிழவி.. பார்ப்பதற்கு அழகுமில்லை பொக்கு வாய்..! சதா எதையோ வாய்க்குள் பேட்டுக் குதப் புவது போன்று அலகுகள் ஆடுகின்றன. சீதையின் மலர்ச்சி கருகி உடல் சுருங்கி இளமை தளர்ந்து முது மையின் போர்வையினுள் மறையத் துடிக்கும் அவளின் உடல்… நரம்புகள் தோற்புரையில் விம்மிப் புடைத்து, தோல் சுருக்கங்களின் மகிழ்வில் திழைக்கின்றன…

சீதையாச்சி அகப்பையில் மாவை எடுக்கிறாள். கை காற்றில் தென்னங் கீற்றாகி நடுங்குகிறது. நிதானம் தவறாது சட்டிக்குள் போய் விழுந்து எண்ணையுடன் சேரு கையில் சிலீரிடுகிறது. பாலில் இரண்டு மேசைக் கரண்டி அள்ளிவிட்டு பொக்குவாயால் அடுப்பை ஊதுகையில் காற்று தணலில் பட்டும் படாமலும் போகிறது. தணல் இளம் குமரிப்பெண்கள் குலுங்கிச் சிரிப்பது போல் 

ஒரு முறை சிரிக்கிறது. புகை அலைகள் முகத்தில் படர்வதால் கரிப்புத் தாங்க முடியாமல் கண்களிலிருந்து கண்ணீர் கசிகிறது. கண்களைக் கசக்கியபடி மறுகையால் கடகத் தில் இருந்த ஓலைக்கீற்றுகளில் நான்கு மூன்றை எடுத்து தணலில் புதைக்கிறாள். அது பற்றி எரிகிறது. அதன் வேகத்தைப் போல மனதில் கவலை சுவாலை நாக்குகளை நீட்டுகிறது. 

கவலை… புகை அலைபோல் எழுந்தலைகிறது …! 

என்ன ஜென்மமிது மனிதனாகப் பிறப்பது கூட ஒரு குறையா …? பாவம் அவள் செல்லிக்குச் சதா பிள்ளை களைப் பற்றிய நினைவுதான்… என்ன செய்வது… அன் புக்கு அவள் நெஞ்சம் அடிமையாய் அலைகிறது. அதற் கிடையில் நான் இருக்கிறேன் எனத் துன்பம் தலைகாட்டு கிறதே… 

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு குறை… பணம் இருந்தால் பிள்ளை இல்லை. பிள்ளையிருந்தால் பணமில்லை. இரண்டுமிருந்தால் நிம்மதியில்லை… இன்ப மென்பது கனவுப் பொருளா..? மனிதனாகப் பிறப்பதே பிறவியில் முழுமை பெறுவதற்குத் தானோ..? என்னமோ நான் இருப்பது அவளுக்கு ஆறுதல்.. வேலை செய்து கஷ்டப்படும் செல்லிக்கு உதவி. நான் என்ன செய்ய… பத்து வயது துவக்கம் இண்டைவரை அடிச்சுக் கொடுக்க வேண்டியிருக்கு. மனசார அவள்தான் என்ன செய்வாள் ? மூண்டு பிள்ளையளும் அவரும் பாரமாய் இருக்கும்போது.. சும்மா காலைக் கையை ஆட்டி வேலை செய்யாமல் இருந்து விட முடியுமோ.. நம்மடை கால கஷ்டம் அவரையும் இப்பிடி ஆக்கிப்போட்டுது. மனிசனுக்கு மனசார ஏலாது தன்னாலை எலுறதை அது செய்யுது… நாமென்ன மற்ற வர்களிட்டே அதில்லை இதில்லை எண்டு கேக்கிறோமா…! கேட்டாலும் நமக்கு இட்டல் இடஞ்சல் எண்டு அஞ்சுபத்து இந்தா எண்டு தருகினமா… எங்களையாரும் விரல் மடிக்க ஏலாது.. இல்லை… மானத்தை வித்து சீவிக்கிறமா… எல்லாம் இந்த உடல் இருக்குமட்டும் பாடு படுறம் உடலைக் கயிற்றாக்கி திரிச்சு சத்தியைப் பெறுகிறம். பின்னை ஏன் நாமள் மற்றவங்களுக்கு பயப்பிடணும்… இதுகள் சின்னஞ் சிறுசுகள்.. இப்பவே கசுட்டத்தைக் கொடுக்கப்படாது. என்ன செய்யிறது…! 

நெஞ்சமெனும் குட்டையை பலமுறை அழுத்தி அழுத்தி கலக்கி அதனிடத்தில் தெளிந்த நீரைப் பெற முயலும் சீதைக்கு வெற்றி கிடைக்குமா…? 

சீதையாச்சியின் இருதயம் என்ன மெழுகா ? 

மெழுகு இதயத்தில் பிள்ளையென்ற அலகில் .. கிளை யில்… அரும்பும் பூக்கள் என்ற சிறுசுகளின் பாசம் வந்து பட்டு எரியும்போது உருகி… உருகி… ஓடுவது தெரி கிறது. மெழுகு… உருகி… குளிர்வடையும்போது உணர முடிவதுபோல… இதயத்தில் தனிக் குளிர்ச்சி…! மலைச்சாரல் நீர்க்குதிப்பில் தோய்ந்தது போன்ற இதம்… பூரிப் பில் மனம் நிரம்பித் ததும்புகிறது. சீதை ஆச்சிக்குப் புனி தம் என்றால் பிடிப்பு… ஒன்றும்போது மகுடிமுன் பாம் பாகிவிடும் சுபாவம்… 

“ஆச்சி ஆச்சி… நீதான் கண்ணைப் பொத்தி விடணும் முதல்… சரிதானே… ஆச்சி…” 

“ஆச்சி… நீ கண்ணாரே கடையாரே காக்கணவன் பூச்சியாரே எனக்கொரு முட்டை ஒனக்கொரு முட்டை கொண்டோடிவா எண்டு சொல்லு இன்ன… முதல்ல கண் ணைப் பொத்தறப்போ எல்லோரும் ஓடி ஒளிச்சுடணும். நானாச்சும் வந்து பிடிக்கிறதுக்குள்ள ஆச்சியிலே வந்து முட்டிட்டா அவங்களெல்லாம் பழம்… நான் பிடிக்கிற ஆளு கண்பொத்த வரணும்… இன்ன, தெரியுமில்ல…” 

அத்தனை பிள்ளைகளும் பொம்மையாகி சரி என்ப தற்குத் தலையாட்டுகின்றன… 

சொன்னபடி புனிதத்தின் கண்ணைச் சீதையாச்சி பொத்தி விடுகிறாள். அயல் சின்னப் பிள்ளைகள் கண்ணன், நாதன், கேதாரன், தருமன் எல்லோரும் புனிதத்துடன் கண்ணாம்பூச்சி விளையாடும் போக்கில்… ஒவ்வொருவரும் ஒவ்வொரு மறைவில் ஓடி ஒளித்துவிட்டனர்… 

புனிதத்தின் கண்களைப் பொத்திய கைகள் எடுபட, வில்லிருந்து புறப்பட்ட அம்பாகி அவள் துள்ளி ஓடுகிறாள். அதன் அழகு… அசைவில் எத்தனை துள்ளல்… கால்களை தொங்கித் தொங்கி… குதிக்கும் அவள்… பாதங்கள் நிலத்தில் பாவாமல்… அடியெடுத்து வைத்துக் கொள் வதை ரசித்த வண்ணம் சீதையாச்சி இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். 

“ஆச்சி சொல்லித் தாணை… அவையளைக் காணம்… என்ரை ஆச்சியில்ல… எங்க ஒளிச்சவங்க…” 

தாளம்பூ மடல் போன்ற கண் மடல்கள். அதனுள்ளே தேனருந்தச் செல்லும் கருவண்டு போன்ற விழிமணிகள் அதன் அசைவுடன் ஒத்தூதும் பாசத்தின் அழைப்பு. இளம் பிருகு இதழிலிருந்து உதிர்ந்த வார்த்தைக்கு இவ் வளவு வலிமையா..? அந்த வார்த்தை தேனருவியாகி இனிக் கிறது… சீதைக்கு… இதயமலரில் வருடுவது போன்ற இதம்… 

“ஆச்சி என்னணை இன்னும் காணம்…” 

குழந்தைகள் இதயமென்ன றோசா மலர்களா…? 

இதமான அந்த மென்மையான றோசாக் கிளையிலிருந்து ஒடித்து, தரையில் வீசியெறிந்து சுமைஎன்ற வெம்மையைப் பாச்சுவதென்றால்… மெதுவான இளம் பிருகு உள்ளம் வாடிவதங்கி இளமை ஒளியை சிதறடித்து வாசனையும் நிறமும் அற்ற மலராகி உடல் தளர்வதானால்.. இன்பத்திற்குப் பதில் துன்பச் சுமையை அனுபவிப்பதென் றால்… எப்படி…. 

இளம் தளிர் உடலை ஆட்டி அசைத்து நடந்துவந்து சீதை ஆச்சியின் கன்னத்தில் பஞ்சு போன்ற முகத்தை உரசி… கைகளால் கழுத்தைச் சுற்றிச் சங்கிலியாக்கி பிடித்து கருவிழிகளை கயல்விழிகளின் ஒளியுள் தோய்த்து தோய்த்து மலர்த்தி… குறுக்கி… மனதிலுள்ள ஆசைக்கு அலைதலுக்கு… ஒத்தூதுவதுபோல்… குழைந்து பிறழ்ந்து புனிதம் அழைக்கிறாள்… 

“ஆச்சி… என்ரை ஆச்சி சொல்லித்தாணை…”

அவள் முகம் பூவாகி விரிந்து மலர… இதழ்ப் பாளை கள் சுருங்கிய சீதையின் முகத்தில் அன்பு முத்தத்தின் முத்திரை பதிய… அவள் சிந்தும் சொற்றொடர்… இனி மையை இரசிக்க இதயச்சுனை ஊற்றெடுக்கிறது; சீதையின் நெஞ்சுகள்… 

கூ… கூ… கூ…குரல் எடுத்து… ஒளிந்திருந்தவர்கள் கூவியதைக் கேட்டு குரல்வந்த திக்கை நோக்கி விரைகிறாள் புதினம்… 

காலம் ஓடுகிறது…! 

அதை ஓடென்று சொல்வாருமில்லை. நில்லென்பாருமில்லை. கால ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவது மனிதனால் இயலக்கூடியதா…! காலத்தின் கொடுமையை என்ன வென்பது…: அதற்கு அலுப்பில்லை, ஓய்வில்லை… 

ஆனால் யந்திரம் அப்படியல்லவே…! 

விடுகிறது. 

அதற்கிடையே கோளாறு ஏற்பட்டு ஓய்ந்து நின்று மனிதனும் ஒரு யந்திரந்தானே…! அந்த மனித யந்திரம் எப்பொழுதும் சுட்டுச் சுறுக்காய் வேலை செய்யுமா… என்றாவது ஒருநாள் களைத்துவிடத்தானே செய்யும் சீதையாச்சியின் வாழ்வில் கஷ்டங்கள் பலதடவை சோதித்துவிட்டன. அதன் இக்கட்டில், ஏன்தான் நான் இன்னும் பூமிக்குப் பாரமாய் இருக்கவேண்டும்…? இறந்து விட்டால் மேல் என அலுத்துக்கொள்வாள். பசியில் மனம் படும் அவலம் என்ன செய்வது..! மறுகணம் பாசத் தின் வசமாகி சுழியிடும் மனம்… பிள்ளை பேரப்பிள்ளைகளை விட்டுவிட இடம் கொடுப்பதில்லை. அவர்களின் ஆக்கம் அவளின் வாழ்வில் தணிக்க முடியாத ஆசை நீர் ஊற் றுப் போலச் சுரந்து பரந்து ஒவ்வொரு கலத்திலும் புதுத் தெம்பையூட்டுகிறது குமுறும் மனம் குளிர்வடைகிறது. எல்லாம் பாசத்தின் இழையில் இயங்குகிறது. 


இன்று வெள்ளிக்கிழமை…! 

சீதை ஏறுமாறாகவே அப்பத்தைச் சுட்டுவிட்டாள். காற்பங்குகூட விலைபோகவில்லை. அப்பம் சுட்டு அடுக்கி வைத்தாற்போல் இருக்கிறது. அதற்குச் செலவான மாவும் தேங்காயும் பத்து ரூபாய் வரை இருக்கும்… 

“எப்படியாவது விற்றாக வேண்டும்… இல்லையென் றால் இவ்வளவு நாளும் எடுத்த லாபமும் இன்று போய் விடுமே… 

நினைத்தபொழுது மனதில் பயம்… பஞ்சியைப் பாரா மல் ரோட்டில் கொண்டுபோய் தோட்டங்களிலை வேலை செய்யிறதுகளுக்கெண்டாலும் வித்துப்போடுவம்… அப் பத்தை எடுத்துப் பெட்டியில் அடுக்கிக்கொண்டு எழுந்து நடந்தாள் சீதை… 

வீதியில் இரண்டு மைல் நடந்தாயிற்று. இன்னமும் அவள் நினைத்தபடி விலைபோகவில்லை. கால்கள் தளர்ந்து தள்ளாடின. முகம் தொய்ந்துவிட்டது. மனதில் களை… 

“என்ன செய்யிறது. செல்லி பேசப் போகிறாள். அவள் சொன்னதையும் கேட்காமல்… நாலுசதம் கூட வரும் என்ற ஆசையிலை சுட்டுப்போட்டன்…” சீதை ஆச்சியின் மனம் ஒரு நிலையிலில்லை…

வீட்டை நெருங்குவதற்கிடையில்… மழை பிடித்து விட்டது… தும்பைப் பூப்போன்ற தலைமயிர் நனைந்து தோய, கடுமையாகக் களைத்துப்போய் பயந்து கொண்டு வந்தாள். 

“எடிபிள்ளை, இண்டைக்கு இருபது சோடி வரை மிஞ்சி விட்டுது.” 

“சரி, எனியென்ன செய்யிறது. மத்தியானமும் வைச்சு சாப்பிட்டால் போகிறது. மழைக்குள் நனைஞ்சு கொண்டா வந்தனி. ஈரத்தைத் துடை, சுவற முந்தி…”

சீதைக்கு இப்பொழூதுதான் மூச்சு கொஞ்சம் இளகியது. 

“அப்பாடா” மனதுள்ளே சொல்லி ஆறுகிறாள். 

செல்லிக்கு இன்று மழை என்றதும் புகைச்சல்… 

“சீ… இந்தப் பாழாய்ப்போன மழை வந்து ஊத்துது. எட. இண்டைக்கு எனக்கு நாலு ரூபாயும்… அதிலை நட் டம். இந்த நேரத்திலைதானா இதுவும் வரவேணும்…” 


சீதைக்கு ஒரே குளிராக்கிப் போட்டுது. முனகிக் கொண்டு சீலைப் போர்வையுள் புழுப்போல குறண்டிச் சுருண்டு கிடக்கிறாள். எப்பொழுதும் போல அவளால் அசைய முடியவில்லை. . அப்பம் சுடும் சட்டிகளும், தேங் காய் துருவலகும் குசினிக்குள்ளே போட்ட போட்ட இடத் தில். அப்பம் சுடும் அடுப்புள் பூனை படுத்துக் கிடக் கிறது. அதற்குப் பசி. மற்றை நாளையில் இந்நேரம் சட்டியப்பம் அதற்குக் கிடைத்திருக்கும். இன்று அதற்கும் பசி… சாம்பலுக்குள் தனது உடலைத் தோய்த்து உருண்டு புரண்டு பாதிக் கண்ணை மூடியும் மூடாமலும்… ஈனக்குர லில் தனது வயிற்றுப் பசியைச் சொல்கிறதா…? 

‘”மியாவ்… மியாவ்…” வாலாடுகிறது .. 

இரவு உணவை அருந்தும்போது பிள்ளைகளின் நினைவு ! 

“நாளைக்கு அப்பமும் சுட முடியாது. சின்னப்பிள்ளை =யள் பசியோட போகுங்களா… அதுகளுக்குக் கொஞ்சம் இருக்கட்டும்…” 

பானையில் நீரிட்டு சிறிது சாதம் வைத்திருந்தாள். காலையில் வேலைக்குப் போகும்போது… 

“பழஞ்சோறு வைச்சிருக்கிறன், பள்ளிக்குப் போறப்போ சாப்பிட்டிட்டுப் போங்க… நேரம் போச்சு நான் போகிறன். கொஞ்சம் பிந்தினாலும் நோஞ்செல்ல வந்ததெண்டு பேசுவாங்கள். நான் போறனப்பு என்ன…” 

மூன்று பிள்ளைகளும் பானைமுன் குந்திவிட்டார்கள். அவர்களில் பெரியவன் பழைய சாதத்தை மூன்று தட்டி லும் வார்த்து வைத்தபின் குடிப்பதற்கு வாய்க்குக் கிட்ட கொண்டு போனான்… போகும் சமயம் கத்திக்கொண்டு ஓடிவந்த பூனை அவனது கால்களில் தனது உடம்பைத் தேய்த்து முறுகியபடி அவனைப் பார்த்து நின்றது. 

‘மியாவ்.. மியாவ்…’

ஒரு பிடி சோற்றை அதற்கு எடுத்து வைத்தான். பூனை அந்தக் கவளம் சோற்றை ‘அவக் அவக்’ என விழுங்கியது. 

பாவம் அதற்கும் பசி… 

மூவருக்கும் பத்தாப்பத்திரம்; போதவில்லை என்று யாருக்குச் சொல்வது…! புத்தகங்களைக் கையில் அடுக்கி அணைத்து பிடித்தபடி பாடசாலையை நோக்கி விரைந்தார்கள்… படிப்பதற்கு… 


செல்லி வேலை முடிந்து வந்தாள். அவள் கையில் பணம் இருப்பதாகத் தெரியவில்லை. சீதைக்குக் காலையிலும் பசி நேற்று முழுவதும் ஒன்றுமில்லை. வயிற்றின் பசி… இரைப்பையை குடைகிறது. என்ன செய்வது? நோய் குணமாகவேண்டும். மனதை இழுத்துப் பிடித்து நிறுத்தி அதன் அலைதலைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். 

“பிள்ளை முருகன், கண்டு கட்டின காசு தரவில்லையோ…’ 

“அவன் நாளைக்குத் தாறதாம்…” 

“அவங்களுக்கென்ன, சொல்லிப்போட்டு இருந்திடு வாங்க. பிள்ளையள் பள்ளியாலை வரப்போகுதுகள், மத் தியானமாப் போச்சு” 

“பொடியள் வந்திட்டுது…” 

“வந்தா என்னணை, பொறன்” செல்லிக்கு எரிச்சல் புகைஞ்சது. 

“எணை அம்மா பசிக்குதணை… ணோய் அம்மா, பசிக்குது…”  

“கொஞ்சம் பொறுங்க. அரிசி உலையிலை போட்டிருக் கிறன். வேகட்டும்.” 

“காலமையும் பத்தாது. சோறு கெதியாய்த் தாணை..” 

கடைக்குட்டிப் பெட்டை சிணுங்கினாள்… அடம்பிடித் தாள். குசினிக்குள் சருவச் சட்டிகளைத் தூக்கிப்போட் டுடைத்தாள் புவனம். 

பொறுமையைச் சோதிப்பதுபோல் இருந்தது செல் லிக்கு… ஆத்திரம் … அதன் குமிழிகள் பொட்டுப் பொட் டென தோன்றித் தெறிக்கின்றன. கோபத்தில் கையில் இருந்த அகப்பைக் காம்பினால் அடித்தாள். 

சின்னவள் புனிதம் துடித்து நெளிந்து பதைத்தாள். “அம்மாணோய்… அடியாதையணை… அடியாதை யெணை…” 

குளிரென்று மூலையில் கிடந்த சீதையாச்சி ஓடிவந்தாள்.  

“பாவம் பிள்ளை, சின்னதுகளுக்கு இப்பிடியா அடிக்கிறது?” 

“என்ரை பிள்ளை சொல்லுக்கேக்காட்டி அடிப்பன் உதைப்பன்… அது என்ரை இஷ்டம்…” 

“ஓ… பின்னை ஏறி மிரியன்ரி… என்னடி உனக்கென்னடி…”  

”ஓ… ஓ… எனக்குத்தான் திமிர்… நீ செய்து வைச்ச லெச்சணத்திலை… தந்துவைச்ச சீதணத்திலை … திண்டு போட்டுக் கிடக்கிறன். கொழுத்துத்தான் ஆடுறன். நான் படாதபாடு பட்டுத் தாறன், நீங்களும் சேந்து தின்னுங்க…” 

“ஏன் நான் உழைக்கேல்லையோ…?” 

“அதுதான் முந்தநாத்து நீ சுட்டு வித்த லெச்சணத் திலை கிழி… கிழிஞ்சுபோச்சு … கடனுக்குக் குடுத்திட்டு வந்து உன்ரை ஆங்காரக் கொழுப்பிலும் குறைச்சலில்லை..” 

”ஆ… நான் உழைச்சா எனக்குக் காணாதோ… காக் கொத்தரிசிக்கு உழைக்க ஏலாதோ… கவுண்மேந்து தாற பத்து ரூபாய் போதுமடி எனக்கு… எங்கையெண்டாலும் போகத்தான்வேணும், எந்தநாள் பாத்தாலும் இவள் என் னோடை மல்லுக்கட்டிறாள். சும்மா புறுபுறு கறகறண்டு பேசிறாள்… ஒரு மாசத்துக்கெண்டாலும் என்ரை அக்கை மகள் வீட்டை போய் இருந்திட்டு வரவேணும், அப்பத் தான் அருமை தெரியும். அவள் தன்னோடை வந்து ‘துணைக்கி இருக்கச்சொல்லிக் கேட்டவள்… நானும் ஏதோ என்ரை பிள்ளை… பிள்ளை… எண்டு பாத்தா-” 

”ஓ… ஓ… போவன். இஞ்சை ஆர் மறிக்கினை…”

“எடி… ஓமெடி உனக்கு உன்ரை வாய்க்கொழுப் பிலைதான் நீ இப்பிடிக்கிடக்கிறாய்…” 

சீதையாச்சியின் சிணுங்கல் நீர் மழைத் துமியாகி நிலத்தில் வழித்தெறியப்படுகிறது. சீதைக்கு உள் மன தில் சிறு கீறல் விழுந்துவிட அழுகை சுரந்தது.

“எடி.. ஓமடி.. ஓம் பேசாமைக் கிட…” 

“முட்டைக் கண்ணீர் ஊத்திறா … தன்ரை மச்சா ளின்ரை மகன் எண்டு செய்துபோட்டு இப்ப முட்டைக் கண்ணீர் வேறை…” 

புவனம் சிறியவள், அடியின் வலியில் அழுது ஓய்ந்து வெறு மண்ணிலே படுத்து உறங்கிவிட்டாள். மற்றவர்கள் இருவரும் தாய்க்கும் சீதைக்கும் நடக்கும் சொற் போரின் கோரத்தைக்கண்டு பயந்து ஒதுங்கி ஒன்றும் பேசாது ஒடுங்கி மூலையில் குந்தி இருந்து கலவரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்…. 

செல்லி சோறும் சமைத்து சம்பலும் அரைத்துவிட் டாள். முதலில் சீதையாச்சிக்கு குடிநீர் வைத்து இறக்கி வைத்தாள்…. 

‘ஆச்சி… குடியன்…” செல்லி கெஞ்சினாள். 

“எனக்கு வேண்டாம் போ உன்னட்டை வேண்டிக் குடிக்கிறதும் போதும் நீ படுத்துகிற பாடும் போதும்… 

“என்ரை ஆச்சியல்லே…” 

சீதையின் நாடியைத் தடவிக்கொண்டே “என்ரை ஆச்சியல்லே குடியணை பின்னை நான் வேலை செய்து போட்டு வந்து ஆக்கிக்கொண்டிருக்கையில் கதைச்சா… எனக்கும் பசி எனி ஒண்டும் சொல்லையில்லைக்குடி…” சீதையின் மனசு இளகியது. குடிநீரை வாங்கிக் குடித்தாள். 

“டியே புவனம் எழும்படி சாப்பிட…’ 

”சோறும் வேணாம் ஒண்டும் வேணாம் போ …நீ எனக்கு அடிச்சனியோ: இஞ்ச பாரன்…” கொழுக்கட்டை மாதிரி தடித்திருந்த கால் துடையைத் திருப்பிக் காட்டினாள். 

“நல்ல பிள்ளையல்லே; என்ரை குஞ்சல்லே, சாப்பிட வாடி கண்ணு…” 

“எனிமேலும் அடிப்பியோ அடிக்கமாட்டன் எண்டு சொன்னாத்தான்’ 

“நான் அடிக்கேயில்லை சாப்பிடு வா…” 

“இல்லைப்போ வேண்டாம் என்றால் வேண்டாந்தான்” புவனம் கொஞ்சமும் இளகுவதாயில்லை.

செல்லியின் மனம் உள்ளே அழுகிறது. நான் ஆத் திரத்தில் அடிச்சுப்போட்டன். ஈவு இரக்கமில்லாமல் என் மேல் பிழைதான். நான் பெத்தது எப்பிடியிருக்கும் என் னிலும்பார்க்க மூன்று மடங்கு அகங்காரம் அவளுக்கு; இருக்காதா என்ன? 

புவனம் முடியாது என மறுமுறை சொன்னதும் செல் லிக்குப் பொறுக்க முடியவில்லை. 

நான் எங்கையேன் போய்த் துலைஞ்சிட்டாலும் தேவை யில்லை. இதுகளோடை நான் படுறபாடு… கையை முகத் தில் மூடியபடி அழுதாள் செல்லி… 

பார்த்துக்கொண்டிருந்த புனிதம் தாய் முகத்தில் பொத்தியிருந்த கை இரண்டையும் தனது தளிர்க்கரத்தால் விலக்கிப் பார்க்கிறாள். 

செல்லியின் கண்களில் கண்ணீர் கடல் வெண் முத் துக்களைப்போல் திரண்டு உருண்டது. 

“அம்மா… அம்மா… நான்… சாப்பிடவாறன் வாவவன்…” 

“….”

“புறகும் பாரன் இப்ப புறகும் அழுகிறா… அழாதை…”

கண்களில் பொங்கி வெடிக்கும் கண்ணீரைத் தனது இரு கைகளாலும் துடைத்து வழித்துவிட்டு, கையைப் பிடித்து இழுத்தாள் புனிதம்… 

தாய்மை உணர்வில் செல்லியின் இதயம் விரிந்தது. புன்னகை; மல்லிகை மொட்டு விரிவதுபோல மலர்ந்து உதிர்ந்து விழுந்தது. கைகள் இரண்டாலும் அவளைக் கட்டிப் பிடித்துத் தூக்கித் தனது இதழ்களின் ஓரத்தைப் பதிக்க வேண்டும் எனத் துடித்து நின்றது உள்மனது. 

– ஈழநாடு, ஆனி 1965.

– தாலி சிரித்தது (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 1965, தேனருவி பிரசுராலயா, வெள்ளவத்தை, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *