நல்ல மனம் வாழ்க!





அன்றைக்கு தென்னை மரத்திலிருந்து காற்றுக்குத் தேங்காய் விழ ரோட்டில் போற வரவன் தலையில் விழுந்து தொலைச்சுடக்கூடாதே என்று சொல்லி தேங்காய் போடும் அண்ணாதுரையைக் கூப்பிட்டுப் தேங்காய் பறித்துப் போட்டதால் கூடவே ஆளு நிற்க வேண்டியிருந்தால் சமையல் செய்ய முடியவில்லை., சரி ஒருநாளைக்குத்தானே அதனால் என்னன்னு ரோட்டடிக் கடையில் ‘வெரைட்டி மீல்ஸ்’ வாங்கி வரப் போனாள் மனைவி.

அதில் ஆச்சரியம் என்னன்னா…? டிபன் பாக்ஸ் கொண்டு போய் வாங்கினா ஒரு வெரைட்டி மீல் பத்துரூபாய் தானாம்! அதையே பார்சல் கட்டி வாங்கினா இருபது ரூபாயாம்! வியாபாரம் செய்வது முதியோர் நாலு பேர். பொழுது போக்க ஒரு கூட்டு வியாபாரம்.
இதிலென்ன ஆச்சரியம் என்று தானே கேட்கத் தோணுது.?! ஒண்ணுமில்லே.. பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர், பழ முதிர் நிலையங்களுக்குப் போனா… எப்படியும் நாலு பழம் ஜாமான் வாங்கினா இல்லை பெரிய துணிக்கடையில் ஜவுளி எடுத்தால் ஆயிரக்கணக்காகும் பில் வரும்!. பை இல்லேனா தனியா பைக்குன்னு பில் வேற போடுவான். அந்தப் பையில் அவன் கடை வியாபார விளம்பரம் இருக்கும்.! என்ன ஒரு அநியாயம் பாருங்க?!, அவன் கடை விளம்பரத்துக்கு நாம காசு கட்டறோம். ஒரு பத்து ரூபா பெருமா அந்த துணிப்பை? சும்மா கொடுத்தா என்ன?! கொறஞ்சா போவானுக?!
இந்த முதிர் வயதுப் பொம்பளைங்க சாப்பிட வரவனுக்கு பத்து ரூபால சோறு போடறதே பெரிய உபகாரம்! … நியாபகம் இருக்கா ஒரு பாட்டி ஒத்தை ரூபாய்க்கு இட்லி சட்னி சாம்பாரோட தராளே,, இவங்களுக்கெல்லாம் சொர்க்கம் தானே திறந்திருக்குமா? இல்லே ஆயிரக் கணக்கான ரூபாய்க்குச் சாமான் வாங்கினாலும் பிளாஸ்டிக் ஒழிக்கும் திட்டம்கற பித்தலாட்டப் போர்வையில காசு பறிச்சு நம்மைச் சாகடிக்கும் சாத்தானுக இவனுகளுக்குச் சொர்க்க வாசல் திறந்திருக்குமா? கடவுளே உனக்குத் தெரியுதா? மனசு கனக்க நொந்து கொண்டதோடு சரி! நல்ல மனம் வாழ்கன்னு வாழ்த்துவோமேன்னு தோணிச்சு!?