நல்லறத்தை நம்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,579 
 
 

மருதன் இளநாகனார் நன்மாறனைப் பார்க்கச் சென்றார். வரவேற்றான் மன்னன். நல்ல விருந்தளித்தான். உள்ளம் மகிழ்ந்தார் புலவர். அரசனுக்குச் சிறந்த உறுதிப்பொருளைக் கூறத் தொடங்கினார்.

அரசே , சினங்கொண்ட கொலை யானை உன் நாட்டைக் காக்காது. திக்கைக் கடக்கும் குதிரைப் படை உன் அரசை நிலை நிறுத்தாது. நெடுங்கொடி பூண்ட தேர், நெஞ்சம் உன் ஆட்சிக்குப் பெருமை அளிக்காது. அழியா மறவர் நல்ல தற்காப்பு அளிக்கமாட்டார். நாற்படையை நம்பாதே மன்னா. நல்லறத்தை நம்பு. அந்த அறமே உன் அரசை நிலைநிறுத்தும்.

ஆகையால், கதிரவன் போல் வீறு கொள்க. திங்கள் போல் அருள் பொழிக. மழையைப் போல் கொடை தருக. மன்னா நீ மங்காத நல்லற வாழ்வு வாழ வேண்டும். உன் வாழ் நாட்கள், திருச்செந்தூர் கடற்கரை மணலினும் பலவாகு!

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *