கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 26, 2025
பார்வையிட்டோர்: 4,795 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கொக்…… கொக்……”

கோழி கொக்கரிக்கவில்லை. கோமதிதான் கோழி யைப்போல் கொக்கரித்தாள்.

கோமதியின் “கொக்… கொக்…” எனும் குரல் கேட் டதும் பல பாகங்களில் மேய்ந்து திரிந்த கோழிகள் சிற கடித்துப் பறந்தோடி வந்தன வாசலில் வந்து நின்ற கோழிகளில் சற்று தொலைவிலுள்ள சீனச்சி வீட்டுக் கோழிகளும் கலந்திருந்தன. சீனச்சி வீட்டுக் கோழிகளை விரட்டிவிட்டுச் சோளத்தை அள்ளி இறைத்தாள் கோமதி. கோமதி வீட்டுக் கோழிகள் சோளத்தை அறக்கப்பறக்கக் கொத்தித்தின்றன. குரல்வளை பெருத் ததும் கோழிகளில் கொத்தித் தின்னும் வேகம் குறைந் தது. சில கோழிகள் மெல்ல அசைந்து அசைந்து நடை யைக் கட்டின.

அப்பொழுது அங்கு பக்கத்து வீட்டுக்காரக் கிழவி ஆடு அசைபோடுவதுபோல் வெற்றிலை பாக்கை அசை போட்டுக்கொண்டு வந்தாள்.

கோமதிக்குப் பக்கத்தில் வந்ததும், “கோமதி என் னடிஉன் உடம்பு இருக்க இருக்க இளைச்சுக்கிட்டு போகுது! ஏதாகிலும் கவனிச்சிப் பார்த்தாயாடி?” என்று அக்கறை மேலிடக் கேட்டாள்.

“என்ன பாட்டி செய்யுறது. சாப்பாட்டுக்கு ஒன் றும் குறையில்லை. ஆண்டவன் கொடுத்தது தாராளமா இருக்கு. ஆனா சாப்பிடத்தாம் பாட்டி முடியலே. இந்தப் பிள்ளைகள் வேறு பிச்சுப் பிடுங்குதுங்க. மூனு பிள்ளைங்கணுதான் பேரு.” என்றாள்.

“ம்… பிள்ளைங்கணு இருந்தா அப்படித்தான் இருக் கும். அது போகட்டும் சாப்பிட முடியலே என்கிறாயே, நீ என்ன, இந்த உலகத்தில்தான் இருக்கிறாயா. சாப் பாடு எடுக்க எத்தனையோ வழி இருக்கே” என்று நாலுந் தெரிந்த பாணியில் சொன்னாள் கிழவி.

“அதெல்லாம் செய்து பாத்துட்டேன் பாட்டி. இஞ்சிச் சுரம் வச்சும் சாப்பிட்டுப் பார்த்துட்டேன். எலுமிச்சை சாறு பிழிந்து உப்புப்போட்டுக் குடிச்சுப் பாத்துட்டேன். ஊறுகாய் செய்து வச்சுக்கிட்டும் சாப் பிட்டுப் பார்த்துட்டேன். மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்பாங்களே, அதெல்லாம் என்னைப் பொறுத்தவரை பொய்யாப்போச்சு பாட்டி” என்று சலிப்புமேலிடச் சொன்னாள்.

அப்பொழுது சீனச்சிவீட்டுக் கோழி வந்து எஞ்சிக் கிடந்த சோளத்தைப் பொறுக்கித் தின்றது.

“உசு…” என்று விரட்டிவிட்டு, “பாருங்க பாட்டி நானுந்தான் கோழி வளர்க்கிறேன். சனியன் பிடிச்ச கோழிங்க பத்துப் பதினைந்துக்குமேலே மினுங்க மாட் டேங்குது. சீனச்சி வீட்டுக் கோழியப் பாத்தீங்களா, திமு திமு என்று பன்றிங்க மாதிரி பலுகி போய்த் திரியுது” என்றாள் கோமதி.

”ம்… எல்லாத்துக்கும் ‘யோகம்’ வேணும். அவ என்ன போடுறாங்கிறே? மிச்சம் கிடக்கிற சோத்துப் பருக்கையைத்தான் போடுறா. அது பாட்டுப் பலுகிப் போச்சு. ம்… அது கிடக்கட்டும் நீ சாப்பிட முடியலேங் கிறீயே, நீ நல்லாச் சாப்பிடறதுக்கும், கவலை மறந்து தூங்கறதுக்கும் நல்ல மருந்து சொல்லட்டுமா?” என்றாள் கிழவி. கோமதிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஆவ லோடு, ‘என்ன பாட்டி?” என்று பல்லெல்லாம் தெரியக் கேட்டாள்.

“சொல்லுறதைப் பத்தி ஒண்ணுமில்லே! நான்கூட உன் வயதிலே உன்னப்போல இப்படித்தான் எலும்புந் தோலுமா இளச்சுப்போய் இருந்தேன். அதைச் சாப் பிட்ட பிறகுதான் உடம்பு கொஞ்சம் உப்புச்சு. இப்பவும் உடம்பு அத்திப்பழத்தைப் போல இருக்கே அதுக்குக் காரணம் என்ன தெரியுமா? அதுதான்” என்றாள் கிழவி.

“அப்படியா பாட்டி அப்படினா சொல்லுங்க பாட்டி” என்று கோமதி ஆவலாகக் கேட்டாள்.

கோமதிக்கு இருக்கும் ஆவலைப் புரிந்துகொண்ட கிழவி, “ஆனா ஒண்ணு. காசு கொஞ்சம் செலவாகும். நாளைப் பின்னே நான்தான் செலவு இழுத்துவிட்டுட் டேனு சொல்லக்கூடாது என்று கண்டிப்பான தோரணை யில் சொன்னாள் கிழவி.

“அதைப்பத்தி நீங்க ஒண்ணும் நினைக்கவேண்டாம் பாட்டி. சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுத முடியும். காசைப் பார்த்தா உடம்பு எப்படி நல்லா இருக்கும்?” என்றாள் கோமதி.

“அதான் நானும் சொல்ல நினைத்தேன். நீயே சொல் லிட்டே. வேற ஒண்ணும் இல்லே நீ பிள்ளைப்பெத்துக் கிடக்கும்போது சாப்பிட்டமருந்துதான்” என்றாள்கிழவி.

கோமதிக்குப் புரியவில்லை. “நான் பிள்ளைப் பெத்துக் கிடக்கும்போது சாப்பிட்ட மருந்தா…? புரியலேயே பாட்டி” என்று வியப்பு மேலிடக் கேட்டாள்.

“என்ன புரியலேங்கிறே. அதுதான் பிராந்தி” என்று தணிந்த குரலில் சொன்னாள் கிழவி.

கிழவி இன்தேறல் (பிராந்தி) என்றதும் கோமதி பாம்பை மிதித்தவளைப்போல் திகிலடைந்தாள். “குடிப் பதா? குடும்பப் பெண் குடிக்கலாமா? கூடாது கூடவே கூடாது” என்று அவள் உள்மனம் எண்ணியது. கிழவி யைக் கூர்ந்து நோக்கினாள்!

“பாத்தியா பாத்தியா… நீ ஒருவகையா முகத்தைச் சுளிக்கிறே.” என்றாள் கிழவி.

கோமதி மறுமொழி கூறவில்லை. கிழவியை வைத்த கண்வாங்காமல் பார்த்தாள். அகவை ஏறி முடி நரைத்த அளவிற்கு – இந்தக் கிழவிக்கு – அறிவு வளரவில்லையே என்று நினைத்தாள். ஆனால் மறுநொடியே பெரியவங் களுக்குத் தெரியாததா என்ன ? நம்மைப்போல் எத்த னையோ பிள்ளைகளைப் பெற்று வளர்த்தவங்களாச்சே என்றும் எண்ணிப் பார்த்தாள். நன்மையும் தீமையும் ஒரு சிறு போராட்டமே நடத்தியது. அதில் நன்மை யைத் தீமை வெகு எளிதில் வென்றது.

கோமதியின் முகத்தோற்றத்தைக்கவனித்த கிழவி, “இந்தாப்பாரு கோமதி, எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன். அதுக்கு மேலே உன் விருப்பம்… ஏதோ சின்னஞ் சிறுசாச்சேணு சொன்னா, நீ என்னமோ, தப்பா நினைக்கிறே” என்று நளினமாகச் சொன்னாள்.

கிழவி பேச்சில் மயங்கிய கோமதி, “நீங்க சொல்லுற திலே ஒண்ணும் தப்பில்லே பாட்டி. ஆனா இது எங்க வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சா என்னப்பத்தி என்ன நினைப்பாரு. நினைச்சாலும் தேவலே, அடிச்சுக் கொன் னுடுவாரே பாட்டி” என்று இரக்கத்தோடு சொன்னாள்.

“அடி பைத்தியமே! நான் இப்ப என்ன சொன் னேன். உன் கணவனுக்குத் தெரியாமலா வாங்கிக் குடிக்கச் சொன்னேன். இல்லையே! அவருக்கிட்டேயே வாங்கித்தரச் சொல்லிக் குடி” என்றாள் கிழவி.

“அது எப்படி பாட்டி முடியும்?” என்று முகவாட்டத் தோடு கிழவியைப் பார்த்துக் கேட்டாள் கோமதி.

“ஏன் முடியாது? இந்தக் காலத்து ஆம்பளைங்களைப் பத்தி ஒனக்குச் சரியாத் தெரியலேடி. சிலபேரு பெண் டாட்டிக்கு வாங்கிக் கொடுக்கிறாங்களே அது உனக்குத் தெரியுமா? பெண்டாட்டிக் குடிச்சிட்டு மிச்சம் வச்சிருக் கிறதத்தான் அவங்க குடிப்பாங்க. இது என் அனுபவத் துலே சொல்லுறேன்” என்று சிரித்தபடி சொன்னாள் கிழவி.

“எனக்கு என்னமோ பயமா இருக்கு பாட்டி” அவளு டைய தங்கமனம் பதறச் சொன்னாள்.

“சும்மா சொல்லிப்பாரு. தலையா முழுகிப்போகுது’ என்று தைரிய மூட்டினாள் கிழவி.

கோமதிக்குத் தன் கணவனிடம் சொல்ல ஒரே பயம். சொல்வதைவிட சொல்லாமலே செய்து பார்க்கலாம் என்று எண்ணினாள். நன்மையைவிட தீமை விரைவில் கவரும் என்பதற்கு அவள் மனம் எடுத்துக் காட்டாக விளங்கியது.

தன் அறைக்குள் சென்றாள் கோமதி. திரும்பிவந்து கிழவியிடம் காசைக் கொடுத்து “நல்லதாப் பாத்து வாங்கிக்கிட்டு வாங்க பாட்டி” என்றாள்.

கிழவி காசை வாங்கிக்கொண்டு சீனர் கடைக்கு விரைந்தாள்.

சற்று நேரத்திற்குள் கோமதி வீட்டில் ஆமை’ புகுந்தது. ஆனால் இந்த ஆமை நகரவில்லை. வைத்த இடத்தில் வைத்தபடியே அழகாகக் கவர்ச்சியாக இருந் தது. ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். அறியாமை’ புகுந்த வீடு உருப்படுமா? ஆமையின் மூடி யைத் திறந்தாள் ஆமையைக்கொண்டு வந்த கிழவி எனும் இரண்டுகால் ஆமை. பிறகு ஒரு குவளையில் ஊற்றி கோமதியிடம் நீட்டினாள். கோமதி அதை வாங்கி மருந்து குடிப்பதைப்போல் ஒரு முணறு குடித் தாள். அது வயிற்றுக்குள்ளே செல்வதற்கு முன்னாலேயே தலையைச் சிலிர்க்கச் செய்துவிட்டுத் தொண்டையி லிருந்து வயிறுவரை எரித்துக்கொண்டு சென்றது.

உள்ளே சென்றதும் குருதியின் வேகத்தைத் தூண்டி விட்டது. குருதி குதிரை வேகத்தில் ஓடவும் கோம திக்குத் துடிப்பு ஏற்பட்டது. மேலும் குடிக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு. மீண்டும் கொஞ்சம் குடித் தாள் கிழவிக்கும் கொஞ்சம் ஊற்றிக்கொடுத்தாள். கிழவி எதற்காக கோமதியைக் குடிக்கச் சொன்னாளோ அத்திட்டம் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில் அவளும் மடமட வென்று குடித்தாள். பழக்கப்பட்ட கிழவிக்கு அது பாலைப்போல் இருந்தது. குடித்ததும் இருவர் நிலை யும் ஒன்றானது. அது அவர்கட்கு இன்பம் என்றானது.

குடி தொடர்ந்தது. பிள்ளைகள் பள்ளியிலும், பெரி யவர்கள் வேலையிடங்களிலும் இருக்கும்போது இவர்கள் ‘குப்பியும் கையுமாக’ இருந்தனர். இப்படி எத்தனையோ நாட்கள்!

இப்போதெல்லாம் கோமதிக்குக் குடி என்பது பழங் கதையாகிவிட்டது. முதல் அரைக்குவளையில் தொடங் கியவள் இப்போது ஆறு குவளை எந்த மூலை என்று கேட் டாள். ஆறுக்கு மேல் குடித்தால்தான் அவளுக்குக் குடித்ததாகத் தெரியும்.

ஒரு நாள் கிழவி ஒரு குப்பி இன்தேறல் – பிராந்தி வாங்கிக்கொண்டு வந்தாள். வந்ததும், “கோமதி இது பார்க்கத்தான் சின்னக் குப்பியாத் தெரியுது. ஆனா நீ கொடுத்த காசு இருக்கே அதைவிட இதுக்குத்தான் மதிப்பு அதிகம். வெள்ளைக்காரனுங்க குடிக்கிறது எல் லாம் பழச்சாறு. கொடி முந்திரிச் சாற்றில் செய்தது. அவ்வளவும் ரத்தம்” என்று அதைப்பற்றி அடுக்கினாள் கிழவி.

கோமதி அந்தக் குப்பி இருக்கும் அழகைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள் கொடிமுந்திரிச் சாற்றில் செய் தது என்றதும் அவளுக்கு அதைவிட மகிழ்ச்சி ஏற்பட் டது. பழச்சாறாக இருந்தாலும் அது போதை தரும் சரக்கு என்பதை அவள் நினைத்துப் பார்க்கவில்லை. தங்க ஊசியாக இருந்தால் அது தங்கம் என்பதற்காக யாரும் கண்ணில் குத்திக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்காமல் கொடி முந்திரிப் பழக்கொத் தையே நினைத்துப் புன்னகைத்தாள்.

“என்ன கோமதி சிரிக்கிறே” கிழவிதான் கேட்டாள். “ஒன்றுமில்லை பாட்டி”

“சரி சரி அது போகட்டும். இதைக் குடிச்சா ஏதா கிலும் சாப்பிட வேண்டும்! கோழி இறைச்சியாக இருந் தால் நல்லது” என்றாள் கிழவி.

“கோழியா? இப்ப எங்கே பாட்டி கிடைக்கும். எங்க வீட்டுல மிச்சம் இருக்கிறதே இரண்டு கோழிதான் பாட்டி” என்றாள் கோமதி.

“சே சே அதை அடிக்கச் சொல்வேனா?” “பிறகு என்ன செய்யுறது பாட்டி?”

“ம்…” நீண்ட பெருமூச்சு விட்டாள். சிறிது நேரம் ஒரே சிந்தனை. சிந்தனையில் தான் எத்தனை எத்தனை வகை? கிழவி தன் சிந்தனைக்கு எட்டியதைச் செயல் படுத்தத் தொடங்கினாள்.

“கோமதி கொஞ்சம் அரிசி கொண்டா” என்றாள் கிழவி.

கோமதி ஒன்றும் புரியாமல் உள்ளே சென்று அரிசி கொண்டு வந்தாள்.

கிழவி இன்தேறல் குப்பியைத் திறந்து ஒரு சிறு குவளையில் கொஞ்சம் ஊற்றினாள். ஊற்றிய இன்தே றலில் – பிராந்தியில் – ஒரு பிடி அரிசியை அள்ளிப் போட்டாள். இதைக்கவனித்துக்கொண்டிருந்த கோமதி, “இதெல்லாம் என்ன பாட்டி?” என்று கேட்டாள்.

“பொறுத்திருந்து பாரேன். இந்தப் பாட்டியோட திறமையை”

“அரிசி எப்படி பாட்டி இறைச்சியாக மாறும்?”

“எல்லாம் மாறத்தான் போகிறது?’ என்றாள் கிழவி. அரிசி கொஞ்ச நேரம் இன்தேறலில் ஊறியது. ஊறிய அரிசியை எடுத்து தாளில் போட்டு உலரவிட் டாள் கிழவி.

உலர்ந்ததும் கொல்லைப்புறக் கதவைத் திறந்து ஒருக் களித்து வைத்துவிட்டு அரிசியை சமையலறையில் விதை விதைப்பதைப் போல் விதைத்து விட்டாள். அடுப்படி வரைக்கும் வந்து மேயும் சீனச்சி வீட்டுக் கோழிகள் ஓடி வந்து வேகவேகமாக அரிசியைக் கொத்தித் தின்றன. கொஞ்சம் தின்றதுமே அவற்றின் நிலைமாறியது. திருட் டுத்தனமாகத் தின்ற அரிசி அவற்றின் வயிற்றுக்குள் சென்று திருகுதாளம் போடத் தொடங்கியது. கோழி கள் தலைசுற்றி மயங்கி அங்கேயே சிறகுகளை தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்தன. கிழவி பதறாமல் கோழி யைப் பிடித்துக் கோமதியிடம் கொடுத்து, “இந்தா கோழி” என்றாள்.

கோமதி கிழவியையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றாள். பட்டப் பகலில் கோழியை விரட்டாமல், கத்தவிடாமல், ஓடிப்பிடிக்காமல் வீட்டிற் குள் இருந்தபடியே பிடித்த கிழவியின் திறமை அவளை வியப்படையச் செய்தது. ஆனால் அந்தத் திறமை வேறு வழியில் காட்டியிருந்தால் எவ்வளவு நல்லது என்பதை கோமதி நினைத்துப் பார்க்கவே இல்லை.

“என்னடி பேசாமல் நிற்கிறே. விருவிருன்னு வேலை யப்பாரு. பள்ளிக் கூடத்துக்குப் போன பிள்ளைகள் வேறே வந்திடுவாங்க” என்றாள் கிழவி.

இதைச் செவிமடுத்ததும் கோமதி விரைந்து சென்று கோழியை வெட்டினாள். சற்று நேரத்திற்குள் கோழி அடுப்பில் கொதித்தது. அவர்கள் கும்பி கொதிப்பதைப் போல கோழிக்கறி கொதித்து வற்றியது.

பிரட்டிய இறைச்சியை எடுத்துவைத்துக் கொண்டு இருவரும் அமர்ந்தனர். சட்டியும், ஒரு குப்பி இன்தே றலும் (பிராந்தியும்) இருந்த இடம் தெரியவில்லை. எல் லாம் கோமதியின் வயிற்றுக்குள்ளும், கிழவியின் வயிற் றுக்குள்ளும் சென்று மாயமாய் மறைந்து விட்டன.

இப்படி எத்தனையோ நாட்கள் நகர்ந்தன. சீனச்சி வீட்டுக் கோழியும் குறையத் தொடங்கியது. கிழவிக் கும் கோமதிக்கும் அது மன நிறைவை அளித்தது.

கோமதி இப்போது குடியில் புலியாகி விட்டாள். குடிமயக்கம் தெளிந்ததும் மீண்டும் மீண்டும் குடிக்க வேண்டும் எனும் ஆவல் அவளுக்கு இருந்துகொண்டே இருந்தது. ஆனால் தன் கணவனுக்குத் தெரியக்கூடாதே என்றும் எண்ணினாள். தெரியாமலும் இரவு நேரத்தில் குடிக்க முடியாதே என்றும் மனம் வருந்தினாள். அவள் மூளையும் வேலைசெய்யத் தொடங்கியது.

கிழவியைப்போல் சிந்தித்து ஒரு முடிவிற்கு வந் தாள். சாப்பிட்டுவிட்டு படுக்கையில் போய் படுத்த தன் கணவன் அருகில் சென்று அமர்ந்தாள். அமர்ந்ததும், “அத்தான் நீங்க வேலை செய்துட்டு களைத்துப்போய் வரு கிறீங்களே உடம்பு வலிக்கு ஏதாகிலும்… என்று சாமார்த்தியமாகப் பீடிகை போட்டாள் கோமதி.

“என்ன சொல்லுறே” அவள் கணவன் ஆவலாகக் கேட்டான்,

அவன் நெஞ்சில் உள்ள முடியைத் தடவிவிட்டபடி, “அத்தான் ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டாம். எப் பவாகிலும் கொஞ்சம் பிராந்தி வாங்கிக் குடிங்க. அதைக் குடிச்சா உடம்புக்கு நல்லது, வலி இருக்காதுண்ணு சொல்லுறாங்க” என்று நயமாகச் சொன்னாள்.

“நான் என்ன நினைத்தேனோ அதையே நீயும் நினைச் சிருக்கே. இதுக்குப் பேருதான் அன்புங்கிறது. அது போகட்டும் முடக்கத்தான் வாங்கிக்கிட்டு வந்து ரசம் வச்சா உடம்பு வலிக்கு நல்லதில்லே” என்று சொல்லிய படி அவளுடைய பாலாடைக் கன்னத்தை தடவிவிட் டான்.

கோமதிக்கு பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி வாயில் விழுந்ததைப் போல் இருந்தது. இருந் தாலும் முடக்கத்தான் என்றதும் அவள் மனம் தடுமாறி யது. உடனே “முடக்கத்தான் இப்பக் கிடைக்குமா?” என்று அவனை மடக்கினாள்.

“கிடைக்காது” என்றான்.

“கிடைக்காததைப் பத்தி இப்ப ஏன் சொல்லுறீங்க. அது கிடைக்கும்போது ரசம் வைக்கலாம். இப்பப்போய் பிராந்தி வாங்கிக்கிட்டு வந்து குடிச்சிட்டுப் படுங்கத் தான்” என்று கணவன்மேல் அக்கறை உள்ளவளைப் போல் சொன்னாள்.

அவன் சற்று நேரம் சிந்தித்தான். மனிதன் தவறு செய்யும்போது அவன் உள்மனம் தவற்றைக் கண்டிக் கும் என்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். உணர்ந்ததும், “நாளைக்குப் பார்த்துக்கொள்வோம்” என்று மழுப்பினான்.

“இந்தாப் பாருங்கத்தான்; உடம்பு முக்கியமா காசு முக்கியமா? வீணாக காசை நினச்சிக்கிட்டு இருக்காமே வாங்கிக்கிட்டு வந்து குடிங்க” என்று கொஞ்சுவதைப் போல் சொன்னாள்.

“காசுக்கில்லே கோமதி, பார்த்தவங்க என்ன சொல் லுவாங்க. குடிக்கப் பழகி விட்டான். குடிகாரன் என்று தானே சொல்லுவாங்க” என்றான்.

“வீட்டுக்குள் குடிப்பதை யாரத்தான் பார்க்கப் போகிறாங்க? அப்படியே பாத்தால் என்ன ? அவங்கக் கிட்டேயா போய் காசு கேட்கிறோம்” என்றாள் கோமதி

அவன் மனம் மாறியது “சரி சரி” என்று சொல்லி விட்டுக் கடைக்குக் கிளம்பினான்.

திரும்பி வரும்போது குப்பியும் கையுமாக வந்தான். வந்ததும் குப்பி மூடியைத் திறந்து கொஞ்சம் ஊற்றிக் குடித்தான்.

குடித்ததும் உடம்பு வலி பஞ்சாய்ப் பறந்துவிட்டது. வெறியுணர்வும் பிறந்துவிட்டது. அந்த வெறியுணர்வில் “கோமதி நீயும் கொஞ்சம் குடியேன்” என்றான்.

“ஊகூம் எனக்கு வேண்டாம்” என்று ஒப்புக்குச் சொன்னாள் கோமதி. ஆனால் அவள் கள்ள மனம் வேண் டும் என்றது.

“சும்மா குடி… ஒவ்வொருத்தி என்னென்னவோ செய்கிறாளுங்க. கணவன் தனக்காக வாங்கிக்கொண்டு வந்து வைத்திருக்கும் பிராந்தியை அவனுக்குத் தெரி யாம ஊத்திக் குடிச்சிட்டுக் குறைந்ததுக்குப் பதிலா பச்சத்தண்ணீ ஊத்தி சரிசெய்து வச்சிடுவாளுங்கணு கேள்விப்பட்டிருக்கேன். நீ என்னடானா நான் கொடுக் கிறதேயே குடிக்க மாட்டேங்கிறாயே. சும்மா குடி. பிள்ளைபெத்துக்கிடக்கும்போது குடிக்கலே சும்மா குடி” என்று குடிவெறியில் தட்டுத் தடுமாறியபடி அவளுக்கு ஊற்றிக்கொடுத்தான்.

அவள் மறுப்பதைப்போல் பாசாங்கு செய்துவிட்டு பால் பருகுவதைப்போல் பருகினாள்.

இருவருக்கும் போதை ஏறியது. அறிவு தன் நிலை யிழந்தது. அறிவின்மை விழித்துக்கொண்டு ஆட்சிபுரிந் தது. அந்த அறைக்குள் இருந்த இருவரும் அதுதான் உலகம் என்று ஏதேதோ உளறிக்கொண்டு படுத்திருந்தனர். இருக்க இருக்க போதை உச்சக்கட்டத்தை அடைந்ததும். பூத்துக்குலுங்கி நிற்கும் பூந்தோட்டத் தில் வெறிபிடித்த காட்டெருமைகள் புகுந்து மணம் பரப்பும் மலர்களை உழப்புவதுபோல் இருவரும் மெத் தென்றிருந்த மெத்தையில் உருண்டு புரண்டனர். காமப்பேயும் வெறி பிடித்து ஆடியது காதல் எனும் மணந்தரும் மலர் வெறிபிடித்த எருமைக்காலில் மிதி பட்டு அழிந்தது. காமவெறி தலைதூக்கி நின்றது. இரு வரும் நீர் நாயைப்போல் சீத்துப்பூத்தென்று இரைந் தனர்.

மறு நாள்.கோமதியின் கணவன் வேலைக்குப் போக வில்லை. எந்தக் குடியால் உடம்புவலி தீரும் என்று குடித் தானோ அந்தக் குடியே அவனுக்கு உடம்பு வலியை உண்டு பண்ணிவிட்டிருந்தது. உடம்பு வலியைப்போக்க மீண்டும் குடித்தான்; மீண்டும் மீண்டும் குடித்தான்.

நாட்கள் விரைந்தன. மாதங்கள் பல மலர்ந்தன. கோமதியின் கணவனுக்கு உயர்ந்த சரக்கில் எத்தனை எத்தனை வகைகள் இருக்கின்றனவோ அத்தனையும் அத்துபடியாகிவிட்டன.

கோமதியும் சளைக்கவில்லை. மோதிரம் முதல் சங்கிலி கள் வரை எல்லாவற்றையும் அடகுக் கடையில் வைத்து விட்டுக் குடித்துப் பார்த்துவிட்டாள். அடகுக் கடைக்குப் போகாமல் எஞ்சி இருந்தது தாலிதான். அதுவும்…?

பழச்சாற்றில் செய்து இன்தேறல் எனும் பிராந்தி போய் புளிக்கவைத்த கோதுமையில் இருந்து வடித் தெடுக்கும் கடுந்தேறல் எனும் பீர் வந்தது. அதுவும் போய் லாலான் புல்லிலும், அரிசியிலும் ஊறவைத்து வடித்த கள்ளச்சாராயத்தில் வந்து நின்றது. எதுவாக இருந்தால் என்ன எல்லாம் போதைத் தரக்கூடியது தானே!

ஒரு நாள் இரவு.

கோமதியும், அவள் கணவனும் பிராந்தியைக் குடித்துவிட்டுச் சேற்றில் கிடந்து புரளும் எருமைகளைப் போல் படுத்துப்புரண்டனர். அப்படிப் புரள்வதில் அவர் கட்கு ஓர் இன்பம் தேனீ மலரிலுள்ள தேனைச் சுவைப் பதில் இன்பம் அடைகிறது. ஆனால்… ஈ…! மனித இனம் எந்த எந்த வகைகளிலோ இன்பம் அடைகிறது. ஆனால் கோமதியும் அவள் கணவனும் இந்தத் துறையில் இன்பம் அடைந்தனர். அந்த இன்பத்தில் இந்த உலகத்தையே மறந்து தூங்கினர்.

ஊரும் உறங்கிவிட்டது. நள்ளிரவு வேளை.

குறைந்த வெளிச்சமுள்ள மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. கோமதியின் கணவன் அடிவயிற் றைப் பிடித்துக்கொண்டு, “கோமதி கோமதி எழுந்திரு” என்றான்.

அவள் அசையவில்லை. குடிமயக்கத்தில் தன் நிலை மறந்து தூங்கினாள். புடவை ஒரு மூலையில் கிடந்தது. பாவாடையும், இரவிக்கையும் உடம்பில் இருக்கின்றனவா என்றுகூடத் தெரியாமல் கிடந்தாள் அலங்கோலமாகக் கிடந்த கோமதியை அடித்து எழுப்பினான்.

அவள், “என்னத்தான் இப்படித்தான் அடிப்பதாக்கும்? அதுவும் எலும்பில் பார்த்து” என்று சலிப்போடு சொல்லிவிட்டு கோழியை விழுங்கிய மலைப் பாம்பு நெளிவதைப்போல் நெளிந்தாள்.

அவனுக்குச்சினம் தலைக்கேறியது. வயிற்றுவலியைத் தாங்கிக்கொண்டு, “ச்சீ நாயே எழுந்திரு. வயித்து வலி தாங்க முடியாமல் துடிக்கிறேன் நீ என்னானா படுத்துக் கிடக்கிறாயே” என்று எரிந்து விழுந்தான்.

அவள் பதற்றத்துடன் எழுந்து மூலையில் கிடந்த புடவையைத் தேடிப்பிடித்து உடுத்திக்கொண்டு சமை யற் கட்டிற்கு விரைந்தாள். நல்லெண்ணெய் கொண்டு வந்து அவன் வயிற்றில் தடவிவிட்டாள். ஓம நீர்வேறு குடிக்கக் கொடுத்தாள். இவ்வளவு செய்தும் அவனுக்கு வயிற்றுவலி கூடியதே தவிரக் குறையவில்லை.

அவன் வயிற்று வலியால் மெத்தையில் கிடந்து உருண்டான்.

மருத்துவமனைக்குக் கொண்டு போகலாம் என்றாலும் கையில் காசு இல்லை. இந்த நேரத்தில் யாரிடம் பணம் கேட்பது என்று மனங்குழம்பினாள். தன் கணவன் வயிற்று வலியால் துடிப்பதைப் பார்த்துப் பதறினாள். அவள் நிலை தடுமாறிவிட்டது. சற்று நேரம் சென்ற பிறகு அவ ளுக்கு உண்டியல் நினைவு வந்தது. உண்டியலை எடுத்து உடைத்தாள். பதிமூன்று வெள்ளி இருபத்தைந்து காசு தேறியது.

வாடகை வண்டியை அமர்த்திக்கொண்டு மருத்துவ மனைக்குத் தன் கணவனை அழைத்துச் சென்றாள்.

இரண்டு மூன்று நாட்கள் ஓடின. கோமதியின் கண வன் மருத்துவ மனையில் இருந்தான். அவனுக்கு வயிற்று வலி குணமாகி விட்டிருந்தது.

பார்வைக்கு வந்த மருத்துவர். “இப்ப வயிற்றுவலி எப்படி இருக்கிறது?” என்று அவனைக் கேட்டார். அதற்கு அவன், “இப்ப வயிற்றுவலி இல்லை” என்றான்.

“இனி ஒன்றும் செய்யாது. இன்றைக்குப் பெயர் வெட்டி கொஞ்சம் மருந்து கொடுக்கிறேன். வீட்டில் கொண்டுபோய் சாப்பிடுங்கள். சாப்பாட்டிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் முற்றும் குணமாகிவிடும். ஆனால் ஒன்று, குடிக்கக்கூடாது. குடிக்கிற காசுக்குப் பால் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள், உடம்புக்கு நல்லது” என்றார் மருத்துவர்.

“சரிங்க”

“குடித்தால் மீண்டும் வரும். இந்த வயிற்றுவலிக்குப் பேரு கேஸ்ட்ரிக். கேஸ்ட்ரிக்கும், குடிக்கும் பகை” என்றார்.

கோமதியின் கணவன் மருத்துவரை நோக்கி, “நீங்க இரண்டு மூன்று நாட்களாக குடிப்பதால் ஏற்படும் நன்மை தீமைகளைச் சொன்ன பிறகு இனிக் குடிப்பே னாங்க! குடிக்கவே மாட்டேன். உடம்புக்கும், உள்ளத் திற்கும், அறிவுக்கும் தீங்கு விளைவிக்கும் அந்தக் குடி யைக் குடிக்கவே மாட்டேன். பணத்தைப் பாழாக்க மாட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன் னான்.

மருத்துவர், “அதுதான் சரி” என்று புன்னகை தவழச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

கோமதியின் கணவனுக்குப் பெயர் வெட்டப்பட்டது.

பெயர் வெட்டியதும் அவன் வீட்டிற்குக் கிளம்பி னான். வரும்போது பெண்கள் குடிப்பதைப் பற்றியும், அதனால் பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றியும் மருத்துவர் சொல்லிய சில செய்திகள் அவன் மனத்தை உறுத்தியது. வீட்டிற்குச் சென்றதும் தன் மனைவியிடம் சொல்ல வேண்டும், மாதவிலக்கு நல்லாப்போகும், உதிரக்கட்டுக்கு நல்லது, உடம்புக்கு நல்லது அதுஇது என்கிற தப்பான கருத்துக்களைத் தவிடுபொடியாக்க வேண்டும் என்று எண்ணியபடி வந்தான்.

வீட்டருகில் வந்ததும் அவன் வீட்டுக்கு முன் பல இன மக்கள் கூட்டமாகக் கூடி நின்றனர். போலிஸ் வண்டி வீட்டு வாசலில் கிடந்தது. அதைப் பார்த்ததும் விரைந்து சென்றான். போலிசார் கோமதியை வண்டி யில் ஏறச்சொல்லி அவள் வண்டியில் ஏறுவதைப் பார்த் ததும் அவன் திகில் அடைந்தான். காரணம் புரியாமல் விழித்தான். அப்பொழுது அவன் வீட்டிற்குள் இருந்து வந்த போலிசுக்காரர் கைகளில் சீனிச்சட்டியும், இன் தேறல் குப்பியும் (பிராந்திப் போத்தல்) இருந்தன. அவற்றைக் கொண்டுபோய் கோமதிக்கருகில் வைத்தார். சட்டியில் உள்ள கோழிக்கறி கமகம வென்று மணத்தது. கோமதியின் கணவனுக்கு அருகில் நின்றவர், “தம்பி உன் மனைவி சீனச்சி வீட்டுக் கோழியைப் பிடிச்சுட்டாங்களாம்” என்றார்.

மற்றொருவர், “கோழியப் புடிச்சு கறியாக்கி வச்சுக்கிட்டு தண்ணீ வாங்கிக்கிட்டு வந்து குடிச்சிருக்கு. இப்படி ரொம்ப நாளா நடக்குதுனு தெரிஞ்ச சீனச்சி இன்னிக்கு வந்து கையும் களவுமா புடிச்சிட்டா” என்றார்.

அவனுக்குத் தன் தலையில் சுத்தியால் அடிப்பதைப் போல் இருந்தது. நெஞ்சம் வாள்கொண்டு அறுப்பதைப் போல் துடித்தது. மானம் மரியாதை அனைத்தும் இழந் தவனைப்போல் தலை குனிந்தான். வெட்கித் தலைகுனிந்த அவன் கண்களிலிருந்து கண்ணீர் சிந்தியது.

கிழவி ஒன்றும் தெரியாதவளைப்போல் கோமதியைப் பார்த்தாள். வண்டியில் அமர்ந்திருந்த கோமதி கிழவி யைச் சுட்டெரிப்பதைப்போல் பார்த்தாள். இருவர் பார்வையும் இருகூறாக இருந்தது. கிழவி பார்த்த படியே நின்றாள். அவளுக்கு இருந்தது இருந்தாற்போல் நெஞ்சில் தீ பரவுவது போன்ற உணர்வு. நெஞ்சைக் கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு “நெஞ்சு வலிக் குது, நெஞ்சு வலிக்குது” என்று கத்தினாள்.

கோமதிக்குக் குடிப்பழக்கத்தைப் பழக்கிவிட்டதை நினைத்ததால் அவள் மனம் வருந்தி நெஞ்சு வலிக்க வில்லை. கோமதியுடன் சேர்ந்து குடித்தாளே அந்தக் குடியின் விளைவுதான் அவள் நெஞ்சுவலிக்குக் காரணம். நெஞ்சு வலியோடு கோமதியை மீண்டும் பார்த்தாள். கோமதி அமர்ந்திருந்த வண்டி அப்படிப் பார்க்க வேண் டாம் என்று சொல்வதுபோல் உறுமிவிட்டு நகர்ந்தது.

– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *