சிரிக்கச் சிரிக்கச் சின்ன சந்தேகம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 28, 2025
பார்வையிட்டோர்: 9,401 
 
 

(கதைப் பாடல்)

கோவில் பாச்சா என்றுசிலர்
கரப்பான் பூச்சியைச் சொல்கின்றார்!
கரப்பான் பூச்சி என்றைக்குக்
கோவில் போச்சு சொல்லுங்க?!

குங்குமம் விபூதி இட்டிருக்கா?
குழைச்ச மஞ்சள் பூசிருக்கா?
சிரைக்கா இரட்டை முடியோடு
சிறகுடன் பறக்கும் பூச்சியிது!

அடுப்பங் கரையில் குடியிருக்கு!
அரிசி மாவின் அடியிருக்கு!
எண்ணைப் பிசுக்கு இருக்குமிடம்
எங்கும் தங்கிக் குடியிருக்கு!

பொம்பளை புள்ளையை மிரட்டிடுது!
புடவை மடிப்பில் ஒளிஞ்சிடுது!
பல்லியைக் கூட ஏய்த்திடுது!
பசங்க மேலயும் பாய்ந்திடுது!

காஞ்சி புரத்தின் நேசனிதோ?
கரகர பட்டினை வெட்டிது?!
பட்டு ரொட்டித் துணியென்றால்
பல்லால் கடிச்சுக் குதறிடுது!

இருட்டில் எங்கும் குடியிருக்கு!
இலட்சுமி என்றும் பெயரிதுக்கு!
வரமிளகாய் போன்ற வடிவத்தில்
வாட்டி வதைக்கிற ஜந்துயிது!

எதுக்கும் அஞ்சா மங்கையரும்
இதுக்கு அஞ்சி அடிபணிவர்!
அசிங்கம் ஒன்றும் இல்லையிது
அழகு வழவழப் பூச்சியிது!

மருந்து அடிச்சுக் கொல்வதற்கும்
மனசு வரலை பாருங்கள்!
விருந்தாய் வீட்டில் இருக்கிறது!
விரட்டும் வழியைச் சொல்லுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *