எல்லோர்க்கும் கொடு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,380 
 
 

பெருஞ்சித்திரனார் இல்லம். வண்டியிலிருந்து பொன் மணிகளை இறக்கி வீட்டிற்குள் கொண்டுவந்து வைக்கின்றனர். பட்டாடை அணிந்து பல வகைப் பொன் அணிகளைப் பூட்டிய கோலத்தோடு பெருஞ்சித்திரனார் வீட்டிற்குள் நுழைகிறார். அவர் மனைவி மலர்ந்த முகத்தோடு வரவேற்கிறாள். பெருஞ்சித்திரனார் கூறுகிறார்:

“ஆருயிரே அனைவர்க்கும் பகுந்து கொடு. கடன் கொடுத்தவர்க்குக் கொடு. உன் தோழியருக்குக் கொடு. இனத்தவரை அழைத்து வந்து அள்ளிக் கொடு. யாருக்குக் கொடுக்க வேண்டும், யாருக்குக் கொடுக்கக் கூடாது என்று நினைக்காதே. எல்லார்க்கும் கொடு முதிரமலைத் தலைவன் குமணன் தந்த பொருளைப் பெட்டியில் பூட்டி வையாதே. மனம் போல் அள்ளி வழங்கு”.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *