என்னென்று சொல்வதோ?
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,132
வானளாவியது அம்மலை. அருவிகள் குதிக்கின்றன. சுனைகள் பொங்குகின்றன. மரங்கள் நிற்கின்றன. குறிஞ்சி நிலத்தின் அழகே அழகு. இந்த மலை நாட்டிற்கு உரியவன் யார்? அவனை நாடன் என்று அழைப்போமா?
வெள்ளம் பொங்கி வரும் ஆறு. இரண்டு பக்கமும் வயல்கள். கரும்பும், நெல்லும், வாழையும் கண் கொள்ளாக் காட்சி. வானளாவிய மருதமரம் அதில் வண்ணக் குருகு . வயலருகே, ஊர் – மாடமாளிகை. இந்த ஊரும் அவனுக்கு உரியது. அவனை ஊரன் என்று அழைப்போமா?
அதோ பரதவர் மீன் வேட்டையாடும் கடல். எவ்வளவு பெரிய மணல் மேடு. அலைகள் மோதும் காட்சியை என்னென்போம். ஆங்காங்கே உப்பங்கழிகள். மீனைத் தின்னும் நாரை சுரபுன்னைக்கு ஓடுகின்றன. இந்தக் கடற்கரையும் அவனுக்காமே. அவனைச் சேர்ப்பன் என்று அழைப்போமா?
கடற்கரை நாரையும் கழனிக் குருகும் அவன் நாடன், ஊரன், சேர்ப்பன் என்று பாடிக் கொண்டே பறந்தன.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
வேந்தர்க்கு வேண்டும் குணம்
வளர்கவி
July 5, 2026
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026