உலகிற்கு உயிர் எது?




“ஒளவையே” காலையில் உன்னைத் தேடினேன் காணவில்லை. எங்கே போயிருந்தாய் ” என்றான் மன்னன் அதிகமான்.
“ஆற்றில் புது வெள்ளம் வந்திருக்கிறது”
“வயல்களுக்குத் தண்ணீர் திறந்து விட்டிருக் கிறார்களா?”
“ஆமாம் வயலில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்”
”அப்படியானால் அச்சமில்லை . நெல்லும் நீருமே நம் நாட்டிற்கு உயிர்.”
“இல்லை அரசே இல்லை. நெல்லும் உயிரல்ல; நீரும் உயிரல்ல; மன்னனே நாட்டிற்கு உயிர் நீ தான். இந்நாட்டிற்கு உயிர். இதனை உணர்ந்து நடப்பதே உன் கடன்.”
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்