உலகம் இருக்கின்றது!




அமுதமே கிடைத்தாலும், அதனைத் தனியே இருந்து உண்ணார். சினங்கொள்ளார். யாரையும் ஏளனம் பண்ணார். சோம்பல் அற்றவர்.
பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சுவர்; புகழ் கிடைப்பின் உயிரும் கொடுப்பர்! பழியெனின், உலகமே கிடைத்தாலும் விடுப்பர்! அயர்வு அற்றவர்.
தாம் வாழ வாழாது, பிறர் வாழ வாழும் பெருந்தகையாளர் அவர்!
அவராலன்றோ , உலகம் நிலை பெற்று வாழ்கின்றது!
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்