கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,867 
 
 

நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியைப் பார்க்கச் சென்றார். இன்முகத்தோடு வரவேற்றான். மகிழ்ந்து உரையாடத் தொடங்கினார். ”அரசே உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. உன்னிடம் வருவோர் அனைவரையும் ஒரே தன்மையாக வரவேற்பதில்லை நீ”

எல்லோரையும் நன்கு வரவேற்கிறேனே. இப்போது தானே உங்கள் கண்முன் பாணர்களுக்குப் பரிசளித்தேன் ”

“ஆம், பாணர்களுக்குப் பொற்றாமரைப் பூவைச் சூடுகிறாய். புலவர்களுக்கு யானையும் தேரும் அளிக்கிறாய். ஆனால் உன்னிடம் வரும் பகைவர் மண்ணைப் பறித்துக் கொள்கிறாயே; புலவரிடம் இனிக்கப் பேசும் நீ, பகைவரை சினந்து நோக்குகிறாயே”

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *