ரகசிய ஆண்கள்
கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2025
பார்வையிட்டோர்: 176
(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெயிலின் அலைகளை உறிஞ்சியபடியே வெட்டவெளியில் மேய்ந்துகொண்டிருந்த நாற்பது ஆடுகள் மெல்ல தன் நிறம் மாறி செந்நிறம் கொண்டதையும், அவை வெக்கைத் திரட்சி தாங்காது பூமியை முட்டிப் பிளந்து தலை மண்ணில் புதைய வாளை நோக்கி உயர்த்திய பின் கால்களுடன் குரூர மரணம் கொண்டதையும் தன் களவில் ஏழு முறை கண்ட தாசி வனமாலை இதன் பலனை அறிந்துகொள்ள தெற்கே ஆன் அனுப்பி தாதங்குளம் சுப்பையா பிள்ளையைக் கூட்டி வரச் சொன்னாள். நெடுங்காலமாகவே மணல் கோட்டை கிராமத்தில் தங்கிவிட்ட இரண்டு பிச்சைக்காரர்கள் தாதங்குளத்துக்கு வனமாலையின் பொருட்டு சென்றனர். அப்போது தாது வருஷம் தடந்து கொண்டிருந்தது.
நாற்பது வயதைக் கடந்துபோன வனமாலையைத் தேடி ஆண்கள் எவரும் வருவது நின்றுபோனது. அவளும் உடல் பருத்து குடுவை போலாகி வெடித்த உதடுகளும் மயிர் கொட்டிப் போன தவையும், செம்பட்டை புருவமுமாக இருந்தாள். ஆண்கள் வராத பத்து வருடங்களாக அவள் வீட்டு முன் சுதவு பூட்டப்பட்டுக் கிடக்கின்றது. முன்பு வந்துபோன ஆண்களின் வசீகரமும் ஸ்பரிசமும் இப்போதும் சிறு துகள்களாக வீட்டு அறைகளில் மிதந்துகொண்டிருந்தன. அவன் வளர்த்து வந்த கிளிகள் எல்லாம் பூனைக்கு இரையாகிப்போயின.
என்றாலும் அவள் வீட்டின் மூன்று மூக ஜன்னல்களும், உயர்ந்த படிக்கட்டுகள் கொண்ட மாடி அறைகளும் ஊர்வாசிகளுக்கு பிரமிப்பை இப்போதும் தந்தபடிதானிருந்தன. மணல் கோட்டையில் வசிக்கும் எந்தப் பெண்ணும் வனமாலையின் வீட்டுக்கு வந்ததேயில்லை. அவளை துர்நடத்தை கொண்டவள் எனவும், பார்த்த நிமிடத்திலே ஆண்களை வசியப்படுத்தி விடும் வசியக்காரி எனவும் பெண்கள் ஏசினர். ஆனாலும் ஊர்ப் பெண்கள் எல்லோர் மனத்திலும் சிறிய ஆசையொன்று பாம்பைப் போலச் சுருண்டு கிடந்ததை அவர்கள் அறியாம லிருந்தனர். மனத்தின் விசித்திரப் போக்கில் அந்த ஆசை வளரவும் செய்தது. எல்லாப் பெண்களும் ஒரு முறையாவது வனமாலையின் வீட்டினுள் போய்ப் பார்த்து வரவே விரும்பினர். ஆனால் வனமாலையோ எந்தப் பெண்ணையுமே தன் வீட்டில் அனுமதித்ததே இல்லை.
உடல் பருத்துப்போன பின்பு அவள் வெளியில் எங்கும் போவது கிடையாது என ஆனது. மூன்று படுக்கையறைகள் கொண்ட அந்த மாடியறையில் கிடந்த கறுப்புக் கட்டில்களில் மரக் காளான்கள் முளைத்துப்போயிருந்தன. வனமாலை ஜன்னவை ஒட்டிய படுக்கை கொண்ட அறையில்தான் இருந்தாள். அந்த அறையில் அவளது உருவப் படம் ஒன்று சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். குழந்தைகள் எவரும் அவள் வீட்டின் முற்றத் தில் வந்து விளையாடப் பயந்தனர். அவளது கடந்தகால வசீகரத் தையும் நிர்வாணத்தையும் கண்டிருந்த மரப்பல்லிகள் அந்த அறையின் உத்திரத்தை விட்டுப் போகவே இல்வை. இரவில் அவை விடாமல் சப்தமிட்டு அவளின் தனிமையைப் போக்கின. சிறு வயது முதலே வனமாலை கனவுகளால் அலைக்கழிக்கப் பட்டான். கனவுகள் மெல்லிய சிறகை அசைத்தபடியே அவளைச் சுற்றிப் பறந்துகொண்டிருந்தன. வயதான தாத்தாவால் வளர்க்கப் பட்ட அவள் திறைய பகல் கனவுகள் காணுபவளாக வளர்ந்தாள். இந்த உலகில் உள்ளவற்றையும், இல்லாதவை பற்றியுமான அவளது கனவுகள் பல்கிப் பெருகின. கனவுகள் எதிர்காலத்தைச் சொல்லக் கூடியவை என்பதைப் பற்றியும், ஆண்களுக்கு வரும் கனவுகள் பெண்களுக்கு வருவதில்லை என்பதைப் பற்றியும் சிறு வயதிலேயே அவள் அறிந்திருந்தாள். வயசாளிகள் அனைவரும் கனவுகளால் துரத்தப்படுவதாக அவளது தாத்தா தினமும் புவம்புவார். அவளுக்குப் பதினோரு வயதானபோது இதுபோல தீய களவு ஒன்றைக் கண்ட தாத்தா அவளையும் கூட்டிக்கொண்டு மணல் கோட்டையிலிருந்து விலகி வடக்கே புறப்பட்டுப் போனார். அவர்கள் பயணமாகிக்கொண்டிருந்த கரிசல் பூமியில் இரவு வெகு சீக்கிரமாகவே வந்துவிடுகிறது. வெட்டவெளியில் இருவரும் உறங்கினர். அன்று தாத்தா ஒற்றைக் கண் உள்ள நாய்க் கூட்டம் தன்னை விரட்டுவதாகக் கனவு கண்டு திடுக்கிட்டு விழித்து, கையில் கத்தியுடன் வெட்டவெளியில் அலைந்த காற்றை வெட்டியபடி திசையில்லாமல் இரவெல்லாம் ஓடினார். வளமாவை சுனவு கொண்டாள். மான்குட்டியொன்று நீரில் நீந்திக்கொண்டிருந்தது. நீரில் மெல்ல மானின் நிறம் கரைந்துபோக நுரை போன்ற வெண்மையுடன் மான் துள்ளிக் கரையேறியது. வெண்ணிற மானின் பாய்ச்சலால் உடல் விழிப்புற்றபோது மண்ணில் ரத்தத் துளிகள் சிதறியிருப்பதை அறிந்தாள். உடல் அசதி கொண்டது.
வெட்டவெளியில் ருதுவாகும் பெண்கள் நட்சத்திரங்கள் போல அலைக்கழிக்கப்படுவார்கள் எனத் தாத்தா சொன்னபோது அவள் பயந்து மணல் கோட்டைக்குத் திரும்பிவிட்டாள். அது முதவ் அவளது கனவுகளே அவள் நாட்களை உருவாக்கின. மணற் கோட்டையின் பூர்வீகவாசிகள் எல்லோரும் கனவின் விசித்திர அறைகளில் வாழ்ந்துகொண்டிருந்தனர். ஊரே தன் முந்தைய உருவத்தின் களவில்தானிருந்தது.
பின்நாள்களில் வனமாலையின் வீட்டில் கனவுகளுக்குப் பலன் சொல்வதற்காகவே பதிமூன்று ஆண்டுகள் இருந்தனர். அவர்கள் பகல் நேரத்தில் கீழ்க்கூடத்தில் சீட்டாட்டம் ஆடியபடியே இருப்பார்கள். இரவில் சமையல்கட்டில் உறங்குவார்கள். அவர்கள் தன் முகம் காட்டாது பலன் சொல்லுவார்கள். அவர்களும் கூட சென்ற கோடைக்காலத்தில் அவளைப் பிரிந்து போய்விட்டளர். பதிமூன்று பேர்களில் இளையவனான ஒருவன் மட்டும் பெண்களின் விபரீதக் கனவுகளுக்குப் பயந்து வழிப் பாதையில் இருந்த தாழஞ்சுனையில் மூழ்கி இறந்துபோய் விட்டான் எனத் தகவல் அவளுக்குக் கிடைத்தது. அவனுடைய மயில்கரை வேண்டியொன்று சமையல்கட்டில் கொடியில் நீண்ட நாளாக உலர்ந்துகொண்டே இருந்தது.
வனமாலையின் வீட்டுக் கதவிளைத் தட்டும் ஆண்கள் எவரும் தன் உரு மறைத்தே வந்தனர். அந்நாட்களில் வீட்டிவ் அவளது சௌந்தரியம் பெரிய வலை போல எங்கும் விரிந்து கிடந்தது. எப்போதும் ரகஸிய ஆண்களின் நிழல் நடமாட்டம் அந்த வீட்டில் இருந்தபடியே இருந்தது. மணல் கோட்டையில் வருடத்துக்கு நான்கு நாள்கள் மட்டுமே மழை பெய்யும். அங்கிருந்த நூறு வீடுகளும் அந்த மழையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். திடீரென ஒரு மதியம் உறைந்துபோய் வெயிலின் திரை கிழிந்து மழை ஊரில் வெளிப்படும். அந்நாள்களில் ஆண்களும் பெண்களும் உறங்குவதில்லை. மழையின்போது உறங்க முடியுமா என்ன? ஓட்டு வீடுகள் மழைச் சப்தத்தைப் பெருக்கின. ஈரம் காணாது நடுங்கிக்கொண்டிருந்த தெருச்சுவர்கள் மழையால் ஈர்ப்பு கொண்டன. சரியாக நாலே நாள் பெய்த பின்பு மழை அடையாளம் மறைந்து ஊர் தன்வசப்படும். அந்த மழையும் கூட தாது வருசத்தில் வராதுபோனது.
இதுபோன்ற கோடை இரவுகளில் வீடுகளில் உறங்கும் ஆண் களைப் பெண்கள் வெறித்துக்கொண்டிருப்பார்கள். உறக்கத்தின் போது பிறக்கும் அழகு தனியே மிளிர்ந்துகொண்டிருக்க, வீட்டுப் பெண்கள் சப்தம் செய்யாது விழித்திருப்பார்கள். எப்போதாவது அசந்து உறங்கிக்கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்த ஆண், பயமும் துக்கமும் கொள்வது தவிர்க்க முடியாதது.
கோடைக்காலம் முடிவற்றுப் போய்க்கொண்டேயிருந்தது. துர்சகுனங்களின் காற்று ஊரைச் சுற்றி வீசிக்கொண்டே இருந்தது. புழுதியை வாரி இறைக்கும் காற்றால் வீட்டுக் கதவுகள் அறிபட்டன. எல்லோரும் சோகை கொண்டது போல இருந்தார்கள். தூக்கத்தில் நடப்பவர்கள் போல இயங்கிக் கொண்டிருந்தனர். தினமும் ஊரைச் சுற்றி நட்சத்திரங்கள் அறுத்து வீழ்வதைக் கண்டு ஆண்களும் பெண்களும் துயரடைந்தனர்.
அந்நாள்களில்தான் வளமாலைக்குக் கனவு வந்தபடியிருந்தது. கனவுகளுக்குப் பலன் சொல்லும் சுப்பையா பிள்ளையைக் கூட்டிக்கொண்டு ஊர் வந்துகொண்டிருந்தவர்கள் கூட தீவினை யின் வளையங்கள் ஊரைப் பற்றிக்கொண்டதை தொலைவிலே கண்டனர். பசு ஒன்று கர்ப்பம் கலங்கி மஞ்சள் பாரித்த உடலும் சூரியனை வெறித்த கண்களுடனும் இறந்து கிடந்தது. சுப்பையா பிள்ளை ஊரில் நுழையும்போதே மரண வாடையை நுகர்ந்த படியே வந்தார். பகவின் மரணத்தால் பயங்கொண்ட சிறுமிகள் வீட்டின் உள் அடுக்குகளில் பதுங்கிக்கொண்டு பெருமூச்சு விடுவதும் முணுமுணுப்பதும் துல்லியமாகக் கேட்டன.
இப்போதும் தானியங்கள் மீதிருந்த வீடாக இருந்தது வள மாலையிடம் மட்டுமே. தெருவில் படிந்த கறுப்பின் ஊடே விளையாடிக்கொண்டிருந்தார்கள் சிறுவர்கள். இரட்டைப் பெண்களான பெரிய பாண்டியம்மாவும், சின்னப் பாண்டியம்மா வும் உடல் நலிவுற்று சோர்ந்து கிடந்தனர். மூத்தவள் சின்னப் பாண்டியம்மாளின் வற்றிய மார்புகளைப் பார்த்தபடியே ‘நான் செத்துப் போகப் போறன்டி உன்னைய விட்டுட்டு” எனச் சப்த மிட்டுக் கொண்டிருந்தாள். சின்னவளுக்குப் பேச்சு கொள்ள வில்லை. இருவருமே சூடான சோளக்கஞ்சிக்கு ஆசை கொண்டி ருந்தனர். சின்னப் பாண்டியம்மாள் அக்காளிடம் தோன்றிய முகவிகாரங்களைக் கண்டு அஞ்சியபடியே உறங்கினாள்.
கவலை கண்டிருந்த சிறுவர்கள் சாணம் உவர்ந்த திண்ணையை விட்டு அகலாது தெரு பார்த்தபடி இருந்தனர். மரங்களை விட்டுக் காற்று பிரித்துபோயிருந்தது.
வனமாலையின் வீட்டுக்கு சுப்பையா பிள்ளை வந்தபோது மாலையாகியிருந்தது. ஊரைச் சுற்றிலுமான திறந்தவெளியில் இன்னமும் வெளிச்சம் அடங்கவேயில்லை. மாடி அறைகளில் அவர் நுழைந்து அவளைக் கண்டபோது அவள் முதுகு நீண்ட நாற்காலியைப் போட்டு ஜன்னலை வெறித்தபடியே உட்கார்ந் திருந்தாள். பருத்த அந்த உடலைப் பார்க்க அசூயையாக இருந்தது. தரையெங்கும் உலர்ந்து கிடந்த தாம்பூலச் சக்கைகளை வெறித்தபடியே அவர் சொன்னார்.
”இனிவரும் நாற்பது நாள்களுக்குள் இவ்வூர் அழிந்துவிடும். ஆடுகளைப் போல நாள்களும் செந்நிறம் கொண்டுவிடும்.’
ஓலைப்பெட்டி நிறைய தானியமும் இரண்டு நாணயமும் வைத்து அவள் மரப்பலகையில் வைத்திருந்ததை எடுத்துக்கொண்டு வீடு விலகி ஊர் வழி வரும்போது மடத்தில் இருந்த பிச்சைக்காரர்கள் இருவரும் அவரை அன்றிரவு அங்கேயே தங்கச் செய்தனர்.
அன்றிரவு சுப்பையா பிள்ளையும் கனவு கண்டார். காது நீண்ட குதிரையொன்று குமிழ்ப் பிடி கொண்ட கதவைத் தட்டிக் கொண்டே இருந்தது. குதிரையின் உடல் நீண்டு தெருவெங்கும் வளைந்திருந்தது. இடைவிடாது தட்டுதலால் கதவு திறந்து கொள்ள குதிரை படியேறி உமிப்படுக்கையொன்றில் படுத்துக்கொண்டது. கனவின் கதியினின்று நழுவி விழிப்புற்ற சுப்பையா பிள்ளை எழுந்துகொண்டார். குதிரை தட்டிய கதவு யாருடைய வீடு எனப் புரிந்தது. பொழுது விடிந்ததும் அவர் வனமாலையின் வீட்டுக்குள் சென்றார்.
சிறு படிக்கட்டுகள் கொண்ட மரக்கட்டிவில் அவள் மட்டுமே உடைகளற்று உறங்கிக்கொண்டிருந்தாள். வெயில் அவள் கால்
விரல்களைத் தொட்டுக்கொண்டிருந்தது. சுப்பையா பிள்ளையின் காலடி சப்தத்தால் விழித்த அவள் எழுந்துகொள்ளாமல் புரண்ட போது வீங்கிய ஸ்தனங்கள் சரிந்தன.
அவள் முகத்துக்கு எதிராக சுப்பையா பிள்ளை சொன்னார்.
“இந்த முழு நிலவின் நாளுக்கு முன் உன்னைத் தேடி ஒருவன் வருவான், அவனே நீ சந்திக்கும் கடைசி ஆண், அவர் போன நாளின் மறு தினம் பகல் நீண்டு சென்றுகொண்டே இருந்தது. ஊற வைத்த தானியங்களைத் தின்றபடியே ஜன்னலின் அருகே உட்கார்ந்திருந்தாள் வனமாலை. தெருவில் சப்தத்தைக் கொட்டியபடியே மேய்ந்துகொண்டிருந்த கோழிகள் உணவாகிப் போனதால் சப்தம் மட்டுமே நிரம்பியிருந்தது.
மேலத்தெருவின் கடைசி வீட்டுப் பெண்கள் நால்வர் ஒன்றுகூடி தானியக் குதிரை கவிழ்த்தனர். தூசிகளும் கல்துகள்களும் நிரம்பிய தானியங்கள் கொஞ்சம் மீதமிருந்தன. வாசல் பக்கம் வத்து தானியத்தைப் புடைத்தனர். தானியங்களின் உரசல் சப்தம் கேட்டு கல்பொந்துகளிலும் கிணற்று உள் அடுக்குகளிலும் மறைந்திருந்த பறவைகள் விழிப்புற்று படைபடையாகக் கடைசி வீட்டு முன் இறங்கின. பறவைக் கூட்டத்தின் வரவால் அந்தப் பகல் துகள் துகளாகி சப்தங்களால் நிரம்பியது.
வீட்டின் முன் விழும் பறவைகள் மண்ணில் தலையைச் சிலுப்பி கல்துகளைக் கொத்துவதும், தானியத்துக்காக வாயைப் பிளப்பதையும் கண்டு, முறத்தை அப்படியே வைத்துவிட்டு அந்தப்படியே அந்தப் பெண்கள் தானிய அறைகளுக்குள் ஓடியபோது பல பறவைகள் அலகில் தானியத்தோடு ஊரைப் பிரிந்து பறக்கத் தொடங்கின. ஊர் மடத்தில் படுத்துக் கிடந்த இரண்டு பிச்சைக்காரர்களும் கூட இதைப் பார்த்தனர். பறவைகள் போன பிறகு வெளிறிய ஆகாசத்தை ஏறிட்டுப் பார்க்க ஊரில் எவருக்கும் மனம் துணியவில்லை.
தண்ணீர் அருகிப்போனதால் வனமாலையின் உடலில் கசகசப்பும் காளான் வாடையும் பெருகத் தொடங்கியது. கண் இமைகள் ஒட்டிக்கொண்டு பார்வையை மறைத்தன. பெருமூச்சிட்டவாறே அவள் நாற்காலியில் பகல் எல்லாம் உட்கார்ந்திருந்தாள்.
ஊரின் கிழக்கே இருந்த வேதக் கோயில் காற்றால் அழிவுற்றது.
உப்பின் வாடை படர்ந்த கோயில் கதவுகள் சக்கைகளாகப் பிரிவுண்டன. உலர் இலைகளும் நத்தைக் கூடுகளும் கோயிலில் நிறைந்தன. மரச்சிலுவையை அப்பிய நத்தைக் கூடுகளைக் கண்ட பாதிரியும் அவரது மணமாகாத மகளும் உவர் இலைகளுள் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தனர். பாதிரியின் மகளுக்கு ஊரைவிட்டுப் பிரிந்துபோன ஸ்நேகிதிகளின் ஞாபகமும் கிணற்றில் உதிரும் பன்னீர்ப் பூ மரம் அழிந்த நாளும் நினைவில் வர புழுதிக் காற்றைச் சபித்தபடியே கண்ணீர் சிதறப் பிரார்த்தித் தாள். அவளது கண்ணீரின் சப்தம் வேதக் கோயிலில் சென்று பதுங்கிக்கொண்டது. பாதிரியின் வீட்டில் மட்டுமே உயிரோடி ருந்த சேவல் ஒன்று இடைவிடாமல் பகலிலும் கூவி ஓய்ந்தது.
காலி வீடுகள் அதிகமாகிப்போனதால் ஆள்முகமறியா இருட்டு தெருவில் நிரம்பிற்று. மண் சட்டிகளில் வறுபடும் தானியங் களுடன் எறும்புகள் கருகும் வாடை ஊரில் சுழன்று கொண்டி ருந்தது. எறும்புப் புற்றிலிருந்த தானியம் தேடி கரிசல் வெளியைத் தோண்டிக் கவைந்தனர் ஆண்கள்.
நிலா வளர்ந்த நாள்களில் வனமாலையின் உடலில் வெடிப்புகள் தொடங்கின. வேதனையாலும் இருட்டாலும் அவள் படுத்தே கிடந்தாள். ஜன்னி கண்டவன் போலப் பிதற்றினாள். ஊரின் தனிவெளியில் நின்றிருந்த மரத்தின் கிளைகளில் இறந்துபோன குழந்தைகள் தொங்கிக்கொண்டு அவளை அழைத்துச் சிரிப்ப தாகக் கற்பனை கொண்டாள்.
வியாழன் அன்று ஊர் அறிந்திராத வெக்கைக் காற்று கிளம்பியது. வீட்டின் கூரைகள் பறந்துபோயின. கோழிக் கூண்டுகள் வானளவு உயர்ந்து சுழன்றன. வைக்கோவை வாரி இறைத்தது காற்று. பெரிய பாண்டியம்மாள் இறந்துபோனாள். பிணத்தின் பின்னே போன இரண்டு பிச்சைக்காரர்களும் ஊரே பயம் கொள்ளும்படி அழுதனர். அந்த நாளில் பல வருடத்தின் பின்பு மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து தெருவில் நடமாடினாள் வனமாலை.
நடப்பது வேதளை தருவதாகயிருந்தது. ஊரின் புறவெளி வரை நடந்து திரும்பியபோது பார்வை மங்கி எதுவும் புலப்படாமல் போனது அவளுக்கு எப்பக்கம் வீடு உள்ளது என அறியாது காற்றில் எதையோ தேடுபவள் போல அலைவுற்றாள். பின் அந்தப் பிச்சைக்காரர்களே அவளை வீடு அழைத்து வந்தனர்.
அதன்பின் அவளுக்கு நாள்கள் மறந்துபோயின. முடிவற்ற ஒரே நாளில் தான் இருப்பதாகவே உணர்ந்தாள். பின் வீட்டின் மண் கலயம் ஒன்று உருண்டு உடைவதையும் யாருடைய காவடிச் சப்தமோ வீட்டில் அலைவதையும் ஒரு முறை கேட்டாள். அந்தச் சப்தம் ஆணின் காலடியாகவே இருந்தது. சுப்பையா பிள்ளை சொன்னதன் ஞாபகம் வந்தது.
காலடிச் சப்தம் மிக அருகில் வந்து அவள் முன் நின்றது. அவள் தலையைத் திருப்பினாள்.
“சாவிய எங்க வச்சிருக்கே?”
அந்தக் குரல் மிகக் கடினமானதாக இருந்தது. என்றாலும் அதை அவள் விரும்பினாள். அது அவளுக்குள் வேட்கையை அதிகப் படுத்தியது. அவளது தலையணைக்குள் முரட்டுக் கையொன்று எதையோ தேடி அவளைப் புரட்டியது. அவள் மயிர் நிறைந்த அந்தப் புறங்கையைப் பற்றிக்கொண்டாள். பிசுபிசுப்பான தன் உதட்டோடு அந்தக் கைகளைப் பதித்தபோது அந்த மனிதன் அசைவில்லாமல் நின்றான்.
“கட்டிலில் உட்கார்” – என்ற அவள் குரலுக்கும் அடிபணிந்தான். அவள் உடஷ்ணமூச்சை எறிந்தபடியே கேட்டாள்.
“வெளியே இப்போது பகலா, இரவா?”
“பகல் முடியப்போகிறது.”
அவன் உள்ளங்கையிலிருந்து அவனுக்கு இருபது வயதுக்குள் தானிருக்கும் என அறிந்துகொண்டாள். அவன் உடல் கூழாங் கற்கள் போல இறுகிச் சில்லிட்டிருந்தது. நீண்ட நாள்களுக்குப் பின் தன் படுக்கையில் அமர்ந்திருக்கும் மனிதனின் தலை மயிரை அவள் விரல்கள் கோதின. சுருள் சுருளாகத் தலைமயிர். புரண்டு படுக்கையின் கீழ் இருந்த நாணயங்கள் சிலவற்றை எடுத்து அவன் உள்ளங்கைகளில் வைத்துக் கிசுகிசுக்கும் குரலில் சொன்னான்.
“இன்றிரவு இங்கேயே இருந்துவிடு. எல்வா நாணயமும் உனக்கு உரிமையாகிவிடும்.”
அவள் நாணயத்தைத் தன் பல்லால் கடித்துப் பார்த்துவிட்டுக் கைகளில் பொதித்து கொண்டான். அவனிடமிருந்து மறுப்பு வராததால் அவள் குரலை உயர்த்திச் சொன்னாள்.
“நான் குளிக்க வேண்டும். எங்காவது போயி தண்ணீர் எடுத்து வாயேன்.”
அவன் எழுந்து அறையை விட்டுக் கிளம்பும் முன் அறை முகப்பில் இருந்த மர அலமாரிகளைத் திறந்தான். நூற்றுக் கணக்கான ஜோடி செருப்புகள் நிறமிழந்து வாய் பிளந்து சரிந்தன. அவன் தண்ணீர் தேடிச் சென்றான்.
அவன் திரும்பியபோது ஊரின் மீது பூரண நிலா மிதந்து கொண்டிருந்தது. வீடுகளை, தொழுவங்களை, அறுபட்ட மரங்களை வசீகரமாக்கிக் கொண்டிருந்தது வெண்ணிறம். வீட்டின் பின் கதவுகளைத் திறந்தான். தண்ணீர் அலம்பும் சப்தம் கேட்டுவிடாமல் பானையைக் கீழே வைத்தான்.
மரப் படிக்கட்டுகள் வழியாக வனமாலையை அழைத்துக் கொண்டு வந்தான். அவள் ஏதோ ஒரு கனவின் பாதியிலிருந்து அறுபட்டு எழுந்து வந்தாள். துவை கல்லில் உட்காரச் செய்து தண்ணீர் ஊற்றினான். தண்ணீரின் சப்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் விழித்துக்கொண்டு நாக்கைச் சப்பியபடி கைகளால் எதையோ தேடிப் பிதற்றினர் பல வீடுகளிலும்.
ஈர உடலுடன் அவளை அறைக்குக் கூட்டி வந்தான். நெடு நாள்களாகத் திறக்கப்படாத அந்தப் புட்டிகளை அவன் திறந்தான். அத்தரின் வாடை அறையை நிரப்பியது. காற்றின் வேகத்தில் ஊரெங்கும் பரவியது. நெசவாளியும் குழந்தைகள் அற்றவளுமான சௌந்தரவல்லி இரவில் திடீரெனப் பரவிய அத்தர் வாடை தாங்காது மயங்கி விழுந்தாள்.
ஆண்களை விலக்கி உறங்கிக்கொண்டிருந்த பெண்களும் கூட இவ்வாடையால் நடுக்கமும் வேட்கையும் கொண்டு ஆண் உடல் புகுந்தனர். அவன் அறையிலிருந்த எல்லாப் பொருள்களையும் மூட்டை கட்டினான். சிறு விளக்கு ஒன்று மட்டுமே அந்த அறையில் எரிந்துகொண்டிருந்தது. குருவியென தட்டளியும் விளக்கின் சுடரில் வனமாலையைப் பார்த்தான். அவள் உடல் திறந்து கிடந்தாள். விளக்குடன் நெருங்கி வரும்போது அவள் நிழல் சுவரேறி உயர்ந்து விட்டத்துக்கு வந்தது. விடிவதற்குள் ஒரேயொரு முறை அவளை முத்தமிட்டான். கசப்பும் உப்பின் வாடையும் கொண்ட முத்தம் அது. நாற்பதாவது நட்சத்திரம் எரிந்து வீழ்ந்த காலையில் புறப்பட்டு ஊர் விட்டுப் போனாள். ஊரை அடுத்த நாளும் அத்தரின் வாசனை சுற்றிக் கொண்டிருந்தது. மூன்றாவது நாள் அவள் வீட்டில் நுழைந்த பிச்சைக்காரர்கள் சிதறிய நாணயங்கள் மூன்றைக் கண்டெடுத்தனர். திறந்து கிடந்த படுக்கையறையில் வனமாலை யின் ஸ்தனங்களில் நகங்களைப் பதித்தபடி நின்றிருந்த வெருகுப் பூனை ஆள்முகம் கண்டு தாவி ஓடியது. அவர்கள் அருகில் சென்று பார்த்தபோது வனமாலை இறந்து இரண்டு நாளாகிப் போயிருந்தது.
– எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2014, உயிர்மை பதிப்பகம், சென்னை.