நிலாவில் பதிந்த பாதங்கள்





ஃபுட் கோர்ட்டில் இருந்த கடிகாரம் இரவு 7:14 என்று காட்டியது.
“ரொம்ப களைப்பா இருக்காடா, செல்லம்?”

நான் என் மகன் அர்ஜுனிடம் கேட்டேன்.
“ஆமா, அப்பா ”
“இன்னும் ஒரே ஒரு கண்காட்சி. அத மட்டும் பார்த்திட்டு வீட்டுக்கு போயிடலாம்.”
நான் அவன் கையைப் பிடித்துக் கொண்டு விண்வெளி அருங்காட்சியகத்தின் மையத்தை நோக்கி நடந்தேன். அங்கே இருந்த சந்திர மண்டலத்து தூசியால் சூழப்பட்ட ஒரு ஜோடி அசல் கால்தடங்களைப் பார்ப்பதற்க்கு கூட்டம் அலை மோதியது.
அருகில் செல்வதற்கு பத்து நிமிடங்கள் ஆனது.
“இது யாருடைய கால்தடங்கள்?”
அர்ஜுன் ஆர்வத்துடன் கேட்டான்.
“நீல் ஆம்ஸ்ட்ராங்.” என்றேன்.
“அவர் கால் பதிந்தது ரொம்ப வருஷத்துக்கு முன்பா?”
“ஆமாம், நானூறு ஆண்டுகளுக்கு முன்பு.”
“அவர் எங்கிருந்து வந்தார்?”
நான் அவனை அருகில் இருந்த ஜன்னலுக்கு அழைத்துச் சென்று வானத்தில் உள்ள அழகான, நீல நிற, பளிங்கு பூமியைக் காட்டினேன்.
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |