கை வேல்
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,197
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
பாண்டியன் சிறுவன் என்றனர். சினமிகுந்து எழுந்தான் நெடுஞ்செழியன். சிற்றரசர் ஐவரோடு சேரனும் சோழனும் கூடித் தலையாலங்கானத்தில் எதிர்த்தனர். பகைவர் வீழ்ந்தனர். இருபெருவேந்தரும் போர்க்களத்தில் மடிந்தனர். அவருடைய முரசம் நெடுஞ்செழியன் கைக்கு வந்துவிட்டது.
அவர்களுடைய மனைவியர் அழுது கொண்டு ஓடிவந்தனர். இறந்த கணவரை எண்ணிக் கதறித் துடித்தனர். கைம்மைக் கோலம் பூண்பதற்காகக் கூந்தலைக் களைந்தனர். இக்காட்சியைக் கண்டன செழியன் கண்கள். நெஞ்சத்துள் இரக்கம் புகுந்தது. கைவேல் போரிடுதலைத் தானாகவே நிறுத்திற்று.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026