‘’உங்க அழகு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு…!’’
அவன் சொன்னபோது சற்றே நாணித்தாள் ரேஷ்மா.
அதனாலதான் பலமுறை நான் உங்ககிட்ட என் விருப்பத்தைச் சொல்லிட்டேன். உங்க வீட்டுல வந்து சம்மதம கேட்கவும் தயாரா இருக்கேன். ப்ளீஸ் எனக்காக…
அவன காரிலிருந்து இறங்கி வந்தான்.
‘’இங்க பாருங்க மிஸ்டர்…நான் எப்பவோ என் அப்ஜெக்ஷனை சொல்லிட்டேன். முடியாது, முடியாது. என் வீட்டுலயும் சம்மதம் கிடைக்காது. ஸோ நீங்க எனக்காக காத்திட்டிருக்க வேண்டாம். பெட்டர் தன் நெக்ஸ்ட் சான்ஸ்…’’
சொன்னவள் விருட்டென நடந்தாள்.
இளம் திரைப்பட இயக்குநரான அவனுக்கு வருத்தமாய் இருந்தது,
தன் புதிய படத்தின் நாயகிக்காக அழகான கல்லூரிப் பொண்ணைத் தேடி வலை வீசியவனுக்கு முதல் முறையே தோல்வியில் முடிந்ததன்
வருத்தம் அவனுக்கு..!
– எட்டயபுரம் ராஜூ (1-10-2008)