மகிழ்ச்சி
கதையாசிரியர்: அசோகன் குப்புசாமி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: June 18, 2016
பார்வையிட்டோர்: 9,328
“என்னாப்பா இரகசியம் ஒன் முகம் எப்பவும் சந்தோஷமா மலர்ச்சியா இருக்கு”என்று கேட்பவர்களுக்கு மத்தியில்….. வயிற்றரிச்சல்காரர்கள் சிலர் ஒனக்கு பிரச்னையே இல்லியா எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கீயே” என இரகுராமனிடம் கேட்பவர்களும் உண்டு. அதற்கும் பதில்… அதே புன்னகைதான்.
அந்த தொழில் நிறுவனத்தில் தொழிலாளியாக இருக்கும் இரகுராமன் தன் வேலையில் நேரத்திற்கு வந்து நேர்த்தியாக முடித்து விட்டு போவது அவனுக்கு பழகிப்போன ஒன்று. அப்படிப்பட்டவன்தான் மாதத்தில் இரண்டுநாள் திடிரென்று லீவு போட்டு விட்டு போய்விடுவான். ஏங்கு போகிறான் என்பது அவனுக்கே வெளிச்சம். யாரிடமும் மூச்சு விடுவதில்லை.
இவனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்.. புதிய மேனேஐர் வரப்போவதாய் பேசிக் கொண்டனர். அவரும் சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்து போனது. அவர் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் மாதாமாதம் தொழிலாளிகளின் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் அவர்களின் பணித்தரம் பற்றி ஆய்விடப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதுபோலவே, அன்றும் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு தொழிலாளியாய் முடித்து….இரகுராமன் முறை வரும்பொழுது..
“என்ன இரகுராமன், வேலையெல்லாம் நல்லா செய்யுறீங்க, எப்பவும் சந்தோஷமா இருக்கீங்க…. ஆனால் மாசமாசம் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு காணாம போயிடுறீங்களே”அதுதான் பிரச்னையா இருக்கு, எனிதிங் பிராப்ளம்”கடுகடுத்த முகத்துடன் கேட்டார் மேனேஐர்.
புராப்ளம்-ல்லாம் இல்ல ஸார் “ஒரு அநாதை இல்லத்துக்கு போய் அங்கே இருக்கிற ரெண்டு பசங்களை வெளியே கூட்டீப்போய் வயிறாற சாப்பிடவைச்சு, டிரஸ் வாங்கி கொடுத்து ஏதாவது ஒரு சுற்றலா இடத்திற்கு கூட்டிபோய் அவர்களின் சந்தோஷத்தை பார்க்கிறதுக்குதான் அந்த ரெண்டுநாள் லீவு. அந்த சந்தோஷம்தான் எனக்கான உற்சாக டானிக், வேற எதுக்குமில்ல” என்றான்.
மேனேஐரின் கடுகடுத்த முகத்தில் ஒரு புன்னகைப் படர்ந்தது..
அவன் முகத்தில் இருக்கும் சந்தோஷத்திற்கும் மலர்ச்சிக்கான இரகசியம் எதுவென்று அன்றுதான் எல்லோருக்கும் புரிந்தது.
நன்றி – வளர்தொழில் ஜூலை 2015)
![]() |
இயற் பெயர்: கே.அசோகன் (அசோகன் குப்புசாமி)தந்தை பெயர்: த.குப்புசாமிபிறந்த நாள்: 13 Decemberதொழில்: தமிழக அரசு பணி (2013 பணி நிறைவு)நிரந்தர இருப்பிடம்: மனை எண்-சி-374 என்.ஜி.ஜி.ஓ நகர், சேலை, திருவள்ளுர் 631 203தற்காலிக முகவரி: சி-20 சம்பக், ஐ.டி.சி குடியிருப்பு, சாரபாக்கா கிராமம், கம்மம் மாவட்டம், தெலுங்கானா மாநிலம் பின் -507 208தொடர்பு எண்: 9047896065மனைவி பெயர்: அ. சகுந்தலை –குடும்ப தலைவிமகன் பெயர்: அ.ராஜ்மோகன் இலக்கிய பணி:தாய்மண்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
எதிர் காணல்
பொ.நாகேந்திரன்
August 22, 2026
வெம்மை நிமிடங்கள்
விமலன்
August 22, 2026
நலம் தரும் நட்பு
அல்போன்ஸ் மோசஸ்
August 19, 2026

மகிழ்ச்சி என்ற சிறுகதையினை தங்கள் தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி