யுகங்கள்
(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அரைக் கோளமாக வானம் கவிந்து கிடக்கிறது. வெள்ளைப் பிசிறில்லாத நீலம். பச் சைக் கம்பளத்தை மூடி. கம்பளத்தின் மேற் பரப்பு மஞ்சள் மயம். இப்படித் தெட்டத் தெளிவாக பட்டை பட்டையாக நிறங்கள் சந்திக்குமா? ஓரளவுக்கு செயற்கைத் தன்மை வந்து விட்டதாகக் கூட இருந்தது, இந்த இயற்கைக்கு. பதினொரு மணி வெய் யிலில் இந்த நிற வார்ப்புகள் இப்படியிருந் தன. கோளத்தின் விட்டப் பரப்பின் நடு வில் கறுப்பு நாடாவாகத் தெரு. அதில் கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு ஒரே ஒரு மனுக்கணமாகத் தான் தான் என்பது கூட உறைக்காதிருந்தது.
இயந்திரம் சீரான லயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு சைக்கிளிலும் சற்று அதிகப்படி வேகம். கிடங்குகளைத் தவிர்க்க வசதி.
சணல் பூவின் இதமான வாசம் துணை யாக வந்து கொண்டிருந்தது. காற்று வழித் துணை வரும் நாயைப்போல. கூட வரும் எங்கோ ஓடும். பிறகும் வரும். கொஞ்சத் தூரம் மீண்டும் கூட. இப்படி இருந்தாற் போல ஒருக்கால் மக்கிப் புழுதியைச் சுழற்றி முகத்தில் வீசி விட்டு ஓடியது. இடக்கையால் மூக்கையும் உதடுகளையும் துடைத்துக் கொண் டான். காற்றில்லாமல் வெய்யில் சுடும் போல இருந்தது. தலையைத் தொட்டுப் பார்த்தான். சுட்டது. ஹெல்மெற் எல்லாம் மறந்தாயிற்று. அதொன்றுதான் இல்லாக் குறை.
நீலமும் பச்சையும் சந்திக்கிற வெளிவட்ட விளிம்பில் பனைகள் நிரைகட்டி நின்றன. இடது பக்கம் வெகுதொலை வில் அம்மன் கோவிலின் கோபுரமும் தேர்முட்டியும் பொம் மைகளாய்த் தெரிந்தன. ஒட்டித் தெரிந்த சில ஓட்டுக் கூரைகள்.
எதிரே இன்னொரு மோட்டார் சைக்கிள் வந்துகொண் டிருந்தது. இரண்டுபேர் வலுவேகமாக புழுதியையும் புகை யையும் மணக்க விட்டு, விறுக்கெனத் தாண்டி மறைந்தார்கள்.
தெருக்கரையில் பழைய காரொன்றின் கோது கறள் கட்டிக் கிடந்தது. இதை யாராவது இன்னும் ஓரமாகத் தள்ளினால் நல்லது. வலப்பக்கம் குட்டையில் இரண்டு கொக்கு கள் மெல்ல மெல்ல நடந்துகொண்டிருந்தன. இன்னும் நீர் இருக்கிறது – இந்த வெய்யிலிலும்.
‘புர்’ ரென்று ஒரு பெரிய கருவண்டு சணல் பூக்காட்டி லிருந்து விடுபட்டு அவன் முகத்தில் மோதுவதுபோல வந்து திரும்பியது. என்ன நினைத்ததோ, கூடவே கொஞ்சத் தூரம் மிதந்து வந்து இன்னொரு வட்டம் போட்டு விலகிப் போனது. ஒரு மடம். அதற்கடுத்தாற்போல வடக்கே ஒரு திட்டி, சாம்பல் மேடு. இன்னுஞ் சற்றுத் தள்ளி சிலுவைப் பாத்தி.
தெரு இப்போது மேடாகியது. கொஞ்சத் தூரத்தில் மதகு. பாதையின் சரி பாதித் தூரத்திலிருக்கிற மதகு. பாலமென்றால் இன்னும் பொருத்தம். வலப்புறக் கைப்பிடிச் சுவருக்கப்பால் கட்டுகளும் அணைக்கதவுகளும் வரிசையாய்த் தெரிந்தன.
கடற்காகமொன்று பாலத்தைத் தாண்டிப் பறந்தது. குறுக்கே பெயர் தெரியாத இன்னுமொரு கடற்பறவைக் கூட்டம் மிதப்பதுபோல. சணல் வயல்களைத் தாண்டி சற்றுத் தூரத்தில் சில மாடுகள். இந்த இடத்திலிருந்து வயற்காரர்கள் விதைக்காமல் விட்டிருந்தார்கள். கிடைச் சியும், புல்லும் வரம்புமாக இருந்தது. எதிர்ப் பக்கத்தில் பனைகள் வளர்ந்துகொண்டு வந்தன.
இயந்திரத்தின் ரீங்காரத்தையும் காற்றின் சுருதியையும் மீறி இன்னுமொன்று புலனிற் தட்டியது. எச்சரிக்கையுற்ற வனாய் அண்ணாந்து முன்னால் ஒரு வட்டம் பார்த்தான். அது காகம். என்றாலுங் கேட்டது. பின்னால் திரும்பி…
அந்தா! பின்னால் வலப்புறத்து வான்நடுவில் அது! அந்த அழுக்குப் பச்சைத் தும்பி. தன்னை நோக்கித்தான் வருவதுபோல. சத்தம் இப்போது தெளிவாயிருந்தது. எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்டாயிற்று.
துளைக்கும்போது எப்படியிருக்கும், கடவுளே..
வேறு வழியில்லை. கைப்பிடியைப் பலமாகத் திருகினான். எதிரே பனங்கூடல் பெரிதாகி வந்தது. முகப்பிலிருந்த சிறு கோவில் தெளிவாகத் தெரிந்தது. இயந்திரத்துக்குப் போட்டியாய் இதயம். பின்னால் சத்தம் பலத்துக்கொண்டு வந்தது.
– ஈழமுரசு, 1987.
– இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: அக்டோபர் 1988, வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம்.