முள்முடி மன்னர்கள்





(1991ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-11 | அத்தியாயம்-12

“அடக்கு முறைக்கு எதிராக
கிளர்ந் தெழுவோம்
தமிழ் ஈழத் தாயகத்தின் விடுதலைக்காக
போராடுவோம்”
இருளில் நிலவு ஒளித்திருந்தது. பிரமாண்டமான அம்மன் கோவில் கோபுரமும் பூதமாக உட்கார்ந்திருந்தது.
கோயிலடியிலும் மகிழ மரத்தின் கீழும் இருந்தபடி மாலை நேரங்களில் வம்பளக்கும் ஆட்கள் கூடகாணாமல் போய் இருந்தார்கள்.
பரந்திருந்த மணலின் வெளியில் மகிழமரம் குடை விரித்து அழகு காட்டிற்று மரத்தின்கீழ் இருந்த கருங்கல்லில் ஞானரூபனும் தவலிங்கமும் அமர்ந்திருந்தனர்.
ஞானரூபனுடன் காரில் போகும் போது இந்திய இராணுவத்தால் இறக்கப்பட்ட தவலிங்கம் நான்கு நாட்கள் விருந்தினராக இருந்து விட்டு இன்று காலையில் தான் மீட்கப் பட்டிருந்தான்.
அவன் அம்மாவும் அவன் வேலை செய்த கடையின் முதலாளியும் எத்தனையோ அவதாரங்கள் எடுத்து பல பேரை சாந்தப்படுத்தி சாந்திகள் பல செய்த பின்னர் தான் இது சாத்தியமாயிற்று.
காலையில் தான் அவன் இராணுவ முகாமில் இருந்து மீட்கப்பட்டாலும் மாலையில் தான் ஞானரூபனிடம் வந்திருந்தான்.
காலையில் ஞானரூபனின் அம்மா தான் அந்தச் செய் தியைக் கொண்டு வந்திருந்தாள். முகம் கழுவி விட்டு தோளில் துவாயுடன் கிணற்றுக் கட்டில் ஞானரூபன் அமர்ந்திருந்தான்.
இதழ் விரித்த மலர் போல தென்னை மரமொன்று மிகப்பதிவாக பரந்திருந்தது. திரண்ட காய்களைக் கொண்ட செவ்விளநீர் குலையின் செம்மை சுண்டியிழுத்தது.
இரண்டு அணில்கள் ஒன்றைஒன்று கலைத்துக் கொண்டு போயின னரூபன் அவற்றின் ஓட்டத்தில் லயித்திருந்தான்.
வீட்டு வாசலில் சைக்கிள்மணி ஒலித்தது. அம்மாதான் போனாள். போன வேகத்திலேயே திரும்பிவந்து கொண்டு “தம்பி ஞானம்” எனக் குரல் கொடுத்தாள்.
‘அவன் கிணத்தடியில் அம்மா” என்று மனோகரி பதிலுக்குச் சொல்ல அம்மா கிணற்றடியை நோக்கி வந்தாள்
“தம்பி ஞானம்” என்றாள் பரபரப்புடன் முகத்தி. சந்தோஷம் தெரிந்தது.
“என்ன” என்றான் ஆர்வமில்லாமல் ஞானரூபன்.
“தவலிங்கத்தை விட்டாச்சாம் இப்ப காலமை தான் விட்டவையாம்” என்றாள் மகிழ்ச்சியுடன்.
குளிர் நீரை படீர் என முகத்தில் அடித்தாற் போன்ற கிளர்ப்பு ஞானரூபனுக்கு ஏற்பட் டது. தவலிங்கம் பிடிபட்ட பின்னர் இந்தக் கணப்பொழுது வரை வெறுப்பும் விரக்தியும் சேர்ந்து தனக்குள் குமைந்து கொண்டிருந்த அவனுக்கு அது ஒரு எதிர்பாராத விடயம் தான்.
“உண்மையோ அம்மா” என்றான் வியப்புடன்.
ஓமோம் தவலிங்கம் தான் சொல்லி விட்டிருக்கிறான் பின்னேரம் தான் வாறன் எண்டு என்று அம்மா சொன்னாள்.
ஞானரூபன் சுகமான நினைவுகளில் மூழ்கிப் போய் வெகுநேரம் வரை – தவலிங்கம் மாலையில் வீட்டுக்கு வந்து சேரும்வரை காத்திருந்தான்.
தவலிங்கத்தின் முகத்தில் இலேசான வாட்டம். தலை மயிரில் சற்று அடக்கம் இன்மை. கண்கள் தாண்டு இமை களைச்சுற்றி மெல்லிய கருவளையங்கள் “எப்பிடி மச்சான்” என்று கேட்டபடி வந்த அவனை ஞானரூபன் பார்த்தான்.
அம்மா, மனோகரி, மேனகா என்று எல்லோரும் அவனை நெருங்கினார்கள். அவ்னை ஆழமாகப் பார்க்கும் ஆர்வமும் அக்கறையும் இருந்தன. ஐயா அந்த நேரம் இருக்கவில்லை.
“தம்பி நான் இப்பவீட்டை வர இருந்தனான் நீர் இஞ்சை வாறன் எண்டு சொல்லி அனுப்பின படியால் வரேல்லை” என்று அம்மா சொன்னாள்.
தவலிங்கம் பதில் சொல்லாமல் சிரித்தபடியே இருந் தான். அறையை விட்டு வெளியே வந்த ஞானரூபன் விழிகள் சந்தோஷத்தால் மின்னின.
“வாடா தனியப் போய் இருந்து கதைப்பம்” என்றான் தவலிங்கம்.
“எங்கையெடா”
“எங்கையெண்டாலும் போவம். நீ சைக்கிளில் முன் னுக்கு இருப்பாய் தானே. அதுவும் கஸ்டமே” என்று கேட்ட தவலிங்கத்தைப் பார்த்த ஞானரூபன்- .
“நடக்கிறது பிரச்சனை தான் எண்டாலும் சைக்கிளில் முன்னுக்கு இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு சேட் எடுக்க அறைக்குள் போனான்.
தம்பி இரன் கோப்பி கொண்டு வாறன்” என்ற அம்மாவைப் பார்த்து-
”பொறுங்கோ அம்மா ஒரு அலுவல் இருக்கு அதை முடிச்சுக் கொண்டு வாறம். வந்தப் பிறகு கோப்பி குடிக்கலாம்” எனப் பதில் சொன்னான் தவலிங்கம்
மரங்களைத் தேடி பறவைகள் பள்ளி கொள்ள பறந்து கொண்டிருந்த வேளையில் தவலிங்கத்தின் சைக்கிள் அம்மன் கோயிலடிக்கு வந்து நின்றது. மகிழமரத்தடியில் சைக்கிளைச் சாத்திவிட்டு கருங்கல்லின் மீது வசதியாக அமர்ந்து கொண்டார்கள்.
நீண்டநேர மௌனத்தின் பின்னர் அமைதி உடைந்தது.
“என்னடாப்பா நடந்தது நல்லாய் அடிச்சுப் போட்டாங்களே” என்று கேட்டான் ஞானரூபன்.
“உனக்கு அடிச்சமாதிரி எனக்கு அடி விழேல்லை. மச்சான் இப்ப-பார்- சைக்கிள் ஓடக்கூடியதாய் இருக்குத்தானே. கன பேரைப் பிடிச்சு வைச்சபடியால் மோசமான அடி இல்லை. எண்டாலும் அடி விழுந்தது தான் மச்சான்.”
“அப்ப பெரிய பிரச்சனையாய் ஒண்டும் இல்லையே,”
“பெரிய பிரச்சனையாய் ஒண்டும் இல்லையோ, – நீ என்னடாப்பா கதைக்கிறாய். நாலு நாளும் நரகத்துச் சீவியம். நீ அண்டைக்கு அடி வாங்கினாய் இண்டைக்கு வரைக்கும் ஆஸ்பத்திரிக்குத் திரியிறாய். உது பரவாயில்லை. ஆனால் எந்த நிமிடம் என்ன நடக்கும் எண்டு தெரியாமல் நாலு நாளும் நான் பட்டபாடு கடவுளுக்குத்தான் வெளிச்சம் மச்சான்”
“என்ரை கண்ணுக்கு முன்னால ஒரு பெடியனை அடிச் சே சாக்காட்டிப் போட்டாங்கள்” என்று சொன்ன தவலிங் கத்தின் விழிகளில், மிரட்சி தெரிந்தது.
“மெய்யே”
“ஓமடாப்பா, அவன்கள் மனுசதன்மை எண்டால் கிலோ என்ன விலை எண்டு கேட்பாங்கள். பயங்கரமான ஆட்கள். ஒரு பத்து வயதுப் பெடியனுக்கு அவன்கள் செய்த சித்திரவதையைக் கண் கொண்டு பாக்கேலாமல் இருந்தது” என்று தவலிங்கம் சொல்லும் போதே அவன் உடல் நடுங்கத் தொடங்கியது.
“என்னென்ன மாதிரி யெல்லாம் நாங்கள் சந்தோஷ மாய் இருந்தம். இப்ப பார் எப்பிடிக் கஷ்டப்பட வேண்டி இருக்கு.” என்று ஞானரூபன் சொன்னான்.
“இப்ப யோசிச்சு என்ன பிரயோசனம். பார் எங்கடை கஸ்டகாலத்தை இரண்டு பேரும் கடைசியாய் இப்பிடி அவன்களிட்டை அடிவாங்கிற நிலைக்கு வந்திட்டம்.
பிறகு நீண்ட பொழுது அவர்கள் மௌனமாக இருந் தனர். வானத்தில் புள்ளிகளாகப் பளபளத்த ‘நட்சத்திரங்களைப் பார்த்தனர்.
“அண்டைக்கு பிரியாவைக் கண்டனான் மச்சான்”
“எங்கை-” என்று தவலிங்கம் கேட்டான்..
“ஆஸ்பத்திரியில. உன்னை இந்தியன் ஆமிக்காரன் பிடிச்ச அண்டு”.
“என்னவாம்.”
“அவள் என்னத்தைச் சொல்லுறது. நக்கலாய் ஒரு கேள்வி. கேட்டுப் போட்டாள் மச்சான். எத்தினை உதவி யள் என்னென்ன மாதிரி யெல்லாம் செய்திருப்பன். அதை யெல்லாம் யோசிச்சாளே. கடைசி ஆறுதலாய் கதைக்க வேண்டாம்.” என்று ஞானரூபன் சொன்னான்.
“எடமடையா, உதுகளை ஏன் இப்ப யோசிக்கிறாய். அதுகள் அப்பிடித்தான். உதைவிட இப்ப என்ன செய்வம்”
“என்ன செய்யிறது.”
“என்ன செய்வம் எண்டு சொல்லன்” என்றான் தவலிங்கம்.
“நெடுக வேதனையும் சோதனையுமாய் இருக்கு. மனத்தில இருக்கிற கவலையை போக்காட்டுறதுக்கு வழியும் தெரியேல்லை”.
“அதுக்குத்தான் என்ன செய்வம்” என்று கேட்டான் தவலிங்கம்.
”வழக்கமாய் நாங்கள் என்ன செய்யிறனாங்கள்”
‘சொல்லன்”
”என்னடாப்பா நீ – வழக்கமாய் நாங்கள் செய்யிறதைச் செய்வம்.”
“அதுக்கென்ன கனகசபை கடைக்குத்தானே போவம் இப்ப இருக்கிற கவலைக்கு அதுதான் சரியான மருந்து. அது சரி இப்ப சுனகசபை கடை திறந்திருக்குமோ”
“இப்ப பூட்டுற நேரம் தான். சீ. ரி. பி. பொன்னுத் துரை கத்திக் கொண்டு இருக்கும் வா போவம்.”
படு உற்சாகத்துடன் தவலிங்கம் சைக்கிளை எடுத்தான். தலையில் புல்லுக் கடகத்துடன் ஒரு வயதானவர் மெதுவாக நடந்து கொண்டிருந்தார். தோளில் ‘மண்வெட்டி உழைப்பு முடிந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
சைக்கிளின் முன்புறம் ஞானரூபன் ஏறி அமர்ந்தான். வெகு நாட்களுக்குப் பின்னர் இந்த நேரத்தில் வீதியால் பயணப் பட்டது புதினமாக இருந்தது.
“எங்களைக் கண்டால் கனகசபை என்ன நினைப்பான்.” என ஞானரூபன் கேட்டான்.
“என்னத்தை நினைக்கிறது.சந்தோஷப்படுவான்” எனப்பதில் சொன்னான் தவலிங்கம்.
ஒழுங்கை அந்த மூலையால் திரும்பியது எதிரே பள்ளிக் கூடச்சுவர் தென்பட மங்கிய இருளில் சில இளைஞர்கள் தெரிந்தார்கள். கைகளில் ஆயுதங்கள்.
“இதென்னடா கஸ்டகாலம்.” என ஞானரூபன் சொன்னான்.
”சத்தம் போடாமல் இரடா” என்ற தவலிங்கம் அவனை எச்சரிக்கைப் படுத்தினான்.
பள்ளிக்கூடச்சுவரில் இரண்டு பேர் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தனர். சைக்கிளில் வந்த இவர்களை அந்த இளைஞர்கள் நுட்பமாகப் பார்த்தனர். ஆனால் எதுவுமே கேடகவில்லை.
வெள்ளைத் தாளில் சிவப்பு நிறத்தில் பிரகாசித்த எழுத்துக்களை தெருவோரத்து மின்சாரவிளக்கு வெளிச் சத்தில் சட்டென்று ஞானரூபன் வாசிக்க முனைந்தான்.
“அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழு வோம் தமிழ் ஈழத் தாயகத்தின் விடுதலைக்காகப் போராடுவோம்” என்று போன வசனங்களை மேலும் தொடர்ந்து வாசிப் பதற்கு முள்னர். சைக்கிள் அப்பால் சென்று விட்டது.
அப்பாலும், வேறு சில இளைஞர்கள் வயதில் இளைய வர்கள் தோள்களிலும், கைகளிலும் ஆயுதங்களுடனும் காணப்பட்டனர்.
“இப்ப ஆமிக்காரர் வந்தால் எப்பிடி இருக்கும்.” என்று ஞானரூபன் கேட்டான்.
தவலிங்கம் பதில் சொல்லாமல் சிரித்தான்.
“பொறு – கனகசபை கடையில இரண்டு றாம் அடிச் சால் எல்லாம் சரிவரும்.” என்றான்.
கனகசபை கடை. ஒற்றைக் கதவில் விழித்திருந்தது. இரண்டு சைக்கிள்கள் வாசலில் காவலிருந்தன.
“பார் மச்சான். எங்கடை நல்ல காலத்தை கடை திறந்திருக்கு” என்றபடி தவலிங்கம் சைக்கிளை நிறுத்த ஞானரூபன் சைக்கிளை விட்டு இறங்கினான்.
திடீர் என குண்டு ஒன்று வெடித்தது. அதன் அதிர்வுகள் பல செக்கன்கள் வரை நீடித்தது.
“என்ன மாதிரி நெஞ்சு அதிருது பார் மச்சான்” என்ற ஞானரூபன் சட்டென்று தவலிங்கம் கையைப் பிடித்தான்.
“மச்சான் உனக்கொரு விசியம் தெரியுமே.”
“என்னடாப்பா,”
“எங்கடை காயத்திரியின்ரை கடைசி தங்கச்சி – ரோகினி இயக்கத்துக்குப் போட்டாளாம்” என்றான் ஞானரூபன்.
“ஆர்-படிச்சுக் கொண்டு இருந்த பிள்ளையோ” என தவலிங்கம் கேட்டான்.
“ஓமோம்,” என்றான் ஞானரூபன்.
(முற்றும்)
– முள்முடி மன்னர்கள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1991, மீரா வெளியீடு, யாழ்ப்பாணம்.