பொங்கல் ரிலீஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 28, 2024
பார்வையிட்டோர்: 5,612 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நரி மொகத்துல முழிச்சா நமக்கு அதிர்ஷ்டம். புலி மொகத்துல முழிச்சா?

புலிக்கு அதிர்ஷ்டம்.

எப்போதோ ஒரு பழைய கருப்பு வெள்ளைப் படத்தில் வந்த இந்த ஜோக் செந்திலுக்கு ரொம்பப் பிடித்துப்போன ஒன்று.

நரி மொகமும் புலி மொகமும் சரி, எருமை மாட்டு மொகத்துல முழிச்சா? என்று செந்தில் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். இவன் தினமும் முழிப்பது எருமை மாட்டின் முகத்தில்தான். இதுவரை இவனுக்கோ அல்லது அந்த எருமை மாட்டுக்கோ அதிர்ஷ்டம் அடிக்கவில்ல. இதுவரை என்றால், நேற்றுவரை.

இன்றைக்குக் காலையில், அலுமினியச் சொம்பில் தண்ணி மொண்டு கொண்டு, குடிசை வாசலில் வைத்துப் பல்லு விளக்கிக் கொண்டிருந்தபோது, மேலே, ரோடிலிருந்து யாரோ இவனைக் கை தட்டிக் கூப்பிடுகிற மாதிரி இருந்தது.

கூவம் மகாந்தியின் உபநதிகளில் ஒன்றின் கரையோரப் பள்ளத்தாக்கிலிருந்தது செந்திலுடைய குடிசை. அந்தச் சேரிப் பகுதியில் இந்தக் குடிசைக்குப் பல தனித்தன்மைகள் உண்டு. செந்திலுடைய நயினா ஆறு வருஷங்களுக்கு முன்பு வடிவமைத்த இந்தக் குடிசைதான் அந்தப் பகுதியிலேயே ஒரே பாத் அட்டாச்டு குடிசை. கேபிள் டி.வி. கனக்க்ஷன் உள்ள ஒரே குடிசை

இதையெல்லாம் விட முக்கியமான சிறப்பு, பள்ளிக்கூடத்தை எட்டியே பார்க்காத பிள்ளைகள் உற்பத்தியாகிக் கொண்டிருக்கிற இந்தச் சேரியில், ப்ளஸ் ட்டூ முடித்து, காலேஜுக்குப் போய்க் கொண்டிருக்கிற ஒரு சுரிதார்ப் பொண்ணு வசிக்கிறது இந்தக் குடிசயில்தான்.

மீனாட்சி. செந்திலுடைய ஒரே செல்லத் தங்கச்சி.

ஐயயோ மறந்தே போனேனே, மேலே ரோடிலிருந்து ஒரு ஆள் செந்திலைக் கை தட்டிக் கூப்பிட்டானில்லயா?

ஆமாம் கூப்பிட்டான்.

வாயிலிருந்த தண்ணியக் கொப்பளித்துவிட்டு செந்தில் அவனைத் திரும்பிப் பார்த்தான். அந்த ஆள் செந்திலை மேலே வரச்சொல்லி செய்கை செய்யவும், செந்தில் போனான்.

“ஏம்ப்பா, இந்த எருமை மாடெல்லாம் யாருது?”

“எங்கள் துதான் ஏன், பால் வேணுமா?”

“பால் வேணாம்ப்பா, எருமையே வேணும்.”

“அதுக்கு எங்க நயினாவைக் கேக்கணும். நயினா ஊர்ல இல்ல.”

“வெலைக்கி இல்லப்பா. வாடகைக்கித்தான் வேணும்.”

“வாடகைக்கா? அப்படியெல்லாம் தர்றதில்லீங்க.”

டீலை முறித்துக்கொண்டு செந்தில் திரும்பி நடக்க முற்பட்டபோது அந்த ஆள் அவசரமாய்த் தடுத்தான்.

“தம்பி தம்பி, கொஞ்சம் நில்லு. என்ன ஏன்னு வெவரங் கேக்காம போய்க்கினே இருந்தா எப்படி? நா ஒரு சினிமா அஸிஸ்ட்டன்ட் டைரக்டர் தம்பி. இன்னிக்கி ஷூட்டிங்க்கு ஒரு எருமை மாடு வேணும். ஏற்கனவே ஏற்பாடு பண்ணி வச்சிருந்த சப்ளையர் திடீர்னு ஸ்ட்ரைக் பண்ணிட்டான். எருமை மாடு இருந்தாத்தான் இன்னிக்கி ஷூட்டிங். ஒம் மாட்டக் கொஞ்சம் கொண்டு வா தம்பி. மூணு அவர்தான் கால்ஷீட்.”

“நம்ம மாடு ரொம்ப பிசியாக் கீது சார், ஒரு பத்து நாளக்கிக் கால்சீட் கெடைக்காது.”

“ஐயோ, அப்படிச் சொன்னா எப்படி தம்பி. பொங்கலுக்கு படத்த ரிலீஸ் பண்ணனும்.”

“அப்ப இப்படி வச்சுக்கலாம்.”

“எப்படி வச்சிக்கலாம் சொல்லு. நீ சொல்ற மாதிரியே செஞ்சிருவோம். சொல்லு”

“படத்த மாட்டுப் பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுவோம். அப்பத்தான் நம்ம மாடு சந்தோசமா நடிக்கும்.”

“ஆஹா, சூப்பர் ஐடியால்ல! ஒம்மாடு மட்டுமா சந்தோஷப் படும்? மாட்டுப் பொங்கலுக்குப் படம் ரிலீஸாச்சுன்னா தமிழ்நாட்டு மாடுகள்ளாம் கூட்டங் கூட்டமாப் படம் பாக்க வருமே! ஒனக்கும் எனக்கும் இது புரியுது தம்பி, ஆனா இந்த ப்ரடியூஸர் ஒரு மோசமான மனித நேயர். மனுஷ ஜென்மங்களுக்காக மட்டுமே படமெடுக்கறவர். அதனால பொங்கலுக்குத்தான் ரிலீஸ் பண்ணனும்னு பிடிவாதம் பிடிப்பார். ஆனா, ஒன்னோட மாடு கலைக்கு சேவை செய்யப் போகுதே, அத நெனச்சுப் பார். நூறு ரூவா வாங்கித் தாறேன். ப்ளீஸ். ஓக்கே சொல்லு தம்பி.”

செந்தில் சில விநாடிகள் யோசித்துவிட்டு ஒக்கே என்றான். எருமையைக் கூட்டிக்கொண்டு எங்கே வர வேண்டுமென்று கேட்டதற்கு அஸிஸ்ட்டன்ட் டைரக்டர் ஒரு கல்லூரியின் பெயரைச் சொன்னார். காலேஜ் கதை, கல்லூரி வளாகத்தில் படப்பிடிப்பு என்றார். பத்து மணிக்கு லொகேஷனில் இருக்க வேண்டுமென்றார்.

காலேஜ் கதை என்றதும் செந்திலுக்கு மீனாட்சியின் நினப்பு வந்தது. இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை. காலேஜ் கிடையாது. ஷூட்டிங் பார்க்க மீனாவைக் கூட்டிக் கொண்டு போனாலென்ன?

தங்கையை எழுப்பி, விஷயத்தைச் சொன்னவுடன், அந்தக் காலேஜா? வேணாண்ணா, எங்க காலேஜுக்கும் அந்தக் காலேஜுக்கும் புடிக்காது என்று திரும்பவும் படுத்துக் கொண்டாள்.

அவளை சமாதானப் படுத்தி, தயார்ப்படுத்தி, பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு செந்தில் எருமை மாட்டோடு நடந்தான்.

ஷூட்டிங் லொகேஷனில் எருமை மாட்டுக்கு எக்கச்சக்க வரவேற்பு. ப்ரடியூசர், டைரக்டர், உதவி டைரக்டர்கள், கேமராமேன், கதாநாயகன், எக்ஸ்ட்ராக்கள் எல்லாரும் மாட்டைப் பார்த்து முகம் மலர்ந்தார்கள்.

கதாநாயகி மட்டும் சலித்துக் கொண்டாள். “இந்த எருமை மேல ஏறி நா ரைடு பண்ணனுமாக்கும்? என்ன கஷ்ட காலம்டா சாமி!”

டைரக்டர் அவளை அநாயாசமாய் மடக்கினார். “இந்த ஷாட்டுக்கு ஒத்துக்கிட்டதனாலதான் மேடம், ஒங்களை இந்தப் படத்துல புக்கே பண்ணியிருக்கோம்.”

கதாநாயகி டைரக்டர் ஒரு சிணுங்கல் பார்வை பார்த்தாள். பிறகு சிணுங்கினாள்.

“இந்த மாட்டைக் குளுப்பாட்டியாவது விடுங்க சார், ஸச்ய டர்ட்டி திங்!”

டைரக்டர் செந்திலைப் பார்த்துக் கண்ணடித்தார். “தம்பி, மாட்டக் குளுப்பாட்டித்தானேப்பா கூட்டிட்டு வந்திருக்க?”

“ஓ, ஜோராக் குளிப்பாட்டி பவுடர் போட்டு இட்டாந்திருக்கேன் சார்” என்று குறிப்பறிந்து ஒத்து ஓதினான் செந்தில்.

தன்னப் பார்த்து சிநேகபூர்வமாய்க் கண்ணடித்த டைரக்டரோடு ஓர் அந்நியோன்யம் ஏற்பட்டு விட்டதை உணர்ந்த செந்தில், அவரை நெருங்கிப் பேச்சுக் கொடுத்தான்.

“நம்ம மாட்டுக்கு நல்லா நடிப்பு சொல்லிக் குடுங்க சார்.”

“ஜமாச்சிருவோம் தம்பி, கவலயேப்படாத.”

“அதோ அங்க நின்னுக்கினுக்கீறது நம்ம ஸிஷ்டர் சார்.”

“ஷூட்டிங் பாக்கக் கூட்டிக்கிட்டு வந்தியா? வெரிகுட்.”

“சார், படம் ரிலீஸ் அன்னிக்கி நமக்கு ப்ரீ டிக்கட் குடுப்பீங்களா சார்?”

“ஒனக்குக் குடுக்காம யாருக்குக் குடுக்கப் போறேன் தம்பி! பொங்கலண்ணிக்கி ஜோராப் படம் பாக்கலாம். ரெண்டு டிக்கட் தரச் சொல்றேன்.”

“மூணு டிக்கட்டா குடுங்க சார். நம்ம ஸிஷ்டரும் படம் பாக்க ஆசைப்படும்.”

மூணாவது டிக்கட் ஸிஷ்டருக்கு என்றால், ரெண்டாவது யாருக்கு என்பது உறைத்தபோது டைரக்டருக்கு சிரிப்போ சிரிப்பு. சிரிப்புடனேயே குதூகலமான மூடில் வேலையை ஆரம்பித்தார் டைரக்டர்.

கல்லூரி மாணவர்களின் ராகிங் ஸீன் அது. கதாநாயகனும் அவனுடைய நண்பர்களும், காரில் வந்து இறங்குகிற பணக்கார மாணவியான கதாநாயகியை ராகிங் செய்கிறார்கள். ராகிங்கின் ஒரு அம்சம், இந்த எருமை மாட்டுச் சவாரி. கல்லூரியின் முன்புறத் திறந்தவெளிதான் களம்.

துணை நடிக நடிகைகளுக்கெல்லாம் அவர்களுடைய ரோல் சொல்லித் தரப்பட்டு, அவரவருடய இடத்தில் உட்கார்த்தி, நிறுத்தி வைக்கப்பட்டது. அந்தத் துணை நடிகைகளைப் பார்க்கையில் செந்திலுக்குத் தோன்றியது, இந்த மூஞ்சிகளவிட நம்மத் தங்கச்சி மூஞ்சி எவ்வளவோ பரவாயில்லயே என்று. ஏன், மேக்கப் போட்டால் மீனா, இந்தக் கதாநாயகியவிடக் கூட ஒரு ஆங்கிளில் அழகாயிருப்பாள்.

டைரக்டர் பிஸியாகிவிட்டார். இப்போது அவரை இடை மறிப்பது நாகரீகமில்ல என்பது செந்திலுக்குப் புரிந்தது. காலையில் வந்த உதவி டைரக்டரிடம் செந்தில் போனான்.

சார் நம்ம ஸிஷ்டர் ஷூட்டிங் பாக்க வந்துக்கீது சார் என்றான். அதுக்கென்ன என்றார் உடனே.

“நம்ம ஸிஷ்டர் காலேஜ்ல படிக்கிது சார்.”

“சரிப்பா, அதுக்கென்ன இப்ப?”

“இந்த எக்ஷட்ராவோட எக்ஷட்ராவா நம்ம ஸிஷ்டருக்கும் ஒரு சான்ஸ் குடுங்க சார்.”

“அது சரி, ஒன் எருமை மாட்டுக்குச் சான்ஸ் கெடச்சதே பெரிசு. இப்ப ஒன் ஸிஷ்டருக்கு வேற சான்ஸ் குடுக்கணுமாக்கும்!”

தங்கைக்கு சினிமா வாய்ப்பு மறுக்கப்பட்டது செந்திலுக்கு ரொம்ப ஏமாற்றமாய்ப் போய்விட்டது. தன்னுடய ஏமாற்றத்தை ஒரு முணுமுணுப்பாய் வெளிப்படுத்தினான்.

“அது சரி, காத்தால எருமை மாட்டைத் தேடிக்கினு நீ வந்த. இப்ப வேல ஆய்ப்போச்சுல்ல. நீ தெனாவட்டாத்தாம் பேசுவ.”

செந்திலின் முணுமுணுப்பு இன்னொரு உதவி டைரக்டரின் காதில் விழ, அவர் என்னவென்று விசாரிக்க, எருமை மாட்டின் கேமரா கோணத்த ரசித்துக் கொண்டிருந்த கேமராமேன் செந்திலின் சிபாரிசுக்கு வர, விஷயம் டைரக்டரின் காதுக்குப் போக, செந்திலைப் பக்கத்தில் கூப்பிட்டு, “ஒன்ஸிஷ்டருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமாப்பா” என்று கேட்டார் டைரக்டர்.

“சைக்கிள் இன்னா சார் சைக்கிள், நம்ப ஸிஷ்டர் எருமை மாடே ஓட்டும் சார்.”

“எருமை மாடு ஓட்றது சரி தம்பி, இன்னிக்கி எருமை மாடு ஓட்றதுக்கு நம்ம ஹீரோயின் இருக்காங்க. ஒன் ஸிஸ்டருக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா, அதச் சொல்லு.”

“தெரியும் சார்.”

மீனாட்சியின் வசம் ஒரு லேடீஸ் பைக் ஒப்படைக்கப்பட்டது.

“இந்தாம்மா, நீ சைக்கிள்ள ஏறி அந்தக் கடேசிலயிருந்து வர்ற. இங்க ஹீரோயின் எரும் மாட்டு மேலே வருவாங்க. எரும மாடு க்ராஸ் பண்றச்ச நீ சைக்கிள்ள பிரேக் புடிச்சி, கால ஊணி நின்னுக்கற. அவ்ளோதான்.”

மீனாட்சி சந்தோஷமாய் சைக்கிளை வாங்கிக் கொண்டாள். மீனாட்சியைவிட செந்திலுக்குத்தான் அதிக சந்தோஷம். தன்னுடய தங்கை பாதி நட்சத்திரம் ஆகிவிட்டாள் என்று புளகாங்கிதமடைந்தான்.

கதாநாயகி காரில் வந்து இறங்குகிற காட்சி படமாக்கப்பட்டது. பின்னால், எருமை மாட்டுச் சவாரிக் காட்சிக்கு ஒத்திகை பார்க்கப்பட்டது. செந்தில் மற்றும் எருமை மாட்டின் ஒத்துழைப்புடன் ஒத்திகை ஓக்கே. பிறகு உண்மையான டேக்.

கதாநாயகனும் மூன்று நண்பர்களும் கேமராவின் ஒரு மூலயில் சிரித்துக் கொண்டு நிற்க, துண நடிக நடிகைகள் தங்கள் ரோலுக்குத் தயாராயிருக்க, புத்தம்புது துண நடிகை மீனா, சைக்கிளோடு காத்திருக்க, காட்சிக்கான க்ளாப் அடிக்கப்பட்டது.

ஒத்திகையின் போது எருமையாய் ஒத்துழைத்த அருமைக்கு… மன்னிக்க… ஒத்திகையின் போது அருமையாய் ஒத்துழைத்த எருமைக்கு, க்ளாப் அடிக்கப்பட்டதும் மூடு கிளம்பிவிட்டது.

கதாநாயகியைச் சுமந்து கொண்டு எருமை வேகத்தில் கிளம்பின மாடு, திடீரென்று வேகமெடுத்துச் சீட்டா வேகத்தில் சிட்டாய்ப் பறந்தது. கிலி பிடித்துக் கதாநாயகி அலற, படப்பிடிப்புக்குழு பரபரப்படைய, எருமை க்ராஸிங்கிற்கு சைக்கிளில் காலூன்றி நின்ற மீனாட்சி, சுதாரித்துக் கொண்டு ஆக்க்ஷனில் இறங்கினாள்.

சைக்கிளை செம அழுத்து அழுத்தி, எருமை மாட்டைத் துரத்தினாள். கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறித் தலதெறிக்கத் தெருவில் ஓடிய எருமை மாட்டை, முக்கால் கிலோ மீட்டர் விரட்டிச் சென்று மடக்கிய மீனாட்சி, வெற்றிகரமாய்க் கதாநாயகியை மீட்டுக் கொண்டு வந்தாள்.

கதாநாயகி ஆரோகணித்துப் போன எருமையில் மீனாட்சியும், மீனாட்சியின் சைக்கிளில் கதாநாயகியுமாய், ஒரு ரசிகர் பட்டாளம் புடைசூழ ஒரு வழியாய் வந்து சேர்ந்தார்கள். முழுசாய்த் திரும்பி வந்த கதாநாயகியை எல்லோரும் மொய்த்துக்கொண்டு குசலம் விசாரித்தார்களேயொழிய, அவளை மீட்டு வருவதில் சாகசம் புரிந்த தன்னுடய தங்கையை யாருமே கண்டு கொள்ளவில்லை என்பது செந்திலுக்கு ரொம்ப வருத்தமாயிருந்தது.

எருமை மாடு ஒழுங்கீனமாய் நடந்து கொண்டதற்கு தன்னை யாரும் கடிந்து கொள்வார்களோ என்று யோசனயாயிருந்த செந்திலின் பக்கத்தில் வந்த கேமராமேன் தட்டிக் கொடுத்தார்.

“ஷாட் ஓக்கே தம்பி, ரொம்ப ரியலிஸ்ட்டிக்கா வந்திருக்கு. வீட்டுக்குப் போய் மாட்டுக்கு திருஷ்டி சுத்திப் போடு.”

ஷூட்டிங் முடிந்து, அங்கேயே எல்லாருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது. மட்டன் சிக்கன் வகையறாக்களை நெற்றி வரைக்கும் ஒரு பிடி பிடித்தான் செந்தில். அஞ்சு நட்சத்திர சாப்பாட்டை

ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த தங்கையைப் பார்க்க செந்திலுக்குப் பெருமையாயிருந்தது. என்ன மாதிரியொரு சாதனையை இன்றைக்கு நிகழ்த்தியிருக்கிறாள்!

ஒரு சினிமா நட்சத்திரத்துக்கு வேண்டிய எந்தத் தகுதி இவளிடம் இல்ல? இவளை ஒரு நட்சத்திரமாக்கிவிட முயற்சி செய்தால் என்ன? நம்ம ஸிஷ்டரை ஒரு இஷ்டார் ஆக்கிவிட முயற்சி மேற்கொண்டாலென்ன?

சாப்பிட்டு முடித்துவிட்டு, ஒரு மரத்தடியில் நாற்காலிகள் போட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த ப்ரடியூசர், டைரக்டர், கதாநாயகி, கதாநாயகியின் அம்மா அடங்கிய குழுவை மெதுவாய் சமீபித்தான் செந்தில்.

சார் என்றான் டைரக்டரை நெருங்கி. தலையை உயர்த்திப் பார்த்தார் டைரக்டர்.

“என்னப்பா, ஒன் எருமை மாட்டுக்கு ஷாட் முடிஞ்சிப் போச்சுப்பா. சாப்ட்டியா? பணந்தரச் சொல்றேன். வாங்கிட்டு நீ கெளம்பலாம். மேடம் தான் பாவம் பயந்துட்டாங்க.”

“சார் நம்ம ஸிஷ்டர்…” என்று இழுத்தான் செந்தில். அந்த இழுப்புக்கு டைரக்டர் ஒரு பதில் வைத்திருந்தார்.

“ஒன் ஸிஸ்டருக்கு எக்ஸ்ட்ரா ஒரு நூறு ரூவா தரச் சொல்லியிருக்கேம்ப்பா. மொத்தம் முன்னூறு ரூவா தருவாங்க. அஸிஸ்ட்டன்ட் டைரகடர்ட்ட வாங்கிக்க.”

“அதில்ல சார், நம்ம ஸிஸ்டருக்கு ஒரு சினிமா சான்ஸ்…”

“அதான் குடுத்தாச்சில்லப்பா.”

“அந்த சான்ஸ் இல்ல சார். ஈரோயின் சான்ஸ் சார்.”

செந்தில் சொல்லி வாயை மூடவும் கோரஸாய் அங்கேயொரு குபீர்ச் சிரிப்பலை எழுந்தது. அலையில் தூக்கலாய்த் தெரிந்தது கதாநாயகி நடிகையின் சிரிப்பு. செந்திலுக்கு அந்தக் கிண்டல்ச் சிரிப்பு சங்கடத்தைக் கொடுத்தாலும், அவன் மனந் தளர்ந்துவிடவில்ல.

தன்னுடய கோரிக்கையிலிருக்கிற நியாயத்தை அவன் டைரக்டரின் முன் வைத்தான். “சார், எங்க சேரிலயே காலேஜ்க்குப் போய்ப் படிக்கிறது நம்ம ஸிஷ்டர் ஒண்டிதான் சார்.”

“அது சரிப்பா, காலேஜ்க்குப் போய்ப் படிக்கிறது நடிகையாறதுக்கு ஒரு தகுதியா தம்பி? பாக்க செகப்பா, லட்சணமா இருந்தாத்தான மார்க்கெட்ல எடுபடும்!”

“இப்ப இருக்கற நடிகங்கள்ளாம் செகப்பாவா சார் இருக்காங்க?”

“நடிகன் ஆம்பள தம்பி. ஆம்பள கருப்பா இருக்கலாம், அசிங்கமா இருக்கலாம், தாடி வளத்துட்டு இருக்கலாம் அதையெல்லாம் ஜனங்க இப்ப ஏத்துக்கிட்டாங்க. ஆனா நடிகைன்னா செக்கச் செவேல்னு இருக்கணும், பளிச்னு இருக்கணும், சுண்டியிழுக்கறமாதிரி அழகா இருக்கணும்னுதான் இன்னும் ஜனங்க எதிர் பார்க்கறாங்க” என்று செந்திலுக்கு விளக்கிக் கொண்டே போன டைரக்டரை இடை மறித்தாள் கதாநாயகி.

“நீங்க என்ன சார் ரொம்ப ஸீரியஸ்ஸா இவனுக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டிருக்கீங்க” என்றவள், செந்திலை நோக்கி, “ஏம்ப்பா ஒம்ப்பேர் என்ன?” என்று அலட்சியமாய்க் கேட்டாள்.

அந்த நடிகை மேலே இவனுக்கு மரியாதை ஏதும் இல்லையானாலும், வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவளிடமும் ரெண்டு வார்த்தை சொல்லி வைப்போமே என்று நினப்பு ஓடியது.

“எம்ப்பேர் செந்தில் மேடம். நம்ம ஸிஷ்டர் பேர் மீனாச்சி. அதாவது மீனா. இப்ப மீனாங்கற பேர்ல மெய்யாலுமே ஒரு நடிகை இருக்கங்காட்டி, நம்ம ஸிஷ்டர் பேர மைனான்னு மாத்திக்கலாம் மேடம். ரசிகங்களுக்கு கன்பூசன் வேணாம்.”

திரும்பவும் ஒரு ஏளனச் சிரிப்பு சிரித்தாள் நடிகை. பிறகு இவனிடம் கேட்டாள், “செந்தில், நீ பசின்னு ஒரு படம் பாத்திருக்கியா?”

“ஓ, பாத்திருக்கேனே! சோபா நடிச்ச படம். மூணு தபா பாத்திருக்கேன்.” செந்தில் உற்சாகமாய்ச் சொன்னான்.

அந்த உற்சாகத்தின் உச்சி மண்டையில் நறுக்கென்று ஒரு குட்டு வைக்கிற மாதிரி அந்த நடிகை சொன்னாள். “அந்த பசி மாதிரி ஒரு சேரிக்கதையைப் படமா எடுக்கறச்ச ஒன் ஸிஷ்டருக்குச் சொல்லி விடுவாங்க, இப்ப நீ ஒன் ஸிஷ்டரையும் ஒன் எருமை மாட்டையும் இட்டுக்கினு ஒன் சேரிக்கிப் போய்ச் சேரு.”

செந்திலுக்கு மூஞ்சி செத்து விட்டது. இந்த நேரம் பார்த்தா மீனாட்சி அங்கே வந்து சேர வேண்டும்! மீனாட்சியின் முன்னிலையில் இந்த நடிகை இப்படி அவமானகரமாய்ப் பேசி விட்டாளே என்று துயரமாயிருந்தது. இவர்கள் கொடுக்கிற முன்னூறு ரூபாயக் கூட நிராகரித்து விடலாமா என்று யோசித்தான்.

வேண்டாம். இந்த நடிகையைத் தவிர மற்றவர்களெல்லாம் இங்கே நல்லவர்களாய்த்தான் தெரிகிறார்கள். டைரக்டர் நல்லவராய்த்தான் இருக்கிறார். அந்தக் கேமரா மேன் கூட.

இந்த நடிகை இவளிடம் அநாகரிகமாய் நடந்து கொண்டதற்காக இவன் மற்றவர்களிடம் நாகரீகக் குறைவாய் நடந்து கொள்ளக் கூடாது. பணத்தைப் பெற்றுக் கொண்டு நடந்தான், மீனாட்சி யோடும் எருமை மாட்டோடும்.

தங்கையின் முகத்தைப் பார்க்கக் கூச்சமாயிருந்தது. அவளின் கண்களை சந்திக்காமலேயே அவளிடம் சொன்னான், பஸ்ஸில் வீட்டுக்குப் போய்விடும்படியும், தான் மாட்டோடு நடந்து வருவதாயும்.

இடைவேளாண்தார். நானும் நடந்தே வேணாண்ணா, நானும் நடந்தே வறேன். பேசிக்கினே போவலாம் என்று அவள் அவனுக்கு இணயாய் நடந்தாள்.

சில நிமிஷங்கள் கழித்து அண்ணனிடம் கேட்டாள். “என்னண்ணா , பேசிக்கினே போவலாம்னுதான ஒன்னோட வாறேன். நீ என்னத்தயோ தொலச்சிட்ட மாதிரி தல குனிஞ்சிக்கினே வாறியே?”

தங்கையை செந்தில் ஏறெடுத்துப் பார்த்தான். பிறகு மனசிலிருந்த பாரத்த இறக்கி வைத்தான்.

“அந்தத் திமிர்ப்புடிச்ச சினிமாக்காரி இன்னா ராங்கா பேசிப்புட்டா ஸிஷ்டர்! எனக்கு வாற கோவத்துக்கு…”

“என்ன, என்ன செய்யப் போற ஓங் கோவத்துக்கு?”

“நீ வேணா பார் ஸிஷ்டர், அந்த டைரக்டர் நல்ல மனுஷன்தான், அந்த ஆள நா திரும்பவும் போய்ப் பாக்கத் தான் போறேன்.”

“பாத்து? திரும்பவும் எனக்கு சினிமா சான்ஸ் கேக்கப் போறியாக்கும்? என்ன சினிமாவுல சேத்துவுடுண்ணான்னு நா ஒன்னக் கேட்டனா? ஒனக்கு எதுக்கு வேண்டாத வேலை?”

“இந்த தபா ஒனக்கு சான்ஸ் கேக்கப் போறதில்ல ஸிஷ்டர். சான்ஸ் எனக்கு.”

“ஹ! ஒனக்கா!”

“ஆமா எனக்குத்தான். கதாநாயகன் சான்ஸ் இல்ல. வில்லன் சான்ஸ். கதாநாயகியா இந்த திமிர்ப் புடிச்ச நடிகையையே போடச் சொல்லுவேன். படத்துல கற்பழிக்கிற சீன் ஒண்ணு வைக்கச் சொல்லுவேன். கற்பழிக்கிற சீன்ல இந்தத் திமிர்ப்புடிச்சவளைக் கதறக் கதறக் கற்ப*. அவ அலற அலறக் கற்ப*. அவ திமிரு அடங்கற வரைக்கும் கற்ப*.”

செந்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசப் பேச மீனாட்சிக்குச் சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது.

வீதியென்றும் பாராமல் விழுந்து விழுந்து சிரித்தாள். அண்ணனின் தோள்களைப் பற்றிக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். சுதந்திரமாய்ச் சத்தம் போட்டுச் சிரித்தாள்.

மது விழுந்து சிரித்தாள். அண்ணனின் தோள்களைப் பற்றிக் என்னமோ ஏதோ என்று திரும்பிப் பார்த்தது எருமை மாடு.

– க்ருஹஷோபா, ஜனவரி 2005.

– ஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் (பகுதி-1). முதற் பதிப்பு: டிசம்பர் 2012, நிலாச்சாரல் லிமிடெட், சென்னை.

0 thoughts on “பொங்கல் ரிலீஸ்

  1. தயவு செய்து கதையை படித்தவுடன் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அல்லது குறைந்தபட்சம் rating கொடுத்து உதவுங்கள். என் கதையை மேம்படுத்த உதவியாய் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *