தெப்போ-76






(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-16
அத்தியாயம்-13
பொழுது விடிந்தால் தேரோட்டம். கின்ஸா வீதிகள் நான்கும் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தன.

முதல் நாள் இரவே தேரோடப் போகும் அந்த நாலு தெருக்களி லும் வண்டிப் போக்குவரத்தைத் தடை செய்து விட்டிருந்த னர். டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களுக்கு விடுமுறை அளித்து விட்டனர். “தெப்போ சின்னம்’ அணிந்த தொண்டர்களும் ‘I Speak English’ என்ற எழுத்துக்களைச் சட்டையில் அணிந்திருந்த பெண் கய்டுகளும் தெருவெங்கும் உலாவிக் கொண்டிருந்தார்கள்.
மெயின் ஸ்ட்ரீட் முனையில் நிறுத்தப்பட்டிருந்த தேரைச் சுற்றிலும் பலத்த பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது. தொம்பைகள் கட்டி முடிந்தால் தேர் வேலை முழுதும் முடிந்த மாதிரிதான்!
சிலர் தண்ணீர் இறைக்கும் மோட்டார் வண்டிகளைக் ‘கொண்டு வந்து தெருவெங்கும் கழுவி விட்டு ஏற்கெனவே சுத்தமாயிருந்த வீதிகளை மேலும் சுத்தப்படுத்தி விட்டுப் போனார்கள். அதைத் தொடர்ந்து சாந்தா நாராயணன் குழுவினர் இரவு முழுவதும் அந்த வீதிகளில் வண்ணக் கோலங்களைப் போட்டு முடித்தனர்.
டெலிவிஷன்காரர்களுக்கும், வெளிநாட்டுப் பத்தி சிகை போட்டோக்காரர்களுக்கும் வசதியாக அங்கங்கே டங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார் யோஷினாரி.
INAUGURATION CEREMONY
Programme
Time: 8-30 A.M.
Date: July 18, 1976
Place: Ginza
- 8-30 A.M. Nadaswaram by Namagiripettai Krishnan, Thavil-Valayapatti
- 9-00 Entrance of Their Majesties, the Emperor and Empress, Their Imperial Highnesses, the Crown Prince and Princess and other members of the Imperial Family.
- 9-05 Prayer by: Sirkazhi Govindarajan
- 9-08 Singing of “KIMIGAYO”, the Japanese National anthem.
- 9-10 Raising of the Flag of Japan.
- 9-12 Raising of the Flag of Theppo-76.
- 9-14 Welcome Address by the President of the Japan Association for Theppo-76
- 9-26 Address and Release of Theppo-76 stamp by the Prime Minister of Japan
- 9-38 Inauguration of THEPPO-76 by Kalaignar M. Karunanidhi.
- 9-50 Fanfare, Athirvedi, fireworks, balloons.
- 10.00 Vote of thanks by Japan Sastry
- 10-05 Vadampidithal and departure of Their Majesties, the Emperor and Em- press, Their Highnesses, the Crown Prince and Princess and other mem- bers of the Imperial Family.
புகழ்பெற்ற மிக்கிமாட்டோ அலுவலக வாசலில் முத்துப் பல்லக்கு ஜோடனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேருக்கு முன்னால் பவனி வரப்போகும் அந்தப் பல்லக் கைச் சுற்றிப் பெரும் கூட்டம் சூழ்ந்திருந்தது.
பஞ்சுவும் கோபால் ராவும் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தார்கள்.
“பாவம் பஞ்சு! இன்றெல்லாம் சாப்பிடவில்லை. ‘க்ளீன் ஃபாஸ்ட்” என்றார் அம்மாஞ்சி.
“அப்படீன்னா?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“சுத்தப் பட்டினி ன்று அர்த்தம்” என்றார் அம்மாஞ்சி.
“எப்பவுமே பஞ்சு ஸார் ரொம்ப க்ளீன். அத்தோடு இப்ப வேகமும் சேர்ந்து விட்டது. அதனாலே சுத்தமாகவும் வேகமாகவும் இருக்கிறார் என்பதைத்தான் க்ளீன் ஃபாஸ்ட்’ என்று சொன்னீர்களோ என எண்ணிக் கொண்டேன்'” என்றார் சாம்பசிவம்.
தேருக்குப் பக்கத்திலேயே மேடை அமைத்து ஷாமி யானா போடுவதில் முனைந்திருந்தார் கோபால் ராவ், சக்கர வர்த்தி குடும்பத்தினர், ஜப்பான் தேசத்துப் பிரதமர், குறளோவியம் ஆசிரியர் கலைஞர், மற்ற முக்கிய விருந் தினர்கள் எல்லோருடைய பெயர்களையும் எழுதி, யார் யார் எங்கெங்கே உட்காருவது என்பதைத் தீர்மானித்து. அவ் வளவு பேருக்கும் நாற்காலிகள் போட்டு அவரவர்களுக் குரிய ஆசனத்தில் அவரவர் பெயர்களையும் ஒட்டி விட்டார் கோபால் ராவ்.
பூமாலைகளை யார் எடுத்துக் கொடுக்க வேண்டும், யார் யாருக்கு யார் யார் மாலை போட வேண்டும் என்பது போன்ற நுணுக்கமான விவரங்களைக்கூட யோசித்து வைத்திருந்தார் அவர்.
வி.ஐ.பி-க்களும் விசேஷ விருந்தினர்களும் உட்காரு வதற்கு ஷாமியானாவுக்குப் பக்கத்திலேயே இடம் போடப்பட்டிருந்தது. தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும் சக்கர வர்த்தி அவர்களைத் தேருக்கு முன்னால் அழைத்துச் சென்று சூரைக்காய் உடைப்பதற்கான வழிவகைகளைச் செய்து வைக்கவும் தவறவில்லை அவர்.
“டோக்கியோ நகரையே தமிழர்கள் குத்தகைக்கு எடுத்த மாதிரி இருக்கு” என்றார் சாம்பசிவம்.
“கூட்டம்தான் தாங்காது போலிருக்கு” என்றார் அம்மாஞ்சி.
“ஓட்டல்களில் இடமில்லாமல் பல பேர் ஸ்டேஷன் களிலும் பார்க்குகளிலும் படுத்துத் தூங்கினார்களாம், பாவம்!’என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“நம்மவர்கள் எங்கே போனாலும் வெற்றிலையைப் போட்டுத் துப்பிவிடுவார்கள். அதை நினைத்தால்தான், சங்கடமாயிருக்கு” என்றார் சாம்பசிவம்.
“வெற்றிலை, புகையிலை, வாழைப்பழம், மாம்பழம் இவற்றை யார் கொண்டு வந்தாலும் அனுமதிக்க வேண்டா மென்று பஞ்சு ஸார் ஏர்போர்ட்டில் சொல்லி வைத்துவிட்டாராம். தொல்லை விட்டது!’ என்றார் அம்மாஞ்சி.
“கலைஞர் எங்கே தங்கியிருக்கிறாராம்?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“அரண்மனை கஸ்ட் ஹவுஸில் தான். இனாகுரேஷன் ஸ்பீச்சைக் கூட எழுதி அச்சிட்டுக் கொண்டு வந்து விட்டாராமே” என்றார் அம்மாஞ்சி.
“தேருக்கு நாலு புறத்திலும் நாலு குறளை எழுதி வைத்தாயிற்றா?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“நாலு குறளும் நியான் ஸைன்லே ஜம்மென்று ஜொலித்துக் கொண்டிருக்கிறதே பார்க்கவில்லையா?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“தேரும் வள்ளுவர் சிலையும் அற்புதமாக அமைஞ்சு போச்சு” என்று பெருமைப்பட்டார் அம்மாஞ்சி.
“முத்துப் பல்லக்கையும் நடராஜர் விக்கிரகத்தையும் இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம்’ என்றார் சாம்பசிவ சாஸ்திரி.
“அவ்வளவும் அசல் முத்துக்கள்! பல்லக்கு ரொம்பக் காஸ்ட்லி” என்றார் அம்மாஞ்சி.
ஜப்பானில் முத்துக்கு என்ன பஞ்சம்? நமக்கு தர்பைப் புல் மாதிரி” என்றார் சாம்பசிவம்.
“முத்துக்களின் அழகு வேறு எதற்கும் வராது. அடக்கமா, அழகா, அமைதியா அளவோடு ஒளி வீசு வதைப் பார்க்கும்போது நிறைகுடமாக, பெருந்தன்மை யாக உள்ள பெரிய மனிதர்களைப் பார்க்கிற மாதிரி இருக் கிறது” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
கூட்டத்தையும் நெரிசலையும் எப்படிச் சமாளிக்கப் போகிறார்களோ? அதுதான் கவலையாயிருக்கு என்றார் அம்மாஞ்சி.
“எக்ஸ்போ நடந்தபோதும், ஒலிம்பிக் நடந்த போதும் கூட முதலில் இப்படித்தான் பயந்தார்களாம். கடைசியில் எல்லாமே கச்சிதமாக நடந்து போச்சாம், அது மாதிரி இதுவும் நடந்து விடும். கவலை விடும். கவலையை விடுங்கோ. எல்லாவற்றையும் கம்ப்யூட்டரிலேயே கண்ட்ரோல் செய் யக்கூடிய கண்டரியாச்சே இது” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
மறு நாள் காலை குறித்த நேரத்தில் விழா ஆரம்பமாகி விட்டது. மாடிகள், மொட்டை மாடிகள் எங்கு பார்த்தாலும் ஒரே தலை மயமாகத் தெரிந்தன.
தமிழர்களும், ஜப்பானியரும் வெளி நாட்டவரும் கங்கையும், யமுனையும் சரஸ்வதியும் கலக்கும் திரிவேணி போல் கின்ஸாவில் சங்கமம் ஆகியிருந்தார்கள்.
மணி எட்டரைக்கு நாமகாப்பேட்டை நாதஸ்வரத் துடன் தொடங்கிய விழா ஜப்பான் சாஸ்திரியின் நன்றி உரை முடியும்வரை எல்லாமே நிகழ்ச்சி நிரலில் கண்டபடி டக்டக்கென்று குறித்த நேரத்தில் நடந்து முடிந்தன.
சிவப்பு வட்டச் சூரியன் (ஹி-னோ மாரு) உருவத்தைச் சின்னமாகக் கொண்ட தேசியக் கொடியை ஏற்றி வைத்த சக்கரவர்த்தி ஹிராஹிடோ அவர்கள் சுருக்கமாக இரண் டொரு வார்த்தைகளே பேசினார்:
“இந்தத் தொப்போ – 76-விழாவை டோக்கியோவில் ஏற்பாடு செய்தவர்களைப் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் கலைப்பொக்கிஷமாகத் திகழும் திருவாரூர்த் தேரையும், தமிழ்மறை என்று போற்றப்படும் திருக்குறளை இயற்றிய வள்ளுவரின் சிலையையும் இங்கேயே செய்து இங்கேயே விழாவும் நடத்திக் காட்ட வந்துள்ள உங்கள் அனைவருக் கும் என் வாழ்த்துக்கள்.
“சிவப்பு வட்டச் சூரியன் சின்னம் இந்த நாட்டின் மிகப் பழமையான சின்னம் என்பதை நீங்கள் அறிவீர்கள் கீழ்த்திசை நாடுகளின் கீழ்க்கோடியிலுள்ள ஜப்பான் நாட் டில் உதிக்கும் சூரியன்தான் உங்கள் தேசத்துக்கு வரு. கிறான். ஆகவே உங்களோடு உறவுக்கு வருவது, அதாவது சூரியன் மூலமாக உறவுக்குக் கைகொடுப்பது நாங்கள் தான். பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இந்த நாட்டின் சின்னமாகத் திகழ்ந்துவரும் சிவப்பு வட்டச் சூரியன் உருவத்தைத் தேசியக் கொடியில் பதித்து அதிகார பூர்வ மாகப் பறக்கவிட்டது 1870-ல்தான்.
“பின்னர் 1872-ல் அதையே தேசியக் கொடியாக்கி ஜப்பானில் முதல் முதலாக ரயில் ஓடத் தொடங்கியபோது, அதாவது முதல் ரயிலோட்டத்தின்போது பறக்க விட்ட பெருமை மெய்ஜி சக்கரவர்த்தியைச் சேர்ந்தது. முதலில் ரயிலோட்டத்தில் பறக்க விடப்பட்ட எங்கள் கொடியை ஏறத்தாழ நூறாண்டுகளுக்குப் பிறகு இன்று இங்கே தேரோட்டத்தில் பறக்க விடுகிறோம். இந்தப் பெருமை எனக்குக் கிடைத்திருப்பதை எண்ணிப் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
“அடுத்தாற்போல் இங்கே இந்த விழாவைத் தொடங்கி வைக்க வந்துள்ள கலைஞர் கருணாநிதி அவர்களையும், திருவாரூரில் பல ஆண்டுகளாகத் தேரோட்டம் நடத்தி வரும் திரு வி எஸ். டிா அவர்களையும் வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
பிறகு ஜப்பானியப் பிரதமர் (தெப்போ-76′ தபால் தலையை வெளியிட்டுப் பேசி முடிந்ததும் விழாவைத் தொடங்கி வைக்கும்படி கலைஞர் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
கலைஞரின் வலது தோளில் போட்டிருந்த நீண்ட அங்க வஸ்திரம் முதுகுப் பக்கமாகப் போய் இடது கை மணிக் கட்டு வழியாக மேலே வந்து இடது கையில் முடிந்திருப் பதை சக்கரவர்த்தி அவர்கள் சற்று நேரம் கண்கொட்டா மல் பார்த்துக் கொண்டிருந்தார்.
“தமிழ் நாட்டில் எல்லோரும் இப்படித்தான் அங்க வஸ்திரம் போடுவார்களா?” என்று அவர் பஞ்சுவைப் பார்த்துக் கேட்டார்.
‘”ல்லை; ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி. வள்ளுவர் ஒரு ஸ்டைல், வ.உ.சி. ஒரு ஸ்டைல். காமராஜ், ராஜாஜி ஒவ்வொருத்தரும் ஒரு ஸ்டைல்” என்றான் பஞ்சு.
கலைஞர் இனிய தமிழில் எழுதி வைத்திருந்த சொற் பொழிவை எடுத்துப் படிக்கத் தொடங்கினார்.
“திருவாரூரில் நெடுநாட்கள் ஓடாமலிருந்த தேரை, ஓட்டத் தொடங்கிய போ து அந்த விழா நிகழ்ச்சிக்கு. என்னை வந்து கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தி அழைத் தார்கள். நான் அழைப்பை ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் இருப்பதாக அறிவித்து விட்டேன். ஆனால் இப் போது ஜப்பானில் நடைபெறுகிற தேரோட்ட விழாவுக்கு என்னை அழைத்தவுடன் ஒத்துக்கொண்டதற்குக் காரணம், இது ஒரு கற்பனைத் தேர் என்பதுதான்! நண்பர் சாவி அவர்களின் எழுத்தின் வாயிலாக நான் ஜப்பான் நாட் டைக் கற்பனையில் காணுகிறேன். இந்த நாட்டில் உள்ள ஒரு நன்றியுள்ள நாயின் சிலை பற்றி அவர் தீட்டியுள்ள உருக்கமான வாசகங்கள் என் உள்ளத்தைத் தொட்டன. தமிழ்நாட்டில் உள்ள சில மனிதர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய நாயாகும் அது!
வாஷிங்டனில் திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்தி முடித்த குழுவினர், ஜப்பானில் தேர் இழுக்கும் விழாவை யும் சீர்பெற நடத்திடுவர் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
‘தேர்’ என்பது ‘தேர்ந்தெடு’ என்ற பொருளிலும் பயன்படுத்தப்படும் சொல்லாகும். தேர்’ ஓட்டிட ஜப்பானைத் தேர்ந்தெடுத்துள்ளனர். தேரை இழுத்தால் மட்டும் போதாது! பின்னாலிருந்து உலுக்கு மரம் போட்டுத் தள்ளவும் வேண்டும்! ‘தேர் தள்ளுதல்’ என்றும் கூறுவ துண்டு! தேர் தள்ளுதல்’ என்பதிலிருந்துதான் தேர்தல் வந்தது என்று யாராவது வேடிக்கையாகச் சொன்னால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல! தேருக்கும் முட்டுக் கட்டை உண்டு! தேர்தலுக்கும் முட்டுக்கட்டை உண்டு! என்ன பொருத்தம் பாருங்கள். தேருக்குப் போடும் முட்டுக் கட்டை அதை ஒழுங்காக ஓடவிட! ஆனால் தேர்தலுக்குப் போடும் முட்டுக்கட்டை? தை நான் கேள்வியாகவே விட்டு விடுகிறேன்.
தமிழ்நாட்டில் பூம்புகாரையும், வள்ளுவர் கோட்டத் தையும் உருவாக்குவதில் ஒத்துழைத்துக் கலைப்பணி புரிந்த சிற்பிகள் ஜப்பானில் தங்கி, தேருக்கான வேலைகளையும் திருவள்ளுவர் சிலை உருவாக்கும் தொண்டினையும் நிறை வேற்றியிருப்பது சாவி அவர்கள் திறமையினாலேதான் என்று கூறினால் மிகையாகாது.
நான் மாணவனாக இருந்தபோது, திருவாரூர்த் தேரோட்டத்தைப் பார்த்துவிட்டு ஒரு பாட்டு எழுதி வெளி யிட்டேன், அன்றைய ‘முரசொலி’ துண்டுத் தாளில்!
‘ஏரோட்டும் மக்கள் எலாம்
ஏங்கித் தவிக்கையிலே
தேரோட்டம் ஏன் உனக்குத் தியாகராஜா!’
என்பதே அந்தப் பாட்டு!
பின்னர், நான் முதலமைச்சரான பிறகு திருவாரூரில் தேர் ஓடியதைச் சுட்டிக் காட்டி, சட்டசபையில் ஓர் உறும்பினர் என் பழைய பாடலைக் குறிப்பிட்டுக் கேள்விக்கணை தொடுத்தார்!
‘அப்போது ஏரோட்டும் மக்கள் ஏங்கித் தவித்தனர்! அதனால் தேரோட்டம் எதற்கு என்று கேட்டேன். இப்போது இந்த ஆட்சியில் ஏரோட்டும் மக்கள் ஏங்கித் தவிக்க வில்லை. எனவே, ‘தேரோட்டம் எதற்கு?’ என்று நான் கேட்கவில்லை’ என்று நான் சட்டசபையில் பதில் அளித்தேன்.
ஜப்பானில் தேரோட்டுகிற குழுவினரை நான் வாழ்த் திப் பாராட்டுகிறேன். இந்தக் குழுவினருக்கு ஒரு வேண்டுகோள்!
அமெரிக்க வாஷிங்டனில் திருமணம் நடத்திக் காட்டினீர்கள் ! மகிழ்ச்சி!
இன்று ஜப்பானில் தேர் ஓட்டுகிறீர்கள்! மிக்க… மகிழ்ச்சி!
நமது தமிழ்நாட்டுச் சிறப்புக்கள், தொன்மைக் காலக் கலைகள் அனைத்தையும் பல்வேறு நாடுகளுக்குக் கொண்டு சென்று நமது பெருமையை வெளிப்படுத்துங்கள். வரவேற்கிறேன்.
புலி வேடம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், கப்பரை, கிராமியப் பாடல், வில்லுப்பாட்டு, பரதம் – இப்படி அனைத்துச் சிறப்பையும் வெளிநாடு களுக்கு எடுத்துச் செல்லுங்கள்! ஆனால் ஒன்று-காவடி மட்டும் எங்கேயும் எடுத்துச் செல்ல வேண்டாம்! அதை வெளிநாட்டார் வேண்டுமானால் இங்கு வந்து பார்த்து மகிழட்டும் என்று கூறி இந்தக் கற்பனைத் தேரை, கற்பனை வீதிகளில், கற்பனையாக ஓடவிடும் கற்பனை விழாவை, கற்பனையாகத் தொடங்கி வைத்து, கற்பனையாக விடை பெற்றுக்கொள்கிறேன்! வாழ்க கற்பனைச் சுரங்கம் சாவி!”
கலைஞர் உரை முடிந்தபோது எழுந்த கர ஒலி வானுல கில் உள்ள வள்ளுவர் காதுக்கே எட்டியிருக்கும். நிகழ்ச்சிகள் முடிந்த உடன் திரு வி. எஸ்.டி. அவர்கள் எல்லோ ரையும் தேரடிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே சாஸ்திரிகள் மூவரும் தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தித் தேருக்குப் பூஜை செய்தார்கள். அது முடிந்ததும், வி. எஸ்.டி. முக்கியமானவர்களை ஒவ்வொரு வராக அழைத்து ஆளுக்கொரு தேங்காயைக் கையில் கொடுத்து சக்கரத்தின் மீது சூரைக்காய் உடைக்கச் சொன்னார்.
“முதலில் நீங்க உடையுங்க. அதைப் பார்த்து சக்கர வர்த்தியும் உடைப்பார். அப்புறம் எல்லோரும் உடைப்பார்கள்” என்றான் பஞ்சு.
அப்படியே, முதல் சூரைக்காயை திரு வி. எஸ். டி. உடைத்துக் காட்டினார். தொடர்ந்து சக்கரவர்த்தியும், அவரது குடும்பத்தினரும், பிரதம மந்திரியும் மற்றவர்களும் ஒருவர்பின் ஒருவராய் வந்து உடைத்துத் தீர்த்தார்கள்.
அம்மாஞ்சி ஓடிப்போய் வெள்ளைப் பூசனிக்காய்களை எடுத்து வந்து நாலு சக்கரங்களுக்கும் அடியில் திணித்தார்.
“அந்தக் காய்களை எதற்கு சக்கரத்தின் அடியில் வைக்கிறார்கள்?” என்று கேட்டார் சக்கரவர்த்தி.
“அப்போதுதான் தேர் நகரும்போது அந்த நாலு காய்களையும் நசுக்கிவிடும்'” என்றார் சாம்பசிவும்.
“அந்தக் காய்களை நசுக்குவதற்கு இவ்வளவு பெரிய தேர் வேண்டுமா? ஒரு ஆள் போதாதா?” என்று கேட்டார் சக்கரவர்த்தி.
“தமிழ்நாட்டில் இதைத் திருஷ்டிப் பரிகாரம் என்பார்கள்” என்றார் அம்மாஞ்சி.
‘இதெல்லாம் மூடநம்பிக்கை” என்று எண்ணிக் கொண்டார் கலைஞர். அதை ஊகித்தவர் போல், “இம்மாதிரி மூட நம்பிக்கைகள் ஜப்பான் நாட்டிலும் உண்டு” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“சரி, தேரை நகர்த்த ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டார் திரு வி.எஸ்.டி.
“ஓ ஆரம்பிக்கலாமே” என்று தலையசைத்து தேர் நகரப் போவதை ஆவலோடு எதிர்பார்த்து நின்றார் சக்கரவர்த்தி.
“சக்கரவர்த்தி அவர்களும் வடம் பிடித்து இழுக்க வேண்டும்” என்றார் வி. எஸ்.டி.
இதற்குள் மேடையிலிருந்து ஏணி வழியாகத் தேர் மீது போய் அமர்ந்து கொண்ட நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் தமது வாத்தியத்தை எடுத்து மல்லாரி ராக ஆலாபனை செய்யத் தொடங்கினார். அடுத்த கணம் கின்ஸா ஏரியாவே நாத வெள்ளத்தில் மூழ்கியது.
அதே சமயம் அதிர்வேட்டுகளும் தாரைகளும் தப்பட்டை களும் எக்காளமிட்டன. ஆங்காங்கே நின்று கொண்டிருந்த தேர்த் தொண்டர்கள் வடம் பிடித்துக் கொண்டிருக்கிறவர் களுக்குப் பச்சைக் கொடி காட்டினார்கள் அதைக் கண்ட தும், சக்கரவர்த்தியுடன் சேர்ந்து எல்லோரும் வடம் பிடித்து இழுக்கத் தொடங்கினர். பின்னாலிருந்து சிலர் உலுக்கு மரம் போட்டுத் தேரை நகர்த்துவதற்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். தேருக்குப் பின்னால் நின்ற யானைகள் வேறு தேரை முட்டி மோதித் தள்ளிக் கொண் டிருந்தன. முட்டுக்கட்டை போடுகிறவர்கள் தங்கள் திருப் பணியைச் செய்வதற்கான சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
எல்லோரும் சேர்ந்து ஒருமுகமாக இழுத்தபோது தேர் மெதுவாக நகரத் தொடங்கியது. அதைக் கண்ட மக்க ளிடையே பரவசமான பரபரப்பும் மகிழ்ச்சி ஆரவாரமும் உண்டாயின அடுத்த நிமிஷமே யானை போல் ஆடி அசைந்து கம்பீரமாக ஓடத் தொடங்கிய தேரைக் கண்ட போது மக்களின் உற்சாகம் கரை புரண்டுவிட்டது! அதன் அறிகுறியாக பலூன்கள் பறக்க விட்டார்கள். ஊது குழல் எடுத்து ஊதினார்கள். ஜப்பானியர் சிலர் இட நெருக்கடி காரணமாகக் குழந்தைகளைத் தங்கள் தோள் மீது உட்கார வைத்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டு கமர்கட், கலர் மிட்டாய், அரிசிப் பொரி, பட்டாணிக் கடலையெல்லாம் கூட கின்ஸா வீதிகளுக்கு வந்திருந்தன. ஆனால் கமர் கட்டையும் கலர் மிட்டாய்களையும் மொய்ப்பதற்கு ஈக்களைத் தான் காணவில்லை!
“தெரிந்திருந்தால் தமிழ் நாட்டிலிருந்து ஈக்களையும் ஒரு டப்பாவில் பிடித்துப் போட்டு எடுத்து வரச்சொல்லியிருக்கலாம்” என்றார் அம்மாஞ்சி.
அத்தியாயம்-14
கின்ஸாவிலுள்ள மிக்கிமாட்டோ, மட்ஸுஜகாயா, மிட்ஸுகோஷி போன்ற பெரிய பெரிய கட்டடங்கள் அவ்வளவையும் வெளிநாட்டு வி.ஐ.பி.க்கள் உட்கார்ந்து பார்ப்பதற்காக ‘ரிஸர்வ்’ செய்திருந்தார்கள்.
கிமோனாக்கள் அணிந்த ஜப்பானியப் பெண்கள் சாரி சாரியாக கின்ஸாவை நோக்கி வருவது, கமர்கட், கலர் மிட்டாய், கொட்டாங்கச்சி வாத்திய விற்பனை, அதிர் வேட்டுப் புகை, யானைகள் தேரை முட்டித் தள்ளுவது, ஜப்பான் சிறுவர்கள் கையில் மிட்டாய் ரிஸ்ட்வாட்ச் கட்டிக் கொள்வது போன்ற வேடிக்கைகளை டெலிவிஷனில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர் கின்ஸாவுக்கு வர முடியாத ஜப்பானிய மக்கள்.
சாம்பசிவ சாஸ்திரி, ஜப்பான் சாஸ்திரி, அம்மாஞ்சி வாத்தியார், கோபால் ராவ் ஆகிய நால்வரும் தேர் மீது ஏறித் திசைக்கு ஒருவராக நின்று கொண்டனர்.
தேருக்குக் கீழே நடந்து கொண்டிருந்த திரு வி.எஸ். டி.தேரோட்டம் தடங்கலின்றி ஒழுங்காக நடைபெறுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். அவ்வப்போது அவர் கைகளை உயர்த்தி வடம் இழுப்பவர்களை ஊக்கி உற்சாகப் படுத்துவதும், தேர் நகராத நேரங்களில் தமது இரு ரு கை களையும் கோத்துத் தலைக்கு மேல் தாங்கி நிற்பதும் அவரு டைய வழக்கம் என்பது அவரை அறிந்தவர்களுக்குத் தெரிந்த விஷயம்!
தேரின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜப்பான் சாஸ்திரிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
“தேரும் தேர் இழுப்பவர்களும் இருந்துவிட்டால் மட்டும் தேர் நகர்ந்து விடாது. வி.எஸ்.டி.யைப் போன்ற உண்மையான பக்தர் ஒருவர் பக்கத்தில் நின்று இயக்கினால் தான் தேரோட்டம் சரியாக நடைபெறும்” என்றார் கோபால் ராவ்.
ஜப்பானியரும் தமிழர்களும் ஒருமுகமாகச் சேர்ந்து இழுக்கும் போது இரண்டு நாட்டுக் கலாசாரங்களும் இணைந்து உறவாடுவது போல் இருந்தது.
திடீரென்று “என் தோள்கள் பூரிக்கின்றன!” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“எதற்கு?…” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“இந்த நாட்டில் வள்ளுவருக்கு இப்படி ஒரு பெருமை நடைபெறுவதைக் காணும் எந்தத் தமிழனுக்குத்தான் தோள் பூரிக்காது?” என்று திருப்பிக் கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
நாமகிரிப்பேட்டை கரகரப்பிரியாவை சவிஸ்தாரமாக ஆலாபனை செய்து முடித்துவிட்டு ‘சக்கனி ராஜு’ என்று தாடங்கு முன் தவில் வாசிப்பவருக்குச் சிறிது சந்தர்ப்பம் காடுத்தார். அவ்வளவுதான்; வலையப்பட்டி தம் வாசிப் பின் மூலம் ஊரையே வளைத்து விட்டார். அன்றைய அவருடைய வாசிப்பில் ஒரு ஆவேசமே இருந்தது. பின்னர் நாமகிரிப்பேட்டை ‘சக்கனிராஜ…’ என்று தொடங்கிய தும், ‘பலே, சக்கைப்போடு ராஜா!” என்று பாராட்டினார் ஜப்பான் சாஸ்திரி.
கோபால் ராவின் கண்கள் ஆனந்தக் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தன.
“முப்பது வருஷத்துக்கு முன்னால் ராஜரத்னம் பிள்ளை வாசிப்பைக் கேட்டிருக்கிறேன். இப்போது மீண்டும் அதைக் கேட்கிறேன்” என்றார் அவர்.
தேருக்கு முன்னும் பின்னும் பொய்க்கால் குதிரை, புலிவேடம் போன்ற தமிழ்நாட்டின் பழமையான கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள்
“தமிழ் நாட்டின் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் இப்படி ஒரு பெருமை எந்த நாட்டிலுமே நடந்ததில்லை” என்று கூறி மகிழ்ந்தார் கோபால் ராவ்.
மாடிகளிலிருந்து பைனாகுலர் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கர்களும் மற்ற அயல் நாட்டினரும் தூரத்தில் தேர் வருவதைக் கண்டு விட்டு, “THERE THERE” என்று உற்சாகத்தோடு குரல் கொடுத்தனர்.
அவர்கள் “there there’ என்று கூறியது ‘தேர் தேர்” என் று சொல்வது போலிருந்தது சுற்றியிருந்த தமிழர்களுக்கு!
தேர் மீது நின்று கொண்டிருந்த அம்மாஞ்சி வாத்தி யார் தமது பைனாகுலர் வழியாகப் பஞ்சு இருக்குமிடத்தைத் தேடிப் பார்த்தார். கீழே தேருக்கடியில் நின்றுகொண் ருந்த பஞ்சு இளநீர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.
அம்மாஞ்சி வாத்தியாருக்கு தாகம் தாங்கவில்லை.
“பஞ்சு! பஞ்சு! எனக்கு ஒரு இளநீர்” என்று தேர் மீது நின்றபடியே கத்தினார் அவர்.
பஞ்சுவுக்கு அவர் கத்தியது காதில் விழவில்லை.
“ஏன் இப்படி நாட்டுப்புறம் மாதிரி கத்துகிறீர்? இது ஜப்பான் தேசம். உரக்கப் பேசுவது, கத்துவது, கூப்பாடு போடுவதெல்லாம் ஜப்பானியருக்குப் பிடிக்காது” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“அது எனக்குத் தெரியும். தேர் திருவிழா என்றால் இப்படிக் கூச்சலும் கும்மாளமுமாகத் தான் இருக்கும். இது ஜப்பானியருக்கும் தெரியும். நீர் சும்மா இரும்” என்று அவரை அடக்கினார் அம்மாஞ்சி வாத்தியார்.
பிறகு “மணி பன்னிரண்டு ஆகப் போகிறது. தேர் எப்போது தெரு முனையை அடைந்து அடுத்த தெருவுக்குத் திரும்பப் போகிறதோ?” என்றார் அம்மாஞ்சி வாத்தியார்.
“ஏன், பசி எடுத்து விட்டதோ கனபாடிகளுக்கு? என்று அவரைக் கேலி செய்தார் கோபால் ராவ்.
“அம்மாஞ்சி வாத்தியார் கையில் ரிஸ்ட் வாட்ச் கிடை யாது. ஆனாலும் அவருக்கு வயிற்றில் கடிகாரம்! ‘டாண்’ என்று மணி பன்னிரண்டு அடித்ததோ இல்லையோ, பசி எடுத்துவிடும் அவருக்கு” என்றார் சாம்பசிவம்.
“அது சரி, ‘லஞ்ச் பிரேக்’ எத்தனை மணிக்கு விடம் போகிறார்களாம்?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“பன்னிரண்டரை மணிக்கு விடப் போகிறார்கள். நமக்கெல்லாம் இன்று அரண்மனையில் விருத்து. சக்கர வர்த்தி கொடுக்கிறார்” என்றார் கோபால் ராவ்.
“அது எனக்குத் தெரியும். வைத்தாவுக்கு ‘மெனு தயார் செய்து கொடுத்ததே நான்தான். சக்கரவர்த்தி குடும்பத்தினரும் நம்மோடு சேர்ந்து சாப்பிடப் போகிறார் களாம். அது தெரியுமா உமக்கு?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி பெருமையோடு!
“பேஷ்! பேஷ்! என்ன மெனு? அதைச் சொல்லும்” என்றார் சாம்பசிவம்.
“சேமியா பாயசம்! கேரளாவிலிருந்து மூட்டை மூட்டையா முந்திரி வந்திருக்கு. பொன் வறுவலா வறுத் துக் கொட்டச் சொல்லியிருக்கேன்” என்றார்.
“அப்புறம்?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“வெண் பொங்கல், அவியல், சேப்பங் கிழங்கு ரோஸ்ட், கத்தரிக்காய் எண்ணெய்க் கறி, வெண்டைக்காய் வதக்கல் பச்சடி, உருளைக்கிழக்கு வறுவல், பிஸி பேளா ஹூளி அன்னம், எரிசேரி, புளிசேரி, மோர்க் குழம்பு, டொமாடோ ஸூப், ஒரு வடை, ஒரு அப்பளம்…”
“ஒரு வடை ஒரு அப்பளம்தானா? இரண்டு போட மாட்டாளா?” என்று வேடிக்கையாகக் கேட்டார் அம்மாஞ்சி.
சரியாகப் பன்னிரண்டரை மணி ஆனதும் அதிர்வெடி கள் போட்டு லஞ்ச் ப்ரேக்கை அறிவித்தார்கள்.
அவ்வளவுதான்; கின்ஸா வீதிகளில் மக்கள் வெள்ளம் நாலா திசைகளிலும் கலைந்து அலைமோதிக் கொண்டு சென்ற காட்சி கிரிக்கெட் டெஸ்ட் மாட்ச் ‘லஞ்ச் ப்ரேக்’ கை நினைவூட்டியது.
அரண்மனை வீருந்து மண்டபத்தில் ஆயிரம் விருந் தினருக்கு மேல் கூடியிருந்தார்கள். கலைஞரையும், தமிழ் நாட்டுக் கலைஞர்களையும் பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்த விருந்து அது.
சக்கரவர்த்தி, மகாராணி, அவர்கள் குடும்பத்தினர் அந்த ஹாலின் நடுவே நடுநாயகமாக அமர, அவர்களுக்குப் பக்கத்தில் கலைஞரும் வி. எஸ்.டி.யும் மற்ற கலைஞர்களும் உட்கார்ந்து கொண்டனர்.
டைனிங் டேபிள் மீது வாழை இலை போட்ட சாப்பாடு!
அரண்மனைக்குரிய சாண்ட்லியர் விளக்குகளும் ‘இகயானா’ அலங்காரமும் அந்த ஹாலுக்குத் தனிக் கவர்ச்சியை உண்டாக்கின.
“நம்ம தேர், நம்ம சாப்பாடு, நம்ம சங்கீதம், நம்ம வாழை இலை, நம்ம திருவள்ளுவர்! நினைச்சாலே சந்தோ ஷம் தாங்கவில்லை…” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“ஒரு சின்ன திருத்தம்” என்றார் கோபால் ராவ்.
“என்ன அது?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“திருவள்ளுவர் மட்டும் நம்ம திருவள்ளுவர் இல்லை. அவர் உலகத்தின் பொதுச் சொத்து. ‘வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று பாரதியார் பாடியிருக்கார். தெரியுமோல்லியோ?” என்றார் கோபால் ராவ்.
வயிற்றில் பாயசம் போனதும் எல்லாருக்கும் உண்ட மயக்கம் வந்துவிட்டது. வடம் பிடித்து இழுத்த தொண் டர்களையும் அது விடவில்லை. சற்று நேரம் களைப்பாற விரும்பினார்கள் அவர்கள்.
“அதெல்லாம் கூடாது. உடனே மீண்டும் தேர் இழுக்கப் போக வேண்டியதுதான்” என்று அவர்களுடைய தூக்கத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்கள் சில முட்டுக்கட்டைத் தொண்டர்கள்!
“அப்படி இப்படி’ என்று தேரைத் தெரு முனைக்குக் கொண்டு சேர்க்க மணி நாலாகிவிட்டது.
“தேரோட்டத்தின் முக்கியக் கட்டமே இனிமேல் தான்!” என்றார் அம்மாஞ்சி வாத்தியார். முதலில் தேர் வடங்களை அடுத்த தெருவுக்குள் தூக்கிக் கொண்டு போய்ப் போட்டார்கள். அடுத்தாற்போல் சக்கரங்களுக்குக் கீழே வலிமைமிக்க ஸ்டீல் தகடுகளை வைத்து அவற்றின் மீது விளக்கெண்ணெய் டின்களை உடைத்து ஊற்றினார்கள். வழ வழப்பான அந்தத் தகடுகளின் மீது தேர்ச்சக்கரங்கள் வழுக்கிக் கொண்டு திரும்பப் போகும் காட்சியைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண் கொட்டாமல் காத் திருந்தார்கள். தெருமுனையில் உள்ள உயரமான ஒரு கட்ட டத்தின் மொட்டை மாடி மீது போய் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர் சக்கரவர்த்தியும் அவரது குடும் பத்தினரும்.
தொம்பைகள் காற்றிலே ஊசலாட், யானைகள் பின் பக்கம் முட்டித் தள்ள, தேர் ஜம்மென்று அடுத்த தெருவில் திரும்பியபோது அதிர்வேட்டுகளும், தாரை தப்பட்டை களும் எழுப்பிய ஒலி ஆகாசத்தை முட்டி மோதின. அதே சமயம் உயரத்தில் பறந்து வந்த ஹெலிகாப்டர் விமானம் கின்சாவில் வட்டமடித்துத் தாழ்வாகப் பறந்து ரோஜா, சாமந்தி, மல்லிகை மலர்களைக் கூடை கூடையாகக் கொட்டி தேர் மீது மாரியாகப் பொழிந்தன.
அத்தியாயம்-15
“ஏதாவது பெரிய கூட்டத்தைப் பற்றி வர்ணிக்கும் போது ‘அம்மாடி, பெரிய தேர்த் திருவிழாக் கூட்டம் மாதிரி இருக்கிறதே!’ என்று சொல்வோம். கின்ஸாவில் இப்போது கூடியுள்ள இந்தக் கூட்டத்தை எத்தோடு ஒப்பிட்டுச் சொல்வது?” என்று வியந்தார் கோபால் ராவ்.
“காணாமற் போன குழந்தைகளுக்குக் கணக்கு வழக்கே இல்லையாம்” என்றார் சாம்பசிவ சாஸ்திரி.
“அந்தக் குழந்தைகள் யாவும் ‘லாஸ்ட் சில்ட்ரன் அலுவலகத்தில் பத்திரமாக விளையாடிக் கொண்டும் ஐஸ் க்ரீம் சாப்பிட்டுக்கொண்டும் இருக்கும்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
சில ஜப்பானியர் தங்கள் குழந்தைகளைத் தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டு செல்வதைக் கண்ட அம்மாஞ்சி, குழந்தைகளைத் தோள் மீது தூக்கிச் செல்கிற வழக்கம் இந்த நாட்டிலும் உண்டு போலிருக்கிறது” என்றார்.
பெருங்காயம், கொத்தமல்லி, சுறிவேப்பிலை, எலுமிச் சம்பழம் நான்கும் போட்டு கடுகு தாளித்த நீர்மோரைத் தெருவெங்கும் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்படி விநியோகிக்கப்பட்ட இடங்களில் மேட்ஸுயா தர்மம்’ ‘யோஷியா தர்மம்’ ‘டய்மாரு தர்மம்’ ‘ஹாங்க்யூ தர்மம்’ என்று எழுதி வைக்கப்பட்டிருந்தன.
தேர்ச் சின்னம் பொறித்த (கீ செயின்’கள் தயாரித்து அவற்றில் தங்கள் கம்பெனியின் விலாசத்தையும் பொறித்து இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தனர் வேறு சில வியாபாரிகள்.
ஜப்பான் சாஸ்திரி கையில் விசிறியுடன் நிற்பது போல் பெரிய மெழுகுப் பொம்மை செய்து அதைத் தம்முடைய கடைவாசலில் நிறுத்தி வைத்திருந்தார் விசிறிக் கடைக் காரர் ஒருவர்!
அதைக் கண்ட அசல் ஜப்பான் சாஸ்திரிகளுக்கு அந்தப் பொம்மையைப் பக்கத்தில் போய்ப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
“நீர் கீழே இறங்கினால் இந்தக் கூட்டம் உம்மை அப் படியே தெரிந்து அமுக்கிவிடும். அப்புறம் உம்மால் எதையுமே பார்க்க முடியாது. பிறகு உம்மையும் யாராவது தோள் மீது தூக்கிக்கொண்டு நடக்க வேண்டியதுதான்” என்றார். அம்மாஞ்சி.
மறு நாள் மாலை ஆறு மணிக்குள்ளாகவே தேர் நிலைக்கு வந்து சேர்ந்துவிட்டது. அப்புறம்தான் திரு வி.எஸ்.டி. அவர்கள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
பூர்த்தி விழாவின் போதும் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் கலைஞர் மட்டும் கலந்து கொள்ளவில்லை. காரணம் அவர் சீக்கிரமே சென்னை திரும்ப வேண்டியிருந்ததால் கியோட்டோ, ஒஸாகா போன்ற இடங்களைச் சுற்றிப் பார்க்கச் சென்று விட்டார்.
தேர் நிலைக்கு வந்த பிறகும் சாஸ்திரிகள் மூவருக்கும் தேரை விட்டுக் கீழே இறங்க மனமில்லை.
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனுக்கு உடம்பெல்லாம் வியர்த்து கதர்ச் சட்டை உள்பட நனைந்து போயிருந்தது.
“நாமகிரிப் பேட்டைவாள்! கீழே இறங்குங்கோ. அடுத்த வாசிப்பு தெப்பத்தில்தான்” என்றார் அம்மாஞ்சி.
“பாவம்! இப்போது அவரே தெப்பமாய் நனைந்து போயிருக்கிறார்” என்றார் சாம்பசிவம்.
“எல்லோரும் கீழே இறங்கி வாருங்கள். நேரமாச்சு” என்று கீழிருந்தபடியே அவசரப்படுத்தினான் பஞ்சு.
”ஆளைக் கீழே இறக்குவதில் பஞ்சு ஸாருக்கு அலாதி ஆசை” என்றார் சாம்பசிவம்.
“நம்மை மேலே உயர்த்துகிறவரும் அவர்தானே!” என்றார் அம்மாஞ்சி வாத்தியார்.
பூர்த்தி விழாவில் திரு வி.எஸ்.டி.யும் ஜப்பான் சாஸ்திரியும் மட்டுமே பேசினார்கள். முதலில், ஹிஸ் ஹைனஸ் சக்கரவர்த்தி ஹிரா ஹிட்டோவுக்கும் ஹர் ஹைனஸ் மகரராணிக்கும் யானைகள் தங்கள் துதிக்கையால் சந்தன மாலைகள் அணிவித்தன. அடுத்தாற்போல் ஜப்பான் சாஸ்திரி பேசத் தொடங்கினார்.
“சக்கரவர்த்தி அவர்களே, மற்றும் இங்கு கூடியுள்ள பெரியோர்களே, அகஸ்தியர் என்ற தமிழ் முனிவரைப் யற்றி நீங்கள் அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த மகா முனிவரைக் காட்டிலும் நான் பெரியவன். எப்படி என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். அவர் என்னைக் காட்டிலும் குள்ளமானவர். ஆகவே அவரைக் காட்டிலும் நான் உயர்ந்தவன்!
சூரியனைத் தெய்வமாகப் போற்றுகிற நாடு இது. சக்கரவர்த்தி பரம்பரையே சூரியனிலிருந்து வந்ததுதான் என்றொரு நம்பிக்கை இங்கே இருந்து வருகிறது. தமிழ் நாட்டிலும் சூரியனைத் தெய்வமாக வழிபடுகிறோம். எங்கள் விவசாயிகள் பொங்கலன்று சூரியனுக்குப் பொங்கல் படைக் கிறார்கள். சூரிய நமஸ்காரம் என்பது எங்கள் நாட்டில் வழிவழியாக வந்துள்ள ஒரு வழிபாடாகும். ஏன்? என்னைப் பார்த்தாலே நமக்குள்ள அந்த ஒற்றுமை நன்கு புலப் யடுமே! நானும் உங்களைப் போலவே குள்ளமானவன்.
அதனால்தான் என் பெயர் கூட ஜப்பான் சாஸ்திரி என்றாகி விட்டது! இப்போது இத்தெப்போ -76 மூலம் நம் உறவும் கலாசாரப் பிணைப்பும் உறுதிப்படுகிறது. எங்கள் தேரை இந்த நாட்டில் கொண்டு வந்து ஓட்டுவதில் மிகுந்த அக்கறை காட்டி அதற்கான எல்லா உதவிகளையும் வச களையும் செய்து கொடுத்த சக்கரவர்த்தி அவர்களுக்கு எங்கள் சார்பிலும், எங்கள் தமிழகத்தின் சார்பிலும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். முக்கியமாக இரண்டு சக்கர வர்த்திகளுக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். ஒன்று ஐப்பான் சக்கரவர்த்தி. இன்னொன்று ஏர் இண்டியா அக்பர் சக்கரவர்த்தி. அந்தச் சக்கரவர்த்தியின் உதவி இல்லையென்றால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இங்கு வந்தே இருக்க முடியாதே”
அடுத்தாற்போல் திரு வி.எஸ்.டி. அவர்கள் பேசினார்:
“தேரோட்டம் நடத்துவதிலுள்ள சிரமங்களை நன்கு அறிந்தவன் நான்.
“எங்கள் திருவாரூரில் பல தேரோட்டங்களைப் பார்த் திருக்கிறேன். அங்கே நாலு வீதிகளிலும் தேர் வலமாகச் சுற்றி நிலைக்கு வந்ததும் தேரிலுள்ள சுவாமியை கோவிலுக் குள் எடுத்துச் சென்று ‘சண்டாளப் பிராயச்சித்தம்’ என்னும் ஒரு ஐதிகத்தைச் செய்து முடித்த பின்னரே சுவாமியை உள்ளே எடுத்துச் செல்வார்கள். சண்டாளர் கள் என்றால் மனிதர்களுக்குள்ளேயே சண்டாளத்தனமாக. நடந்து கொள்கிறவர்களைத்தான் சொல்கிறேன்.
“இங்கே சுவாமியும் இல்லை. சண்டாளர்களும் இல்லை. ஆகவே பிராயச்சித்தமும் இல்லை!
“வள்ளுவர் எல்லா நாட்டுக்கும் பொதுவானவர். அவருடைய குறள்கள் வேதங்கள் போன்றவை. உலக மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளை ஈரடிகளில் வகுத்துக் கொடுத்த பெரும் புலவர். அவருக்கு இங்கே தேரோட்டம் நடத்தியதோடு எங்கள் பணி தீர்ந்து விடவில்லை. டோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற யுயேனோ பார்க்கில் அவருக்கு. ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்பதும் எங்கள் அவர. இப்போதைக்கு இந்தத் தேரை அந்தப் பூங்காவிலே கொண்டு நிறுத்தி வைப்போம். பிறகு உரிய காலத்தில் கோயில் கட்டுவோம். ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் யுயேனோ பார்க்கில் உள்ள பல்வேறு காட்சிகளை யும் காட்சிப் பொருள்களையும் காணத் தவறுவதில்லை. எனவே அந்த இடத்தில் எங்கள் வள்ளுவரையும் கொண்டு வைப்பது மிகப் பொருத்தமாயிருக்கும் என்று கருதுகிறேன். இந்த விழாவின் நினைவாக ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்தத் திருக்குறளை சக்கரவர்த்தி அவர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
திரு வி. எஸ். டி. யின் உரையோடு விழா இனிது முடிந்தது.
அன்றிரவே ஹகோனே தேசியப் பூங்காவுக்கு விசேஷ ரயில்கள் விடப்பட்டன. தேருக்கு வந்த கூட்டத் தினர் அவ்வளவு பேரும் தெப்ப விழாவைக் காணும் ஆ லில் ரயிலடியை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள்.
“ஹகோனே எங்கே இருக்கிறது?” என்று கேட்டார் திரு வி.எஸ்.டி.
“டோக்கியோவிலிருந்து ஒன்றரை மணி நேரப் பயணம் தான். ரயில் பயணம் ரொம்ப வசதியாக இருக் கும். ஃப்யூஜி மலை அங்கேதான் இருக்கிறது” என்றார் அம்மாஞ்சி.
“எங்கே பார்த்தாலும் மலைகளும், ஏரிகளும், செர்ரி மரங்களும், வெந்நீர் ஊற்றுக்களும் மண்டிக் கிடக்கும் இடம் அது, அழகு தேவதை மௌனமாகத் தாண்டவ மாடும் அமைதியான இடம். இயற்கை அழகும், இனிய சூழ்நிலையும்,மரங்களின் வர்ண பேதங்களும் நம்மை மயக்கத்தில் ஆழ்த்தும். பிரமிப்பில் பேச்சு வராது. வாயடைத் துப் போகும்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“தெப்பம் எந்த இடத்தில் விடப் போகிறார்கள்? ஹகோனே ஏரியில் தானே?” என்று கேட்டார் திரு வி.எஸ்.டி.
“ஆமாம்; ஜப்பான்காரர்கள் அதை ஆஷி என்று சொல்வார்கள். அந்த ஏரிக் கரையிலே ஒரு சின்ன கோயில்கூட இருக்கு. அங்கேதான் தெப்ப வேலை நடந்து கொண்டிருக்கிறது. திருவாரூர்த் தெப்பம் போலவே பீப் பாய்களைப் போட்டுப் பீடம் அமைத்துச் செல்கிறார்கள். நீங்க அந்த ஏரிக்குச் சமீபத்தில் உள்ள ஃப்யூஜியா ஹோட்டலில் தங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து ஹகோனே ஏரிக்கு ஏழு மைல் தான். அவ்வப்போது போய் தெப்ப வேலை சரியாக நடக்கிறதா என்று பார்ப்பதற்குச் சௌகரியமாக இருக்கும்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“ஃப்யூஜி மலையை ஒரு முறை எல்லாத் திசைகளிலி ருந்தும் பார்க்க வேண்டுமென்று ஆசை. படகிலேயே சுற்றிப் பார்க்க முடியுமா?” என்று கேட்டார் திரு வி.எஸ்.டி.
“பேஷாகப் பார்க்கலாம். எட்டு மணி நேரம் ஆகும். அந்த மலையைப் பல கோணங்களில் பார்ப்பதற்குப் படகிலே சுற்றிப் போவதுதான் சரியான வழி. ஃப்யூஜி மலையைச் சுற்றி ஐந்து ஏரிகள் உள்ளன. அந்த ஐந்தும் ஃப்யூஜி மலையை அர்த்த சந்திர வடிவத்தில் வளைத்துக் கொண்டிருக்கின்றன” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“அப்படின்னா நாம் எல்லோருமே நாளை காலை ஒரு ரவுண்ட் போய்விட்டு வந்துவிடலாமே” என்றார் அம்மாஞ்சி.
“குளிர் தான் தாங்காது” என்றார் ஜப்பான் சாஸ்திரி,
“சுற்றி ஏரியோல்லியோ” என்றார் சாம்பசிவம்.
“பரவாயில்லை. ‘ஹாட் ஸ்ப்ரிங்’ நிறைய இருக்காம். அதிலே குளித்தால் குளிர் பறந்து போய் விடுமாம்” என்றார் அம்மாஞ்சி.
“சரி, நமக்கெல்லாம் அங்கே எந்த இடத்தில் சாப்பாடு தயாராகிறது?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“இன்னும் அந்தக் கேள்வி வரலையேன்னு பார்த் தேன். கவலைப்படாதீர். வைத்தி பார்ட்டி நேற்றே அங்கு போயாச்சு. புளியோதரை, தயிர்வடை எல்லாம் போடச் சொல்லி இருக்கேன்” என்றார் அம்மாஞ்சி.
“தயிர் வடையா? இந்தக் குளிரிலா? மசால் வடை போடச் சொல்லக் கூடாதா?” என்றார் சாம்பசிவம்.
“பூர்வ ஜன்மத்தில் நீர் எலியாகப் பிறந்திருக்கணும். மசால் வடை வைத்து உம்மைச் சுலபமாகப் பிடித்துவிட லாம் போலிருக்கே” என்றார் அம்மாஞ்சி.
“ஹகோனேக்கு எப்படி ரூட்?” என்று கேட்டார் வி.எஸ்.டி.
“ஷிஞ்சுகு ஸ்டேஷன்லேருந்து டொக்காய்டோ லைன் எக்ஸ்பிரஸ் போறது. ஒடவாரா, அட்டாமி, நுமாஸு இந்த மூன்று இடங்களுக்கும் ரயில் போகிறது. நாம் அட்டா மிக்குப் போயிடுவோம். அட்டாமியிலேதான் அருமை யான ஓட்டல்கள் இருக்கு. ஜப்பான் ஸ்டைல் ஓட்டல்களும் நிறைய இருக்கு. அந்த ஜப்பானிய விடுதிகளில் தங்கிப் பார்ப்பதற்கு இதுதான் ஏற்ற சந்தர்ப்பம்! என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“நம்மவர்களெல்லாம் பெரும் கூட்டமாக ஹகோனே போகிறார்களே, அவர்களெல்லாம் எங்கே தங்கப் போகி றார்கள்?” என்று விசாரித்தார் வி. எஸ்.டி.
‘”ஏரிக் கரையில் மலைச்சரிவில் ஏராளமான கூடாரங் கள் போட்டிருக்கிறார்கள். மிலிடரி ரொம்ப மிலிடரி காமப் மாதிரி ரொம்ப வசதியாயிருக்கும். பிரமாதமான அரேஞ்ச்மெண்டாம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“கோபால் ராவும், பஞ்சுவும் எப்போது போனார்கள்?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“தேரோட்டம் முடிந்ததுதான் தாமதம்; அவர்கள் அடுத்த கணமே ஹெலிகாப்டர்லே கிளம்பிப் போயாச்சு. அவர்கள் போய்த்தானே எல்லா ஏற்பாடுகளும் நடக்கணும்” என்றார் அம்மாஞ்சி.
அத்தியாயம்-16
“ஹகோனே போக வி.எஸ்.டி.க்காக ஹெலிகாப்டர் காத்திருக்கிறதாம். நாமும் அவரோடு போய் விடலாமே” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“ஐந்து பேருக்கு ஹெலிகாப்டரில் இடம் இருக்குமா?” என்று கேட்டார் அம்மாஞ்சி
“ஐந்து பேர் ஏது? வி.எஸ்.டி.யோடு நாலு பேர் தானே?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“விநாயகரோடு ஐந்து பேர் இல்லையா?” என்றார் அம்மாஞ்சி.
“ஆமாம்; தெப்பத்துக்கே அவர்தானே முக்கியம்?” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் நாலு பேரும் விநாயகர் சிலையுடன் அட்டாமியில் போய் இறங்கினர்.
“மலைப் பிரதேசம். குளிர் தாங்கவில்லை” என்றார். அம்மாஞ்சி வாத்தியார்.
“ராத்திரி இங்கேயே தங்கி சுடச்சுட கந்தக ஊற்றுத் தண்ணீரில் ஸ்நானம் செய்வோம். உடம்பு வலி, களைப்பு எல்லாம் தீர்ந்து போகும். ஒரு மண்டலம் இந்தத் தண்ணீ னில் குளித்தால் சரும வியாதிகள் எதுவாயிருந்தாலும் பறந்துவிடுமாம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
மறுநாள் காலை வி. எஸ். டி. யும் சாஸ்திரிகளும் ‘ரோப் வண்டியில் ஏறி ஹகோனே நோக்கிப் பயணமானார்கள். அந்த வண்டி இரண்டு மலைகளுக்கிடையே கம்பி வடத்தில் தொங்கிச் சென்ற போது, “திரிசங்கு சொர்க்கம் என்பது இதுதான்” என்றார் ஜப்பான் சாஸ்திரி. கீழே கிடுகிடு பாதாளத்திலிருந்து கந்தக ஊற்றுகளின் ஆவி மேக மண்ட லம் போல் மேலே வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட அம்மாஞ்சி, ‘ஆகா! கதகதப்பான அந்த நீராவி யில் போய் நின்றால் உடம்புக்கு ரொம்ப இதமாயிருக்கும்” என்றார்.
நால்வரும் ஓரிடத்தில் கீழே இறங்கி அந்த நீராவியின் நடுவில் போய் நின்று கொண்டனர்.
“ஸ்டீம் பாத் பிரமாதம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“இப்போது ஒரு கப் டீ இருந்தால் அதை விடப் பிர மாதமாயிருக்கும்” என்றார் சாம்பசிவம்.
இவர்கள் ஹகோனேயை அடையும்போது மணி பத்து ஆகிவிட்டது. ஆஷி ஏரிக்கரையில் கால் வைக்க இடமில்லை. எங்கு பார்த்தாலும் கூட்டமும் கும்பலுமாயிருந்தது. பஞ்சு, கோபால் ராவ், கணபதி ஸ்தபதி, ஆசாரிகள் அத்தனை பேரும் தெப்ப வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். தெப்பத்தை அழகாகவும் விசாலமாகவும் கட்டியிருந்தார் கள். விநாயகர் சிலை வைப்பதற்கென அதற்குள்ளே ஒரு சிறு மண்டபமும் பாடகர்கள் கச்சேரி செய்வதற்கு வசதி யாக ஒரு மேடையும் அமைத்திருந்தனர்.
“விநாயகரை எடுத்து வாருங்கள். ராகு காலத்துக்கு முன் மண்டபத்தில் வைத்து விடலாம்’ என்றார் திரு. வி.எஸ்.டி.
சாஸ்திரிகள் மூவரும் போய் விநாயகரை எடுத்து வந்தார்கள்.
“இந்த இடத்தைப் பார்க்கும்போது தேக்கடி ஞாபகம் வருகிறது” என்றார் திரு வி.எஸ்.டி.
“தேர் தள்ளுவதற்காக வந்த யானைகளையும் இங்கே அழைத்து வந்திருக்கலாம்” என்று கூறினார் அம்மாஞ்சி.
“அந்த யானைகளை நேற்றே யுயேனோ மிருகக்காட்சிச் சாலையில் கொண்டு விட்டாயிற்று!” என்றார் கோபால் ராவ்.
சக்கரவர்த்திக் குடும்பம், வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள். வி.ஐ.பி.க்கள், விசேஷ விருந்தினர்கள். தொழிலதிபர்கள் எல்லோருக்கும் ஏரிக்கரை விளிம்பில் வரிசையாக நாற்காலிகள் போட்டு இடம் ரிஸர்வ் செய்திருந்தனர்.
“இந்த ஆஷி ஏரியில் தெப்பம் விடவேண்டும் என்ற ஐடியா உங்களுக்கு எப்படித் தோன்றியது என்று ஒரு ஜப்பானியர் என்னைக் கேட்டார்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“இது உம்முடைய சொந்த ஐடியா என்று ஜம்பம் அடித்துக் கொண்டீராக்கும்!” என்றார் அம்மாஞ்சி வாத்தியார்.
“இல்லை; ஆஷி ஏரிதான் இந்த ஐடியாவை எங்களுக் குக் கொடுத்தது. அந்த ஏரியைப் பார்த்தபோது ‘இங்கே தெப்பம் விடு விடு’ என்று சொல்வது போலிருந்தது என்றேன்”, என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“எம்.எல்.வி., பத்மா சுப்ரமணியம், மதுரை சோமு, குன்னக்குடி, வலையப்பட்டி, நாமகிரிப்பேட்டை, சிட்டிபாபு எல்லோரும் ஹகோனே வந்து சேர்ந்தாயிற்றா?” என்று விசாரித்தார் சாம்பசிவம்.
“வந்தாயிற்றாம். சிலர் ஃப்யூஜி மலையைச் சுற்றிப் பார்க்கவும் சிலர் கந்தக ஊற்றுத் தண்ணீரில் ஸ்நானம் செய்யவும் போயிருக்கிறார்களாம்” என்றார் அம்மாஞ்சி.
ஏரித் தண்ணீரை ஒரு கையால் அள்ளிப் பருகிய ஜப்பான் சாஸ்திரி “தேவாமிர்தம்!” என்றார்.
“குன்னக்குடி இந்தத் தண்ணீரைக் குடித்து வைக்கப் போகிறார்! ரொம்ப ஜில்லிப்பு. வயலினுக்குத் தொண்டை கட்டிப் போகும்” என்றார் சாம்பசிவம்.
“பத்மா சுப்பிரமணியம் டான்ஸ் எத்தனை மணிக்கு? ‘கிருஷ்ணாய துப்யம் நமஹ’வை மெட்ராஸிலேயே பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“இங்கே ஓசியிலே பார்த்து விடும் அதை!” என்றார் சாம்பசிவம்.
‘இந்தக் குளிரிலே உமக்கு விசிறி எதுக்கு? அதைக் கீழே போடும்” என்றார் அம்மாஞ்சி.
“ம.பொ.சி.க்கு மீசை, கலைஞருக்கு கூலிங் கிளாஸ், வாத்தியாருக்கு புஷ் குல்லா எப்படியோ அப்படி எனக்கு இந்த விசிறி!” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“இந்த விசிறியை உம்முடைய ஞாபகார்த்தமாக யுயேனோ மியூஸியத்தில் வைத்துவிட்டு வருவதுதானே? தேர் பார்க்க வருகிறவர்கள் அப்படியே இந்த விசிறியையும் ஒரு அதிசயப் பொருளாகப் பார்த்துவிட்டுப் போவார்களே?” என்றார் அம்மாஞ்சி.
எல்லையற்ற இயற்கை வனப்பும், எண்ணற்ற வர்ண பேதங்களில் தளிர்த்தும் துளிர்த்தும் கிடந்த மரங்களின் எழிலும் அந்தக் காடு முழுதும் பரவிக் கிடந்தன.
சலனமற்ற தண்ணீர்ப் பரப்பாக ஓர் இடத்தைத் தேர்ந் தெடுத்து அங்கே விநாயகர் உருவம் ஒன்றை வண்ணக் கோலமாக வரைந்து கொண்டிருந்தார் சாந்தா நாராய ணன். அவருடன் வந்திருந்த கிருஷ்ணமூர்த்தியும், துளசி தாஸும், சக்கரவர்த்தி, மகாராணி இருவரின் உருவங்களை ஏரிக்கரையில் உள்ள மெய்ஜி கோயில் வாசலில் போட்டு வைத்தார்கள்.
காஞ்சீபுரம் தண்டமாலை, மதுரை மல்லிகை மாலை வெள்ளை, பச்சை, ஆரஞ்சு ஆகிய வண்ணங்களில் கட்டப் பட்ட திருச்செந்தூர் மாலை மூன்றையும் விநாயகரின் கழுத்தில் சாற்றி அலங்காரம் செய்தார் ஜப்பான் சாஸ்திரி.
இரவு எட்டு மணிக்கு, குறித்த நேரத்தில், அதிர் வேட்டுகளும் அவுட்வாணங்களும் போட்டு தெப்பம் புறம் படப் போவதை அறிவித்தார்கள்.
தெப்பத்தின் வண்ணச் சரவிளக்குகள் தண்ணீரில் பிரதிபலித்தபோது ஹகோனே ஏரிக்குள் ஏதோ மாயா ஜாலம் நிகழ்வது போலிருந்தது.
காற்றில் அணையாத காகிதக் கூண்டு விளக்குகளை ஆயிரக்கணக்கில் மிதக்க விட்டனர் ஐப்பானியப் பெண் மணிகள்,
சக்கரவர்த்தி வந்து தம் ஆசனத்தில் அமர்ந்ததும் வி.எஸ்.டி. தெப்பத்தைக் கரையோடு சேர்த்துக் கட்டி யிருந்த கயிறுகளை அவிழ்த்து விடச் சொன்னார்.
புதை வாணங்கள் போன்ற வெடிகளைத் தண்ணீரி லேயே கொளுத்திவிட்டனர் ஜப்பானியர்.
நாதஸ்வர இசையுடன் மெதுவாக நகரத் தொடங் கியது தெப்பம். ஒவ்வொரு கச்சேரிக்கும் இரண்டு மணி நேரமே ஒதுக்கி யிருந்தார்கள்.
“அடாடா! இந்த சந்தன வாசனையும், ஊதுவத்தி மணமும், நாதஸ்வர இசையும் கலந்து காற்றிலே வீசுகிற போது கந்தர்வ லோகமே கீழே இறங்கி வந்துவிட்ட மாதிரி இருக்கு” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
காலையில் தெப்ப விழா முடிந்ததும், எல்லோரையும் கும்பலாக நிறுத்தி வைத்து வெள்ளைப் பூசனிக்காய் மீது கற்பூரத்தைக் கொளுத்தி திருஷ்டி சுற்றிப் போட்டார் கோபால் ராவ்.
அவ்வளவுதான்; தெப்ப விழா முடிந்ததோ இல்லையோ, அடுத்த நிமிடமே எல்லோரும் டோக்கியோ கிளம்பி விட்டனர்.
டோக்கியோ போய்ச் சேர்ந்ததும் சாஸ்திரிகள் மூவ ரும் நேரத்தை வீணாக்காமல் வெளியே புறப்பட்டு விட்டார்கள். காலையில் போனவர்கள் பகல் ஒரு மணிவரை திரும்பி வரவில்லை.
“சாப்பிடாமல் கூட எங்கே போய் விட்டார்கள் இந்த சாஸ்திரிகள்?” என்று கேட்டார் மகாராணி.
“தி க்ரேட் எர்த்க்வேக்-ஃபயர் மெமோரியல் ஹாலுக்குப் போயிருக்கிறார்கள்” என்றார் கோபால் ராவ்.
“நாளைக்கு எல்லோரும் ஊருக்குப் போகப் போகிறீர் களே, இன்று அரண்மனையில் நாம் எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாமே என்று நினைத்தேன். சாப்பாட்டு நேரத் துக்குள் வந்து விடுவார்களா?” என்று கேட்டார் சக்கரவர்த்தி.
“வரமாட்டார்கள்; நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கண்ட்டோ ஏரியாவில் பூகம்பமும் தீ விபத் தும் ஏற்பட்டு ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இறந்துவிட்டார் களாம். அவர்கள் ஞாபகார்த்தமாக இந்த நகரத்தில் கட்டி யுள்ள நினைவு மண்டபத்தைப் பார்க்கப் போயிருக்கிறார்கள். இன்று எதுவும் சாப்பிட மாட்டார்களாம். வெறும் சாதத்தை மட்டும் உருட்டி விழுங்குவார்களாம். காரணம், விபத்து நடைபெற்ற போது ஜப்பானிய மக்களுக்கு அரிசிச் சோறு தவிர வேறு எந்த உணவும் கிடைக்கவில்லையாம்” என்றான் பஞ்சு,
“அப்படியா? உங்கள் சாஸ்திரிகளின் மனிதாபிமான உணர்வு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது” என்றார் சக்கரவர்த்தி.
“எங்கள் தாய் நாட்டுக்கு அடுத்தபடி நாங்கள் விரும்பிப் போற்றுவது உங்களுடைய ஜப்பான் நாட்டைத் தான். உங்களுடைய சுறுசுறுப்பு, அழகுணர்ச்சி, நன்றி உணர்வு, சிரித்த முகம், விருந்தோம்பும் பண்பு, கலையார் வம் இவ்வளவும் எங்களைப் பிரமிக்க வைக்கின்றன” என்றார் கோபால் ராவ்.
“தெப்போவுக்காக இங்கே வந்து உதவி புரிந்தவர்கள் அவ்வளவு பேருக்கும் எங்கள் நாட்டின் பழமையான கபூகி நாடகம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளேன். கபூகிஸா தியேட்டரில் ஒரே சமயத்தில் 2222 பேர் உட்காரலாம். இன்றிரவு அதைப் பார்த்துவிட்டு நாளை பகல் எல்லோரும் என்னோடு விருந்துண்ட பிறகே நீங்கள் இந்தியா வுக்குத் திரும்ப வேண்டும்” என்றார் சக்கரவர்த்தி.
“சாஸ்திரிகள் வந்ததும் அவர்களுக்கும் சொல்லிவிடுங்கள்” என்றார் மகாராணி.
மறு நாள் விருந்துக்குப் பின்னர் ஒவ்வொருவராக வந்து சக்கரவர்த்தியிடம் விடை பெற்றுக் கொள்ளத் தொடங்கினர். சக்கரவர்த்தி ஒவ்வொருவராக அழைத்துக் கை குலுக்கி நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்.
முதலில் வடம் பிடித்து இழுத்த ஆயிரம் பேருக்கும் ஆளுக்கொரு வாட்சும், டிரான்ஸிஸ்டரும் அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பினார் சக்கரவர்த்தி.
அடுத்தபடியாக வந்த சங்கீத வித்வான்களுக்கு ஆளுக் கொரு டேப் ரிகார்டர், டிரான்ஸிஸ்டர், வாட்ச், முத்து மாலை நான்கும் பரிசாகக் கொடுத்தார்.
நாமகிரிப் பேட்டைக்கும் வலையப்பட்டிக்கும் மட்டும் எல்லாமே டபிள் டபிள்!
“நீங்கள் இருவரும் தேர், தெப்பம் இரண்டிலும் வாசித் தீர்கள். அதனால் எல்லாமே டபிள்” என்றார் சக்கரவர்த்தி.
பிறகு கணபதி ஸ்தபதி வந்து நின்றார். பட்டாடை களும், முத்து மாலைகளும் நிறைந்த பெரிய பேழை ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்த சக்கரவர்த்தி, “உங்கள் கலைத் திறமைக்கு ஈடாக எங்கள் நாட்டையே பரிசாகக் கொடுக்கலாம்” என்று பாராட்டினார்.
கடைசியாக சாஸ்திரிகள் மூவரும் வந்து நின்றன மூவருக்கும் மூன்று குடை, மூன்று முத்துமாலை, மூன்று ஸ்கூட்டர், மூன்று காமிரா கொடுத்த பிறகு ஜப்பான் சாஸ் திரியைத் தனியாக அழைத்து அவருக்கு மட்டும் ஜப்பான் விசிறி ஒன்றைக் கொடுத்தார்.
‘இந்த நாட்டை விட்டுப் பிரியவே எங்களுக்கு மன மில்லை.’ராஜோபசாரம்’ என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது அதை நாங்களே அனுபவிக்கும் பேறு எங்களுக் குக் கிட்டியது. தாங்களும் மகாராணியும் ஒரு முறை தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்து எங்கள் நாட்டுத் திருக்கோயில் களையும் திருவிழாக்களையும் நேரில் பார்க்க வேண்டும். சிற்பங்களும் கலைச் செல்வங்களும் நிறைந்தது எங்கள் நாடு. சங்கரரும், ராமானுஜரும், ராமகிருஷ்ண பரமஹம் சரும், ரமண மகரிஷியும் வாழ்ந்த நாடு. ‘வி.ஆர்.ஃப்ரம் தி லாண்ட ஆப் சங்கராச்சார்யா’ என்று சொல்லிக் கொள்வதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். “தொமோ, தொமோ!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் ஜப்பான் சாஸ்திரி.
சக்கரவர்த்தி, மகாராணி இருவரும் ஜப்பான் சாஸ்திரி யின் கைகளைக் குலுக்கி, ‘மட்டா டோஸா(திரும்பி வாருங்கள்) என்றனர். கடைசியாக எல்லோரும் அரண்மனைக்கு வெளியே போய் சக்கரவர்த்தி குடும்பத்தாருடன் ஒரு க்ரூப் போட்டோ எடுத்துக் கொண்டு விமான கூடத்துக்குப் புறப்பட்டனர்.
விமானம் புறப்பட இன்னும் இருபது நிமிடங்களே இருந்தன.சாம்பசிவ சாஸ்திரியைத் தவிர மற்ற எல்லோரும் வந்து சேர்ந்து விட்டார்கள். அவரை மட்டும் காணவில்லை.
“வழி தவறி வேறு எங்காவது போய் விட்டாரோ?” என்று கவலைப்பட்டார் கோபால் ராவ். எங்கு தேடியும் அவர் அகப்படவில்லை. விமானம் புறப்பட ஐந்து நிமிடமே இருக்கும்போது பரக்கப் பரக்கக் காரிலிருந்து இறங்கி ஓடி வந்தார் சாம்பசிவம்.
“எங்கே தொலைந்து போனீர், ஊருக்குப் புறப்படுகிற நேரத்தில்?” என்று கடிந்து கொண்டார் அம்மாஞ்சி, அவரைப் பார்த்து.
“கின்ஸாவுக்கு” என்றார் சாம்பசிவம்.
“அங்கே எதற்குப் போனீர்? ஷாப்பிங் செய்வதற்கு இதுதானா நேரம்?” என்று கேட்டார் அம்மாஞ்சி
“நான் ஷாப்பிங் செய்யப் போகவில்லை. கின்ஸாவில் தானே தேர் விட்டோம்? கடைசியாக ஒரு முறை அந்த டத்தைப் பார்த்துவிட்டு வரவேண்டும் போலிருந்தது. அங்கே போய் ஒரு நிமிஷம் அந்தத் தெருவில் நின்று பார்த்துவிட்டு வந்தேன். கின்ஸாவை விட்டுப் பிரியவே மனம் வரவில்லை” என்றார் சாம்பசிவம்.
விமான கூடத்தில் இவர்களை வழியனுப்ப ஏராளமான ஜப்பானியர் வந்திருந்தனர்.
எல்லோரும் விமானத்திற்குள் ஏறி உட்கார்ந்த பிறகு கோபால் ராவ், பஞ்சு, அம்மாஞ்சி, சாம்பசிவம் நால்வரும் ஸயோனாரா’ கூறிக் கொண்டு கையைத் தூக்கி அசைத்த வண்ணம் விமானப் படிக்கட்டுகளில் ஏறிச் சென்றனர்.
ஜப்பான் சாஸ்திரிதான் கடைசியாக ஏறினார். ரோடு அவருடைய மருமான் ரமேஷம் அவனுடைய காதலி இகிடாவும் ஏறிச் சென்றனர்.
“இவர்களையும் இந்தியாவுக்கு அழைத்துப் போகிறீர்களா?” என்று ஜப்பான் சாஸ்திரியைக் கேட்டனர் பத்திரிகை நிருபர்கள்.
“ஆமாம், இவர்கள் திருமணம் ஜப்பானில் நிச்சமாயிற்று. இந்தியாவில் நடைபெறும். வருகிறேன்.. ஸயோனாரா” என்றார் ஐப்பான் சாஸ்திரி.
விமானக் கதவு மூடப்பட்டது.
அக்பர் சக்கரவர்த்தி ஆகாசத்தில் மிதந்தார்.
(முற்றும்)
– 1975-76இல் தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது.
– தெப்போ- 76, முதற் பதிப்பு: அக்டோபர் 1976, பூம்புகார் பிரசுரம், சென்னை.