தெப்போ-76






(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம்-4

கின்ஸா ஏரியா முழுதும் சாம்பசிவ சாஸ்திரியைச் சல்லடை போட்டுத் தேடி விட்டார்கள், அம்மாஞ்சி வாத்தியாரும் குள்ள சாஸதிரியும்.
“தேடித் தேடிச் சலித்து விட்டது. அவர் எங்குமே அகப்படவில்லையே!” என்றார் குள்ள சாஸ்திரி.
“இப்படிச் சல்லடை போட்டுத் தேடினால் சலிக்காமல் என்ன செய்யும்?” என்று அந்த வேதனையிலும் ‘ஜோக் அடித்தார் அம்மாஞ்சி வாத்தியார்.
”அம்மாஞ்சி! ஜோக் அடிப்பதற்கு உமக்கு நேரம் காலம் கிடையாதா? மணி ஒன்பதரை ஆகப்போகிறது. என்னால் இனி ஒரு அடி கூட நகர முடியாது. கால் வலி தாங்கவில்லை” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“உமக்குக் கால் வலி, எனக்குத் தலைவலி. ஏதாவது ஒரு ரெஸ்டாரண்ட்டில் புகுந்த டீ சாப்பிடுவோம் என்றால் மொழிப் பிரச்னை” என்றார் அம்மாஞ்சி.
“எங்காவது டீ ஸெரிமனிக்குப் போகலாமா?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“நல்ல நேரம் பார்த்தீர் டீ ஸெரிமனிக்குப் போக! நினைச்சபோது நம் ஊர் லாரி டிரைவர்கள் டீக்கடையில் புகுந்து ‘ஒரு ஸிங்கிள் டீ’ அடிச்சுட்டு வராங்களே, அந்த மாதிரி என்று நினைச்சுட்டீரா? என்று கேட்டார் அம் மாஞ்சி.
“டீ ஸெரிமனி என்றால் என்ன செய்வாங்க? அதைப் பார்க்க வேண்டாமா?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“அதற்கு இதுவா நேரம்? சாவகாசமாப் போய், நிதா னமா உட்கார்ந்து, ஆற அமர கவனிக்க வேண்டிய ஒரு கலை அது…” என்றார் அம்மாஞ்சி.
“ஆற அமர உட்கார்ந்து கவனித்தால் டீ ஆறிப் போயிடாதோ?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“ஆமாம், ஆறிப் போயிடும். அப்புறம் திரும்பச் சுட வைத்துக் கொடுப்பாங்க. கர்மம்! டீ ஸெரிமனின்னா அது ஒரு சிராத்தம்னு சொன்னவர்தானே நீர்?” என்று தலை யில் அடித்துக் கொண்டார் அம்மாஞ்சி.
“இப்ப என்ன செய்யலாம்?” என்று கேட்டார் ஜப் பான் சாஸ்திரி.
”காருக்கே போயிடலாம்” என்றார் அம்மாஞ்சி.
இருவரும் காரை நெருங்கியபோது, சாம்பசிவ சாஸ் திரி காருக்குள் ஜம்மென்று உட்கார்ந்து விசிறிக் கொண்டிருந்தார். அவரைக் கண்ட அம்மாஞ்சிக்குக் கோபம் கோபமாக வந்தது.
“ஓய், எங்கே தொலைந்து போனீர்? உம்மைத் தேடித் தேடி இந்த கின்ஸா முழுவதும் அலைந்தோம். காலே போச்சு எங்களுக்கு” என்றார் அம்மாஞ்சி.
“நானா தொலைந்து போனேன்? நீங்கதானே காணாமல் போயிட்டீங்க? கின்ஸாவிலே ஒரு கட்டடத்தின் மீது உலகம் மாதிரி உருண்டையா ஒன்று சுற்றிக் கொண்டிருந் ததே, அதை அண்ணாந்து வேடிக்கை பார்த்துக்கொண்டி ருந்தேன். திரும்பிப் பார்க்கிறேன். உங்க ரெண்டு பேரை யும் காணோம். எங்கே போனீர்கள் என்றே தெரியல்லே. சரி, எப்படியும் காருக்கு வந்து சேருவீங்கன்னு இங்கே வந்து உட்கார்ந்துட்டேன்” என்றார் சாம்பசிவம்.
“ஏதாவது சாப்பிட்டீரா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“வழியிலே ஒரு ரெஸ்டாரண்ட் இருந்தது. அந்த ஓட்டல்லே என்னென்ன ஐட்டங்கள் உண்டோ அத்தனை யும் மாதிரிக்கு ஒண்ணொண்ணு கண்ணாடி ‘விண்டோ’வில் அழகா அடுக்கி வைத்திருந்தாங்க. வெளியே நின்றபடியே அந்தக் கண்ணாடிச் சுவர் வழியா அத்தனை ஐட்டங்களையும் பார்த்தேன். எல்லாவற்றுக்கும் நம்பர் கொடுத்து அதன தன் மீது விலையும் எழுதி வைத்திருந்தாங்க. ஓட்டலுக்குள் போய் நமக்குத் தேவையான நம்பரைச் சொல்ல வேண்டி யதுதான். நாம் கேட்கிற “ஐட்டம்’ மேஜைக்கு வந்து விடும். பாஷை தெரிய வேண்டிய அவசியமே இல்லை” என்றார் சாம்பசிவம்.
“பிடித்திருந்தால் உள்ளே போய் தேவையானதைக் கேட்டுச் சாப்பிட வேண்டியது தானே?” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“ஐட்டம் பிடித்திருந்தது. விலைதான் பிடிக்கவில்லை…”
“அப்புறம்?…”
“அப்புறம் என்ன, பேசாமல் வந்துட்டேன். கையிலே இருந்ததே நூறு யென்தான். அதை வைத்துக்கொண்டு என்னத்தை ஆர்டர் பண்றது? பில் எக்கச்சக்கமாக ஆயிட் டுதுன்னா அப்புறம் மாவரைச்சுட்டு வரவேண்டியதுதான்” என்றார் சாம்பசிவம்.
“இங்கெல்லாம் மாவரைக்கச் சொல்ல மாட்டா. பிளேட்தான் கழுவச் சொல்லுவா” என்றார் அம்மாஞ்சி.
“நீங்க கண்ணாடி வழியா பார்த்த ஐட்டமெல்லாம் அசல் இல்லை சாஸ்திரிகளே, எல்லாம் பிளாஸ்டிக் மாடல். அசலுக்கும் அதற்கும் வித்தியாசமே தெரியாது. அவ்வளவு தத்ரூபமா இருக்கும். நெருப்பிலே தீய்ந்து போன இடம் கூடக் கறுப்பாகத் தெரியுமே” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“ஆமாம்; ஏதோ மீன் மாதிரி ஒன்று. அப்படித்தான் இருந்தது.நான் அதை அசல் என்றே நம்பிவிட்டேன்”. என்றார் சாம்பசிவம்.
“இந்த நாட்டிலே ஒரு விசேஷம் கவனிச்சீங்களா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“என்ன அது?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“எங்கே பார்த்தாலும் புத்தர் கோயில். வணங்குவது புத்தரை. சாப்பிடுவது மாமிசம். புத்தருடைய கொள்கைக்கு நேர் விரோதம்” என்றார் அம்மாஞ்சி.
“சரி, நேரமாகிறது; பாலெஸுக்குப் புறப்படலாம்” என்றார் அம்மாஞ்சி.
மூவரும் பாலெஸை அடையும் போது மணி கிட்டத் தட்ட பத்தரைக்கு மேலாகிவிட்டது.
“கோபால் ராவும், பஞ்சு ஸாரும் ஒன்பது மணிக்கே சாப்பிட்டு விட்டு வெளியே போய்விட்டார்களாம். பாலெஸ் சிப்பந்திகள் சொன்னார்கள்” என்றார் ஜப்பான் சாஸ்திரிகள்.
“எங்கே போயிருப்பாங்க?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“இது நைட் ஸிடி. ராத்திரி முழுதும் காபரேயும், கபூகியும் நடக்கும். எங்கே போனாங்களோ?” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“நாம் கூட எங்கேயாவது போய் மஸாஜ் செய்து கொண்டு வந்தால் என்ன? உடம்பு வலிக்கு சுகமாயிருக்குமே?” என்றார் அம்மாஞ்சி.
“உமக்கு மஸாஜ் வேறே கேட்கிறதா, மஸாஜ்! ஏதா வது இடம் தெரியாத இடத்திலே போய்க் கேட்டு வைக்கா ங்க. நிஜமாகவே உடம்பைப் பிடிச்சு அனுப்பிடப் போறாங்க! அப்புறம் பிளாஸ்திரி போட்டுக்க வேண்டியது தான். அதைப் பார்த்துவிட்டு சாஸ்திரீஸ் வித் பிளாஸ் திரீன்னு பேப்பர்லே போடுவாங்க” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
ராடர்க்கிஷ் பாத்துக்குன்னு ஒரு இடம் இருக்காம். அங்கே அழகான பொம்மனாட்டிகளெல்லாம் வந்து நம்மைக் குளிப்பாட்டி விடுவாங்களாம்” என்றார் அம்மாஞ்சி,
“டர்க்கிஷ் பாத் என்றால் என்ன?” என்று கேட்டார் சரம்பசிவம்.
“டர்க்கி டவல் ஸ்நானம்!” அம்மாஞ்சி சுருக்கமாக விளக்கினார்.
“நாமே ஒரு டர்க்கி டவலை எடுத்துக்கொண்டு போய் ஏதாவது ஒரு ஏரியிலே ஸ்நானம் பண்ணிட்டு வந்தாப் போச்சு. அங்கேயே ஹாட்வாட்டர் ஸ்பிரிங்கெல்லாம் கூட வரதாமே. அதிலே குளித்தால் நல்லதாம்” என்றார் சாம்பசிவம்.
“அதெல்லாம் தேருக்கப்புறம் வைத்துக் கொள்வோம். இப்ப சாப்பிடப் போவோம் வாங்க…” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“எனக்கு ஒரு சந்தேகம்” என்றார் அம்மாஞ்சி திடீரென்று.
“என்ன சந்தேகம் வந்து விட்டது உமக்கு?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“ஒன்றுமில்லை. நமக்கும் தேரோட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் அந்த சந்தேகம்” என்றார் அம்மாஞ்சி.
“இப்ப சம்பந்தம் இருக்கிறவங்கதான் எல்லா வேலை யும் செய்யறாங்களா, என்ன? அந்த மாதிரிதான் நாம் வந்திருப்பதும். வந்தாச்சு; இனிமேல் அதைப்பற்றி என்ன யோசனை?” என்றார் அம்மாஞ்சி.
“ஒரு பொருத்தம் கவனிச்சீங்களா? திருவாரூர்த் தேரின் உயரம் 101 அடி. இங்கே கின்ஸா வீதியிலுள்ள கட்டடங்களின் உயரம் 102 அடி” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“தேரோட்டம் என்றால் நாலு வீதியைச் சுற்ற வேண் டாமா? அப்படின்னா டர்னிங்லே தேரைத் திருப்பணுமே, அதற்கு என்ன வழி?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“ஜப்பான்லே ரயில் ஓட்டத்தையே எலெக்ட்ரானிக் ஸிஸ்டத்திலே கண்ட்ரோல் பண்றாங்க. தேரைத் திருப்புவதுதானா ஒரு பிரமாதம்?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“அதெல்லாம் கூடாது. நம் ஊர்த் தேரை நம் ஆட் கள்தான் இழுக்கணும். திருப்புவதெல்லாம் கூட நம் ஊர் ஸிஸ்டத்தில்தான் திருப்பணும். ஸ்டீல் ஷீட் ரீப்பர், கட்டையெல்லாம் சக்கரத்தின் கீழே வைத்து அவற்றின் மீது விளக்கெண்ணெயை ஊற்றிவிட்டால் தேர்ச்சக்கரம் அதில் வழுக்கிக் கொண்டு ‘டர்ன்’ ஆகும். அப்போது, அடாடா, தேர் கம்பீரமாகத் திரும்புகிற காட்சி அற்புத மாயிருக்கும். அதுதான் இந்த விழாவுக்கே க்ளைமாக்ஸ்”, என்றார் அம்மாஞ்சி.
“அப்படின்னா முட்டுக்கட்டைகளோடு ரீப்பர் கட்டை, ஸ்டீல் ஷீட், விளக்கெண்ணெய் இதெல்லாம் ஞாபகமாகத் தமிழ் நாட்டிலேருந்து கொண்டுவரணும்'” என்றார் சாம்ப சிவம்.
“அது மாத்திரம் இல்லே. அங்கங்கே சக்கரங்களின் கீழே கட்டைகளைப் போட்டு தேரை நகர்த்த வேண்டியிருக் கும். அதற்காக லாரி லாரியா தூங்குமூஞ்சி மரக்கட்டைகள், இலுப்பைக் கட்டைகள் கூட வரணும்” என்றார் அம்மாஞ்சி,
“கட்டைகளெல்லாம்கூட அக்பர் சக்கரவர்த்தியிலே பயணமா? கேவலம் இந்தக் கட்டைகளுக்கு வந்த யோகத் தைப் பாருங்கள். ஜம்போ ஜெட்லே பயணம்!”
“ஆமாம், ஜப்பானுக்கு ஜம்போ ஜெட்டில் பறந்து சென்ற முதல் தூங்குமூஞ்சி மரக்கட்டை என்று பேப்பர்லே போடுவார்கள்!” என்றார் சாம்பசிவம்.
“தேர் தெப்பம் முத்துப்பல்லக்கு மூன்றையும் மல்லி கைப் பூவால் அலங்காரம் செய்ய வேண்டும். மதுரையிலிருந்து மல்லி, கனகாம்பரம், தவனம் மூன்றும்கூட முதல் நாளே அக்பர்லே வந்துவிட வேண்டும்” என்றார் அம்மாஞ்சி.
“அக்பருக்குச் சரியான வேலை இருக்குன்னு சொல்லுங்க……” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“சிவகாசியிலிருந்து வெடிகளெல்லாம் வரணும். அமெ ரிக்காவுக்கே போறதே! அதுக்கு ஒரு ட்ரிப், நாதஸ்வர கோஷ்டிகளுக்கு ஒரு ட்ரிப், ஓதுவார்களுக்கு ஒரு ட்ரிப், அப்புறம் தேர் இழுக்கறவங்க, இழுக்காதவங்க, இழுக்கிற மாதிரி பாசாங்கு செய்றவங்க, முட்டுக்கட்டை போடற வங்க, இவங்க எல்லாகுக்கும் சேர்ந்து எத்தனை ‘ட்ரிப் ஆகுமோ?” என்றார் அம்மாஞ்சி.
“சந்தனம் அரைக்கிறவங்களை விட்டுட்டீங்களே? என்றார் சாம்பசிவம்.
“சந்தனமா? அது எதுக்கு?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“தேர் இழுக்கிறவங்க எல்லோருக்கும் சந்தனம் பூசி விடுங்க. அதெல்லாம் தான் தமாஷ். நம் ஊர் சந்தனம், ஊதுவத்தி வாசனையை ஜப்பான்காரங்க ரசிக்க வேண் டாமா?” என்றார் சாம்பசிவம்.
“அது சரி; ஸ்டீல் ஷீட்டில் விளக்கெண்ணெய் விடற ஐடியா யாருடையது? ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே?” என்றார் ஜப்பான்.
“எல்லாம் வி.எஸ்.டி. ஐடியாவாத்தான் இருக்கும். தேர் விடுவதில் அவர் ஒரு எக்ஸ்பர்ட்” என்றார் அம்மாஞ்சி.
“விளக்கெண்ணெயைக் கொட்டினால் கின்ஸா வீதி யெல்லாம் பாழாயிடுமே!” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“அது மட்டுமா? தேர் இழுக்க வருகிறவர்களில் பாதிப் பேர் வெற்றிலை பாக்குப் போடுகிறவர்களாயிருப்பாங்க. அவங்க வேறே ரோடெல்லாம் துப்பிடுவாங்களே, அதை நினைக்கிறபோதுதான் கஷ்டமாயிருக்கு” என்றார் சாம்ப சிவம்.
”வெற்றிலை போடுகிறவர்கள் தரையைக் கெடுப் பாங்க. பொடி போடுகிறவர்கள் காற்றைக் கெடுப்பாங்க. உம்… ஜப்பான் சுத்தமான தேசம்…” என்று இழுத்தாற் போல் கூறி, குள்ள சாஸ்திரியை ஓரக் கண்ணால் பார்த்தார் அம்மாஞ்சி.
“ஆமாம், இவ்வளவு பேரையும் எங்கே தங்க வைப்பது?’ என்று ஒரு கேள்வியைப் போட்டார் சாம்பசிவம்.
“ஓட்டல் ஒகூரா, ஓட்டல் டய்ச்சி, ஓட்டல் டோக் கியோ இப்படி எல்லா ஓட்டலிலும் போட வேண்டியது தான். சக்கரவர்த்தியே இதில் ரொம்ப ஆர்வமா யிருக்கிற போது இதெல்லாம் ஒரு பிரச்னையா? ஜப்பானில் தடுக்கி விழுந்தால் ஓட்டல். முதல்லே தெப்பம் விடறது எங்கே? அது தீர்மானம் ஆக வேண்டாமா?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“நாளைக்கே நாம் மூன்று பேரும் ரயிலில் போய் ஃப்யூஜி மௌண்டன் பக்கத்திலே உள்ள ஹகோனே ஏரியைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம்” என்றார் அம்மாஞ்சி.
“முதலில் ஸூப்பர் எக்ஸ்பிரஸில் ஏறி க்யோடாவுக்குப் போய்ப் பார்ப்போம். ஜப்பானின் மிகப் பழமையான நகரம் அது. ஊர் ரொம்ப அழகாக இருக்குமாம்” என்றார். ஜப்பான் சாஸ்திரி.
“ஸூப்பர் எக்ஸ்பிரஸ்லே பயணம் செய்வதே ஒரு தனி அனுபவமாம். மணிக்கு 125 மைல் வேகம் போகுமாம்” என்றார் சாம்பசிவம்.
”பறக்கும்னு சொல்லுங்க!’ என்றார் அம்மாஞ்சி. “புல்லெட் ட்ரெயின் என்றுகூட அதற்கு ஒரு பெயர் உண்டு” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“முதல்லே டோக்கியோ ஸ்டேஷனுக்குப் போய் ஸூப்பர் எக்ஸ்பிரஸ் புறப்படற பிளாட்பாரத்தைக் கண்டு பிடிக்கணுமே. அதைச் சொல்லுங்க” என்று கவலைப்பட்டார் அம்மாஞ்சி.
“ஒரு கவலையுமில்லை. ஜப்பான் கய்டு அழகிகள் ஸ்டேஷன்லே மூலைக்கு மூலை நிற்பார்களாம். அவர்களுக்கு இங்கிலீஷ் நன்றாகப் பேசத் தெரியுமாம்!” என்றார் ஐப்பான் சாஸ்திரி.
“நமக்குப் பேசத் தெரியாதே!” என்றார் அம்மாஞ்சி.
“சரி, காலையில் முதல் காரியமா பஞ்சு ஸாரைப் பார்த்து நம்ம ப்ரோக்ராமைச் சொல்லிவிடலாம்” என்றார் அம்மாஞ்சி.
“ஆமாம்; அவருக்கும் நிறைய வேலை இருக்கும். தேர் நிலைக்கு வருகிற வரைக்கும் அவர் ஒரு நிலையில் நிற்க மாட்டார். பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டே இருப்பார்” என்றார் சாம்பசிவம்.
அத்தியாயம்-5
அம்மாஞ்சி வாத்தியார், சாம்பசிவ சாஸ்திரி,குள்ள கனபாடிகள் மூவரும் நாலு மணிக்கே எழுந்து ஸ்நா னத்தை முடித்து விட்டார்கள். ஜப்பான் சாஸ்திரி அரண் மனைப் பூங்காவிலுள்ள செர்ரி மரம் ஒன்றின் கீழே போய் உட்கார்ந்து ஜபம் செய்து கொண்டிருந்தார். சாம்பசிவ சாஸ்திரி ஈரத்துணிகளை, குள்ளம் குள்ளமான பரட்டைத் தலைச் செடிகள்மீது காயப் போட்டுக் கொண்டிருந்தார். அம்மாஞ்சி வாத்தியார் பார்க் பெஞ்ச் மீது உட்கார்ந்து தாமே தயாரித்த நெஸ் காப்பியைச் சுடச்சுடச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
”குளிர் வேளையிலே மணக்க மணக்க சூடா ஒரு கப் காப்பி வயிற்றுக்குள் போகும்போது அதன் சுகமே அலாதி தான்” என்றார் அம்மாஞ்சி.
“அந்தக் காப்பி எங்க வயிற்றிலும் கொஞ்சம் போகட் டுமே?” என்றார் சாம்பசிவ சாஸ்திரி.
“சுறுசுறுப்புக்குப் பெயர் போன இந்த ஜப்பான் தேசம் இந்த உஷத் காலத்திலே எப்படி அமைதியாக அடங்கிக் கிடக்கிறது பார்த்தீர்களா?” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“பறவைகள் முறை வைத்துக் குரல் கொடுக்கும் இன்னிசையைக் கேளுங்க. இங்கிலீஷ் நோட் வாசிக்கிற மாதிரி இல்லே?” என்று ரசித்தார் ஜப்பான் சாஸ்திரி.
“விடியற்கால வேளையின் சுகமே தனி. இந்த.. சுகத்தை மெட்ராஸில் பால்காரர்கள்தான் அனுபவிக்கிறார்கள்” என்றார் அம்மாஞ்சி.
“நம் மாதிரி வைதிகர்களும் கூடத்தான்'” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“எவ்வளவு பெரிய அரண்மனை, எத்தனை பெரிய தோட்டம்! மஞ்சளும் ஆரஞ்சுமாகப் பூத்துக் குலுங்கும் இந்த மரங்களின் அழகை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இன்னும் கொஞ்ச நேரத்திலே உதய சூரியன் ஒளி பட்டு இந்தப் பூக்கள் தகதகவென்று நெரும் புக் கொழுந்துகளாக மாறிவிடும்” என்றார் சாம்பசிவம்.
“மதில் சுவரைப் பாருங்கள்! எத்தனை அகலம் ! அதன் மீது ஒரு வண்டியே போகலாம்” என்றார் அம்மாஞ்சி.
“சக்கரவர்த்திக்கு நல்ல டேஸ்ட்… அத்தோடு மரம், செடி, கொடி, மலர் இதிலெல்லாம் அலாதி ஈடுபாடு. “ப்ளாண்ட் லைஃப்’ பற்றிப் பல புத்தகங்கள் எழுதியிருக் காராம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“அதோ பஞ்சு ஸார் கமிங்!” என்றார் அம்மாஞ்சி.
“அடேடே! அதுக்குள்ளே குளிச்சு ரெடியாயிட்டாரே!” வாங்க, வாங்க என்று மூவரும் பஞ்சுவை வரவேற் றார்கள்.
“ராத்திரியெல்லாம் எங்கே? கின்ஸாவா? ரொம்பக் குஷிதான் போலிருக்கு! கோபால் ராவ் எங்கே, ஆளையே காணோம்?”
“இங்கே தானே இருந்தார் இப்போ. அது சரி, நேற்று நீங்க எங்கெல்லாம் போயிருந்தீங்க?என்னெல் லாம் பார்த்தீங்க? தேர் விடறதுக்கு வசதியா ஏதாவது இடம் ‘சூஸ்’ பண்ணீங்களா?” என்று கேட்டான் பஞ்சு.
“கின்ஸாவிலே தான் விடணும். அதுதான் பொருத்த. மான இடம். ரூட்டெல்லாம் கூடப் பார்த்து வைத்து விட்டோம்” என்றார் அம்மாஞ்சி.
“அப்படின்னா இனிமேல் டயத்தை வேஸ்ட் பண்ணக் கூடாது. சுறுசுறுப்பா வேலை நடக்கணும். பிரைம் மினிஸ்டர் டாகியோ மிக்கி, ஃபாரின் மினிஸ்டர் கிச்சி* மியாஸாவா, சக்கரவர்த்தி ஹிரா ஹிடோ எல்லாரையும் நான் சந்திச்சுப் பேசிட்டேன். அவங்க எல்லாரும் ஒரே ஆவலாயிருக்காங்க. விழாவை நம் இஷ்டப்படி நடத்திடச் சொல்றாங்க. ஆனால் தேரை மட்டும் இந்த அரண்மனைக் குள்ளேதான் செய்யணுமாம். சக்கரவர்த்தி, தம் மனைவி மக்களுடன் அதை வேடிக்கை பார்க்கணுமாம். பணத்தைப் பற்றிக் கவலை இல்லை. தேர் வேலை சீக்கிரம் ஆரம்பிக்கணும். அதுதான் முக்கியம்னு சொல்லிட்டாங்க” என்றான் பஞ்சு..
“வள்ளுவர் சிலை…” என்று இழுத்தார் அம்மாஞ்சி.
“அதையும் இங்கே தான் செய்யணுமாம். ஒரு. சௌகரியம். நுங்கம்பாக்கத்தில் வேலை செய்த ஸ்தபதி’ கள், சிற்பிகள், கலைஞர்கள் எல்லாரும் இப்ப ஓய்வாத்தா ன் இருக்காங்க. அவங்க அத்தனை பேரையும் அப்படியே ஒரு ப்ளேன்லே ஏற்றி நாளை மறுநாளே அனுப்பச் சொல் லிட வேண்டியது தான்” என்றான் பஞ்சு.
“வள்ளுவர் சிலைன்னா அதுக்குக் கல் வேணுமே.அ வளவு பெரிய கல்லை எப்படி ப்ளேன்லே கொண்டு வர முடியும்? சிரமப்படுமே…” என்று இழுத்தார் சாம்பசிவம்.
“அதென்ன பிரமாதம்! ஒரு மலையே வேண்டுமானாலும் கொண்டு வரலாம்” என்றார் அம்மாஞ்சி.
“எனக்கு ஒரு ஐடியா தோண்றது… ” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“என்ன அது?”
“வள்ளுவர் சிலை செய்வதென்றால் குறைந்தது நாலு மாசமாவது ஆகுமே…” என்று இழுத்தார் ஜப்பான் சாஸ்திரி.
“அதனாலே?…” என்று கேட்டான் பஞ்சு.
“மயிலாப்பூர் ஸான்ஸ்க்ரிட் காலேஜ் முன்னாலே உள்ள வள்ளுவர் சிலையை இங்கே கொண்டுவந்து விடலாமே!”
“அதெல்லாம் கூடாது. டோக்கியோவிலே வள்ளுவர் சிலை,தேர், தெப்பம், முத்துப் பல்லக்கு இவ்வளவும் செய் தாகணும். அதெல்லாம் எப்படிச் செய்யறாங்கன்னு சக்கர வர்த்தி குடும்பத்தார் நேரில் பார்க்கணும். அதுதான் முக்கியம் இதிலே…” என்றான பஞ்சு.
“எனக்கு ஒரு ஐடியா தோண்றது…” என்றார் சாம்பசிவம்.
“என்ன அது?”
“தெப்போ -76 முடிஞ்சதும் அந்தத் தேரையும் வள்ளு வர் சிலையையும் இந்தத் தோட்டத்திலேயே நிரந்தரமா வைத்து, இங்கே ஒரு வள்ளுவர் கோட்டம் அமைக்க வேண்டும். திருக்குறளுக்காகத் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்ட தமிழ்ப் புலவர்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களில் பத்துப் பதினைந்து பேரைத் தேர்ந்தெடுத்து இந்த வள்ளுவர் கோட்டத்தை அவர்கள் பொறுப்பில் விட்டுவிட வேண்டும். குறள் நெறிகளைப் பரப்ப பாடுபடுவாங்க. அவர்கள்தான் உண்மையாகப் ராம கிருஷ்ணா மடத்திலே இல்லையா சில துறவிகள், அந்த மாதிரி டெடிகேஷனோடு இவங்களும் வேலை செய்வாங்க. இதுதான் என் ஐடியா” என்றார் சாம்பசிவம்.
“நம்ம கலைஞர் கண்ட கனவு” என்றார் அம்மாஞ்சி.
“கலைஞர் வருவாரோல்லியோ இந்த விழாவுக்கு?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“பருப்பில்லாமல் கல்யாணமா?தெப்போ 76 இனாகு ரேஷனே அவர் கையாலேதான். யூ மஸ்ட் கிவ்தி டெவில் இட்ஸ் ட்யூ” என்றான் பஞ்சு.
“பஸ்ட்கிளாஸ் ஐடியா!” என்றார் அம்மாஞ்சி. “இந்த மாதிரி ஐடியாவெல்லாம் பஞ்சு ஸாருக்குத் தான் உதிக்கும்!” என்றார் சாம்பசிவம்.
“அது சரி; சக்கரவர்த்தி இன்று பதினொரு மணிக்கு உங்களுக்கு பேட்டி கொடுக்கப் போகிறார். நீங்க மூணு பேரும் அதற்குள் பாலஸ் ஆபீஸில் ரெடியா இருக்கணும். தேரோட்டம் என்றைக்கு என்று தேதி நிச்சயம் செய்ய ணும். சக்ரவர்த்தி பெயரில் ‘இன்விடேஷன்’ போடணும். அவரிடமே உங்க ஐடியாவெல்லாம் சொல்லுங்க…” என் றான் பஞ்சு.
“நான் சக்கரவர்த்தியை ஏற்கெனவே பார்த்தாச்சு!” சொல்லிக்கொண்டே வந்தார் கோபால் ராவ்” என்று பெருமை பொங்க.
“என்னது! சக்கரவர்த்தியைப் பார்த்துவிட்டீரா? எப்போது பார்த்தீர்?” என்று கேட்டான் பஞ்சு.
“காலை வேளையில் சக்கரவர்த்தி தோட்டத்தில் உலா வச் செல்வது வழக்கமாம். அரண்மனை சிப்பந்தி ஒருவர் சொன்னார். சக்கரவர்த்தி எந்தப் பக்கம் உலாத்துவார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தப் பக்கமாக நடந் தேன். ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த செடி கொடி களையும் கையோடு எடுத்துச் சென்றேன். சக்கரவர்த்தி என்னைப்பார்த்துவிட்டு அருகில் அழைத்து ‘இந்தோஜின்? இந்தியனா?’ என்று கேட்டார். ‘நான் தேர் விடுகிற பார்ட்டி யைச் சேர்ந்தவன்’ என்று சொன்னேன். ரொம்ப சந்தோ ஷப்பட்டார். நான் அவருக்குப் பிறந்த நாள் பரிசாகக் கொண்டு வந்த செடிகளைக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தேன்.
“இதெல்லாம் என்ன கொடி?” என்று கேட்டார்.
“இண்டியாவிலிருந்து ஸ்பெஷலாகக் கொண்டு வந்திருக்கிறேன். தங்களுக்கு மெரின் பயாலஜி பிடித்த சப்ஜக்ட்னு கேள்விப்பட்டிருக்கிறேன். தங்கள் பர்த் டே ப்ரஸெண்ட்” என்றேன்.
“சக்ரவர்த்திக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. அருகி லிருந்த தம் மனைவியிடம் முத்துமாலை ஒன்றைக் கேட்டு வாங்கி எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டு “தொமோ’ என்று நன்றி கூறினார்.”
“அடிச்சுது உமக்கு யோகம். சக்கரவர்த்தி பேட்டிக்கு அவங்கவங்க தவம் கிடக்கிறாங்க இங்கே. அவர் பிறந்த நாளன்று அவரை தரிசனம் செய்ய அரண்மனைக்கு வெளியே பெரும் கூட்டம் காத்திருக்கும்” என்றான் பஞ்சு
“சக்ரவர்த்தி எனக்கு தரிசனம் கொடுக்கவில்லை நான்தான் குறுக்கே போய் அவருக்கு தரிசனம் கொடுத் தேன். எக்கச்சக்கமா வழியிலே என்னிடம் மாட்டிக் கொண்டார்” என்றார் கோபால் ராவ்.
“இன்றைக்கு கோபால் ராவ் நரி முகத்திலே முழிச்சிருக்கணும்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“இங்கே ஏது நரி? அம்மாஞ்சி முகத்திலேதான் விழிச்சேன்” என்றார் கோபால் ராவ்.
“பஞ்சு ஸார்! இன்றைக்கு நாங்க மூணு பேரும் மகா ராஜாவைப் பார்த்தப்புறம் ஸூப்பர் எக்ஸ்பிரஸிலே க்யோட்டோவுக்குப் போய் வந்து விடுகிறோம். ஜப்பானுக்கு வந்து க்யோட்டோ பார்க்கலேன்னா காசிக்குப் போய் கங்கையில் குளிக்காத மாதிரியாம்” என்றார் அம்மாஞ்சி. (க்யோட்டோவுக்கா? அப்புறம் எங்கெல்லாம் போகப் போறீங்க?”
“நாரா, கோபே, ஒஸாகா, ஹகோனே எல்லா இடத்துக்கும் தான்…” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“ஹகோனே ஏரிக்கு நீங்க இங்கே வந்த பிறகு ஹெலி காப்டர்லே போகலாம். அப்பத்தான் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்” என்றான் பஞ்சு.
டோக்கியோ சென்டிரல் ஸ்டேஷனுக்குப் போய் ஸூப்பர் எக்ஸ்பிரஸ் இருக்குமிடத்தைத் தேடிக் கண்டு பிடித்து அதில் ஏறி உட்காருவதற்குள் மூன்று சாஸ்திரிகளும் திணறிப் போனார்கள்.
“ஒரே பிரமிப்பா யிருக்கு! திக்கு திசையே புரியல்லே. எவ்வளவு பெரிய ஸ்டேஷன்? எத்தனை எண்ட்ரன்ஸ்? எத்தனை ரயில்? எத்தனை பிளாட்பாரம்? எத்தனை லைன்? அடேயப்பா” என்றார் அம்மாஞ்சி.
ஸூபர் எக்ஸ்பிரஸ் எடுத்த எடுப்பிலேயே அம்பு மாதிரி “விர்” ரென்று புறப்பட்டது.
“இதற்கு ‘புல்லெட்’ என்று கூட ஒரு பெயர் உண்டாம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“உம்ம மருமானைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது” என்றார் அம்மாஞ்சி புன்சிரிப்போடு.
“கனபாடிகளே! ரயில் என்ன வேகம் பார்த்தீங்களா?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“கனவேகம்! கனபாடிகளெல்லாம் போகிறோம். இல்லையா?” என்றார் அம்மாஞ்சி.
“சிலேடையிலே நம்ம அம்மாஞ்சி கிட்டே கி.வா.ஜ., கலைஞரெல்லாம் பிச்சை வாங்கணும்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“உம்ம சிண்டு காற்றிலே பிய்ச்சுண்டு போயிடப் போறது!” என்றார் சாம்பசிவம்.
“ஜப்பான்லே ‘ஷிண்டோ’ ரிலிஜியன் தானாமே?” என்றார் அம்மாஞ்சி.
“சிண்டு வேறே, ‘ஷிண்டோ’ வேறே” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“இந்த ஊர்லே ‘ஸிமோ’ங்கற பயில்வான்கள் கூடச் சிண்டு வைத்துக் கொண்டிருப்பார்களாம். அதனாலே ஷிண்டோ ரிலிஜியனுக்கும் சிண்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோன்னு நினைச்சேன்” என்றார் அம்மாஞ்சி.
”உம்மை யார் அப்படி நினைக்கச் சொன்னது?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“யாரும் சத்தம் போட்டுப் பேசமாட்டேங்கறாளே, இந்த ரயில்லே” என்றார் அம்மாஞ்சி.
“ரயில்லே என்ன! எங்கேயும் அப்படித்தான். இந்த நாடே அமைதியா இருக்கு. மக்களெல்லாம் அடக்கமா யிருக்கா. அதுதான் நாகரிகம்” என்றார் சாம்பசிவம்.
“பசி இல்லாத நாட்டிலே சத்தம் ஏது? பசி உள்ள நாட்டிலே தான் இரைச்சல் அதிகமாயிருக்கும். பசி உள்ள குழந்தை அழறது. பால் குடிச்ச குழந்தை மௌனமாச் சிரிக்கிறது. ஒரு நாடும் அந்த மாதிரிதான்…” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“அது மட்டுமில்லே. திருட்டு புரட்டு எதுவும் கிடையாதாம் இந்த நாட்டிலே…” என்றார் சாம்பசிவம்.
“புரட்டுன்னா?” அம்மாஞ்சி கேட்டார்.
“நம் ஊர் டாக்ஸியிலே மீட்டரைப் புரட்டறாங்களே அந்த வழக்கம் இங்கே கிடையாது. ஒரு லட்ச ரூபாயை டாக்ஸியிலே மறந்து வைத்தாலும் யாரும் தொடமாட் தொலைச்சவங்க அட்ரஸை எப்படியாவது கண்டு பிடிச்சு பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுவாங்க. என்றார் ஜப்பான் சாஸ்திரி.
அம்மாஞ்சி வாத்தியார் முகத்தை வருத்தமாக வைத்துக் கொண்டார்.
“சத்தியம் தவறாத ஒரு நாட்டைக் கண்டு சந்தோஷம் படும் ஓய்! வருத்தப்படுகிறீரே!” என்றார் சாம்பசிவம்.
“என்னிடம் லட்ச ரூபாய் இல்லையேன்னு வருத்தப்பட றேன். இருந்தால் இந்த ரயிலில் மறந்து வைத்து விட்டுப் போய்ப் பார்க்கலாமே!” என்றார் அம்மாஞ்சி.
“இந்த ரயில் எவ்வளவு சுத்தமாயிருக்கு. ஒவ்வொரு சீட்டின் மீதும் தும்பைப்பூ மாதிரி ஒரு வெள்ளைத் துணி போட்டிருக்கான். டாய்லெட் எப்படி இருக்கு என்று பார்த்துவிட்டு வருகிறேன்'” என்று எழுந்து போனார் சாம்பசிவம்.
போனவர் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
ஜப்பான் சாஸ்திரிக்குக் கவலை வந்து விட்டது. “அடிக்கடி தொலைந்து போவதையே ஒரு தொழிலாக வைத்துக் கொண்டிருக்கிறாரே, இந்த சாம்பசிவ சாஸ்திரி” என்று கடிந்து கொண்டே டாய்லெட் பக்கம் போய்ப் பார்த்தார். கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. எவ்வளவோ முயன்றும் ஜப்பான் சாஸ்திரியால் அதைத் திறக்க முடியவில்லை.
ஜப்பான் சாஸ்திரி கூச்சலிடத் தொடங்கினார். அந்த ரயிலில் பயணம் செய்த அத்தனை ஜப்பானியர்களும் அதிர்ச்சியடைந்து டாய்லெட் பக்கம் ஓடினார்கள். இதற்குள் அந்த ரயில் க்யோட்டோ ஸ்டேஷனில் போய் நின்றது. உடனே ஸ்டேஷனிலிருந்த ரயில்வே சிப்பந்திகள் ஓடி வந்து அந்தக் கதவைத் திறந்து விட்டார்கள். டாய்லெட் டுக்குள்ளிருந்து வெளியே வந்த சாஸ்திரி இஞ்சி தின்ற மாதிரி விழித்துக் கொண்டிருந்தார்.
“என்ன ஆயிற்று உமக்கு?…” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“கதவைச் சாத்தினேன். முடிக்கொண்டு விட்டது. அப்புறம் எப்படித் திறந்தாலும் திறக்க முடியவில்லை. தாழ்ப்பாளில் ஏதோ கோளாறு போலிருக்கு. ஜாமாகி விட்டிருக்கிறது” என்றார் சாம்பசிவம்.
“ஆபத்து சமயத்திலே அடிப்பதற்கென உள்ளே அலாரம் மணி இருக்கிறதே, அதை அடித்திருக்கலாமே” என்றார் ஒரு ஜப்பானியர்.
“அது எனக்குத் தெரியவில்லை” என்றார் சாம்பசிவம்.
“பரவாயில்லை; இப்படி ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறோம்” என்று கூறி மன்னிப்பு கேட்டார் ஒரு ரயில்வே அதிகாரி.
“என் அறியாமைக்கு நீங்கள் வருத்தப்படுவானேன்?” என்றார் சாம்பசிவம்.
“இரண்டு மணி நேரம் டாய்லெட்டிலேயே பயணம் செய்திருக்கிறீர்கள். அது அசௌகரியம்தானே? ஆகையால் நாங்கள் உங்களிடம் சார்ஜ் வாங்க மாட்டோம். தங்கள் டிக்கட் பணத்தை வாபஸ் தந்து விடுகிறோம்” என்று கூறி ஆயிரத்து முன்னூறு யென்களை சாஸ்திரிகளிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.
“அடாடா! என்ன தேசம், என்ன தேசம்! நம் ஊரில் இம்மாதிரி நடந்திருந்தால் உடனே ‘டிக்கெட்லெஸ் ட்ராவல்’னு சந்தேகப்பட்டு கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளியிருப்பான்” என்றார் சாம்பசிவம்.
“இன்று நீங்க நரிமுகத்தில் விழித்திருக்க வேண்டும். கோபால் ராவுக்கு முத்துமாலை. உமக்கு டிக்கட் பணம் வாபஸ்” என்றார் அம்மாஞ்சி.
“நானும் உம்முடைய முகத்தில் தான் விழித்தேன்!” என்றார் சாம்பசிவம்.
அத்தியாயம்-6
கோபால் ராவையும் பஞ்சுவையும் டீக்கு அழைத் திருந்தார் சக்கரவர்த்தி ஹிரோஹிடோ. கோபால் சாவைப் பார்த்ததும் புன்சிரிப்போடு, கொலையில் கொடுத்த ப்ளான்ட்ஸ் எல்லாம் ரொம்ப யூஸ்ஃபுல். தோமொ, தோமொ” என்றார் சக்கரவர்த்தி.
கோபால் ராவுக்கு உச்சி குளிர்ந்து போயிற்று.
திருவாரூர் தேர்ப் படத்தையும் கின்ஸாவில் தேர் ஒடப் போகிற வீதிகளின் வரைபடத்தையும் சக்கரவர்த்தி யிடம் எடுத்துக் காட்டினான் பஞ்சு. அந்தத் தேரைக் கண்டுவிட்டு, “பியூத்திபுல்! ஒண்டர்புல்” என்று வியந்து பாராட்டினர் சக்கரவர்த்தியும் மகாராணியும்.
“பாலெஸிலிருந்து தேரைக் கின்ஸாவுக்கு எப்படிக் கொண்டு போவது?” என்றொரு பிரச்னையைக் கிளப் யினான் பஞ்சு.
“ஏன், அதிலே என்ன கஷ்டம்?’” என்று கேட்டார் சக்கரவர்த்தி.
“குறுக்கே நிறைய ரயில்வே பிரிட்ஜுகள் இருக்கின்றன. பிரிட்ஜுகளுக்கு அடியில் தேரைக் கொண்டு போக முடியாமல் மேலே தடுக்கும் போலிருக்கிறதே” என்றான் பஞ்சு.
“டோண்ட் ஒர்ரி.யூ கன்ஸல்ட் அவர் என்ஜினீர்ஸ். தே வில் ஸால்வ் தி ப்ராப்ளம் இன் நோ டைம்'” என்றார் சக்கரவர்த்தி.
“தேரை கீழ்பாதி மேல் பாதி என்று இரண்டு பாதி பாகப் பிரித்து எடுத்துக்கொண்டு போய்விட்டால் போகிறது” என்று யோசனை கூறினார் கோபால் ராவ்.
“எதற்கும் வடபாதி வந்து விடட்டும். அப்புறம்தான் எல்லாம் சரியாகும்” என்றான் பஞ்சு.
“சாஸ்திரிகள் மூன்று பேரும் எங்கே?” என்று கேட் டார் மகாராணி.
“தெப்பத்துக்கு இடம் பார்க்கப் போயிருக்காங்க” என்றார் கோபால் ராவ்.
“ஐ லைக் ஷிம்பாஷி சாஸ்திரி! ஹிஸ் நேம் ஸௌண் ட்ஸ் லைக் ஜாப்னிஸ்” என்றார் மகாராணி.
“தேரோட்டத்துக்கு டேட் பிக்ஸ் பண்ணியாச்சா? இண்டியாவிலிருந்து ஆளெல்லாம் எப்போது வருகிறார்கள்?” என்று கேட்டார் சக்கரவர்த்தி.
“அடுத்த மாதம் ஏதாவது ஓரு தேதி வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறோம். சக்கரவர்த்தியின் சௌகரியம் தெரிந்த பிறகுதான் பிரைம் மினிஸ்டரைக் -கன்ஸல்ட் செய்யணும்'” என்றான் பஞ்சு.
“வெரிகுத்! டயட் பில்டிங்லே உங்களுக்காக ஒரு ஆபீஸ் போடச் சொல்லியிருக்கேன். என்னுடைய பர்ஸனல் ஸெக்ரடரி யோஷினாரியையும் இனி உங்களோடு கூடவே இருக்கச் சொல்லியிருக்கிறேன். அவர் உங்களுக் குத் தேவையான எல்லா உதவிகளும் செய்வார். அவ் வளவுதான்; இனி வேலையெல்லாம் க்விக்கா நடக்கணும்.” என்றார் சக்கரவர்த்தி.
“நீங்க எதுக்கும் கவலைப்படாதீர்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நாலு ஸ்டெனோ மட்டும் இருந்துட்டால் போதும். வேலை மடமடன்னு தீர்ந்துவிடும்” என்றான் பஞ்சு.
“ஸ்டெனோதானே! அதென்ன பிரமாதம்? யோஷினா ரியிடம் சொன்னால் இண்டியன் எம்பஸியிலிருந்து எத்தனை ஸ்டெனோ வேண்டுமானாலும் வரச் சொல்லுவார். இண்டியன் அம்பாஸிடர் கூட இந்தத் தேரோட்டத்திலே ரொம்ப இண்ட்ரெஸ்டட்” என்றார் சக்கரவர்த்தி.
“சரி, இப்போதே நானும் யோஷினாரியும் அம்பாஸி உரைப் போய்ப் பார்த்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிடுகிறோம்…” என்றான் பஞ்சு.
“என் ன செய்வீங்களோ, எப்படி முடிப்பீங்களோ எனக்குத் தெரியாது. முதலில் இண்டியாவிலிருந்து என் னென்ன வர வேண்டும், யார் யார் வர வேண்டும் என்பதற்கெல்லாம் கம்ப்ளீட் லிஸ்ட் தயார் செஞ்சுக்குங்க. ஒரு சின்ன ஐடம் கூட மறக்கக்கூடாது. ஐ ஆம் ஈகர் டு நோ ஆல் தி டீடெய்ல்ஸ் தென் அண்ட் தேர். நாளையி லிருந்து நீங்க என்னோடுதான் டீ சாப்பிடணும்” என்றார் சக்கரவர்த்தி.
மறு நாளே டயட் பில்டிங்கில் ‘தெப்பேம்- 76″ அலு வலகம் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டது. அன்று மாலை கோபால் ராவ் ‘பிரஸ் மீட்’ ஒன்றுக்கு ஏற்பாடு செய்து விட்டார். பஞ்சு அஷ்டாவதானம் செய்துகொண் டிருந்தான். லெட்டர் டிக்டேஷன் ஓவர்ஸீஸ் கால், யோஷினாரியோடு டிஸ்கஷன், அம்பாஸிடரோடு மீட்டிங், இப்படி ஓயாத வேலை அவனுக்கு. இவ்வள வுக்கும் இடையில் மெட்ராஸுக்குக் கால் போட்டு பாப்ஜி யோடு பேசி தமிழ் நாட்டிலிருந்து அனுப்ப வேண்டிய வற்றுக்கு ஒரு ‘லிஸ்ட்’டும் சொல்லிவிட்டான்
தினப் பத்திரிகை க நிருபர்களுக்கு கோபால் ராவ் கொடுத்த செய்தி அடுத்த சில மணி நேரத்துக்குள் ஜப்பான் டைம்ஸ், அஸாகி ஈவினிங் நியூஸ், மைனிச்சி டெய்லி நியூஸ் போன்ற முக்கியப் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகி விட்டது.
SOUTH INDIAN TEMPLE CAR FESTIVAL IN TOKYO
Emperor Showing keen interest
Five-member delegation has already arrived
Ginza, the magic street of a million, lights venue for Therottam
Millions of tourists are expected
“கோபால் ராவ்! முதலில் விழாவுக்குப் பொருத்தமாக ஒரு நல்ல சின்னம் தயாரிக்க வேண்டுமே!” என்றான் பஞ்சு.
“இந்த நாட்டிலே உள்ள முக்கிய ஆர்ட்டிஸ்ட்டுகளை யெல்லாம் அழைத்து ஒரு டிசைன் போட்டி நடத்தி விடலாமா?” என்று கேட்டார் கோபால் ராவ்.
“அதற்கெல்லாம் டைம் இல்லை. ‘எக்ஸ்போ ஸெவெண்டி’க்குச் சின்னம் தயாரித்துத் தந்த ஆர்ட் டிஸ்ட் மட்ஸுஷிடாவையே கூப்பிட்டு வரைந்து கொடுக்கச் சொல்வோம்” என்றான் பஞ்சு.
“அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறிய யோஷினாரி உடனே டெலிபோனை எடுத்து அந்த ஆர்ட்டிஸ்ட்டிடம் பேசினார்.
“க்யோட்டோ ரொம்பப் புராதனமான நகரம். யுத்தத் தால் பாதிக்கப்படாத ஊர்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“கிராப் தலைகளுக்கு நடுவே நம்மைப் போன்ற வைதி கர்கள் மட்டும் குடுமியோடு வாழ்கிறோம் இல்லையா? அந்த மாதிரி!” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“பஸ்ட்கிளாஸ் உதாரணம்” என்றார் அம்மாஞ்சி.
“சரித்திர கால அரண்மனைகள், புராதனக் கோயில் கள், புத்தர் சிலைகள், மலைகள், நீர்த்தேக்கங்கள் மூங்கில் புதர்கள் அவ்வளவும் அப்படி அப்படியே இருக்கின்றன” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“நீர் சரித்திர காலத்தில் இங்கே வந்து பார்த்திருக்கிறீரா?” என்று குத்தலாகக் கேட்டார் அம்மாஞ்சி.
ஜப்பான் சாஸ்திரி சளைக்கவில்லை.
“ஆமாம்; அப்போது இவ்வளவு வசதி கிடையாது. ஸூப்பர் எக்ஸ்பிரஸ் இல்லை. அதனால் குதிரை மீது ஏறி வந்தேன்” என்றார் பதிலுக்கு.
“அதோ அந்த மூங்கில் புதர்கூட அப்போது இருந்ததா?” என்று கேட்டார் அம்மாஞ்சி மேலும்.
”ஆமாம். நான் அதிலிருந்து ஒரு மூங்கிலை வெட்டி எடுத்துக் கொண்டு போய் வீட்டிலே துணி உலர்த்தும் கொடியாகக் கட்டி வைத்திருக்கிறேன். இன்னும் கூட அந்த மூங்கில் இருக்கிறது” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“சுத்த வெட்டிப் பேச்சு.நாம் எங்கே தங்கப் போகி றோம்? அதை யோசித்தீர்களா?” என்று கேட்டார் சாம்பசிவம்.
‘‘க்யோட்டோ டவர் ஓட்டலில்தான் தங்கணும். அதுதான் இதோ ஸ்டேஷனுக்குப் பக்கத்திலேயே இருக்கிறது” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
மூவரும் அந்த ஓட்டலில் போய்த் தங்கினார்கள்.
ஜப்பான் சாஸ்திரி ஓட்டல் பணிப்பெண் ஒருத்தியை அழைத்து, அவளிடம் எப்படியோ பேசி ஒரு கெட்டில் நிறைய கொதிக்கும் வெந்நீர் கேட்டு வாங்கி வந்து விட் டார். அம்மாஞ்சி அதில் தயாரித்த நெஸ் காப்பியை மூவரும் அருந்தி சிரம பரிகாரம் செய்து கொண்டனர்.
“என்ன இருந்தாலும் நம்ம அம்மாஞ்சி தயாரிக்கிற காப்பிக்கு உள்ள மணமே அலாதி!” என்றார் சாம்பசிவ சாஸ்திரி.
” அம்மாஞ்சி போடுகிற காப்பி அமிஞ்சியாப் போகுமா?” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“இன்று ஏகாதசியாச்சே, ராத்திரி என்ன பலகாரம்?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“நான் அவல் கொண்டு வந்திருக்கிறேன். அதைத் தயிரில் ஊறப்போட்டுச் சாப்பிட்டால் தேவாமிருதமாயிருக்கும்” என்றார் அம்மாஞ்சி.
“நீர் ஏற்கனவே தேவாமிருதம் ருசி பார்த்திருக் கிறீரா?’ என்று அம்மாஞ்சியைச் சமயம் பார்த்து மடக்கினார் ஜப்பான் சாஸ்திரி.
“ஹரிஹி! நீர் சரித்திர காலத்தில் ஜப்பானுக்கு வந்த மாதிரி தான் நான் தேவாமிருதம் ருசி பார்த்ததும்!” என்று சொல்லிச் சிரித்தார் அம்மாஞ்சி.
“அப்படி வாங்க வழிக்கு!” என்றார் ஜப்பான் சரஸ்திரி.
“நாளைக் காலையில் நாராவுக்குப் போய் புத்தர் கோயி லைப் பார்த்துவிட்டு வந்து விடலாம். உலகத்திலேயே மிகப் பெரிய புத்தர் சிலை அங்குதான் இருக்கிறதாம்” என்றார். சாம்பசிவம்.
“இங்கிருந்து நாராவுக்கு எப்படிப் போவது?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“ரயில், டூரிஸ்ட் பஸ், டாக்ஸி எதில் வேண்டுமானா லும் போகலாம். முப்பதே நிமிஷம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“இன்று சாயந்திரம் திரும்பி வந்ததும் டீ ஸெரிமனியும் யார்த்துவிட வேண்டியதுதான். க்யோட்டோ தான் டீ ஸெரிமனிக்கு ஏற்ற இடமாம். அதைப் பார்க்காமல் தள்ளிக் கொண்டே போகிறது” என்றார் சாம்பசிவம்.
“தள்ளிப் போனால் போகட்டுமே! இது கூட சிராத் தமா என்ன திதி தவறாமல் செய்வதற்கு?” என்றார் அம்மாஞ்சி.
“வந்த ஜோலி எதுவும் ஆகவில்லை; ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிறோம். தெப்பம் விடுவதற்கு
இடுவதற்கு ஏற்ற இடம் எது என் று தீர்மானம் செய்வதற்கே இத்தனை நாளா?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“பஞ்சுவும் கோபால்ராவும் இருக்கச்சே நமக்கென்ன கவலை?’ என்றார் அம்மாஞ்சி
“நாரா போவதற்கு டூரிஸ்ட் பஸ் இங்கே வாசலிலேயே வந்து து நிற்குமாம். காலையில் ஏழு மணிக்கு நாம் ரெடியா யிருக்க வேண்டும். க்ரே லைன் பஸ்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“ரொம்ப நல்லதாப் போச்சு. இயற்கைக் காட்சிகளை யெல்லாம் நான் போட்டோ எடுக்கப் போகிறேன். பஸ்ஸில் எனக்கு ஓரம் ஸீட் வேண்டும்” என்றார் அம்மாஞ்சி.
“மலைகளைப் படம் எடுங்கள். அவைதான் அசங்காமல் அப்படியே நிற்கும்” என்றார் சாம்பசிவம்.
“பஸ் அசங்குமே” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“சரி வாங்க, மேலே போய்ப் பார்த்துவிட்டு வரலாம்” என்று அழைத்தார் அம்மாஞ்சி.
மூவரும் எட்டாவது மாடிக்குப்போய் ‘ஹிகாஷ்யாமா என்ற க்ரில் ரூமுக்குள் நுழைந்து கண்ணாடிச் சுவர் ஓரமாக உட்கார்ந்து கொண்டார்கள்.
தற்செயலாய்க் கீழே வீதியை எட்டிப் பார்த்த ஜப்பான் சாஸ்திரி, அதோ என் மருமான் ரமேஷ், ரமேஷ்!” என்று கத்திக் கொண்டு எழுந்து நின்றார்.
“ஏன் இப்படிக் காட்டுத்தனமா கத்தறீங்க? இது இண்டியா இல்லை. மெதுவாகப் பேசும். இங்கே யாராவது உரக்கப் பேசுகிறார்களா,பார்த்தீரா?” என்று அடக்கினார் அம்மாஞ்சி.
“அவர்களுக்கு இப்படி திடீரென்று மருமான் வரவில் லையே!” என்று கூறிய ஜப்பான் சாஸ்திரி ரமேஷைப் பார்க் கக் கீழே இறங்கி ஓடினார்.
ஜப்பான் சாஸ்திரியைக் கண்டதும் “நீங்க எப் வந்தீங்க மாமா, ஜப்பானுக்கு?” என்று வியப்பு மலரக் கேட்டான் ரமேஷ்.
“நீ டோக்கியோவிலிருந்து எப்போது வந்தாய்? அதைச் சொல்லு முதலில்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“நண்பர்களோடு எஸ்கர்ஷன் வந்திருக்கிறேன் மாமா நாலாவது மாடியில் தங்கியிருக்கிறோம். இப்போது தான் வந்தோம்” என்றான் ரமேஷ்.
“ரொம்ப விஷயங்கள் பேச வேண்டும் உன்னோடு. வா, மேலே போய் உட்கார்ந்து பேசலாம்” என்று அவனை க்ரில் ரூமுக்கு அழைத்துச் சென்றார் ஜப்பான் சாஸ்திரி.
“நீங்க வந்திருக்கிற விஷயம் எனக்குத் தெரியும். தெப்போ -ஸெவெண்ட்டிஸிக்ஸ் தானே? என்னைக்கூட தெப்போ – 76 சம்பந்தமா டயட் ஆபீஸுக்கு ‘போஸ்ட் பண்ணியிருக்கிறார்கள். அடுத்த வாரத்திலிருந்து எனக்கு.. அங்குதான் வேலை” என்றான் ரமேஷ்!
“அப்படியா, பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“பால் என்றதும் ஞாபகம் வருகிறது. எனக்குக். கொஞ்சம் மில்க்கும் ப்ரூட்ஸும் வேணும். இன்று ஏகாதசி” என்றார் சாம்பசிவம்.
எல்லோருக்கும் ஃப்ரூட் ஸாலட் ஆர்டர் கொடுத்தான் ரமேஷ்.
“இவன்தான் உங்க மருமானா? ரொம்ப லட்சணமா துருதுருப்பா இருக்கானே! எந்தப் பெண் கொடுத்து வெச்சிருக்காளோ?” என்றார் அம்மாஞ்சி.
“பாஷை தெரியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண் டிருந்தோம். தெய்வமே உன்னை இங்கே கொண்டுவிட்டது” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
‘”சரி, நாளைக்கு என்ன புரோக்ராம்?” என்று கேட்டான் ரமேஷ்.
“நாரா போகப் போகிறோம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“ரொம்ப நல்லதாப் போச்சு. நானும் உங்களோடு வந்து விடுகிறேன்” என்றான் ரமேஷ்.
மறுநாள் பொழுது விடிவதற்குள்ளாகவே பயணத்துக்- குத் தயாராகிவிட்டார்கள் சாஸ்திரிகள் மூவரும. டூரிஸ்ட் பஸ் ஏழு மணிக்குள்ளாகவே நாரா போய்ச் சேர்ந்து விட் டது. “டீர் பார்க்’ அருகில் போய் நின்ற பஸ்ஸைக் கண்ட தும் அங்கிருந்த மான்கள் கூட்டம் கூட்டமாக வேலி ஓரத்தில் வந்து நின்று கொண்டன. டூரிஸ்ட்கள் சிலர் அவற் றைப் படம் எடுத்துக் கொண்டார்கள். சிலர் அவற்றுக்கு. பிஸ்கட் மாதிரி குச்சி குச்சியாக இருந்த தின்பண்டம் ஒன்றை விலைக்கு வாங்கிப்போட்டார்கள்.
“இந்த மான்களுக்கு இந்த பிஸ்கெட்டுகளைத் தினம் தினம் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்காதோ?” என்றார் அம்மாஞ்சி.
“நமக்கு உளுந்து வடை அலுத்துப் போச்சா?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
அம்மாஞ்சி மான்களைத் தடவிக் கொடுத்தார்.
“இந்த மான்கள் பயப்படவே இல்லையே. நம் ஊர் ஜூவில் ஆளைக் கண்டால் பயந்து ஓடுமே” என்றார் சாம்பசிவம். அம்மாஞ்சி வாத்தியாரையும் மானையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டான் ரமேஷ்.
”அம்மாஞ்சியும் மானும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத்துக்கு ‘மானும் கரடியும்’ என்று தலைப்புக் கொடுக்கலாம்” என்று கேலி செய்தார் சாம்பசிவம்.
“நல்ல மான்தோல் கிடைத்தால் கீழே ஆசனமாகப் போட்டுக்கொண்டு ஜபம் செய்ய உதவும், ” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“மானை யாரும் தொடக்கூடாது. இங்கே மானைத் தொட்டால் நம்ம தோலை உரித்து விடுவார்கள்” என்றான் ரமேஷ்.
“மான், யானை இதெல்லாம் செத்தாலும் பயன்படுகின்றன. மனுஷன் செத்தால் எதற்கும் உபயோகமில்லை” என்றார் சாம்பசிவம்.
“மெடிகல் காலேஜில் எலும்புக் கூட்டை வைத்துப் பாடம் சொல்லித் தர உபயோகப்படுமே” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
அடுத்தாற்போல், புத்தர் கோயிலுக்குப் போய்ப் பார்த்தார்கள். பெரிய பெரிய வைரம் பாய்ந்த மரங்களைக் கொண்டு விதானங்களும் கூரைகளும் அமைத்துக் கட்டப் பட்டிருந்தது அந்தக் கோயில். சாம்பசிவம் அவற்றை அண்ணாந்து பார்த்தபடி “ஆகா! ஜப்பான்காரன் மூளையே மூளை!” என்று வியந்து கொண்டிருந்தார்.
“வாரும், வாரும், நேரமாகிறது; அப்படியே ஆகா சத்தைப் பார்த்துக்கொண்டே திடீரென்று காணாமல் போய் விடுவீர். இனிமேல் தேர் மாதிரி உமக்கும் ஒரு வடத்தைக் கட்டி இழுத்துப் போக வேண்டியதுதான்” என்றார் அம்மாஞ்சி.
“தேர் செய்வதற்கு வேண்டிய மரம் ஜப்பானிலேயே கிடைக்கும் போலிருக்கிறதே” என்றார் சாம்பசிவம்.
“தெப்பம் விடுவதற்கு மூங்கிலுக்குப் பஞ்சமில்லை” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
மாலை மணி மூன்றுக்குள்ளாகவே எல்லோரும் க்யோட்டாவுக்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.
“ரமேஷ்! இன்று மாலையே டீ ஸெரிமனி பார்க்கணும்!” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“இங்கே யஸாகா ஹால் என்று ஒரு இடம் உள்ளது. ஜப்பான் நாட்டுக் கலாசாரங்கள் அவ்வளவையும் அங்கே. பார்த்து விடலாம். டீ ஸெரிமனி கூட அங்கே உண்டு. வாருங்கள், அங்கே உங்களை அழைத்துப் போகிறேன். நான் உள்ளே வரமாட்டேன். ஏற்கனவே நான் டீ ஸெரி மனி பலமுறை பார்த்திருக்கிறேன். எனக்கு அது ரொம்ப ‘போர்’ அடிக்கும்” என்றான் ரமேஷ்.
மூவருக்கும் ‘ஜப்பானிய’ உடைகள் வாங்கிக் கொடுத்து டீ ஸெரிமனி நடக்குமிடத்துக்கு அழைத்துச் சென்றான் ரமேஷ். மூவரும் செருப்பைக் கழற்றி வாசலி லேயே விட்டு விட்டு உள்ளே போய் உட்கார்ந்தார்கள். இவர்களைக் கண்டதும் அங்குள்ள ஜப்பானியப் பெண்கள் இடுப்போடு உடலை வளைத்து வணக்கம் தெரிவித்தார்கள். அங்கே மேஜை நாற்காலிகள் இல்லை. தரையில் பாய் விரிக் கப்பட்டிருந்தது. மூவரும் ஜப்பானிய முறைப்படி மண்டி யிட்டு உட்கார்ந்து கொண்டார்கள். அப்படி உட்காருவது அவர்களுக்குக் கஷ்டமாயில்லை. மூங்கில் குழாய்களில் ஒருத்தி எதையோ ஊற்றிக் கொண்டிருந்தாள். இன்னொ. ருத்தி கலையழகு மிக்க பளபளக்கும் பீங்கான் கோப்பைகளை” நளினமாகத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
– தொடரும்…
– 1975-76இல் தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது.
– தெப்போ- 76, முதற் பதிப்பு: அக்டோபர் 1976, பூம்புகார் பிரசுரம், சென்னை.