தனி வாழ்வும் குடும்ப வாழ்வும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,695 
 
 

கன்றுகளும் பெண்மானும் சூழ்ந்து நிற்கக் கலைமான் நிற்கிறது. வேடன் வருகிறான். கலைமான் நடுக்கம் கொள்கிறது. தான் மட்டுமே நின்றால் விரைவாக ஓடிவிடலாம். தன் கன்றுகள் தப்ப வேண்டுமே, தன் காதலி பிழைக்க வேண்டுமே என்று அஞ்சி ஓடுகின்றது. இந்தக் காட்சி புலவர் கண்ணை விட்டு மறையவே இல்லை. சிறிது தொலைவு சென்றார். மான் ஒன்று தனியாக நின்று மேய்ந்துக் கொண்டிருந்தது. வேடன் வில்லுடன் ஒடி வந்தான் மானோ பாய்ந்து ஓடி மறைந்து விட்டது.

புலவர் சிந்தனை விரிந்தது. குடும்பத்தால் ஏற்படும் தொல்லையை நினைத்தார். தனியாக இருந்தால் எப்படியேனும் வாழ்ந்து தொலைத்து விடலாமே என்று எண்ணினார். குடும்பம், கால் விலங்காய் இருக்கிறதே என்று ஏங்கினார்.

அப்படியே தளர்ந்து விடவில்லை. அவர் மனந்தேறினார். தன்னை நம்பி வாழ்வோரை நினைத்தார். கலைமான் கடமையை எண்ணினார். தன் கடமையை ஆற்றக் கால்கள் விரைந்தன.

– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *