சிதிலம் தாங்காத சிற்பிகள்…





(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10
அத்தியாயம்-7
பரத் ரொம்ப மௌனம் நிதானமாக காரை ஓட்டிக்கொண்டு வந்தான். கணேசுக்கு அவன் மௌனம் சங்கடமாய் இருந்தது.

“என்னடா யோசனை?” கேட்டான்.
“சிவாவை எப்படி ஜெயிக்கிறதுன்னு.”
‘இந்த படத் தயாரிப்பளர் மேல நஷ்ட ஈடு வழக்குப் போட்டு கொஞ்சம் கலாட்டா பண்ணலாமா?”
“வேணாம்.”
“பின்னே எப்படி ஜெயிக்கிறது ?”
“சிவா தயாரிப்பாளர்களை மட்டும் தடுக்கலை. கதாநாயக நடிகர்கள்கிட்டேயும் கதை கேட்காதீங்க. கதை கேட்காதீங்க. கால்ஷீட் கொடுக்காதீங்கன்னு கேட்டிருக்கான்.”
“அவன் அப்படி சொல்லி இருக்கும் போது நாம ஏன் படைப்பாளிகள் சங்கத்துல விபரம் சொல்லி உதவிக்கு அழைக்கக்கூடாது?”
“உதவிக்கு வருவாங்களா ?”
“வாய்ப்பிருக்கு.”
“எனக்கென்னமோ நம்பிக்கை இல்லே. பேர் பெத்த உன்னை மாதிரி ஒரு சிலர்தான் கையில படம் வைச்சிருக்காங்க. தயாரிப்பாளர்களும் அவுங்களைச் சுத்திதான் பணப்பெட்டியோட நிக்கிறாங்க. மத்த இயக்குநர்கள், புதுசா திரை உலகத்துல நுழையனும்ன்னு துடிச்சிக்கிட்டிருக்கிற புது இயக்குநர்கள், உதவி இயக்குநர்களெல்லாம் வாய்ப்புக் கிடைக்காதான்னு அலையுறாங்க. அப்படி இருக்கும்போது சிவாவுக்குப் படம் பண்ணாதேன்னு சொன்னா எவன் கேட்பான். வாய்ப்புக் கிடைக்குதுன்னு போய் விழுவான். சிவா ஜெயிப்பான். நாம தோற்போம்.”
“இல்லே கணேசு முயற்சி செய்யலாம். கிட்டத்தட்ட எல்லாருமே இந்த சகதியைக் கடந்து வந்துதான் சகிக்க முடியாம நிக்கிறாங்க. படைப்பாளிகள் உணர்வுகளெல்லாம் ஒன்னாத்தானிருக்கும். யாருமே தான் கேவலப்படுறதைச் சகிச்சுக்க மாட்டாங்க ஒன்னு கூடுவாங்க.”
கணேஷ் அடுத்து பேசாமல் பரத் சொன்னபடி நேராக வண்டியை மையிலாப்பூர் நோக்கி விட்டான்.
காவேரி நகருக்குள் சென்று ‘கம்பன் பிலிம் புரெடெக்சன்’ முன் நிறுத்தினான்.
அது ஆறு மாடிக் கட்டிடம். பஞ்சநாதன் அரசு வேலையை உதறி விட்டு திரை உலகிற்கு வந்தவர். படத்தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல முகங்கள். அதோடு மட்டுமில்லாமல் இப்போது சின்னத்திரையிலும் புகுந்து ஆள் கலக்கல். கலக்கல். மேலும் படைப்பாளிகள் சங்கத்திலும் முக்கியப் பொறுப்பு.
பரத்தைப் பார்த்தமே வாசல் கம்பெனி வரவேற்பு வரவேற்பு கூடத்தில் இருந்த அத்தனை அலுவலக ஊழியர்களுக்கும்… பெரிய இயக்குநர் தங்கள் அலுவலகத்தை நோக்கி வருகிறான்! என்ற பரபரப்பு.
“வாங்க சார்!” நிர்வாகியான பண்டரிநாதன் ஓடிப்போய் வரவேற்றான்.
“இயக்குநர் இருக்காரா?”
‘வீட்டிலேர்ந்து இன்னும் வரலை சார்?”
“ஏன் வீட்டுல ஏதாவது முக்கிய விசேசமா?“
“இல்லே சார். ராத்திரி படப்பிடிப்பு முடிய மூணு மணியாச்சு.”
“வருவாரா?”
“வந்துக்கிட்டே இருக்கார் சார். இப்போதான் போன் பண்ணினார். நீங்க உள்ளாற உட்காருங்க.” பண்டரிநாதன் இயக்குநர் பிரத்தியோக அறையை நோக்கி நடந்தான். திறந்து விட்டான்.
ஏ.சியின் குளிர் முகத்தில் அறைய இருவரும் நுழைந்தார்கள். அறை மூலையில் கம்பன் கையில் எழுத்தாணி ஓலையுடன் சிலையாக அமர்ந்திருந்தார். சுவரில் பெரிய அளவில் கலைமகள்-லட்சுமி-முருகன், புகைப்படங்கள். புதிதாக மாலை போட்டு இருந்தது. மற்றப்படி அறை அதிக அலங்காரங்களில்லாமல் ரொம்ப எளிமையாய் இருந்தது. மெத்தென்று இருந்த குஷன் நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.
பண்டரிநாதன் வெளியேறினான்.
சிறிது நேரத்தில் அறுபது வயசு பஞ்சநாதன் 45 வயது இளமை.
சுறுசுறுப்பாக கதவைத் திறந்து கதவைத் திறந்து கொண்டு “வாங்கப்பா” வரவேற்று நுழைந்தார்.
“வணக்கம் சார்.” இவர்கள் கைகூப்ப… அமர்ந்தார்.
“பத்திரிக்கைகளில் படிச்சேன். உங்க விசயம் எப்படி இருக்கு?”
“மோசமா இருக்கு!” என்று கணேசுக்குச் சொல்ல ஆசை. ஆனால் சொல்லவில்லை.
“உச்சத்துல இருக்கு.” பரத் சொன்னான்.
“அவன்கிட்ட ஏன்ப்பா போய் மோதுனீங்க?” பஞ்சநாதன் அலுத்து அனுதாபப்பட்டு இவர்களைப் பார்த்தார்.
“பூனைக்கு யார் மணிக்கட்டுறதுன்னு…” கணேசு இழுத்தான்.
“அந்த மணி இப்போ உங்களுக்கான அபாய மணியாய் ஆச்சு! தயாரிப்பாளர்கள் நடிகர்கள்கிட்ட சொல்லி உங்ககிட்ட கதை கேட்கக்கூடாது. கால்ஷீட் கொடுக்கக்கூடாது. படம் பண்ணக்கூடாதுன்னு சிவா சொல்லி இருக்கான்..!”
“ஆமாம் சார்.”
“அடுத்து என்னப் பண்ணப் போறீங்க?”
“அதான் சார் உங்களைக் கேட்டு ஆலோசிக்கலாம்ன்னு வந்தோம்”.
பஞ்சநாதனுக்கு ஒருகணம் முகம் இருண்டது.
“அந்த ஆள் உங்களுக்கேத் தொந்தரவு கொடுத்திருக்கான் சார். உங்க ஒரு படத்துல நடிக்க வைச்சு ரொம்ப மல்லுக்கு நின்னுருக்கீங்க. தான் பெரிய நடிகனாகிட்டோம்ன்னு யாரையுமே மதிக்காம இருந்தால் எப்படி சார் ? யாராவது ஒருத்தர் பாடம் கொடுக்கனும் திமிரை அடக்கனும்ன்னுதான் சார் இந்த அதிரடி நடவடிக்கை. இப்போ ஒரு படைப்பாளி பாதிக்கப்பட்டிருக்கான். என்ன சார் நடவடிக்கை?”
பஞ்சநாதன் பரத்தைக் கூர்ந்து பார்த்தார்.
“ஒரு இயக்குநர் நல்ல நடிகனாகலாம். ஆனால் ஒரு நடிகர் நல்ல இயக்குநர் ஆக முடியாது. நம்பளாலதான் சார் சாதாரண களி மண்ணை நமக்கேத்தப்படி செய்ய முடியும். அந்த வித்தை தெரியும். நம்பளை எதிர்த்து நடிகர்களால வாழ முடியாது, அப்படி இருக்கும் போது சிவா நடிகர் சங்கத்துல சொல்லி எனக்குப் படம் பண்ணக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டது போல படைப்பாளிகள் எல்லாரும் சேர்ந்து அவருக்குப் படம் பண்ண மாட்டோம்ன்னு ஏன் ஒரு முடிவு எடுக்கக்கூடாது?”
பஞ்சநாதன் தனக்குள் ஏற்பட்ட அதிர்ச்சியை உள் வாங்கிக் கொண்டார். ‘இது எப்படி சாத்தியப்படும்?’ என்றும் யோசனை செய்தார்.
“அப்படி ஒரு முடிவு எடுத்து அவரையும் ஸ்தம்பிக்க வைத்தால்தான் சார் சிவா உட்பட எல்லா நடிகர் நடிகைகளுக்கும் நம்பாளால நாம வாழலை. இயக்குநர்களால வாழறோம்ன்னு தெரியும்.”
“இந்த விசயம் நடிகர், நடிகைகளுக்குத் தெரியலைன்னு சொல்றீங்களா பரத்?”
“தெரியுது. ஆனா உணரலை. தங்கள் நடிப்பில்.. இயக்குநர்கள் நிக்கிறதாய் நினைக்கிறாங்க. அதனாலதான் தனக்குன்னு ஒரு மாஸ் இருக்கிறதாய் நெனைச்சு வளர்ந்து வர்ற நடிகன்கூட எனக்காக கதையை இப்படி மாத்து, காட்சியை அப்படி வை, எடுன்னு படுத்தறான். கதையே இல்லாம அவுங்க போக்குக்கு படம் விட்டால் ஓடுமா சார். எந்தப்படமாவது அப்படி ஓடி இருக்கா சார் அப்படியே ஓடினாலும் எல்லா படங்களுமே வெற்றி அடைஞ்சிருக்கா சார்? இவுங்க கட்டவுட்களுக்குப் பாலும் தேனும் வழியறது நம்பளால. பின்னால இருந்து நாம துாக்கி விடுறோம். இன்னைக்கு ஒரு படம் துாக்கி விட்டால் அடுத்த படத்துக்கு அவன் சம்பளத்தை ஏத்தறான். நாம ஏத்த காரணம் இருக்கு. விசயம் இருக்கு. நம்ப உழைப்புல உயர்ற அவனுக்கு உயர்த்த என்ன உரிமை சார் இருக்கு? திரை உலகில் ரொம்ப முரண் இருக்கு சார். நடிகர்களால ஜெயிச்ச இயக்குநர்கள் சொற்பம். கதை, இயக்கங்களினால் ஜெயிச்ச இயக்குநர்கள்தான் என்னைக்கும் நிலைச்சு நிக்கிறாங்க. நாம ஒன்றுபட்டால் இவுங்க வீண் ஆடம்பரம், அலடாப்பு, பகட்டு, சம்பள ஏத்தம் எல்லாத்தையும் மட்டுப்படுத்தலாம். அழிக்கலாம் சார்.” கூறி நிறுத்தினான்.
‘அப்படியே சினிமாவை வலைத்து நிமிர்த்த இவனுக்குள் எத்தனை துடிப்பு?‘ பஞ்சநாதனுக்கு அவன் வேகம் ஆச்சரியத்தை அளித்தது, ‘இவன் மணி கட்டுபவன்தான் சந்தேகமில்லை!‘ நினைத்தார்.
“என்ன சார் யோசனை? படைப்பாளிகள் சங்கத்திற்கு நான் புகார் தர்றேன் சார். நீங்க உடனே அவசரமா சங்க பொறுப்பாளர்களோடு சேர்ந்து முடிவெடுங்க. சரி வரலைன்னா பொதுக்குழு கூட்டுங்க. நான் நம்ப பக்க நியாயத்தை எல்லாருக்கும் எடுத்துச் சொல்றேன். நெஞ்சுல துணிச்சல் தன்னம்பிக்கை உள்ளவங்க நம்மோட சேரட்டும். நான் ரோசம் கெட்டவன் நடிகை நடிகர்களுக்குக் கைகால் புடிச்சு விடுவேன். மாட்டேன்னு சொல்றவங்க விலகட்டும்…!” முகத்தில் கொஞ்சம் கடுமையை வரவழைத்துக் கொண்டே பேசினான்.
பஞ்சநாதனுக்குப் பரத் சொல்வதில் உள்ள நியாயம் புரிந்தது.
“சரி. உங்க புகாரைக் கொடுங்க?” கை நீட்டினார்.
பரத் தன் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்துச் சுற்றும் முற்றம் பார்த்தான்.
அவன் தேடுதலைத் தெரிந்து கொண்ட அவர், “இந்தாங்க” தன் மேசை டிராயரை உருவி வெள்ளை தாள் ஒன்றை எடுத்து நீட்டினார்.
பரத் மேசை மீது கவிழ்ந்து பரபரவென்று எழுதி கையெழுத்துப் போட்டு அவரிடம் நீட்டினான்.
படித்துப் பார்த்த பஞ்சநாதனுக்குத் திருப்தியாய் இருந்தது,
“ஒரு சின்ன சந்தேகம். நாளைக்கு பொதுக்குழு கூட்டம் இல்லே சங்க பொறுப்பாளர்கள் கூட்டத்துல… பரத் திமிர்த்தனமாய்ப் போய் மோதறான். நாம ஏன் அவன் பின்னால போய் பாதிக்கப்படனும்ன்னு மத்தவங்க கேட்டால் என்ன பதில் சொல்ல?” கேட்டார்.
“நான் எனக்காக எதுவும் செய்யலை. எல்லார் நன்மைக்காகவும்தான் இந்த மோதல்! புரிஞ்சுக்கோங்கோ.” சொல்லி விட்டு எழுந்தான்.
கணேசும் எழுந்தான்.
வெளியேறினார்கள்.
காரில் ஏறி கிளப்பியதும் “அடுத்து எங்கே பரத் ?” கணேசு கேட்டான்.
“இடம் அப்புறம் சொல்றேன். கோடம்பாக்கம் போ” சொன்ன பரத் தன் கைபேசி எடுத்து எண்களை அழுத்தி யார் யாரிடமோ தொடர்பு கொண்டு பேசினான்.
அத்தியாயம்-8
இயக்குநர் பரத் – நடிகர் சிவா உச்சக்கட்ட மோதல்!!
தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கங்களைத் தவிர மற்ற அனைத்து சினிமா சங்கங்களும் பரத்திற்கு ஆதரவு!
தினசரி செய்தியைப் படித்த சிவாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
இவ்வளவிற்கும் சிவா தயாரித்து நடிக்கும் படங்களுக்கு மட்டுமே அடிமட்ட தொழிலாளிகள் வரை முழு சம்பளம் என்பது உத்திரவாதம். அதுவும் படப்பிடிப்பு முடிந்த உடனேயே பட்டுவாடா. மற்ற எல்லா கம்பெனியும் இழுபறி. அப்படி இருக்கும்போது இவர்களெல்லாம் பரத்திற்கு ஆதரவாக எப்படிப் போய் சேர்ந்தார்கள்? – இதுதான் அவனுக்குள் புரியாத புதிராக குழப்பியது.
ஆனால்…. செல்லதுரைக்கு இந்த குழப்பம் இல்லை.
“என்ன யோசிக்கிறே ? இவர்களெல்லாம் எப்படி அவனுக்கு ஆதரவுன்னுதானே! நான் சொல்றேன். நடிகன்னு வந்து ஒரு படத்துக்கு ரெண்டு படம் நடிச்சிட்டான்னா அவன் நடமுறை பழக்க வழக்கமே வேற. யூனிட்ல இயக்குநரைத் தவிர மற்ற யாரையும் மதிக்கிறதில்லே. பாவப்பட்ட ஜென்மங்கள் உதவி இயக்குநர்களெல்லாம் உங்களுக்கு எடுபிடி. நீங்க சொன்ன வேலையை அவன் சரியாச் செய்யலைன்னா கோபம். அதிலும் கொஞ்சம் வளர்ந்து நல்ல பேர் வாங்கியாச்சுன்னா…இயக்குநர்களுக்கும் மதிப்பு இல்லே. கதையை இப்படி மாத்து, அப்படி மாத்துன்னு டார்ச்சர். ராத்திரியில தங்க நல்ல அறை வேணும். குட்டி வேணும், புட்டி வேணும்ன்னு நிறைய தொல்லை.”
” நடனம், சண்டை காட்சியெல்லாம் உங்களால முடிஞ்சவரைதான் செய்வீங்க. தொழில் நுட்பக் கலைஞர்களான அவர்கள் கஷ்டப்பட்டு கம்போஸிங் செய்து வந்ததைப் படப்பிடிப்புல கத்துக் கொடுத்தாங்கன்னா இது போதும்ன்னு மறுப்பீங்க, ஒதுக்குவீங்க. என்ன ?… முகத்துக்கு சுண்ணாம்பு அடிக்கிறேன்னு ஒப்பனைக் கலைஞர்களுக்கு மதிப்பு கெடையாது. இது என்ன டோப்பா முடின்னு சிகை அலங்காரக் கலைஞனுக்கும் மரியாதை கெடையாது, சரியாய் நடிக்காம ஒரு டேக்குக்கு நாலு டேக் வாங்கி என்ன டைரக்ட் பண்றான்னு இயக்குநருக்குத் திட்டு. ஆடை வடிவமைப்பு சரி இல்லேன்னு காஸ்ட்டியூம் அந்த விசயத்திலும் குறை.”
“நடிகர், நடிகைகளுக்கு டச்சப் பையன், பெண்கள் தொக்கு. முகத்துக்கு நேரா ஏன் சரியா கண்ணாடி பிடிக்கலைன்னு அறை தலையில குட்டு. யார் தாங்குவா? எத்தனை நாள் பொறுக்க முடியும். வயித்துக் கொடுமைக்காகப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பூனைக்கு எவன் மணி கட்டுறதுன்னு தடுமாறி இன்னைக்கு ஒருத்தன் மணி கட்டினதும் ஆகா… ! இதுதான் வாய்ப்பு தன் குறைகளைச் சொல்லி எதிர்ப்பைக் காட்ட தருணம்ன்னு பரத் பக்கம் சேர்ந்துட்டாங்க.”
“நடிகர்களுக்குத் திறமை இல்லேன்னு சொல்லலை. அது இயக்குநர்களால பட்டைத் தீட்டினாத்தான் ஒளிரும். சிவாஜி போல பிறவி நடிகர்கள் இப்போ யாருமில்லே. வேலை இடங்கள், அரசியல்ன்னு எல்லா இடங்களிலும் நுழைந்த வாரிசு வழி இங்கேயும் புகுந்துடுச்சு. அம்மா அப்பாவெல்லாம் எப்படி சினிமாவுல கஷ்டப்பட்டு நுழைஞ்சாங்க… நிலைச்சு நின்னாங்கன்னு நெனப்பு இல்லாம…இன்னைக்குப் புகுந்த இளம் வாரிசுங்க எல்லாரையும் விரட்டுறாங்க. எல்லாருக்கும் தொழில்ல அக்கறை இருக்கனும். யார் கதை சொல்ல வந்தாலும்… மதிச்சு, மரியாதை கொடுத்து, உட்கார வைச்சு கேட்கனும். அது செய்யுறதில்லே. இன்னைக்குப் போய் நாளைக்கு வான்னு அவனை நாய் போல துரத்துறது, படுத்துக்கிட்டு கேட்கிறது உட்கார்ந்துக்கிட்டுக் கேட்கிறதுன்னு ரொம்ப மட்டமான நடவடிக்கைகள். இதெல்லாம் என்ன கலாச்சாரம். யார் சொல்லிக் கொடுத்தப் பாடம். எல்லாரும் மனுசங்க. இன்னைக்கு நீ வசதி வாய்ப்பாய் பேரும் புகழோடும் இருக்கேன்னா அது உனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். இந்த அதிர்ஷ்டம் நாளைக்கு இன்னொருத்தனுக்கு வந்து அவன் உன் நிலைக்கு வரமாட்டான்னு என்ன நிச்சயம்?”
“டப்பிங், நடனம், சண்டைகள், லைட்மேன்கள்ன்னு இப்படி திரை மறைவு தொழிலாளிகள் அத்தனைப் பேருக்கும் நடிகர், நடிகைகள் மதிப்பு மரியாதை கொடுக்கனும். அவர்களாலதான் நாம திரையில சிறப்பா மின்னுறோம்ன்னு நெனைக்கனும். அதுதான் உண்மை. ஆதை விட்டுட்டு தான்தான் பெரியவன் மத்தவனெல்லாம் சின்னவன்னு நெனைச்சா இப்படித்தான்.” இப்படி பெரிய பிரசங்கமே செய்து நிறுத்தினான் செல்லதுரை.
கேட்ட சிவாவிற்கு மலைப்பாக இருந்தது. உண்மைகள் உரைக்க…வலி வந்தது.
‘தான் மட்டுமில்லாமல் சின்னச் சின்னதாய் யார் யாரோ துாக்கிப் போட்ட கற்களெல்லாம் இன்றைக்குப் பெரிய பெரிய பாறைகளாகி தன்னைத் தாக்குகிறதே!‘ நினைக்க அவனையும் அறியாமல் உதறல் வந்தது.
பரத் சிலிர்த்தெழுந்து…. ‘தங்கள் வண்டவாளங்களையெல்லாம் இப்படி வெளிக்கொண்டு வருகிறானே!’ என்ற கோபமும் உள்ளுக்குள் ஊடுறுவியது.
அதன் விளைவாய்…
‘பரத்தைப் போட்டுத் தள்ளினாலென்ன?’ யோசனையும் ஓடியது.
அதை நண்பனிடம் சொன்னான்.
“அது தப்பு. அவன் உன்னை எப்படி அடிச்சானோ அப்படியே நாம திரும்பி அடிக்கனும். அதை விட்டுட்டு குறுக்கு வழியில அடிதடியில புகுந்து முடிக்கனும்ன்னு நெனைச்சா பரத்தும் சாதாரண ஆளில்லே. உன் அளவுக்கு செல்வாக்கு உள்ளவன். அதுமட்டுமில்லாம அவன் சினிமா ஆசையில மதுரை, கோயம்புத்துார்ன்னு எங்கிருந்தோ புறப்பட்டு ஓடி வந்து இங்கே இருக்கிறவனில்லே. இவன் இங்கே சென்னை அடிமட்ட இடமான வடசென்னை குப்பத்துல பொறந்து வளர்ந்தவன் அவனைத் தொட்டுட்டு நீ வெளியில தலை காட்ட முடியாது. பொல்லாதவங்க.” எச்சரித்தான்.
சிவாவிற்குக் குலை நடுங்கியது. தான் தான் சிக்கலில் மாட்டி இருக்கிறோம்! புரிந்தது, மேலும் இவனுக்கு இப்படியே விட்டுவிட மனமில்லை.
சினிமாவில் இவனுக்குப் பலம் சேர்ந்து மற்றவர்கள் மதிக்க அதுவே ‘சக்கரவர்த்தி’ நினைப்பாகி மற்றவர்கள் அடிமைகளாகி விட்டார்கள். அந்த செல்வாக்கு, செருக்கில்தான் அவனால் எதையும் சாதிக்க முடிந்தது. தன்னை எதிர்த்து முணகியர்களைக்கூட தூக்க முடிந்தது. தனக்குப் பணியாதவர்களை வாழ விட்டாமல் செய்ய முடிந்தது. இப்போது வேசம் கலைய… விட்டால் அவமானம். நாளை எவனும் இவனை மதிக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல தன் நிழலை மிதித்தவன் தலையை மிதிக்க வேண்டாமா?’ மனம் முரண்டியது.
“பரத்தைப் பொறுத்தவரை மத்தவங்க காரியத்தைப் போல் எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிக்க முடியாது. நிதானமாய் நல்லா யோசிச்சுதான் காரியத்துல இறங்கனும். நாம ஒன்னு செய்தா அவன் ஒம்பதுக்குப் பாயறான். நாம தயாரிப்பாளர் நடிகர்கள் சங்கத்தை வலைக்கப் போய் அவன் கடகடன்னு இறங்கி மத்த எல்லா சங்கத்தையும் வலைச்சுட்டான். நம்மைவிட எதிரி பலமாய் இருக்கான். அதனால மெல்லதான் இறங்கனும்” என்றான் செல்லதுரை.
சிவாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. போதையில் மிதக்க…. மெல்ல தன் தனியறைக்குச் சென்றான்.
சுபிட்சம் ஸ்டுடியோ சுந்தரம். மற்றும் பல பெரும் புள்ளிகளுக்கெல்லாம் ஏற்கனவே சின்னத்திரை, திருட்டு வி.சி.டி, என்று சினிமா உலகம் பாதிப்பு. அது போதாதென்று அதை எல்லாம் தூக்கி அடிப்பது போல்…தமிழ் ராக்கர்ஸ் தலைவலி. இப்போது இவர்கள் தகராறில் பட உலகமே பாதித்துப் போகும் நினைக்கக் கலக்கமாக இருந்தது.
“என்னய்யா நிலைமை மோசமாய்ப் போகுதே!” பெரும் தயாரிப்பாளரான தர்மலிங்கம் கவலைப்பட்டார்.
“என்ன செய்யுறது ?” தண்டபாணி அவரை ஏறிட்டு கேள்வி கேட்டார்.
“சண்டையைச் சரிபடுத்தினாத்தான் சரியாகும்.” பவித்ரன் யோசனை சொன்னார்.
“நான் பரத்கிட்ட பேசிட்டேன். அவன் சரிபடலை” என்றார் சுந்தரம்.
“விடுங்க. படத்துக்குப் படம் அஞ்சு விரலலையும் பத்து விரலையும் காட்டுற நடிகர்கள் அழிஞ்சு போகட்டும்.” என்றார் சாம்பசிவம்.
அவர் ஒரு முன்னனி கதாநாயக நடிகனுக்கு மானாவாரியாய்ப் பணம் கொடுத்து படம் ஊத்திக் கொண்டதில் தலையெடுக்க முடியாத நஷ்டம், வெறுப்பு.
“நடிகர்கள் சம்பளப் பிரச்சனையில் நம்ம மேலேயும் தப்பு இருக்கு. ஒருத்தன் கொஞ்சம் நல்லா நடிச்சு ஒரு ஹிட் படத்தைக் கொடுத்துட்டான்னா கதை இயக்குநர் திறமைதான் வெற்றிக்குக் காரணம்ங்குற நெனப்பு இல்லாம நடிகன் சாதிச்சதா நெனைச்சு அவன் முன்னால போய் கை கட்டி நிக்கிறோம். அவனுக்குக் கிரேடு ஏறிப்போய் விரல்களை விரிக்கிறான். உலகத்துல எல்லா தொழில்களுக்கும் சம்பளக் கட்டுப்பாடு வரைமுறை இருக்கு. இந்த சினிமாத் தொழில்ல மட்டும் எல்லாரும் காத்து உள்ள நேரத்துல துாத்திக்கனும் என்கிற ஆசையில அது கிடையவே கெடையாது.” எல்லாரையும் தாக்கி தடாலடி அடித்தார் தர்மலிங்கம்.
“நாம் அவசரப்பட்டு சிவா பேச்சைக் கேட்டுட்டோம். இல்லேன்னா நாமும் பரத் கட்சியில சேர்ந்து இதுதான் சாக்குன்னு இந்தந்த நடிகர்களுக்கு இதுதான் சம்பளம்ன்னு வரைமுறை செய்துடலாம்.” என்றார் பவித்ரன்.
“ஏன்…இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நாங்களும் பாதிக்கப்பட்டவன்தாய்யான்னு பரத் கட்சியில சேர்ந்து இப்படி ஒரு ஒழுங்கு முறையை வைச்சிட்டோம்ன்னா…தயாரிப்பு செலவு குறையும். மத்த திரைமறைவு கலைஞர்களுக்கும் சம்பளத்தை ஏத்தி அவுங்க வாழ்க்கையில விளக்கேத்தி வைக்கலாம். நிறைய தயாரிப்பாளர்கள் வருவாங்க. அரசாங்கத்துகிட்ட சொல்லி கேளிக்கை வரியையும் குறைச்சு…இதை நாலு பேர் புழங்குற ஒரு நல்ல தொழிலாய் ஆக்கலாம். இதை ஏன் எல்லாரும் செய்ய மாட்டேன்ங்குறாங்கன்னு தெரியலை.” என்று தன் Լ மனதிலுள்ள குறையைச் சொன்னார் செம்புலிங்கம்.
“செய்வோம். அதுக்கு முன் இந்த சிக்கலை முடிப்போம்.” சுந்தரம்.
“சிக்கலை முடிச்சா வேதாளம் மீண்டும் முருங்க மரத்துல ஏறிடும். சிக்கலோடு சிக்கலாய் இதையும் சேர்த்துட்டோம்ன்னா ஒருவழியாய் பிரச்சனை முடிஞ்சுடும்.”
சுந்தரத்திற்குப் பிரச்சனை மேலும் சிக்கலாகி சினிமா உலகம் மொத்தமுமே தேக்க நிலையில் நிற்கும் அபாயம் கண்களில் தோன்ற… “இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். மொதல்ல இதுக்குத் தீர்வு கண்டுக்குவோம்“ என்றார்.
“வேணாம்ங்க. சிக்கலோடு சிக்கலாய் இதையும் முடிச்சுடுவோம். கம்பெனியில மேனேஜர், அடுத்து அசிஸ்டெண்ட் மேனேஜர், தலைமை குமாஸ்தா, அடுத்து குமாஸ்தா, கடைசியில அடிமட்ட ஊழியர்கள் அவர்களுக்குச் சம்பளம் இன்னின்னது இருக்கிறாப்போல நல்ல நடிகன் நடிகைக்கு இவ்வளவு அடுத்து உள்ளவங்களுக்கு இவ்வளவு அப்புறம் உதவி இயக்குநர்கள், கேமாரா மேன்… இன்னின்னவருக்கு இதுதான் சம்பளம்ன்னு லைட் பாய் வரை பேசி வரையறுத்து வைச்சிட்டோம்ன்னா…படஉலகம் நல்லா இருக்கும்”. என்றார் விடாபிடியாக செம்புலிங்கம்.
“ஆமாம் சார். நடிகர் நடிகைகளுக்கு கொட்டிக் கொடுக்கிற தொகைகளைக் குறைச்சு அடிமட்ட கலைஞர், தொழிலாளிகளுக்கெல்லாம் சம்பளத்தை அதிகப்படுத்தினோம்ன்னா உற்சாகமாய் உழைப்பாங்க அவுங்க கஷ்டம் தீரும். அடுத்து படத்துக்கு உயிர் நாடியாய் இருக்கிற கதாசிரியர் வசனகர்த்தாவுக்கெல்லாம் சரியான சம்பளமோ சன்மானமோ போய் சேர்றதில்லே. அவர்களுக்கும் ஒரு கணிசமான தொகை ஒதுக்கினோம்ன்…. அவர்களிடமிருந்து நல்ல தரமான கதைகள் கிடைக்கும். நாமும் மத்தவங்க போல ஒரு நல்ல தொழில் செய்ஞ்தோம்ங என்கிற திருப்தி இருக்கும்.”
“ஆமாம் சிவலிங்கம் சொல்றதும் சரி. பணம் மேட்டோட மேடு சேராம பள்ளத்தை நோக்கித் தள்ளி விட்டோம்ன்னா….சினிமா ஆரோக்கியமாய் இருக்கும். அதுக்கு சரியான தருணம் இதுதான்ங்குறது என் கருத்து. அடுத்து உங்க அபிப்பிராயம் என்ன?“ கனகலிங்கம் கேட்டு மற்றவர்களைப் பார்த்தார்.
எல்லாருமே இதற்கு செவி சாய்ப்பவர்கள் போலிருந்தார்கள். அவர்கள் மௌனத்தைச் சாதகமாக்கிக் கொண்ட சிவலிங்கம் “முடிவு இதுதான் நம்ம தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டி ஆலோசனைக் கேட்போம். எல்லாரும் இதுக்குச் சம்மதிச்சாங்கன்னா…நாமும் எதிர் கட்சியோட சேர்ந்து இது இப்படித்தான்னு வரையறுத்துடுவோம்.” என்றார்.
“இப்படி செய்தால் அடுத்து விநியோகஸ்தர்கள் சங்கம் இவர் நடிச்ச படத்துக்கு இதுதான் விலைன்னு முடிவெடுக்கும் சரியா?” சாம்பசிவம் புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்கினார்.
“அவர்களும் நடிகர்கள் படத்துக்கு மட்டுமில்லாமல் இன்னின்ன ஏரியாவுக்கு இவ்வளவு விலைன்னு முடிவெடுக்கட்டும். எல்லாம் வரைமுறைப்படுத்தப்பட்டு ஒரு ஆரோக்கிய சுழ்நிலை உருவாகட்டும்.”
இப்படி சினிமாவைச் சரிசெய்ய எல்லாருக்கும் பிடித்திருந்தது,
“அப்புறமென்ன அவசரமா நாளைக்கே பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்” என்று சொல்லி எழுந்தார் கனகலிங்கம்.
– தொடரும்…