கடவுளின் முடிவு





கடவுள் மீட்டிங் அறைக்குள் நுழைந்து, தனது குழு பணியாளர்களை வரவேற்று, பேசத் தொடங்கினார்.

“இது ஒரு கடுமையான முடிவு என்று எனக்கு புரிகிறது. உங்களில் பலர் டைனோசர்களின் பரிணாம வளர்ச்சியில் நெருக்கமாக ஈடுபட்டிருக்கிறீர்கள். அத்தனை டைனோசர்களையும் ஒரு சிறுகோள் தாக்குதலில் கொல்ல முடிவெடுத்தது உங்களை வெகுவாக பாதித்திருக்கும்.”
அவர் சற்று நிதானித்து, சோகமான முகங்களைப் பார்த்து, மறுபடி தொடர்ந்தார்.
“ஆனால் நம்முடைய விதிகள் தெளிவாக உள்ளன. ஒரு கிரகத்தில் எந்த ஒரு இனமும் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. அப்படி செலுத்தினால், அவை அழியப்பட வேண்டும்.”
யாரும் எதுவும் சொல்லவில்லை.
அவருடைய முடிவு இறுதியானது என்று அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொருவராக அறையை விட்டு வெளியேறினர்.
கடவுள் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டார்:
இனி ஒருபோதும் இந்த முடிவை எடுக்க அவசியம் வராது என்று நினைக்கிறன்.
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |