கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 2,650 
 
 

தன்னை விந்து பார்க்கும்படி அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனுக்குக் கட்டளையிட்டிருந்தார் மாவட்ட ஆட்சியாளர். அவர் போய்ப் பார்க்கவில்லை. கடுமையான கோபத்துடன் அப் பஞ்சாயத்து போர்டு தலைவரை அழைத்துவரச் செய்து, ‘ஏன் வரவில்லை’ எனக் காரணம் கேட்டார் மாவட்ட ஆட்சியாளர்.

அதற்கு அவர் சொன்னார். “நான் எப்படி வரமுடியும். எங்க ஊரில் இஞ்சினீயர், தான் கட்டிய வீடு இடிந்து விட்டதே என்று அழுகிறார். டாக்டருக்கே காய்ச்சல் வந்து என்ன செய்வது என்று கதறுகிறார்.

“இதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, பள்ளிக்கூட வாத்தியார் தம் பிள்ளைகள் மூவருமே வகுப்பில் தேறவில்லையே. நான் என்னசெய்வேன் என்று என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுகிறார். ஊர் இப்படி இருக்கிறதனாலே நான் வரமுடியவில்லை. என்னை மன்னிக்கனும் எஜமான்” என்று பணிவோடு வேண்டிக் கொண்டார்.

அதற்கு ஆட்சியாளர் கேட்டார். இது உங்கள் ஊரில் மட்டும்தானா நடக்கிறது; நாட்டில் எல்லா இடங்களிலும் இப்படிதானே நடைபெறுகிறது. இதற்கா நீங்கள் வராமல் இருக்கலாமா? சரி நீங்கள்தான் வரவில்லையே, இதற்காக அங்கிருந்துகொண்டு நீங்க என்னதான் செய்தீர்கள்? அதையாவது சொல்லுங்கள்” என்றார் கலெக்டர். என்ன சொல்லுவார் பஞ்சாயத்துத் தலைவர்.

இது நம் நாட்டின் நிலை என்றா சொல்லுவார்?

– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *