அனுபவம்
கதையாசிரியர்: அசோகன் குப்புசாமி
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 17,369
“மிஸ்டர் ஷியாம், புதுசா நம்ம விளம்பர கம்பெனிக்கு சேர்ந்திருக்கீங்க, அதனால, நாம எடுக்கப் போற விளம்பரப் படத்துக்கான மாடலைப் போட்டோ எடுக்கணும். அதுக்கு ஐடியா வேணுமின்னா நம்ம சீனிவாசனைக் கேட்டுக்கோங்க” என்றார் நிறுவனத்தின் எம்.டி.
”ஐடியாவா? அவரிடமா? பத்தாவது படிச்சிட்டு காமிரா புடிச்சிட்டா, அவர்கிட்ட என்ன கிடைக்கும்? லட்சக்கணக்கில் செலவு செய்து படிச்சுட்டு… அவர்கிட்ட எதுக்கு கேட்கணும்? அலட்சியமாய் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தான.
மாடலிங் நடிகையை வளைச்சு…வளைச்சு போட்டோ ஷூட் செய்தான். அத்தனையும் பக்காவாய் இருந்தது.
எம்.டியிடம் கொண்டு போய் காண்பித்தான்.
”இதெல்லாம் ஒரு போட்டோவா? வீசியெறிந்தார் எம்.டி. கீழே விழுந்தவற்றை எடுத்துக் கொண்டு சீனிவாசனின் அறைக்குச் சென்று அவரிடம் காண்பித்தான்.
என்னப்பா ஷியாம்! போட்டோக்களை எம்.டி. வீசியெறிந்திருப்பாரே” என்று கேட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
”ஸார் ! எப்படி ஸார்?”
”ஏம்ப்பா! நாம விளம்பரப் படம் எடுக்கறது முகத்துக்கான கிரீம் விளம்பரப்படம், நீ எடுத்திருக்கிறதோ ! புடவைக்கடைக்கு எடுப்பாங்களோ அது மாதிரி” என்றார்.
படிப்புக்கும்…அனுபவத்திற்கான வித்தியாசத்தை உணர்ந்தான் ஷியாம்.
– ஒரு பக்க கதை (குமுதம் இதழில் 31-1-2018ல் வெளியானது)
![]() |
இயற் பெயர்: கே.அசோகன் (அசோகன் குப்புசாமி)தந்தை பெயர்: த.குப்புசாமிபிறந்த நாள்: 13 Decemberதொழில்: தமிழக அரசு பணி (2013 பணி நிறைவு)நிரந்தர இருப்பிடம்: மனை எண்-சி-374 என்.ஜி.ஜி.ஓ நகர், சேலை, திருவள்ளுர் 631 203தற்காலிக முகவரி: சி-20 சம்பக், ஐ.டி.சி குடியிருப்பு, சாரபாக்கா கிராமம், கம்மம் மாவட்டம், தெலுங்கானா மாநிலம் பின் -507 208தொடர்பு எண்: 9047896065மனைவி பெயர்: அ. சகுந்தலை –குடும்ப தலைவிமகன் பெயர்: அ.ராஜ்மோகன் இலக்கிய பணி:தாய்மண்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடென்ன செய்தது நமக்கு?
வளர்கவி
September 15, 2026
நாய் வால்
நீர்வை பொன்னையன்
September 15, 2026
அந்த இலக்கியவாதியும் நடுநிசி மனிதர்களும்
இளையவேணி கிருஷ்ணா
September 15, 2026
