பிறந்த வருடம் 1966, “கோவை மருத்துவ மையம்” (KMCH) கோயமுத்தூர். துணை மருத்துவமான ‘செவிலியர்’ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
1. இவரது சிறுகதை “நிலம் விற்பனைக்கு அல்ல” இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
2. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” இவரது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது.
இலக்கிய அங்கீகாரம்
3. “குவிகம்” இலக்கிய 2022 ம் ஆண்டுக்கான குறு நாவல் பரிசு போட்டியில் பரிசுக்குரிய இருபது நாவல்களின் ஒன்றாக இவரது “காற்று வந்து காதில் சொன்ன கதை” குறு நாவலை தேர்ந்தெடுத்துள்ளது.
4. கி.அ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு “உரத்த சிந்தனை” மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் “பசி” என்னும் கதைக்கு மூன்றாம் பரிசு.
5. பிரபா-ராஜன் அறக்கட்டளை-குவிகம் இலக்கிய அமைப்பு 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்திய சிறு கதை போட்டியில் பரிசுக்குரிய ஒரு கதையாக “துக்கிளியூண்டு கொத்தமல்லி” தேர்வானது.
6. எழுத்தாளர் சிவசங்கரியுடன் இணைந்து “ராணி வார இதழ்” நடத்திய இந்த வருடத்திற்கான (2023) சிறு கதை போட்டியில் முதல் பரிசாக, இவரது கதையான “யானையும் மூப்பனும்” ரூ பத்தாயிரம் பெற்றது.
7. அதே “யானையும் மூப்பனும் கதை 10.08.2025 அன்று நெல்லை எப் எம்மில் 10.08.2025 அன்று இரவு ஒன்பது மணிக்கு கதையாடல் நிகழ்வாக ஒலிபரப்பபட்டது.
8. பைந்தமிழ் இலக்கிய மன்றம் நடத்திய குறு நாவல் போட்டியில் மூன்றாம் இடம்.
9. “தொடுவானம்” இலக்கிய இதழின் ஒரு பக்க கதை போட்டியில் முதல் பரிசு.
10. 2026 “Writers Café” உலகளாவிய சிறுகதை போட்டியில் “மரங்கள் உருவாக்கிய காடு” சிறுகதைக்கு மூன்றாம் தகுதி.
ஐயா அவர்களின் கதையை, எனது youtube channel- ல் பதிவிடுவதற்கு எவ்வாறு அனுமதி வாங்க வேண்டும். தயவு கூர்ந்து தெரிவிக்கவும்.
oodhamoo@gmail.com வழியாக அனுமதி கேளுங்கள் ஐயா.