யாதும் ஊரே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 11, 2025
பார்வையிட்டோர்: 403 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எங்கடை அருமை வந்திருக்கு குமாரண்ணை.” 

“ஆரடா அவன் எங்கடை அருமை? அவன் என்ன உனக்கு அண்ணனோ தம்பியோ? அல்லது உன்ரை மாமனோ மச்சானோ?” 

“இல்லை அண்ணை. அவர் எங்கடை வட பகுதியைச் சேர்ந்தவர். அருமைநாயகம். கனகாலத்துக்குப் பிறகு அமெ ரிக்காவிலையிருந்து இஞ்சை வந்திருக்கிறார். நாங்கள் அவரைக் கவுரவித்து தாஜ் சமுத்ரா ஹோட்டலிலை ஒரு ‘டின்னர்’ குடுக்க யோசிக்கிறம்.” 

“அவர் அமெரிக்காவிலையிருந்து கனகாலத்துக்குப் பிறகு வந்ததுக்காக அவரைக் கவுரவித்து நீங்கள் ‘டின்னர் குடுக்கப் போறியளோ?” 

“அதுக்காக இல்லை அண்ணை. அருமைநாயகம் ஒரு பெரும் தொழில் அதிபர். அது மாத்திரமில்லை. அவர் பெரிய முதலீட்டாளர். மத்திய கிழக்கு நாடுகளிலை அவர் பாரிய முதலீடுகள் செய்திருக்கின்றார். பெரும் பெரும் தொழில் துறைகளுக்குச் சொந்தக்காரர். மத்திய கிழக்கு நாடுகளின்ரை பாரிய தொழில்துறைகளை அவற்ரை கொம்பனி அதின்ரை கட்டுப்பாட்டுக்கை வைச்சிருக்குது. அவற்றை கொம்பனிக்கு பத்துப் பன்னிரண்டு கப்பல்களும் சொந்த மாயிருக்குதாம்.” 

“குமாரண்ணை. போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட டாச்சு. ‘ஏ-9 பாதையும் துறந்தாச்சு. சரியான சந்தர்ப்பம் பாத்துத்தான் அருமைநாயகம் இஞ்சை வந்திருக்கிறார். அவர் எங்கடை ஆள்தானே. இனி எங்களுக்கு நல்ல காலந்தான். எங்கடை வடக்குக் கிழக்கிலை அவர் தாராளமாய் முதலீடு செய்வார். இதாலை எங்கடை பிரதேசங்களிலை நிச்சயமாய் தொழில்துறை பெருகும். எங்கடை பெரும் தொகையான ஆக்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். எங்கடை வடக்குக் கிழக்குப் பிரதேசங்கள் நிச்சமாய் செழிப்படையத் தான் போகுது.” 

செல்லத்துரைக்கு அருமைநாயகத்தில் பெரும் மதிப்பும் அசைக்க முடியாத, உறுதியான நம்பிக்கையுமுண்டு. 

“தம்பி, செல்லத்துரை உன்ரை இந்த எதிர்பார்ப்பு நடைமுறைக்கு வந்தால் நல்லதுதான். இதை நானும் மனப் பூர்வமாய் வரவேற்கிறன். ஆனால் உன்ரை கனவு நனவாக வேண்டுமே” 

“அண்ணை, இது நடக்கத்தான் போகுது. நிச்சயமாய் நடந்தே தீரும். இனி எங்களுக்கென்ன? நாங்கள் இனிமேல் மற்றவையிலை தங்கியிருக்கத் தேவையில்லை. நாங்கள் தலை நிமிர்ந்து நிக்கத்தான் போறம். நாங்கள் ஆண்ட பரம்பரை தானே.” 

“இது நடந்தால் இந்த நாட்டுக்கே நல்லதுதான் தம்பி.” 

“குமாரண்ணை எங்கடை ஆள் லேசுப்பட்டவரில்லை. அவர் பெரிய அறிவாளி. பெரிய தொழில் நிபுணர். அதோடை பெரும் சிந்தனையாளர். ‘சாதியம்’ பற்றி அமெரிக்காவிலை ஆங்கிலத்தில் ஒரு ஆராய்ச்சி நூல் எழுதி வெளியிட்டிருக்கிறார். அதுக்காக அவருக்கு கலாநிதிப் பட்டம் கிடைச்சிருக்கு!” 

“இது நாங்கள் பெருமைப்பட வேண்டிய விசயம் தான் தம்பி. ஆனால், சாதியம் பற்றி ஆங்கிலத்தில் அமெரிக்காவிலை ஆராச்சி நூல் வெளியிட்டதாலை எங்கடை யாழ்ப்பாணத்திலை சாதித் திமிர் ஒழிஞ்சு போகப் போறதில்லை.” 

ஒன்றும் புரியாமல் செல்லத்துரை குமாரலிங்கத்தைக் கேள்விக் குறியுடன் நோக்கியபடியே நிற்கின்றான். 

“தம்பி உங்கடை அருமைநாயகம் அமெரிக்காவிலை உள்ள கறுப்பு இன மக்களைப் பற்றி ஒரு ஆய்வு நூலை எழுதி அதுக்காக டாக்டர் பட்டம் கிடைச்சுதெண்டால், அது போற்றிப் பாராட்டப்பட வேண்டிய முயற்சிதான். அது மாத்திர மில்லை அமெரிக்காவிலை நிறவெறிக்கு எதிராகக் கறுப்பு இன மக்கள் நடத்துகின்ற போராட்டத்துக்கு அது ஒரு உந்து தலாகவுமிருக்கக்கூடும். இதுக்காக நாங்களும் பெருமைப்படத் தான் செய்வம்.” 

அசந்து போய் நிற்கின்றான் செல்லத்துரை. 

“செல்லத்துரை நீ சாதியம் பற்றிக் குறிப்பிட்டாய். எனக்கு எங்களோடை படிச்ச ‘மேற்படியான்’ ஒருதனைப் பற்றி நினைவுக்கு வருகுது.” 

“நாங்கள் கல்கத்தாவுக்குப் படிக்கப் போனது உனக்குத் தெரியும்தானே.” 

“ஓமண்ணை.” 

“முப்பத்தி ஏழாவது இலங்கை மாணவனாக அந்த ‘மேற்படியான்’ எங்கடை கல்லூரியிலை வந்து சேர்ந்தான். வரும் பொழுதே அவன் ‘கோட்சூட்’டுடன் தான் வந்திறங் கினான். அவன் பெரிய இடத்து ஆள் எண்டு நாங்கள் நினைச்சம்.” 

“அமெரிக்காவிலை கறுப்பு இன மக்களின்ரை அடிமை முறைக்கெதிராக ஆப்ரகாம் லிங்கன் போராட்டம் நடத்தினார். அந்த லிங்கன் அல்ல இந்த லிங்கன். யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த நாகலிங்கம்தான் இந்த ஆள். லிங்கன் எண்டுதான் நாங்கள் எல்லாரும் அவனை அழைத்தம். அதிலை அவனுக்கு அளவு கடந்த சந்தோசம், பெருமை.” 

“இது மிகவும் சுவாரசியமான விசயமாய்க் கிடக்கு தண்ணை”. 

“செல்லத்துரை, ஆப்ரகாம் லிங்கன் கறுப்பு இன் மக்க ளின்ரை அடிமை முறைக்கு எதிராக, அவையின்ரை விடுதலைக்காக அந்தரங்க சுத்தியோடை போராட்டம் நடத்தியவர். 

இந்த லிங்கன், யாழ்ப்பாணத்திலை, இண்டைக்கும் சாதி ஒடுக்கு முறை இருக்க வேணும், அதைக் கட்டிக் காக்க வேணும் எண்டு அழுங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்குதே ஒரு பத்தாம் பசலிக் கும்பல், அந்தக் கும்பலைச் சேர்ந்த ஐஞ்சாறு பேர் எங்கடை கல்லூரியிலு மிருக்கிறாங்கள். 

அவங்கள் யாழ் நகரிலையுள்ள கிறீஸ்தவ மிசனரிமார் களாலை நடத்தப்படுகிற பாடசாலை யிலை படிச்சிட்டுக் கல்கத்தாவுக்குப் படிக்க வந்தவங்கள். இவங்கள் தாங்கள் தான் நாகரீகமானவை, மற்றவை எல்லாம் நாட்டுப்புற பாடசாலையிலை படிச்சிட்டு வந்த பட்டிக் காட்டாங்கள் எண்டு நினைச்சாங்கள். அதாலை அவங்கள் எங்களோடை சேரேல்லை. அவங்கள் ‘பேர்த்டே பாட்டியளைத் தங்களுக்கை தான் கொண்டாடுவாங்கள். ஆங்கில சினிமா வுக்கு மாத்திரம் தான் அடிக்கடி போவாங்கள். ‘ரெனிஸ் கிளப்’ எண்டும் வேறும எங்கெங்கோ செல்வாங்கள். 

இந்த ஐஞ்சாறு பேற்ரை கும்பலோடை லிங்கனுக்குக் கூட்டு அந்தக் கும்பலிலை அவன் முக்கியமானவன். எல்லா த்துக்கும் அவன் “நான்” “நான்” எண்டு முன்னுக்கு நிப்பான்.” 

“அண்ணை,இதாலை உங்களுக்கு எதுவித நட்டமு மில்லை. நீங்கள் ஏன் அவங்களை ஒரு பொருட்டாய் எடுத்தியள்?” 

புரியாதவனாய்க் கேட்டான் செல்லத்துரை. 

“அவங்கள் எக்கேடு கெட்டாலும் எங்களுக்கென்ன எண்டுதான் நாங்கள் இருந்தம். ஆனால் அவங்கள் செய்த வேலைதான் எங்களுக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணிச்சுது.” 

“வடமராட்சியிலை ஒரு சாதிக் கலவரம் நடந்தது. அது தொடர்பாய் ஒரு வழக்கு விசாரணை பற்றிய விபரம் ஒரு தமிழ்த் தினசரிப் பத்திரிகையிலை தொடர்ச்சியாய் வந்து கொண்டிருந்தது. அந்தப் பத்திரிகையை தொடர்ச்சி யாய் எடுப்பிச்சாங்கள் இந்த சாதி வெறியன்கள். 

அந்த வழக்கு விசாரணையிலை, தாழ்த்தப்பட்ட என்று கூறப் படும் ஒரு இளம் பெண்ணை மிகவும் கீழ்த்தரமாய் ஒரு ‘லோயர்’ குறுக்கு விசாரணை செய்தான். 

இந்த மட்டரகமான விசாரணை பற்றிய விபரம் அந்தத் தினசரிப் பத்திரிகையில் தொடர்ச்சியாய் வந்து கொண்டி ருந்தது. இதை இங்குள்ள சாதிவெறியர் உரத்து வாசித்து ரசித்தது மாத்திரமல்ல, எங்களோடை இருக்கிற தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எண்டு கூறப்படுகிறவையளை கேலியும் கிண்டலும் செய்து ஆத்திர மூட்டினாங்கள். இவங்களோடை லிங்கனும் சேர்ந்து கேலி செய்தான். இதாலை நாங்கள் அவங்களோடை இரண்டு மூண்டு தடவையள் மோத வேண்டிய நிலை ஏற்பட்டுது. 

எங்களுக்கு மனக்காயம். 

அவங்களுக்கு உடல் காயங்கள்.” 

“நாங்கள் நாட்டுப்புறப் பள்ளிக்கூடங்களிலை படிச்ச னாங்கள் தான். அதோடை தாழ்த்தப்பட்ட சாதி எண்டு சொல்லப்பட்ட சில மாணவர்களும் எங்களோடைதான் ஒட்டு. அதாலை அவங்கள் எங்களை தங்களோடை சேர்க்கி றேல்லை. ஆனால் நாங்கள் அவங்களை விட எதிலும் குறைஞ்சவங்களல்ல. லிங்கனோ அவங்களை “மச்சான்”, “மச்சான்” எண்டு “மச்சான் முறை” கொண்டாடிக் கொண்டு திரிஞ்சான். அவங்களோடை அடுகிடை படுகிடையாய் திரிஞ்சான். 

“அந்த நாலஞ்சு பேரும் முதலாம் தவணை விடுமுறை க்கு யாழ்ப்பாணம் சென்று திரும்பி வந்தாங்கள். எங்களிலும் வசதி படைத்த சிலர் போய்வந்தனர். அவையளை லிங்கனும் வேறு சிலரும் ஹௌறா ஸ்டேசனுக்குப் போய் அழைத்து வந்தனர்.” 

“எடே மச்சான் சிவா! யாழ்ப்பாணத்திலையிருந்து எனக்கு என்னடா கொண்டாந்தனி?” 

உரிமையுடன் கேட்டான் லிங்கன். 

“கீழ்சாதி நாயே! நளப்பயலே! மச்சான் முறை கொண்டாடிறியோடா?” 

கட்டிலுக்கு நுளம்பு வலை கட்டும் இரும்புக் கம்பியினால் சிவலிங்கம் மூர்க்கத்தனமாய் லிங்கனுக்கு விளாசு விளா சென்று விளாசினான். 

“ஐயோ! என்னை அடியாதை சிவா. உன்னைக் கும்பிடு கிறன் என்னை அடியாதை சிவா!’ 

இரந்து கேட்டான். 

சிவலிங்கம் அடித்துக் கொண்டிருந்தான். 

அடிதாங்க முடியாமல் கூக்குரலிட்டுக் கொண்டே லிங்கன் எங்களை நோக்கி ஓடிவந்தான். 

”குமாரண்ணை என்னைக் காப்பாத்தண்ணை.” 

“அலறியபடியே எனக்குப் பின்னால் வந்து நின்றான் லிங்கன். 

“சிவா இரும்புக் கம்பியை ஓங்கியபடியே என்னை நோக்கி ஓடி வந்தான்.” 

“சிவா! நிறுத்தடா! இனி இவனிலை தொட்டியெண்டால் என்ன நடக்கும் தெரியுமோடா!” 

“ஆவேசமாய் எச்சரிச்சன்.” 

“என்னை எரிச்சு விடுவது போலை வெறிச்சுப் பாத்த படியே இரும்புக் கம்பியை வீசிப் போட்டு பின்வாங்கினான் சிவா.” 

“அண்டையிலையிருந்து லிங்கனுக்கும் சிவா ஆக்களு க்குமிடையிலையிருந்த உறவு அறுந்து போச்சு.” 

“லிங்கன் எங்களோடை ஒட்டப் பாத்தான். நாங்கள் இடங்குடுக்கேல்லை. அவனோடை ஓடும் புளியம் பழமாய்த் தான் நாங்கள் நாலு வரியமாய் இருந்தம்.” 

“படிப்பு முடிஞ்சு நாங்கள் இலங்கை திரும்பினம்.” 

“ஒரு வரியத்துக்குப் பிறகு எங்கடை கல்கத்தாக் கல்லூரி முனைவர் இஞ்சை ஒரு விசயத்தை மேற்கொள்ள விருந்தார்.” 

“அவருக்கு வரவேற்பளிப்பதற்கு ஒரு ஆலோசனைக் கூட்டத்தை யாழ் மத்திய கல்லூரியிலை நாங்கள் நடத்தினம். அந்தக் கூட்டத்துக்கு, எங்களோடை கல்கத்தாவிலை படிச்ச முப்பத்தேழு பேரிலை, பதினொரு பேர்தான் வந்தினை. லிங்கனும் வந்திருந்தான்.” 

“கூட்டம் முடிஞ்ச பிறகு நாங்கள் வீட்டை போறத்துக்கு பஸ் நிலையத்துக்குச் சென்றம்.” 

“நாங்கள் ஐஞ்சு பேர் செல்ல வேண்டிய பஸ் சற்று முன்னர்தான் புறப்பட்டுச் சென்று விட்டது. அடுத்த பஸ் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் வருமாம்.” 

“பஸ் நிலையத்துக்கு பக்கத்திலைதான் எங்களோடை கல்கத்தாவிலை படிச்ச சின்னத்துரையின்ரை வீடு.” 

அடுத்த பஸ் வரும்வரை எங்கடை வீட்டை போய் சாவகாசமாய்க் கதைச்சுக் கொண்டிருப்பம். எல்லாரும் வாருங்கோ. 

சின்னத்துரை கூப்பிட்டான். 

“நாங்கள் புறப்படத் தயாரானம்.’ 

“லிங்கன் தயங்கினான்.” 

“நாங்கள் நாலு பேரும் போக உடன்பட்டதாலை வேறை வழியில்லாமல் எங்களோடை லிங்கன் வந்தான்.” 

சின்னத்துரையின்ரை வீட்டின் ஒரு புறத்திலை கள்ளுக் கொட்டில்.அதிலை ஐஞ்சாறு பேர் கள்ளுக் குடிச்சுக் கொண்டி ருந்தினை. எங்களைக் கண்டதும் அவங்களிலை சில பேர் மற்றப்பக்கம் திரும்பினாங்கள்.” 

“சின்னத்துரையின்ரை தாய், தகப்பன், சகோதரிமார், தம்பிமார் எல்லாரும் எங்களை அன்பாய் வரவேற்றினை.’ “நாங்கள் கதைச்சுக் கொண்டிருக்க, எங்களுக்கு தேத்தண்ணி வந்துது.” 

“நாங்கள் ஒவ்வொருத்தரும் தேத்தண்ணிக் கோப்பையை எடுத்தம். 

“லிங்கன் எடுக்கேல்லை.” 

“ஏன் லிங்கன் தேத்தண்ணியை எடன்.” 

“நான் தேத்தண்ணி குடிக்கிறேல்லை.” 

தயங்கித் தயங்கிக் கூறினான் லிங்கன். 

“எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நான் ஒண்டும் பேசேல்லை. லிங்கனை முறைத்துப் பாத்தன். லிங்கன் தலை குனிஞ்சு கொண்டிருந்தான்.” 

“நாங்கள் கதைச்சபடியே தேத்தண்ணியைக் குடிச்சுக் கொண்டிருந்தம்.” 

கொஞ்ச நேரத்திலை சின்னத்துரையின்ரை தம்பி ஒரு ‘ஒறேஞ்ச் பார்லி’ போத்திலைக் கொண்டு வந்து வைத்தான். 

சின்னத்துரை ‘ஒறேஞ் பார்லி’ போத்தில் மூடியைத் திறந்து விட்டு, ஒரு கிளாசை எடுத்தான். 

“சின்னத்துரை கொஞ்சம் பொறு.” 

“கிளாசிலை ஒறேஞ் பார்லியை ஊத்தாதை” 

நான் மறிச்சன். 

சின்னத்துரை என்னை வியாகுலத்துடன் பார்த்தான். “உவன் லிங்கனுக்கு கிளாசிலை குடிச்சுப் பழக்க மில்லை. போத்திலோடைதான் குடிச்சுப் பழக்கம். நீ உவனு க்குப் போத்திலோடை குடு.” 

ருத்திராவேசமாய் நான் கத்தினன். 

அங்கை கூடியிருந்தவை எல்லாரும் என்னைத் திகைப் புடன் பாத்தினை. 

நான் என்னைக் கட்டுப்படுத்த முயற்சித்தன். முடியேல்லை.  

“எடே நாகலிங்கம். இஞ்சை இருக்கிற இந்த சுப்பிர மணியத்திலும் பாக்க நீ கூடின சாதிக்காறனோடா?” 

உச்சஸ்தாயியில் நான் கத்தினன். அங்கை இருந்த எல்லாரும் என்னைத் திகைப்புடன் பாத்தினை.” 

“லிங்கன் பேயறைந்தவனாய் இருந்தான்.” 

குமார் அவனை விட்டுத்தள்ளு. அவன்ரை குணம் உனக்குத் தெரியும் தானே. 

சின்னத்துரை சமாளிக்கின்றான். 

“பஸ் வாற நேரமாச்சு. போவம்.” 

“வேலாயுதம் எங்களை அருட்டினான்.” 

“நாங்கள் பஸ் நிலையத்துக்குப் போனம்.” 

“யாழ் குடா நாட்டிலை சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் நடத்தினம். அந்தப் போராட்டத்து க்குத் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் தலைமை தாங்கிச்சுது. 

உழைப்பாளர் வர்க்கத்தைச் சேர்ந்த எல்லாச் சாதி யிலுமுள்ள தொழிலாளர்களும், விவசாயிகளும்,இளைஞர் களும் பெருமளவில் முன்நிண்டு போராட்டத்தை நடத்தி ச்சினை. இந்தப் போராட்டத்தை சாத்வீகமான முறையிலை தான் நாங்கள் ஆரம்பிச்சு நடத்தினம்.” 

“சாதி வெறியர்களும் பொலிசும் சேந்து அந்தப் போரா ட்டத்தை அடக்குவதற்கு வன்முறையைப் பாவிச்சாங்கள்.” 

“எங்கடை ஆக்கள் சில பேர் சங்கானையிலையுள்ள ஒரு தேத்தண்ணிக் கடையுக்கை தேத்தண்ணி குடிக்கப் போச்சினை. கடை முதலாளியும் சில சாதி வெறியர்களும் அந்தக் கடையிலையுள்ள சில சோடாப் போத்தில்களையும் வேறை சில சாமான்களையும் அடிச்சு நொருக்கிப் போட்டு எங்கடை ஆக்கள் தான் தேத்தண்ணிக் கடையுக்கை உள்ளட்டு கலாட்டா பண்ணி கடைக்குச் சேதம் விளைவிச்ச தெண்டு பொலிசிலை முறைப்பாடு செய்தாங்கள்.” 

“பொலிசுக்காறங்கள் எங்கடை ஆக்களிலை நாலைஞ்சு பேரை கைது பண்ணி, பொலிஸ் ஸ்டேசனிலை அடைச்சு வைச்சு, இரவிரவாய் போராளியளின்ரை எலும்புகளை அடிச்சு நொருக்கினாங்கள்.” 

‘கைது செய்யப்பட்டவர்களில் உயர் சாதியைச் சேர்ந்த முத்தர் எண்ட தோழனை, பிள்ளை எண்டொரு பொலிஸ்காறன் கைகால்களை அடிச்சு முறிச்சதோடை, அந்தத் தோழனுக்கு அவன் தன்ரை மூத்திரத்தையும் பருக்கினான்.” 

“சாதி வெறியற்ரை வன்முறையை எதிர்த்துப் போராட நாங்களும் வன்முறையைப் பாவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டம்.” 

கைக்குண்டுகள் வெடித்தன. 

துப்பாக்கிகள் கனைத்தன. 

இப்போராட்டத்திலை நாங்கள் சங்கானையில் குமரையாவையும், கொடிகாமத்திலை ஐயன் அண்ணையையும் இழந்தம்.சாதி வெறியர் சங்கானை வைத்திலிங்கத்தையும் அச்சுவேலி தவராசனையும் பறிகொடுத்தாங்கள்.” 

“சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான இந்தப் போராட்டம், சங்கானையிலை துவங்கி, மாவிட்டபுரம், சுண்ணாகம், மட்டு வில், கொடிகாமம், அச்சுவேலி, ஆவரங்கால் போன்ற பல கிராமங்களுக்குக் காட்டுத்தீயாய் வியாபித்தது.” 

“இந்தப் போராட்ட இடிமுழக்கம் யாழ் குடா நாட்டில் மாத்திரமல்ல, தென் இலங்கையில் பல பகுதிகளிலும், இலங்கைப் பாராளுமன்றத்திலும் ஒலித்தது. 

“யாழ்ப்பாணம் வியட்நாமாய் மாறிவிட்டது எண்டு ஒரு தமிழ் எம்.பி பாராளுமன்றத்திலை ஒலம் வைச்சார்.” 

“சாதி ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் உக்கிரமாய நடந்து கொண்டிருக்கின்ற வேளையில், நாகலிங்கம் யாழ்ப் பாணத்திலை கிறிஸ்தவ மிசனரிமார் நடத்துகின்ற ஒரு பாடசாலையிலை படிப்பிச்சுக் கொண்டிருந்தான். 

சாதி ஒடுக்கு முறைக்கெதிரான இந்தப் போராட்ட இடிமுழக்கம் யாழ்ப்பாணத்திலை இருந்த நாகலிங்கத்தின் செவிகளுக்கு எட்டவில்லைப் போலும். 

“கொஞ்சக் காலத்துக்குப் பிறகு நான் கொழும்பிலை யுள்ள ஒரு கொம்பனியில் வேலை செய்யிற என்ரை நண்பனைப் பார்க்கச் சென்றன்.” 

“அந்தக் கொம்பனியின் முதலாளி கடும் பழமைவாதி. ஒரு இந்து நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர். சாதி அமைப்பைக் கட்டிக் காப்பதில் முன்னணியிலுள்ளவர்.” 

“முதலாளியின்ரை மேசைக்கு அருகிலைதான் மனேச் சரின்ரை மேசை.” 

மனேச்சரின்ரை மேசையில் நாகலிங்கம்! 

“என்னைக் கண்டதும் நாகலிங்கத்திற்கு பெரும் அதிர்ச்சி.” 

நான் தன்னைக் காட்டிக் குடுத்திடுவன் என்ற அச்சம் அவனுக்கு. 

“இவர் எங்கடை புது மனேச்சர். வந்து ஆறு மாதம் தான். பெயர் மகாலிங்கம். ஊர் சுண்டிக்குளி.” 

முதலாளி அறிமுகப்படுத்தினார். 

‘வடமராட்சி சுண்டிக்குளியாய் மாறீட்டுது. நாகலிங்கம் மகாலிங்கமாய் அவதாரமெடுத்த கதையாச்சு?’ 

“எனக்குள் நான் சிரிக்கின்றேன்.” 

“வந்த வேலை முடிஞ்சு நான் அந்த இடத்தை விட்ட கன்றன்.” 

“நாகலிங்கம் இப்ப கொழும்பு வாசி. அவன் யாழ்ப்பாண த்தை எட்டிக் கூடப் பார்ப்பதில்லை. அங்கு சென்றால் தான் இனம் காணப்பட்டுவிடுவேன் என்ற அச்சம் அவனுக்கு.” “சாதியின் பெயரால் வயிறு வளர்க்கும் பிரமுகர்களும், அரசியல் நடத்துகின்றவர்களும் ஒரு புறம். தங்கள் சாதியை மறைத்து பெரிய மனிசராய் வேசம் போடுறவங்கள் மறுபுறம். நாகலிங்கம் எந்த வகையைச் சேந்தவரோ?” 

“இந்தக் கொம்பனியில் இருந்து கொண்டே, சில பெரிய வெளிநாட்டுக் கொம்பனியளுடன் தொடர்பேற்படுத்திக் கொண்டான் நாகலிங்கம். சிறிது காலத்தின் பின் ஒரு வெளிநாட்டுக் கொம்பனி மூலம் நாகலிங்கம் இத்தாலிக்குச் சென்றான்.” 

“இத்தாலியிலை அவன் தொடக்கத்திலை ‘பவுடர்’ வியாபாரம். பிறகு ஆயுத வியாபாரம். அவன் தனது வர்த்தக த்தைப் பெருக்கி ஒரு பாரிய முதலீட்டுக் கொம்பனியை நிறுவினான்.” 

“நாகலிங்கத்தின் கொம்பனிக்கு இப்போ மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் உண்டு. இக் கொம்பனிக்கு பதின்நாலு கடலகப்பல்கள் சொந்தம். அதோடை மத்திய கிழக்கு நாடுகளிலை பாரிய முதலீடுகளும் கைத்தொழிலில், நிறுவனங்களும் உண்டு. இந்த நாடுகளிலை அவனுக்குத் தனிப்பட்ட சொத்துக்களும் அதற்கான வாரிசு களும் அந்தந்த நாடுகளிலை இருக்கின்றனர்.” 

இந்த விபரங்களை அறிஞ்ச செல்லத்துரைக்கு பிரமிப்பு. 

“குமாரண்ணை, இந்த நாகலிங்கத்துக்கு எங்கடை தமிழ்ப் பகுதிகளிலையுள்ள ஏதாவது இயக்கத்தோடை தொடர்பிருக்கா?” 

“நாகலிங்கம் என்ன அவளவு பயித்தியக்காறனா? இயக்கங்களோடை தொடர்பு வைச்சிருக்க.அவனுக்கு இலங்கையிலுள்ள அதி உத்தம தர்மிஸ்ரரின்ரை தலைமை யிலை இருந்த மூத்த முதலாளித்துவ பேரினவாத அரசியல் கட்சியோடை மாத்திரம்தான் தொடர்பு. இந்தத் தொடர்பும் அமெரிக்காவிலை வைச்சுத்தான்.” 

“நாகலிங்கம் இஞ்சை எயர்ப்போட்டிலை இறங்கின பொழுதே நான் அவனைத் தற்செயலாச் சந்திச்சன். அங்கை நாங்கள் இருவரும் எங்கடை பழைய நாளைய கதை களைக் கதைச்சுக் கொண்டிருந்தம். அதோடை அவன் தன்ரை கொம்பனியைப் பற்றியும் அதின்ரை செயல்பாடுகள் பற்றியும் சொன்னான்.” 

“இலங்கையிலை இப்ப தன்ரை கொம்பனிக்கு முதலீடு செய்யிற நோக்கம் இல்லை எண்டான். ஏனெண்டால் இப்ப இங்குள்ள நிலைமை சரியில்லை. இஞ்சை இப்ப போர்க்கால சூழ்நிலை நிலவுதாம். முதலீட்டுக்கோ, தொழிற்துறைக்கோ இஞ்சை போதிய பாதுகாப்போ உத்தரவாதமோ இல்லை யாம். அதோடை இஞ்சை கூடிய இலாபத்தையும் பெறேலாது எண்டான்.” 

“அப்ப ஏன் இஞ்சை வந்தனி?’ 

நான் கேட்டன் 

“மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடு களிலையுள்ள என்ரை முதலீடுகளையும் தொழிற்சாலை களையும் விசாலப்படுத்தி பெருப்பிக்கிற நோக்கத்தோடை போறன். போறவழியிலை கொழும்பிலையுள்ள என்ரை பழைய நண்பர்களைப் பாத்திட்டுப் போகலாம் எண்டுதான் வந்தனான்” எண்டான்.” 

“தம்பி செல்லத்துரை அருமைநாயகம் ஆரெண்டு உனக்குத் தெரியுமே?” 

“ஆர் குமாரண்ணை?” 

ஆவலுடன் கேட்டான் செல்லத்துரை. 

“உங்கடை அருமைநாயகம் வேறை ஆருமல்ல. வாத்தி வேலை எடுக்க கிறிஸ்தவனாய் மதம் மாறிய நாகலிங்கம்தான் உங்கடை அருமைநாயகம்.’ 

தம்பித்துரை பிரமித்தவனாய் நிற்கின்றான். 

– 2005

– ஜென்மம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூலை 2005, மீரா பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *